Skip to main content

என் எண்ணச் சிதறல்கள்! (3)

  என் எண்ணச் சிதறல்கள் ! (3)             Linkedin எனும் தளத்தில் என்னுடைய எண்ணங்களைக் கடந்த சில மாதங்களாகக்   கவிதைகளாக வெளியிட்டு வருகிறேன் . அந்தக் கவிதைகளை அனைத்தையும்   தொகுத்து இப்பகுதியில் வெளியிட்டுள்ளேன் . 1.     தன் நம்பிக்கை! சந்தேகம்! மனநிம்மதியைக் கெடுக்கும் ஆயுதம்! சஞ்சலம்! செயல்திறனைக் குறைக்கும் பேராயுதம்! 2.     வாசிப்பு! அச்சுறுத்தும் வாழ்வின் இருண்ட பக்கங்கள் வாசிக்க வாசிக்க வெளிச்சம் அடைகிறது! தாகத்திற்குத் தண்ணீர்போல தரமான நூல்களைத் தேடித் தேடிப் படிப்பதால் வெளிபடும் வாழ்வு இனிக்கிறது! அறைக்குள் அடங்கிக் கிடந்த எண்ணச் சிறைகளிலிருந்து விடுதலை அளிக்கிறது! நல்ல நூல்களின் வாசிப்பு! வாழ்வின் அடையாளம் சுவாசிப்பதைப் போல் வாசிப்பை நேசிப்பது! 3.     படைப்பு! தற்புகழ்ச்சிக்காகவோ பிறரை மகிழ்விப்பதற்காகவோ எழுதப்படும் எழுத்துக்களை விட உய்த்துணர்வதற்கும் உட்பொருள் காண்பதற்கும் நல்வழி காட்டுவதற்கும் தெளிவான தேடலுடன் சொல்லும் செய்த...

இலக்கியங்களில் கோவில் வழிபாடு

 

இலக்கியங்களில் கோவில் வழிபாடு


 

          ”காடும் காவுங் கவின்பெறு துருத்தியும்

           யாறுங் குளனும் வேறுபல் வைப்பும்

           சதுக்கமுஞ் சந்தியும் புதுப்புங் கடம்பும்

           மன்றமும் பொதியிலும் கந்துடை நிலையினும்” 

                                                                                    (திருமுருகு, 223-226)

என்று நக்கிரர் திருமுருகாற்றுப்படையில் இறைவனை வழிபடும் இடங்களாகக் காடு, பொழில், ஆற்றிடைக் குறை, ஆறுகள், குளங்கள், நாற்சந்தி, முச்சந்தி, ஐஞ்சந்தி, ஊர்நடுவே உள்ள மரம் அம்பலம் ஆகியன இறை உறையும் இடங்களாக இருந்தமை அறியப்படுகிறது.

கோவில்களின் வளர்ச்சி

   பழங்காலத்தில் தமிழகத்தில் கோவில் கட்டிடங்கள் மரத்தினால் அமைக்கப்பட்டன. இதனை சிதம்பரத்தில் ஊர்த்துவ தாண்டவ மூர்த்தி ஆலயத்தின் தொன்மைநிலை தெளிவாக்கும். செங்கல், சுண்ணாம்பு, மரம் முதலிய பொருள்களால் கட்டிடங்கள் அமைக்கப்பட்டன. இக்கருத்தினைக் கடியலூர் உருத்திரங்கண்ணனார்,

          ”இட்டிகை நெடுஞ்சுவர் விட்டம் விழ்ந்தென

           மணிப்புறாத் துறந்த மரஞ்சோர் மாடத்து

           எழுதணி கடவுள் போகலிற் புல்லென்று

           ஒழுகுவலி மறந்த மெழுகாப் புன்றிணை”

அகநானூற்றுப் பாடல் வரிகள் குறிக்கின்றது. பல்லவர் காலத்தில் பாறைகளைக் குடைந்து குகைக் கோவில்கள் அமைக்கப்பட்டன. இராசசிம்மப் பல்லவன் காலத்தில் கற்றளிகள் கட்டும் முறை ஏற்பட்டது. தனித்தனிக் கருங்கற்களை ஒன்றின் மேல் ஒன்றாக அடுக்கிக் கட்டப்படுவது கற்றளியாகும். பிற்காலச் சோழர்கள் பல கோவில்களை இம்முறையில் கட்டினர்.

இலக்கியங்களில் வழிபாடுகள் குறித்தச் செய்திகள்

  ‘வழிபாடு’ என்ற சொல் இலக்கண நூலாகிய தொல்காப்பியத்தில் ‘வழிபடுதெய்வம்’ எனக்கூறப்படுகிறது.

          ”வழிபடல் சூழ்ந்தபின் அவருடை நாட்டே ...”

எனவரும் குறுந்தொகைப் பாடலில் வழிபடல் என்பதற்குச் செல்லுதல் எனப் பொருள் கொள்கிறார் உ.வே.சாமிநாதைய்யர்.

          ”வழிபடுவோரை வல்லறிதீயே”

எனவரும் புறநானூற்றுப் பாடலில் ‘வழிபடுதல்’ என்பது ‘வணங்குதல்’ என்ற பொருளைக் குறிக்கின்றது.

          ”வழிபடு வல்லுதலால்”

என்ற நாலடியார் பாடல் வழிபாடு என்பதற்குப் ‘பின்பற்றுதல்’ எனப் பொருள் தருகின்றது.

          “வந்தனை செய்து வழிபடுதலைக் கோல் ...

          கோட்டம் வழிபாடு  .....”

என்னும் சொற்கள் சிலப்பதிகாரத்தில் பயின்று வருகின்றது.

          ”அமரர்கொன் வழிபட்டார் ...”

எனத் திருவாய்மொழி நூற்றந்தாதியில் இச்சொல் ‘நேர்சொல்லுதல்’ எனப் பொருள் தருகின்றது.

          ”இருமொழியும் வழிபடுத்தார்....”

எனக் காஞ்சிப் புராணத்தில் வருமிடத்து ‘வழிபடுத்துதல்’ என்பதற்குச் ‘சீர்திருத்தம்’ எனப்பொருள் கொள்ளுமாறு உள்ளது.

          ‘வழிபாடு’ என்பது ‘வழிபடுதல்’, ‘நெறியை அடைதல்’ எனப் பொருள்படும். இறையருள் நெறியில் கலந்து செல்ல முற்பட்டுக் குறைவிலா நிறைவாய்க் கோதிலா அமுதாயுள்ள இறைவனின் உயரிய பண்புநலன்களைப் படிப்படியாக அடைவதற்காக அவன் அருளைத் துணையாகக் கொண்டு செய்யப்படும் முயற்சியே வழிபாடு எனப்படும்.

நிறைவாக,

      மனிதன் மனிதமாக மாறுவதற்கான வழிமுறைகளே வழிபாடு என்று ஒவ்வொரு சமயத்திலும் பலவாறு வேறுபடுகின்றது. இறைவனுக்கு வழிபாடு காலை, மதியம், இரவு என்ற முறையில் நடத்தப்படுகிறது. இவ்வழிபாட்டின் போது தெய்வத்திற்கு நீரிட்டு மலர்தூவி, இசைபாடி வணங்குவர் என்பதை,

          ”சலம் பூவொடு தூபம் மறந்தறியேன்

           தமிழோடு இசைபாடல் மறந்தறியேன்...”

என்ற திருவாய்மொழிப் பாடல் மூலம் அறியலாம்.

பார்வை நூல்

1.  புவனேஸ்வரி. முனைவர்.நாட்டுப்புறத் தெய்வ வழிபாடு, சித்ரா பதிப்பகம், கோடம்பாக்கம், சென்னை – 600 024,  முதல் பதிப்பு – 2019.

 

 

 

         

 

 

Comments

Popular posts from this blog

பொய்யில் புலவன் பொய்யா மொழிகள்

திருக்குறளில் எனது சிறு முயற்சியாக… .  " பொய்யில் புலவன் பொய்யா மொழிகள்"  என்ற இத்தலைப்பில் அமைந்த 133 வரிகள் கொண்ட இப்படைப்பு முருகனின் ” கந்த சஷ்டி  கவசம் ” போன்று உருவாக்கப்பட்டது. இப்பகுதி அறத்துப்பால் 38  அதிகாரங்கள், பொருட்பால் 70  அதிகாரங்களிலிருந்து மட்டும் சுருங்கச் சொல்லி விளங்க வைத்தல் என்ற முறையில், திருக்குறளின் சாராக அமைத்து வழங்கியுள்ளேன். அறமும், பொருளும் ஒருவருக்கு அமைந்தால் இன்பம் தானாகக் கிட்டும் என்ற நோக்கத்தில் அமைக்கப்பட்டது. ”பொய்யில் புலவன் பொய்யா மொழிகள்” காக்க காக்க அறத்தைக் காக்க (1) காக்க காக்கக் குறளைக் காக்க உலக மொழிகளில் ஒப்பற்ற நூலாம், நோக்க நோக்க பெயா்த்து நோக்க மனிதன் கற்று மனிதம் காக்க ஐம்பொறி உணா்வை காக்க காக்க புகழுடன் வாழ ஒழுக்கம் காக்க அறநெறி வாழ்வை இறைவழி காக்க வானம் பொய்யா வளத்தைக் காக்க பசிப்பிணி யில்லா உலகைக் காக்க பற்றற்ற வாழ்வை பரிவுடன் காக்க அறத்தைக் காக்க அன்பைக் காக்க (2) குறையிலா வாழ்வை குணமுடன் காக்க இல்லற வாழ்வுடன் நல்லறம் காக்க பண்பொடு பயனும் அறத்துடன் காக்க வாழ்க வாழ்க வளமுடன் வாழ்க வாழ்க வாழ்க...

கோப்பெருஞ்சோழன் – பிசிராந்தையார் நட்பு

  கோப்பெருஞ்சோழன் – பிசிராந்தையார் நட்பு   வடக்கிருத்தல் தமிழரின் நம்பிக்கை சார்ந்த பழக்கவழக்கங்களில் வடக்கிருத்தலை ஆடவர் மேற்கொண்டனர். ஊருக்கு வடபால் ஓரிடத்தில் வடக்குத் திசை நோக்கி அமர்ந்த வண்ணம் உண்ணாநோன்பிருந்து உயிர்த்துறப்பதை ‘ வடக்கிருத்தல் ’ எனக் கொண்டனர். வடக்கிருக்க அடிப்படைக் காரணியாக அமைவன மானம் , வீரம் , நட்பு , தன்நோக்கம் நிறைவேறாமை எனலாம். வீரர் , புலவர் , மன்னர் ஆகியோர் வடக்கிருந்தமையை இலக்கியங்கள் வாயிலாக அறிய முடிகிறது. அவ்வாறு உயிர் துறப்பவர் துறக்கம் பெறுவர் என நம்பினர்.       கலைக்களஞ்சியம் , வடக்கிருத்தலை ‘ உத்ரக மனம் ’ என்றும் ‘ மகாப் பிரத்தானம் ’ என்றும் கூறும். ‘ நாணத்தகு நிலை ’ நேர்ந்ததனாற் சிலர் வடக்கிருந்ததாகத் தமிழ் நூல்கள் கூறுகின்றன என்று கூறுகிறது.           கோப்பெருஞ்சோழன் வடக்கிருந்து உயிர் விட்டான். அவன் உயிர்விட்டப் பிறகு அவனை பார்க்காமலே நட்புக் கொண்டிருந்தப் பிசிராந்தையாரும், சோழனுடன் இருந்த பொத்தியார் என்ற புலவரும் அவன் வடக்கிருந்த இடத்தின் அருகில் வடக்கிருந்து உயிர்...

எண்ணம் போல் வாழ்வு

                                   எண்ணம் போல் வாழ்வு   நினைவுகளே பழக்கவழக்கங்களாக மாறுகின்றன. எனவே தான் எண்ணம் போல் வாழ்வு அனைவருக்கும் அமைகிறது. வெற்றி பெற்ற அனைவரும் பிறரைத் தன் நடத்தையால் மகிழ்விக்க நினைத்தவர்களே என்பதை நாம் நினைவில் நிறுத்த வேண்டும். ·         வங்கியில் பணத்தைச் சேமிப்பதைவிட இதயத்தில் இனிய எண்ணங்களைச் சேமிப்பது மகிழ்ச்சியான வாழ்விற்கு உதவும் வைப்பு நிதியாகும். ·                    மனம் - மகிழ்ச்சி அளிக்காத நிகழ்வுகளை மறந்து விடும் இயல்புடையது. ·                      வெறுப்பு - மனத்தையும், உணர்வையும் பற்றிக் கொண்டுள்ள தொற்று நோய். எனவே வெறுப்பிற்கு விடுதலை தரும்வரை மகிழ்ச்சி நம்மை அணுகாது. ·         கடமையைச் செய்யுங்கள், மகிழ்ச்சியை அறுவடை செய்யலாம். நன்மை, தீமை என்று எது நடந்...