Skip to main content

இடித்துரைக்கும் பண்பு

  இடித்துரைக்கும் பண்பு

       ஒரு சமயம் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன் பகைவரைப் போரில் வென்றான். பண்டைய மரபுப்படி வெற்றி வெறியில் பகையரசன் பதுங்கியிருக்கும் அந்நாட்டைத் தீயிட்டு கொளுத்தி அழிக்க முயன்றான். அக்கொடுமையை விரும்பாத நப்பசலையார், வெறிகொண்ட மன்னன் அஞ்சாது சென்று புறாவின் துயர் தீர்த்த சிபியாகிய முன்னோன் அருட்பண்பை நினைவூட்டி அக்கொடுமையைத் தடுத்தார். அப்பொழுது பாடிய பாடல்,

          ”இமயம் சூட்டிய ஏமவிற் பொறி

          மாண்வினை நெடுந்தேர் வானவன் தொலைய

          வாடா வஞ்சி வாட்டும் நின்

          மீடுகெடு நோன்தாள் பாடுங்காலே” (புறம்,39)

என்று கூறுகிறார். கிள்ளிவளவனுக்குத் தனிச்சிறப்பில்லை என்று பழிப்பது போல் முன்னோரின் பண்புகளாகிய ஈகை, மறம், அறம் ஆகிய அனைத்துப் பண்புகளும் ஒன்று திரண்டவன் எனப் போற்றப்படுதலால், வஞ்சப்புகழ்ச்சி அணிநயம் இப்பாடலுக்குச் சுவையூட்டுகிறது.

            இமயத்தில் வில்பொறித்த இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன் வரலாற்றுக் குறிப்பும் உள்ளதால் இப்பாடல் வரலாற்றுக் களஞ்சியமாகவும் திகழ்கிறது. பகை நாட்டையழிக்கும் போர் வெறியைத் தவிர்த்து நயமாகப் புகழ்ந்து உள்ளத்தைக் குளிர்விக்கும் நப்பசலையாரின் மாண்பும், புலமையும் வியந்து வியந்து போற்றற்குரியனவாகும்.

Comments

Popular posts from this blog

பொய்யில் புலவன் பொய்யா மொழிகள்

திருக்குறளில் எனது சிறு முயற்சியாக… .  " பொய்யில் புலவன் பொய்யா மொழிகள்"  என்ற இத்தலைப்பில் அமைந்த 133 வரிகள் கொண்ட இப்படைப்பு முருகனின் ” கந்த சஷ்டி  கவசம் ” போன்று உருவாக்கப்பட்டது. இப்பகுதி அறத்துப்பால் 38  அதிகாரங்கள், பொருட்பால் 70  அதிகாரங்களிலிருந்து மட்டும் சுருங்கச் சொல்லி விளங்க வைத்தல் என்ற முறையில், திருக்குறளின் சாராக அமைத்து வழங்கியுள்ளேன். அறமும், பொருளும் ஒருவருக்கு அமைந்தால் இன்பம் தானாகக் கிட்டும் என்ற நோக்கத்தில் அமைக்கப்பட்டது. ”பொய்யில் புலவன் பொய்யா மொழிகள்” காக்க காக்க அறத்தைக் காக்க (1) காக்க காக்கக் குறளைக் காக்க உலக மொழிகளில் ஒப்பற்ற நூலாம், நோக்க நோக்க பெயா்த்து நோக்க மனிதன் கற்று மனிதம் காக்க ஐம்பொறி உணா்வை காக்க காக்க புகழுடன் வாழ ஒழுக்கம் காக்க அறநெறி வாழ்வை இறைவழி காக்க வானம் பொய்யா வளத்தைக் காக்க பசிப்பிணி யில்லா உலகைக் காக்க பற்றற்ற வாழ்வை பரிவுடன் காக்க அறத்தைக் காக்க அன்பைக் காக்க (2) குறையிலா வாழ்வை குணமுடன் காக்க இல்லற வாழ்வுடன் நல்லறம் காக்க பண்பொடு பயனும் அறத்துடன் காக்க வாழ்க வாழ்க வளமுடன் வாழ்க வாழ்க வாழ்க...

எண்ணம் போல் வாழ்வு

                                   எண்ணம் போல் வாழ்வு   நினைவுகளே பழக்கவழக்கங்களாக மாறுகின்றன. எனவே தான் எண்ணம் போல் வாழ்வு அனைவருக்கும் அமைகிறது. வெற்றி பெற்ற அனைவரும் பிறரைத் தன் நடத்தையால் மகிழ்விக்க நினைத்தவர்களே என்பதை நாம் நினைவில் நிறுத்த வேண்டும். ·         வங்கியில் பணத்தைச் சேமிப்பதைவிட இதயத்தில் இனிய எண்ணங்களைச் சேமிப்பது மகிழ்ச்சியான வாழ்விற்கு உதவும் வைப்பு நிதியாகும். ·                    மனம் - மகிழ்ச்சி அளிக்காத நிகழ்வுகளை மறந்து விடும் இயல்புடையது. ·                      வெறுப்பு - மனத்தையும், உணர்வையும் பற்றிக் கொண்டுள்ள தொற்று நோய். எனவே வெறுப்பிற்கு விடுதலை தரும்வரை மகிழ்ச்சி நம்மை அணுகாது. ·         கடமையைச் செய்யுங்கள், மகிழ்ச்சியை அறுவடை செய்யலாம். நன்மை, தீமை என்று எது நடந்...

மனிதனாக வாழ ...

  மனிதனாக வாழ ... ·                       பிறர் உன்னை தூற்றும் பொழுது தலை நிமிர்ந்து நில். ·     பொறாமை, கோபம், வீண் மயக்கம் போன்ற குணங்களை விரோதிகளாக எண்ணுதல். ·         வெற்றி -   தோல்வி,   இன்பம் – துன்பம் இரண்டையும் சமமாக பாவித்தல்.             உண்மைக்குப் புறம்பானவற்றைச்  செய்யாதிருத்தல். ·     நண்பர்கள் இல்லை என்றாலும் பரவாயில்லை. பகைவர்கள் இல்லாமல் வாழ முயற்சி செய்தல். ·                 ம னத்திடத்தோடு வாழ்தல்,  ஏற்றத் தாழ்வு இல்லா மனநிலையுடன் இருத்தல். ·             மனிதனுக்கு உரியது - கலங்காத அறிவு, அன்பு நிறைந்த மனம், ஆரோக்கியமான   உடல். ·                      எதற்கும் அஞ்சாதே -   பயம் நம்மை கோழையாக்கி விடும்.              எவரையும் வெறுக்...