Skip to main content

என் எண்ணச் சிதறல்கள்! (3)

  என் எண்ணச் சிதறல்கள் ! (3)             Linkedin எனும் தளத்தில் என்னுடைய எண்ணங்களைக் கடந்த சில மாதங்களாகக்   கவிதைகளாக வெளியிட்டு வருகிறேன் . அந்தக் கவிதைகளை அனைத்தையும்   தொகுத்து இப்பகுதியில் வெளியிட்டுள்ளேன் . 1.     தன் நம்பிக்கை! சந்தேகம்! மனநிம்மதியைக் கெடுக்கும் ஆயுதம்! சஞ்சலம்! செயல்திறனைக் குறைக்கும் பேராயுதம்! 2.     வாசிப்பு! அச்சுறுத்தும் வாழ்வின் இருண்ட பக்கங்கள் வாசிக்க வாசிக்க வெளிச்சம் அடைகிறது! தாகத்திற்குத் தண்ணீர்போல தரமான நூல்களைத் தேடித் தேடிப் படிப்பதால் வெளிபடும் வாழ்வு இனிக்கிறது! அறைக்குள் அடங்கிக் கிடந்த எண்ணச் சிறைகளிலிருந்து விடுதலை அளிக்கிறது! நல்ல நூல்களின் வாசிப்பு! வாழ்வின் அடையாளம் சுவாசிப்பதைப் போல் வாசிப்பை நேசிப்பது! 3.     படைப்பு! தற்புகழ்ச்சிக்காகவோ பிறரை மகிழ்விப்பதற்காகவோ எழுதப்படும் எழுத்துக்களை விட உய்த்துணர்வதற்கும் உட்பொருள் காண்பதற்கும் நல்வழி காட்டுவதற்கும் தெளிவான தேடலுடன் சொல்லும் செய்த...

நீர் வளமும், நிலவளமும்

 

 நீர் வளமும், நிலவளமும்

          உலக மக்களின் அடிப்படைத் தேவைகளில் நீர் வளமும், உணவுப் பொருள்களை உற்பத்தி செய்திடும் நிலவளமும் முக்கியமானது. நீரின் மிகையினை வீணாக்காமற் பாதுகாத்து உரிய காலத்தில் நிலப் பகுதிகளுக்கு அளிக்கும் போது நிலம் செழிக்கின்றது. மக்களும் செழிக்கின்றனர். ஒரு நாடு உணவு உற்பத்தியில் தன்னிறைவு எய்த முடியும். சங்க இலக்கியத்தில் குடபுலவியனார் புறநானூற்றுப் பாடலில் நீர் வளத்தையும், நிலவளத்தையும் இணைத்துக் கூறுகின்றார்.

          நீரின் றமையா யாக்கைக் கெல்லாம்

        உண்டி கொடுத்தோ ருயிர் கொடுத்தோரே

        உண்டி முதற்றே உணவின் பிண்டம்

        உணவெனப்படுவது நிலத்தோடு நீரே

        நீரும் நிலனும் புணரியோர் ஈண்டு

        உடம்பும் உயிரும் படைத்திசினோரே” (புறம்,18)

என்று மனித உடலுக்கு உயிரினை வளர்க்கும் உணவினை நீருமு நிலமும் சேர்ந்து வழங்குவதாகக் கூறுகின்றார். நீரையும் நிலத்தையும் இணைத்து வேளாண்மைத் தொழிலைச் செழிக்கச் செய்திடல் வேண்டும் என்றும் வலியுறுத்துகின்றார்.

          நிலவளம் குன்றிய பகுதியில் நீரைப் பாய்ச்சி வேளாண்மை புரிவது வீணாகும். இத்தகைய திரிந்த களர் நிலங்களில் நீரும் திரிந்துவிடுவதாக வள்ளுவர் கூறுகின்றார்.

          ”நிலத்தின் இயல்பான் நீர்திரிந் தற்றாகும் மாந்தர்க்கு

           இனத்தினியல்ப தாகும் அறிவு” (குறள், 452)

என்கின்றார். இத்தகைய களர்நிலங்கள் பற்றி உரையாசிரியர் பரிமேலழகர் ‘களம் தானும் பேணற்பாடு அழிந்து உயிர்கட்கும் உணவு முதலிய உதவாதது’ என்றுரைக்கின்றார். நல்ல நிலத்தில் பாய்ச்சப்படும் நீரினாலே உணவுப் பொருள்களை விளைவிக்க முடியும். களர் நிலங்களுக்கு நீர் பாய்ச்சுவது விழலுக்கு இறைத்த நீராகும் என்னும் இக்குறளில் உணர்த்தப்படுகின்றது. நல்ல நிலங்களில் பாய்ச்சப்படும் நீரினாலே மக்களின் உயிர் காக்கும் உணவுப் பொருள்களை உற்பத்தி செய்ய முடியும். களர் நிலங்களில் நீரைப் பாய்ச்சினால் அந்நீரும் திரிந்துவிடும் உயிர்களுக்கு உணவுப் பொருள்களும் உற்பத்தி செய்ய உதவாது.

Comments

Popular posts from this blog

பொய்யில் புலவன் பொய்யா மொழிகள்

திருக்குறளில் எனது சிறு முயற்சியாக… .  " பொய்யில் புலவன் பொய்யா மொழிகள்"  என்ற இத்தலைப்பில் அமைந்த 133 வரிகள் கொண்ட இப்படைப்பு முருகனின் ” கந்த சஷ்டி  கவசம் ” போன்று உருவாக்கப்பட்டது. இப்பகுதி அறத்துப்பால் 38  அதிகாரங்கள், பொருட்பால் 70  அதிகாரங்களிலிருந்து மட்டும் சுருங்கச் சொல்லி விளங்க வைத்தல் என்ற முறையில், திருக்குறளின் சாராக அமைத்து வழங்கியுள்ளேன். அறமும், பொருளும் ஒருவருக்கு அமைந்தால் இன்பம் தானாகக் கிட்டும் என்ற நோக்கத்தில் அமைக்கப்பட்டது. ”பொய்யில் புலவன் பொய்யா மொழிகள்” காக்க காக்க அறத்தைக் காக்க (1) காக்க காக்கக் குறளைக் காக்க உலக மொழிகளில் ஒப்பற்ற நூலாம், நோக்க நோக்க பெயா்த்து நோக்க மனிதன் கற்று மனிதம் காக்க ஐம்பொறி உணா்வை காக்க காக்க புகழுடன் வாழ ஒழுக்கம் காக்க அறநெறி வாழ்வை இறைவழி காக்க வானம் பொய்யா வளத்தைக் காக்க பசிப்பிணி யில்லா உலகைக் காக்க பற்றற்ற வாழ்வை பரிவுடன் காக்க அறத்தைக் காக்க அன்பைக் காக்க (2) குறையிலா வாழ்வை குணமுடன் காக்க இல்லற வாழ்வுடன் நல்லறம் காக்க பண்பொடு பயனும் அறத்துடன் காக்க வாழ்க வாழ்க வளமுடன் வாழ்க வாழ்க வாழ்க...

கோப்பெருஞ்சோழன் – பிசிராந்தையார் நட்பு

  கோப்பெருஞ்சோழன் – பிசிராந்தையார் நட்பு   வடக்கிருத்தல் தமிழரின் நம்பிக்கை சார்ந்த பழக்கவழக்கங்களில் வடக்கிருத்தலை ஆடவர் மேற்கொண்டனர். ஊருக்கு வடபால் ஓரிடத்தில் வடக்குத் திசை நோக்கி அமர்ந்த வண்ணம் உண்ணாநோன்பிருந்து உயிர்த்துறப்பதை ‘ வடக்கிருத்தல் ’ எனக் கொண்டனர். வடக்கிருக்க அடிப்படைக் காரணியாக அமைவன மானம் , வீரம் , நட்பு , தன்நோக்கம் நிறைவேறாமை எனலாம். வீரர் , புலவர் , மன்னர் ஆகியோர் வடக்கிருந்தமையை இலக்கியங்கள் வாயிலாக அறிய முடிகிறது. அவ்வாறு உயிர் துறப்பவர் துறக்கம் பெறுவர் என நம்பினர்.       கலைக்களஞ்சியம் , வடக்கிருத்தலை ‘ உத்ரக மனம் ’ என்றும் ‘ மகாப் பிரத்தானம் ’ என்றும் கூறும். ‘ நாணத்தகு நிலை ’ நேர்ந்ததனாற் சிலர் வடக்கிருந்ததாகத் தமிழ் நூல்கள் கூறுகின்றன என்று கூறுகிறது.           கோப்பெருஞ்சோழன் வடக்கிருந்து உயிர் விட்டான். அவன் உயிர்விட்டப் பிறகு அவனை பார்க்காமலே நட்புக் கொண்டிருந்தப் பிசிராந்தையாரும், சோழனுடன் இருந்த பொத்தியார் என்ற புலவரும் அவன் வடக்கிருந்த இடத்தின் அருகில் வடக்கிருந்து உயிர்...

எண்ணம் போல் வாழ்வு

                                   எண்ணம் போல் வாழ்வு   நினைவுகளே பழக்கவழக்கங்களாக மாறுகின்றன. எனவே தான் எண்ணம் போல் வாழ்வு அனைவருக்கும் அமைகிறது. வெற்றி பெற்ற அனைவரும் பிறரைத் தன் நடத்தையால் மகிழ்விக்க நினைத்தவர்களே என்பதை நாம் நினைவில் நிறுத்த வேண்டும். ·         வங்கியில் பணத்தைச் சேமிப்பதைவிட இதயத்தில் இனிய எண்ணங்களைச் சேமிப்பது மகிழ்ச்சியான வாழ்விற்கு உதவும் வைப்பு நிதியாகும். ·                    மனம் - மகிழ்ச்சி அளிக்காத நிகழ்வுகளை மறந்து விடும் இயல்புடையது. ·                      வெறுப்பு - மனத்தையும், உணர்வையும் பற்றிக் கொண்டுள்ள தொற்று நோய். எனவே வெறுப்பிற்கு விடுதலை தரும்வரை மகிழ்ச்சி நம்மை அணுகாது. ·         கடமையைச் செய்யுங்கள், மகிழ்ச்சியை அறுவடை செய்யலாம். நன்மை, தீமை என்று எது நடந்...