Skip to main content

வாழ்க்கையின் வெற்றியில் தன்னம்பிக்கை (புத்தக மதிப்புரை)

  வாழ்க்கையின் வெற்றியில் தன்னம்பிக்கை ( புத்தக மதிப்புரை )               புத்தக மதிப்புரையில் முனைவர் சி . இலட்சுமணன் அவர்கள் எழுதிய ‘ வாழ்க்கையின் வெற்றியில் தன்னம்பிக்கை ’ என்ற   புத்தகத்தைப் பார்ப்போம் . இந்நூல்   2023 - ஆம் ஆண்டு ,   குமரி மாவட்டம் , தமிழ்ச் செம்மொழி வரலாற்று ஆய்வு மையம் வெளியிட்டுள்ளார்கள். பக்கங்கள் 205,   விலை 1 50 ரூபாய்.             முனைவர் சி . இலட்சுமணன் அவர்கள் , தமிழ்ச் செம்மொழி வரலாற்று ஆய்வு மையத்தின் விடிவெள்ளி ; சுயமுன்னேற்றத்திற்கான நூல்களை எழுதி வருகின்ற சமுதாயச் சிற்பி ; தமிழாய்வுக் களஞ்சியம் என்னும் இதழின் ஆசிரியராக இருந்து சிறப்புடன் நடத்தி வருகிறார் . பத்துக்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார் .             நூலாசிரியர் அவர்கள் தமிழ்ப் பல்கலைக் கழகத்தில் ஓலைச் சுவடித் துறையின் தலைவராக ,   பணியாற்றிய பொழுது பல்வேறு ஊர்களுக்குப் பயணம் ...

அருந்ததி

 

அருந்ததி

          திருமணத்தின் போது புரோகிதர் சொற்படி மாப்பிள்ளை மணப்பெண்ணைப் பார்த்து, ‘அருந்ததியைப் பார்த்தாயா? என்று வானில் கை காட்டுகிறான். அவள் பார்த்ததாகத் தலையசைக்கிறாள்.

     அருந்ததி யார்? ஆகாயத்தில் நட்சத்திரமாய் பிரகாசிக்க அவள் செய்தது என்ன?  அவளை ஏன் பார்க்க வேண்டும்? என்று வினாக்கள் எழுகின்றன.

        அருந்ததி கந்தர்வக் கன்னியல்ல, உயர்குடி மகளுமல்ல, குணத்தால், கற்பால், பக்தியால், நட்சத்திரமாய் உயர்ந்து ஒளி வீசுகிறாள். தோல் உறித்துப் பதனிட்டு, செருப்புத் தைக்கும் சக்கிலியின் மகள்தான் அருந்ததி. சிவபெருமானிடம் அளவற்ற பக்திக் கொண்டவள். தினமும் லிங்கத்திற்குப் பூஜை முடித்த பின்பே உணவருந்துவாள்.

       வசிஷ்ட மகாமுனிவரும் சிறந்த சிவபக்தர். மனம், மொழி, மெய் மூன்றினாலும் தூய்மையான பெண் தனக்குப் பத்தினியாக வேண்டுமென்று சிவனைத் தியானித்தார். கொஞ்சம் மணலைத் துணியில் முடிந்து கொண்டு இதை அமுதாகச் சமைப்பவளே தனக்கு மனைவியாக வேண்டுமென்றும், அதுவரை தான் சாப்பிடுவதில்லை என்றும் விரதம் கொண்டார். பல நாட்கள் அன்ன ஆகாரமின்றி ஊர் ஊராய்ச் சுற்றினார். பல பெண்களிடம் கேட்டுப் பார்த்தார். ஒருவரும் மணலைச் சமைக்க முடியாது என்று கையை விரித்துவிட்டார்கள்.

        வசிஷ்டர் பசியால் வாடினார். அருந்ததியின் குடிலருகே வந்தார். அவளிடமும் தன் கோரிக்கையைக் கூறினார். அவள் ‘மகரிஷி! தாங்களோ பிராமணர். நானோ சக்கிலிப் பெண். நான் சமைத்தால் தாங்கள் சாப்பிடுவீர்களா? என்று கேட்டாள். ‘பரவாயில்லை, குலத்தை விடக் குணம் உயர்ந்தது. உன்னால் சமைக்க முடியுமானால் நான் சாப்பிடத் தடையில்லை. என்று மணலை கொடுத்தார் முனிவர்.

     அடுப்பைப் பற்ற வைத்து, உலையில் மணலைப் போட்டாள் அருந்ததி. சிவபெருமானைத் தியானித்தாள். ‘உமது திருவுளப்படி நடக்கட்டும்’ என்று உலையை மூடினாள். சற்று நேரத்தில் தட்டுத் தூக்கி அடிக்கப்பட்டது. முத்து முத்தான சோறு பொங்கி வந்தது. அருந்ததிக்கு பரம ஆனந்தம். பதமாகச் சமைத்து வசிஷ்டரைச் சாப்பிட அழைத்தாள்.

          வசிஷ்டர் தன் சபதத்தைச் சொல்லி அவளை மணக்கும்படி வேண்டினார். அருந்ததி சிவபெருமானின் உத்திரவு வேண்டுமென்று சொல்லிவிட்டாள். வசிஷ்டர் சிவனை வேண்டினார். சிவன் பார்வதியோடு எழுந்தருளி, இருவருக்கும் மணமுடித்து வைத்தார்.

      ஒரு தடவை அக்கினி தேவன் சப்த ரிஷிகளின் பத்தினிகளின் மேல் மோகங்கொண்டான். அக்கினியின் மனைவியாகிய சுவாஹா, அவனைத் திருப்தி செய்ய, தன் கற்பு வலிமையினால் சப்த ரிஷிகள் மனைவியர் வடிவில் ஒவ்வொருவராக உருமாறினாள். ஆனால்  அருந்ததியின் உருவத்தை மட்டும் எத்தனை முறை முயற்சி செய்தும் அவளால் எடுக்க முடியவில்லை. அவள் அதற்காக முயற்சி செய்யும் போதெல்லாம் அக்னிக்கே உடம்பெல்லாம் தகித்தது. தாங்கமாட்டாமல் அவள் அந்த முயற்சியை விட்டு விடும்படி மனைவியை வேண்டிக் கொண்டான்.

          இப்படி நெருப்பையே அவள் நினைப்பு வேகவைத்த பெருமை அருந்ததிக்கு உண்டு. அதற்காகச் சிவன் அளித்த வரத்தால் வானில் தாரகையாய் பிரகாசித்தாள். அவளைப் போல் வாழவேண்டும் என்ற ஆசையால் தான் நம்பிக்கையோடு மணப்பெண்ணுக்கு அருந்ததியைச் சுட்டிக் காட்டுகிறார்கள்.

பார்வை நூல்

1.  தெய்வீகத் திருமணங்கள் – வித்துவான் M. நாராயணவேலுப் பிள்ளை, சேது பப்ளிகேஷன், சென்னை-600 035, முதற் பதிப்பு, 1988.

Comments

Popular posts from this blog

பொய்யில் புலவன் பொய்யா மொழிகள்

திருக்குறளில் எனது சிறு முயற்சியாக… .  " பொய்யில் புலவன் பொய்யா மொழிகள்"  என்ற இத்தலைப்பில் அமைந்த 133 வரிகள் கொண்ட இப்படைப்பு முருகனின் ” கந்த சஷ்டி  கவசம் ” போன்று உருவாக்கப்பட்டது. இப்பகுதி அறத்துப்பால் 38  அதிகாரங்கள், பொருட்பால் 70  அதிகாரங்களிலிருந்து மட்டும் சுருங்கச் சொல்லி விளங்க வைத்தல் என்ற முறையில், திருக்குறளின் சாராக அமைத்து வழங்கியுள்ளேன். அறமும், பொருளும் ஒருவருக்கு அமைந்தால் இன்பம் தானாகக் கிட்டும் என்ற நோக்கத்தில் அமைக்கப்பட்டது. ”பொய்யில் புலவன் பொய்யா மொழிகள்” காக்க காக்க அறத்தைக் காக்க (1) காக்க காக்கக் குறளைக் காக்க உலக மொழிகளில் ஒப்பற்ற நூலாம், நோக்க நோக்க பெயா்த்து நோக்க மனிதன் கற்று மனிதம் காக்க ஐம்பொறி உணா்வை காக்க காக்க புகழுடன் வாழ ஒழுக்கம் காக்க அறநெறி வாழ்வை இறைவழி காக்க வானம் பொய்யா வளத்தைக் காக்க பசிப்பிணி யில்லா உலகைக் காக்க பற்றற்ற வாழ்வை பரிவுடன் காக்க அறத்தைக் காக்க அன்பைக் காக்க (2) குறையிலா வாழ்வை குணமுடன் காக்க இல்லற வாழ்வுடன் நல்லறம் காக்க பண்பொடு பயனும் அறத்துடன் காக்க வாழ்க வாழ்க வளமுடன் வாழ்க வாழ்க வாழ்க...

எண்ணம் போல் வாழ்வு

                                   எண்ணம் போல் வாழ்வு   நினைவுகளே பழக்கவழக்கங்களாக மாறுகின்றன. எனவே தான் எண்ணம் போல் வாழ்வு அனைவருக்கும் அமைகிறது. வெற்றி பெற்ற அனைவரும் பிறரைத் தன் நடத்தையால் மகிழ்விக்க நினைத்தவர்களே என்பதை நாம் நினைவில் நிறுத்த வேண்டும். ·         வங்கியில் பணத்தைச் சேமிப்பதைவிட இதயத்தில் இனிய எண்ணங்களைச் சேமிப்பது மகிழ்ச்சியான வாழ்விற்கு உதவும் வைப்பு நிதியாகும். ·                    மனம் - மகிழ்ச்சி அளிக்காத நிகழ்வுகளை மறந்து விடும் இயல்புடையது. ·                      வெறுப்பு - மனத்தையும், உணர்வையும் பற்றிக் கொண்டுள்ள தொற்று நோய். எனவே வெறுப்பிற்கு விடுதலை தரும்வரை மகிழ்ச்சி நம்மை அணுகாது. ·         கடமையைச் செய்யுங்கள், மகிழ்ச்சியை அறுவடை செய்யலாம். நன்மை, தீமை என்று எது நடந்...

கோப்பெருஞ்சோழன் – பிசிராந்தையார் நட்பு

  கோப்பெருஞ்சோழன் – பிசிராந்தையார் நட்பு   வடக்கிருத்தல் தமிழரின் நம்பிக்கை சார்ந்த பழக்கவழக்கங்களில் வடக்கிருத்தலை ஆடவர் மேற்கொண்டனர். ஊருக்கு வடபால் ஓரிடத்தில் வடக்குத் திசை நோக்கி அமர்ந்த வண்ணம் உண்ணாநோன்பிருந்து உயிர்த்துறப்பதை ‘ வடக்கிருத்தல் ’ எனக் கொண்டனர். வடக்கிருக்க அடிப்படைக் காரணியாக அமைவன மானம் , வீரம் , நட்பு , தன்நோக்கம் நிறைவேறாமை எனலாம். வீரர் , புலவர் , மன்னர் ஆகியோர் வடக்கிருந்தமையை இலக்கியங்கள் வாயிலாக அறிய முடிகிறது. அவ்வாறு உயிர் துறப்பவர் துறக்கம் பெறுவர் என நம்பினர்.       கலைக்களஞ்சியம் , வடக்கிருத்தலை ‘ உத்ரக மனம் ’ என்றும் ‘ மகாப் பிரத்தானம் ’ என்றும் கூறும். ‘ நாணத்தகு நிலை ’ நேர்ந்ததனாற் சிலர் வடக்கிருந்ததாகத் தமிழ் நூல்கள் கூறுகின்றன என்று கூறுகிறது.           கோப்பெருஞ்சோழன் வடக்கிருந்து உயிர் விட்டான். அவன் உயிர்விட்டப் பிறகு அவனை பார்க்காமலே நட்புக் கொண்டிருந்தப் பிசிராந்தையாரும், சோழனுடன் இருந்த பொத்தியார் என்ற புலவரும் அவன் வடக்கிருந்த இடத்தின் அருகில் வடக்கிருந்து உயிர்...