Skip to main content

வாழ்க்கையின் வெற்றியில் தன்னம்பிக்கை (புத்தக மதிப்புரை)

  வாழ்க்கையின் வெற்றியில் தன்னம்பிக்கை ( புத்தக மதிப்புரை )               புத்தக மதிப்புரையில் முனைவர் சி . இலட்சுமணன் அவர்கள் எழுதிய ‘ வாழ்க்கையின் வெற்றியில் தன்னம்பிக்கை ’ என்ற   புத்தகத்தைப் பார்ப்போம் . இந்நூல்   2023 - ஆம் ஆண்டு ,   குமரி மாவட்டம் , தமிழ்ச் செம்மொழி வரலாற்று ஆய்வு மையம் வெளியிட்டுள்ளார்கள். பக்கங்கள் 205,   விலை 1 50 ரூபாய்.             முனைவர் சி . இலட்சுமணன் அவர்கள் , தமிழ்ச் செம்மொழி வரலாற்று ஆய்வு மையத்தின் விடிவெள்ளி ; சுயமுன்னேற்றத்திற்கான நூல்களை எழுதி வருகின்ற சமுதாயச் சிற்பி ; தமிழாய்வுக் களஞ்சியம் என்னும் இதழின் ஆசிரியராக இருந்து சிறப்புடன் நடத்தி வருகிறார் . பத்துக்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார் .             நூலாசிரியர் அவர்கள் தமிழ்ப் பல்கலைக் கழகத்தில் ஓலைச் சுவடித் துறையின் தலைவராக ,   பணியாற்றிய பொழுது பல்வேறு ஊர்களுக்குப் பயணம் ...

மரபு வழியில் - நீர் இறைத்தல்

 

நீர் இறைத்தல்

          வேளாண்மையில் நீர்ப் பாசனத்திற்கு மேடான பகுதிகள் மற்றும் கிணற்றிலிருந்து நீர் இறைக்க இன்றளவும் குறுநில விவசாயிகள் மரபு வழியான தொழில் நுட்பங்களைக் கையாண்டு வந்தனர்.

ஏற்றங்கள்

          நீர் இறைப்பதற்குப் பல ஏற்ற வகைகள் நாட்டுப்புறங்களில் பயன்படுத்தினர். கையேற்றம் இரண்டுக்கும் மேற்பட்டவர்களைக் கொண்டு நீர் இறைக்கும் ஏற்றம், மாடுகளைப் பயன்படுத்தி நீர் இறைக்கும் கவலை ஏற்றம், இறவாப் பெட்டி ஏற்றம் என்று பல முறைகள் உள்ளன.

i.          கை ஏற்றம்

          வாய்க்காலில் மேடான பகுதியில் உள்ள நிலத்திற்குக் கை ஏற்றம் எனும் தனி நபர் நீர் இறைக்கும் ஏற்றத்தினைப் பயன்படுத்தி வந்தனர். இரண்டு கம்பங்களுக்கு இடையில் ஒரு புறம் நீர்ச்சாலினையும் மறுபுறம் பாறைக் கல்லையும் கட்டி நீரை முகந்ததும் நீர்ச்சால் எளிதாக மேல்நோக்கிச் செல்லும். இவ்வாறு ஆறு அடிகள் இறவாப் பெட்டி ஏற்றம் என்று பல முறைகள் உள்ளன.

ii.        ஆள் ஏற்றம்

          இரண்டு அல்லது மூன்று நபர்கள் பார் எனப்படும். கட்டையில் ஏறிக்கொண்டு முன்னும் பின்னும் நடக்க நீர்ச்சால் கீழ்வரும் போது கீழே உள்ளவர் நீரை நிரப்பி மேலே வாய்க்காலில் விடுவார். இப் பணியில் ஈடுபடும் போது கதைப்பாடல்கள் மிகுதியும் பாடுவர். பாடலின் அளவு நீர்ப்பாயும் வயலின் அளவிற்கு ஏற்றவாறு அமையும்.

கவலை ஏற்றம்

          மனிதர்களுக்குப் பதிலாக மாடுகளைப் பயன்படுத்தி உருளைகளின் துணை கொண்டு நீரை இறைப்பர். இதனைக் கவலை ஏற்றம் என்று கூறுவர். இதற்குத் தோலினால் செய்யப்பெற்ற பறிகள் எனப்படும் சால்கள் பயன்படுத்தப்படும்.

ஊற்றுமட்டை

          கொடிக்கால் பாத்திகள் கிடங்குகள் எனப்படும். இதில் உள்ள நீரை இறைத்து கொடிக்கால் கொடியில் விடுவர். இதற்கு, ‘ஊத்துமட்டை’ எனப்படும் நீர் இறைக்கும் கருவியைப் பயன்படுத்துவர்.

நீர்ச்சால் அல்லது இறவாப் பெட்டி

          இரண்டு நபர்கள் இரண்டு புறமும் நின்று கொண்டு இறவாப் பெட்டி எனப்படும் நீர் இறைக்கும் கருவியைப் பயன்படுத்திக் கொண்டு வாய்க்காலிலிருந்து சற்று மேடான பகுதிகளுக்கு இறைக்கின்ற மரபு இன்றளவும் நடைமுறையில் உள்ளது.

உருளை

          இன்றளவும் நாட்டுப்புறங்களிலும் மற்ற இடங்களிலும் பயன்படுத்தப்படும் கிணற்று உருளைகளும் நீர் இறைக்கப் பயன்படுத்தி வரும் நாட்டுப் புற மரபுவழியான தொழில் நுட்பங்களில் ஒன்றாகும்.

பார்வை நூல்

1.  நாட்டுப்புறப் பண்பாட்டுக் கூறுகள் – முனைவர் அரு. மருததுரை, இணைப் பேராசிரியர், அருணா வெளியீடு, திருச்சிராப்பள்ளி, முதல் பதிப்பு – 2003.

Comments

Popular posts from this blog

பொய்யில் புலவன் பொய்யா மொழிகள்

திருக்குறளில் எனது சிறு முயற்சியாக… .  " பொய்யில் புலவன் பொய்யா மொழிகள்"  என்ற இத்தலைப்பில் அமைந்த 133 வரிகள் கொண்ட இப்படைப்பு முருகனின் ” கந்த சஷ்டி  கவசம் ” போன்று உருவாக்கப்பட்டது. இப்பகுதி அறத்துப்பால் 38  அதிகாரங்கள், பொருட்பால் 70  அதிகாரங்களிலிருந்து மட்டும் சுருங்கச் சொல்லி விளங்க வைத்தல் என்ற முறையில், திருக்குறளின் சாராக அமைத்து வழங்கியுள்ளேன். அறமும், பொருளும் ஒருவருக்கு அமைந்தால் இன்பம் தானாகக் கிட்டும் என்ற நோக்கத்தில் அமைக்கப்பட்டது. ”பொய்யில் புலவன் பொய்யா மொழிகள்” காக்க காக்க அறத்தைக் காக்க (1) காக்க காக்கக் குறளைக் காக்க உலக மொழிகளில் ஒப்பற்ற நூலாம், நோக்க நோக்க பெயா்த்து நோக்க மனிதன் கற்று மனிதம் காக்க ஐம்பொறி உணா்வை காக்க காக்க புகழுடன் வாழ ஒழுக்கம் காக்க அறநெறி வாழ்வை இறைவழி காக்க வானம் பொய்யா வளத்தைக் காக்க பசிப்பிணி யில்லா உலகைக் காக்க பற்றற்ற வாழ்வை பரிவுடன் காக்க அறத்தைக் காக்க அன்பைக் காக்க (2) குறையிலா வாழ்வை குணமுடன் காக்க இல்லற வாழ்வுடன் நல்லறம் காக்க பண்பொடு பயனும் அறத்துடன் காக்க வாழ்க வாழ்க வளமுடன் வாழ்க வாழ்க வாழ்க...

கோப்பெருஞ்சோழன் – பிசிராந்தையார் நட்பு

  கோப்பெருஞ்சோழன் – பிசிராந்தையார் நட்பு   வடக்கிருத்தல் தமிழரின் நம்பிக்கை சார்ந்த பழக்கவழக்கங்களில் வடக்கிருத்தலை ஆடவர் மேற்கொண்டனர். ஊருக்கு வடபால் ஓரிடத்தில் வடக்குத் திசை நோக்கி அமர்ந்த வண்ணம் உண்ணாநோன்பிருந்து உயிர்த்துறப்பதை ‘ வடக்கிருத்தல் ’ எனக் கொண்டனர். வடக்கிருக்க அடிப்படைக் காரணியாக அமைவன மானம் , வீரம் , நட்பு , தன்நோக்கம் நிறைவேறாமை எனலாம். வீரர் , புலவர் , மன்னர் ஆகியோர் வடக்கிருந்தமையை இலக்கியங்கள் வாயிலாக அறிய முடிகிறது. அவ்வாறு உயிர் துறப்பவர் துறக்கம் பெறுவர் என நம்பினர்.       கலைக்களஞ்சியம் , வடக்கிருத்தலை ‘ உத்ரக மனம் ’ என்றும் ‘ மகாப் பிரத்தானம் ’ என்றும் கூறும். ‘ நாணத்தகு நிலை ’ நேர்ந்ததனாற் சிலர் வடக்கிருந்ததாகத் தமிழ் நூல்கள் கூறுகின்றன என்று கூறுகிறது.           கோப்பெருஞ்சோழன் வடக்கிருந்து உயிர் விட்டான். அவன் உயிர்விட்டப் பிறகு அவனை பார்க்காமலே நட்புக் கொண்டிருந்தப் பிசிராந்தையாரும், சோழனுடன் இருந்த பொத்தியார் என்ற புலவரும் அவன் வடக்கிருந்த இடத்தின் அருகில் வடக்கிருந்து உயிர்...

எண்ணம் போல் வாழ்வு

                                   எண்ணம் போல் வாழ்வு   நினைவுகளே பழக்கவழக்கங்களாக மாறுகின்றன. எனவே தான் எண்ணம் போல் வாழ்வு அனைவருக்கும் அமைகிறது. வெற்றி பெற்ற அனைவரும் பிறரைத் தன் நடத்தையால் மகிழ்விக்க நினைத்தவர்களே என்பதை நாம் நினைவில் நிறுத்த வேண்டும். ·         வங்கியில் பணத்தைச் சேமிப்பதைவிட இதயத்தில் இனிய எண்ணங்களைச் சேமிப்பது மகிழ்ச்சியான வாழ்விற்கு உதவும் வைப்பு நிதியாகும். ·                    மனம் - மகிழ்ச்சி அளிக்காத நிகழ்வுகளை மறந்து விடும் இயல்புடையது. ·                      வெறுப்பு - மனத்தையும், உணர்வையும் பற்றிக் கொண்டுள்ள தொற்று நோய். எனவே வெறுப்பிற்கு விடுதலை தரும்வரை மகிழ்ச்சி நம்மை அணுகாது. ·         கடமையைச் செய்யுங்கள், மகிழ்ச்சியை அறுவடை செய்யலாம். நன்மை, தீமை என்று எது நடந்...