Skip to main content

வாழ்க்கையின் வெற்றியில் தன்னம்பிக்கை (புத்தக மதிப்புரை)

  வாழ்க்கையின் வெற்றியில் தன்னம்பிக்கை ( புத்தக மதிப்புரை )               புத்தக மதிப்புரையில் முனைவர் சி . இலட்சுமணன் அவர்கள் எழுதிய ‘ வாழ்க்கையின் வெற்றியில் தன்னம்பிக்கை ’ என்ற   புத்தகத்தைப் பார்ப்போம் . இந்நூல்   2023 - ஆம் ஆண்டு ,   குமரி மாவட்டம் , தமிழ்ச் செம்மொழி வரலாற்று ஆய்வு மையம் வெளியிட்டுள்ளார்கள். பக்கங்கள் 205,   விலை 1 50 ரூபாய்.             முனைவர் சி . இலட்சுமணன் அவர்கள் , தமிழ்ச் செம்மொழி வரலாற்று ஆய்வு மையத்தின் விடிவெள்ளி ; சுயமுன்னேற்றத்திற்கான நூல்களை எழுதி வருகின்ற சமுதாயச் சிற்பி ; தமிழாய்வுக் களஞ்சியம் என்னும் இதழின் ஆசிரியராக இருந்து சிறப்புடன் நடத்தி வருகிறார் . பத்துக்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார் .             நூலாசிரியர் அவர்கள் தமிழ்ப் பல்கலைக் கழகத்தில் ஓலைச் சுவடித் துறையின் தலைவராக ,   பணியாற்றிய பொழுது பல்வேறு ஊர்களுக்குப் பயணம் ...

மாணவர்களின் தன்மை அன்றும் – இன்றும்

 

மாணாக்கர்களின் தன்மை அன்றும் – இன்றும்

 

          உலகில் வாழக்கூடி மக்கள் அனைவரும் வாழ்வாங்கு வாழ அடிப்படைக் காரணியாக விளங்குவது கல்வி. இளந் தலைமுறையினரை வேற்றுமையில் ஒற்றுமை காணக்கூடிய எதிர்கால சமுதாயத்தின் பொறுப்புள்ள உறுப்பினராக உருவாக்குவதே கல்வியின் முக்கிய நோக்கமாகும். தனி மனிதனின் உடல், உள்ளம், அறநெறி, ஆன்மீகம், நம்பிக்கை ஆகியவற்றின் வளர்ச்சிக்குக் கல்வி உறுதுணையாக இருக்கின்றது.

அன்றைய மாணாக்கரின் தன்மை

          மாணாக்கர் பணிவுடைமை பெற்றவராக, அன்பு உள்ளத்தோடு ஆசிரியரின் நற்குண வழியைத் தமக்கு வழிகாட்டியாகக் கொண்டனர். மாணாக்கர் கடன், பணி செய்து கிடப்பதும், ஆசிரியரின் கடன்களைச் சரிவரச் செய்வதும் அவர்களைத் தாங்குதலுமாக அமைந்திருந்தது. மாணாக்கர் தங்கள் வாழ்க்கையையே குருவிடம் படைக்கக் கடமைப்பட்டிருந்தனர். எளிய வாழ்வும், உயர்ந்த இலட்சியமும் கொண்டு திகழ்ந்தனர். அதனைத் திருக்குறளில்,

          ”உடையார்முன் இல்லார்போல் ஏக்கற்றும் கற்றார்” (குறள், 395)

என்ற குறள் குருகுல முறைக்குச் சிறந்தச் சான்றாகும். குருகுலக் கல்வியில் ஆசிரியர் கூறும் ஒவ்வொரு கருத்தையும் செல்வர் முன் வறியவர் கைகட்டித் தாழ்ந்து பணிவுடன் நிற்பது போல, ஆசிரியர் முன் மாணாக்கர் நின்றும், கைகட்டியும் கல்வியியைக் கற்றனர்.

          குருகுலக் கல்வியில் சான்றோர், ஆராய்ந்து உயர்ந்திருப்பவன், கடவுள் என்று உணர்ந்து அறிவு நூல்களைக் கற்று அடங்கி, அரிய தவங்களைச் செய்வானாயின் அவனுக்கு வீடுபேறு கிடைக்கும் என்று அறிவுறுத்தப்பட்டது. இதனை,

         ”உயர்ந்தோன் தலைவனென்று ஒப்புடைத்தான் நோக்கி

         உயர்ந்தான்நூல் ஓதி ஒடுங்கி – உயர்ந்தான்

         அருந்தவம் ஆற்றச் செயின்வீடாம் என்றார்

         பெருந்தவம் செய்தார் பெரிது”  (ஏலாதி, 64)

என்பதால் உணரமுடிகிறது. கல்வியைக் கற்பிக்கும் ஆசிரியர் இல்லாத ஊரில் வாழ்வதும், முரண்பாட்டைப் போக்கித் தெளிவிக்கும் கல்விக் கேள்விகளில் முதிர்ந்தவர் இல்லாத அவையில் இருப்பதும் மாணாக்கர் இழிவாகக் கருதினர். மாணாக்கர் ஆசிரியரைக் குருவாகக் கொண்டும், கல்விக் கேள்விகளில் வல்லவர்களுடனும் இருந்து செயல்படுவதே குருகுலக் கல்வியில் சிறப்பெனக் கருதினர். இதனை,

          ”கணக்காயர் இல்லாத ஊரும் பிணக்கறுக்கும்

          மூத்தோரை இல்லா அவைக்களனும் – பாத்துண்ணும்

          தன்மையி லாளர் அயலிருப்பம் இம்மூன்றும்

          நன்மை பயத்தல் இல” (திரிகடுகம், 10)

என்பதால் அறியலாம். எனவே, குருகுலக் கல்விமுறையில் மாணாக்கரின் தன்மைகள் போற்றத்தக்க வகையில் அமைந்திருந்தன என்பதை இலக்கியங்களின் வழி அறிய முடிகிறது.

இன்றைய மாணாக்கர்களின் தன்மை

இன்றைய கல்விமுறையால் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளைக் கட்டாயப்படுத்தி இதைத்தான் நீ படிக்கவேண்டும் என்றும், இதைப் படித்தால் தான் வாழ்வில் உயர்வைப் பெற முடியும் என்றும் கூறி அவர்களின் சுயசிந்தனைகளை முடமாக்கி வைக்கின்றனர். ”எழுத்தாளனாகவோ, ஓவியம் வரைபவனாகவோ, ஆசிரியனாகவோ வந்தால் உனக்குக் கிடைக்கும் குறைந்த வருமானத்தைக் கொண்டு நீ வசதியாக வாழ முடியாது. நீ டாக்டராக, எஞ்சியனராக வரவேண்டும்”  என்று பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளைக் கட்டாயப்படுத்தி அவர்கள் விரும்பும் ஒரு வார்ப்பாக உருவெடுக்கும் படி செய்து வருகிறார்கள்.

    கல்வி தனியார் மயமானதால் குழந்தைகளுக்குப் பாடச் சுமைகள் அதிகமாகின்றன. எப்போதும் வீட்டுப்பாடம், டியூசன், கோச்சிங்கிளாஸ் என்று குழந்தைகள் இருப்பதால், குழந்தைகளுக்கு உறவு முறைகளும் தெரிய வாய்ப்பில்லாமல் போகிறது. ஆகவே பாரதி,

          ”காலை எழுந்தவுடன் படிப்பு – பின்பு

         கனிவு கொடுக்கும் நல்லபாட்டு

         மாலை முழுவதும் விளையாட்டு – என்று

         வழக்கப் படுத்திக் கொள்ளு பாப்பா”

என்று பாடிச் சென்றார். இவ்வாறு வழக்கப்படுத்திக் கொண்டால் பிள்ளைகளின் உள்ளம் சிறக்கும்.

          இன்றைய இளைய சமுதாயத்தினர் கல்வி கற்பதைவிட நாகரிக முறையில் தங்கள் வாழ்வை அமைத்துக் கொள்ளவே விரும்புகின்றனர். மேலை நாட்டுத் தாக்கத்தாலும், தொலைத்  தொடர்பு ஊடகங்களாலும் தலையில் அதிகமான முடியினை வளர்ப்பதும், அழகிய புதுப்புது ஆடைகளை உடுத்துவதும், அழகுப் பொருட்களையும், வாசனைத் திரவியங்களைப் பூசிக் கொள்வதும் போன்ற செயல்களிலேயே நாட்டம் கொள்கின்றனர். தொலைத் தொடர்புக் கருவிகள் மாணவர்களின் அதிக நேரத்தைத் தனதாக்கிக் கொள்கின்றது. ஆகையால் சக மனிதர்களிடம் நேருக்கு நேர் பேசுவதும், குடும்பங்கள் தங்களுக்குள் பேசிக் கொள்வதும், குழந்தைகளுடன் நேரத்தை செலவிடுவதும் குறைத்து மாணவர்களின் முன்னேற்றத்திற்கும், சுயமாகச் சிந்திக்கும் மூளை வளர்ச்சிக்கும், கண்பார்வைக்கும் நவீனக் கருவிகளான தொலைத் தொடர்புக் கருவிகளான கைப்பேசி, தொலைக்காட்சி, மடிக்கணினி போன்றவை கெடுதலாக அமைகின்றது.  

நிறைவாக,

மாணாக்கர்க்குக் கொடுக்கும் கல்வி எப்பொழுது முழுமை பெறும் என்றால் வாழ்க்கை சம்பந்தப்பட்ட அனைத்து  எண்ணங்களையும் கற்றுக் கொடுக்க வேண்டும். இயற்கையுடன் இணைந்ததாக இருத்தல் வேண்டும். கல்வி சுற்றுப்புறத்தின் அழகை ரசிக்கும் மனநிலையை உருவாக்க வேண்டும். கைக்கு எட்டும் தூரத்தில் இருக்கும் அழகைப் பார்ப்பது, கலைவண்ணத்தைக் கண்டு மகிழ்வது, தொட்டு ஆனந்தம் காண்பது போன்றவைகளை மாணவர்களுக்குச் சொல்லித் தரவேண்டும்.

மணவாழ்க்கை, குழந்தை வளர்ப்பு, மகிழ்ச்சியுடன் வாழ்தல், ஊக்கத்துடன் செயல்படுதல், ஆழமாக சிந்தித்தல், அமைதியோடு செயல்படுதல், சகோதரத்துவத்தைப் பேணுதல் போன்ற அனைத்தையும் சொல்லிக் கொடுக்கும் பொழுதுதான் கல்வி முழுமை பெறும்.

 

 

Comments

Popular posts from this blog

பொய்யில் புலவன் பொய்யா மொழிகள்

திருக்குறளில் எனது சிறு முயற்சியாக… .  " பொய்யில் புலவன் பொய்யா மொழிகள்"  என்ற இத்தலைப்பில் அமைந்த 133 வரிகள் கொண்ட இப்படைப்பு முருகனின் ” கந்த சஷ்டி  கவசம் ” போன்று உருவாக்கப்பட்டது. இப்பகுதி அறத்துப்பால் 38  அதிகாரங்கள், பொருட்பால் 70  அதிகாரங்களிலிருந்து மட்டும் சுருங்கச் சொல்லி விளங்க வைத்தல் என்ற முறையில், திருக்குறளின் சாராக அமைத்து வழங்கியுள்ளேன். அறமும், பொருளும் ஒருவருக்கு அமைந்தால் இன்பம் தானாகக் கிட்டும் என்ற நோக்கத்தில் அமைக்கப்பட்டது. ”பொய்யில் புலவன் பொய்யா மொழிகள்” காக்க காக்க அறத்தைக் காக்க (1) காக்க காக்கக் குறளைக் காக்க உலக மொழிகளில் ஒப்பற்ற நூலாம், நோக்க நோக்க பெயா்த்து நோக்க மனிதன் கற்று மனிதம் காக்க ஐம்பொறி உணா்வை காக்க காக்க புகழுடன் வாழ ஒழுக்கம் காக்க அறநெறி வாழ்வை இறைவழி காக்க வானம் பொய்யா வளத்தைக் காக்க பசிப்பிணி யில்லா உலகைக் காக்க பற்றற்ற வாழ்வை பரிவுடன் காக்க அறத்தைக் காக்க அன்பைக் காக்க (2) குறையிலா வாழ்வை குணமுடன் காக்க இல்லற வாழ்வுடன் நல்லறம் காக்க பண்பொடு பயனும் அறத்துடன் காக்க வாழ்க வாழ்க வளமுடன் வாழ்க வாழ்க வாழ்க...

எண்ணம் போல் வாழ்வு

                                   எண்ணம் போல் வாழ்வு   நினைவுகளே பழக்கவழக்கங்களாக மாறுகின்றன. எனவே தான் எண்ணம் போல் வாழ்வு அனைவருக்கும் அமைகிறது. வெற்றி பெற்ற அனைவரும் பிறரைத் தன் நடத்தையால் மகிழ்விக்க நினைத்தவர்களே என்பதை நாம் நினைவில் நிறுத்த வேண்டும். ·         வங்கியில் பணத்தைச் சேமிப்பதைவிட இதயத்தில் இனிய எண்ணங்களைச் சேமிப்பது மகிழ்ச்சியான வாழ்விற்கு உதவும் வைப்பு நிதியாகும். ·                    மனம் - மகிழ்ச்சி அளிக்காத நிகழ்வுகளை மறந்து விடும் இயல்புடையது. ·                      வெறுப்பு - மனத்தையும், உணர்வையும் பற்றிக் கொண்டுள்ள தொற்று நோய். எனவே வெறுப்பிற்கு விடுதலை தரும்வரை மகிழ்ச்சி நம்மை அணுகாது. ·         கடமையைச் செய்யுங்கள், மகிழ்ச்சியை அறுவடை செய்யலாம். நன்மை, தீமை என்று எது நடந்...

கோப்பெருஞ்சோழன் – பிசிராந்தையார் நட்பு

  கோப்பெருஞ்சோழன் – பிசிராந்தையார் நட்பு   வடக்கிருத்தல் தமிழரின் நம்பிக்கை சார்ந்த பழக்கவழக்கங்களில் வடக்கிருத்தலை ஆடவர் மேற்கொண்டனர். ஊருக்கு வடபால் ஓரிடத்தில் வடக்குத் திசை நோக்கி அமர்ந்த வண்ணம் உண்ணாநோன்பிருந்து உயிர்த்துறப்பதை ‘ வடக்கிருத்தல் ’ எனக் கொண்டனர். வடக்கிருக்க அடிப்படைக் காரணியாக அமைவன மானம் , வீரம் , நட்பு , தன்நோக்கம் நிறைவேறாமை எனலாம். வீரர் , புலவர் , மன்னர் ஆகியோர் வடக்கிருந்தமையை இலக்கியங்கள் வாயிலாக அறிய முடிகிறது. அவ்வாறு உயிர் துறப்பவர் துறக்கம் பெறுவர் என நம்பினர்.       கலைக்களஞ்சியம் , வடக்கிருத்தலை ‘ உத்ரக மனம் ’ என்றும் ‘ மகாப் பிரத்தானம் ’ என்றும் கூறும். ‘ நாணத்தகு நிலை ’ நேர்ந்ததனாற் சிலர் வடக்கிருந்ததாகத் தமிழ் நூல்கள் கூறுகின்றன என்று கூறுகிறது.           கோப்பெருஞ்சோழன் வடக்கிருந்து உயிர் விட்டான். அவன் உயிர்விட்டப் பிறகு அவனை பார்க்காமலே நட்புக் கொண்டிருந்தப் பிசிராந்தையாரும், சோழனுடன் இருந்த பொத்தியார் என்ற புலவரும் அவன் வடக்கிருந்த இடத்தின் அருகில் வடக்கிருந்து உயிர்...