Skip to main content

மனஅமைதிக்குச் சில வழிகள் (புத்தக மதிப்புரை)

  மனஅமைதிக்குச் சில வழிகள் ( புத்தக மதிப்புரை ) புத்தக மதிப்புரையில் பி . சி . கணேசன் அவர்கள் எழுதிய மன அமைதிக்குச் சில வழிகள்   என்ற   புத்தகத்தைப் பார்ப்போம் . இந்தப் புத்தகம் 2017 - ஆம் ஆண்டில் , ஏழாம் பதிப்பாக , சென்னை , வானதி பதிப்பகம் வெளியிட்டுள்ளார்கள் . பக்கங்கள் 108, விலை 40 ரூபாய் . நூலாசிரியர் பி.சி. கணேசன் அவர்கள் சரித்திரம் படித்தவர். அறிவுலக மேதை. நாகரிக அரசியல் விமர்சகர்.   சிறுகதை மன்னர் , வரலாற்றுப் பேராசிரியர் , சிறந்த நாவலாசிரியர் , திரைப்பட இயக்குநர் , நல்ல மொழிப் பெயர்ப்பாளர் , பல்துறை அறிஞராக விளங்கிய மாமனிதர். பல்வேறு பிரிவுகளில் நூற்றுக்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார். இவரது படைப்புகள் அனைத்தும் எளிய நடையில் பொதுமக்களைச் சென்றடையும் வகையில் அமைந்துள்ளது . வெளியில் எங்கெங்கோ சென்று நிம்மதியைத் தேடுகின்ற மனிதன் அதைத் தேட வேண்டிய இடத்தை மட்டும் ஏனோ விட்டுவிடுகிறான் . அந்த இடம் எது ? அதில் நிம்மதியை எவ்வாறு கண்டுபிடிப்பது என்ற எண்ணங்களை இந்நூல் எடுத்து இயம்புகிறது . அத்தியாயத் தலைப்புகள் வெகு கவனத்துடன் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன . ...

அஞ்சா நெஞ்சம்

                                                                அஞ்சா நெஞ்சம்

            வெண்ணிகுயத்தியார் வெற்றி பெற்ற கரிகாலனுக்கு முன் நின்று அஞ்சாது சேரலாதனின் மறங்குன்றாத தன்மானச் சாவை இவ்வாறு பாராட்டுகிறார். காற்றும் வீசும் திசைக்கு எதிராகவும், கப்பலைச் செலுத்திப் புகழ் பெற்ற மரபில் வந்தவனே! கரிகால் வளவனே! வெண்ணிப் பறந்தலைப் போரில் வென்ற பெருவீரனே! உன்னால் மார்பில் எறியப்பட்ட வேல், முதுகில் ஊடுருவிய புறப்புண்ணுக்கு நாணி வடக்கிருந்து உயிர்நீத்தும் பெரும் புகழ் எய்திய சேரலாதன் உன்னை விடச் சிறந்த வீரனாவான்.

          காற்றைப் பயன்படுத்திக் கப்பல் செலுத்தும் முறையை மிகப் பழங்காலத்திலேயே தமிழர்கள் அறிந்திருந்தனர்.

          ”நளியிரு முந்நீர் நாவாய் ஓட்டி

          வளிதொழில் ஆண்ட உரவோன் மருக!

          களியியல் யானைக் கரிகால் வளவ!

          சென்ற மர்கடந்த நின்னாற்றல் தோன்ற

          வென்றோய்! நின்னினும் நல்லன் அன்றே!

          கலிகொள் யாணர் வெண்ணிப் பறந்தலை,

          மிக்க புகழ் உலகம் எய்திப்

          புறப்புண் நாணி வடக்கு இருந்தோனே!! (புறம்,66)

வெண்ணிக்குயத்தியார் நின்னினும் நல்லன் அவன் எதிரியைப் புகழ்வது நயமும் துணிவும் மிக்கச் செயலாகும்.

     இங்ஙனம் வெண்ணிக்குயத்தியார் ஒரே பாடல் பாடியிருந்தாலும், அந்தப் பாடலில் பண்டைய தமிழர் நாகரிகம், வரலாற்றுக் குறிப்பு, வென்றோன் தோற்றோன் ஆகிய இருவரையும் புகழ்தல், வென்றோனுக்கு முன்பாகவே தோற்றோனைப் புகழுடையவனாகப் புகழும் துணிவு ஆகிய அனைத்தும் அடங்கியுள்ளன.


Comments

Popular posts from this blog