Skip to main content

வாழ்க்கையின் வெற்றியில் தன்னம்பிக்கை (புத்தக மதிப்புரை)

  வாழ்க்கையின் வெற்றியில் தன்னம்பிக்கை ( புத்தக மதிப்புரை )               புத்தக மதிப்புரையில் முனைவர் சி . இலட்சுமணன் அவர்கள் எழுதிய ‘ வாழ்க்கையின் வெற்றியில் தன்னம்பிக்கை ’ என்ற   புத்தகத்தைப் பார்ப்போம் . இந்நூல்   2023 - ஆம் ஆண்டு ,   குமரி மாவட்டம் , தமிழ்ச் செம்மொழி வரலாற்று ஆய்வு மையம் வெளியிட்டுள்ளார்கள். பக்கங்கள் 205,   விலை 1 50 ரூபாய்.             முனைவர் சி . இலட்சுமணன் அவர்கள் , தமிழ்ச் செம்மொழி வரலாற்று ஆய்வு மையத்தின் விடிவெள்ளி ; சுயமுன்னேற்றத்திற்கான நூல்களை எழுதி வருகின்ற சமுதாயச் சிற்பி ; தமிழாய்வுக் களஞ்சியம் என்னும் இதழின் ஆசிரியராக இருந்து சிறப்புடன் நடத்தி வருகிறார் . பத்துக்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார் .             நூலாசிரியர் அவர்கள் தமிழ்ப் பல்கலைக் கழகத்தில் ஓலைச் சுவடித் துறையின் தலைவராக ,   பணியாற்றிய பொழுது பல்வேறு ஊர்களுக்குப் பயணம் ...

கொழுமுகத்துக் குழந்தை (சீதை)

 

கொழுமுகத்துக் குழந்தை (சீதை)

 

        விதேஹ மன்னரான ஜனகர் மிகவும் நல்லமுறையில் தம் தேசத்தை ஆண்டு வந்தார். தசரதச் சக்கரவர்த்திக்குப் பழைய மித்திரர். தசரதன் புத்திரப் பேற்றுக்காகச் செய்த பெரிய யாகத்திற்கு அரசர்களை அழைத்தபோது ”ஜனகரிடம் தூதுவர்களை அனுப்பவேண்டாம். மந்திரிகளே நேரில் போய் அழைக்க வேண்டும்” என்று தனி உத்தரவிட்டான். ஜனகர் ஒரு ராஜரிசி;  சூரர்; எல்லாச் சாஸ்திரங்களையும் நன்றாகக் கற்றவர்; வேத வேதாந்தகளில் நிபுணர்; நியமம் காத்தவர்; பிரம்மஞானி. கடமைகளைச் செய்தே சித்தியடைவதைப் பற்றி அர்ச்சுனனுக்கு எடுத்துச் செல்லும்போது, கண்ணன் ஜனகரைச் சிறந்த உதாரணமாக எடுத்துச் சொன்னான். அவதார தேவி சீதையை மகளாகப் பெற்ற தகுதி கொண்ட மகான்.

          ஒரு காலத்தில் ஜனக மகாராஜா யாகம் செய்வதற்கென்று இடம் கண்டு, அதைத் தாமே கலப்பைப் பிடித்து உழுதார். உழுது, புதரும் பூண்டுமாக இருந்த பூமியைத் திருத்தி ஒழுங்குப்படுத்திக் கொண்டிருக்கும் போது, மண்ணில் ஒரு திவ்ய ரூபமான பெண் குழந்தையைக் கண்டார். ஜனகருக்குக் குழந்தையில்லை. தரையில் புரண்டு உடலெல்லாம் மண் பூசிக் கிடந்த அக்குழந்தையைப் பூதேவியே தமக்குத் தந்த வரம் என்று மகிழ்ச்சிப் பரவசமாக்க் கையில் எடுத்துக் கொண்டு தம் பிரிய பார்யையிடம் சென்று, ”இதோ, நமக்குக் கிடைத்த பெருந்தனம்! யாக பூமியில் இவளை அடைந்தேன். இவளே நம்முடைய சந்தானம்!” என்று குழந்தையைப் பட்ட மகஷியிடம் கொடுத்தார். அவளும் அக்குழந்தையைத் தான் பெற்ற குழந்தையாகவே வளர்த்தாள். கம்பர் பாடியிருக்கும் மிக அழகிய பாடலாக இவ்விடத்தில் கூறலாம்.

          ”உழுகின்ற கொழுமுகத்தின் உதிக்கின்ற கதிரின் ஒளி

         பொழிகின்ற புவிமடந்தை உருவெளிப்பட் டெனப்புணரி

         எழுகின்ற தெள்ளமுதோ (டு) எழுந்தவளும் இழித் (து) ஒதுங்கித்

        தொழுகின்ற நன்னலத்துப் பெண்ணரசி தோன்றினாள்”

இப்பாடலின் பொருளாக, பூதேவியை நாம் நேரில் பார்க்க முடியாது. உழுகின்ற கொழுமுகத்தில், தன் அபார சௌந்தரியத்தை அழகிய பச்சைப் பயிர்களின் வாயிலாகக் காட்டுகிறாள். உதிக்கும் சூரியனுடைய கிரணங்களுக்குச் சம்மான பொலிவுடன் முறைக்கும் பயிர்களில் விளங்குகிறாள் பூமாதேவி. உள்ளே மறைந்து நிற்கும் தேவியின் முழு அழகு நமக்குத் தெரியாது. அந்தப் பூதேவியே சீதையாக வெளிப்பட்டு ஐனகருடைய கலப்பைக் கொழுமுகத்தில் தோன்றினாள். கடலைக் கடைந்த போது அமுதத்தோடு எழுந்த ஸ்ரீதேவியும், சீதையின் அழகைக் கண்டு வியந்து தொழுவாள் என்று கம்பர் பாடுகிறார்.

          தெய்வீகக் குழந்தையான சீதையை மிகவும் அன்போடு ஜனகரும் அவர் பிரிய பத்தினியும் வளர்த்தார்கள்.

          விவாகத்துக்குரிய காலம் வந்தது. இவளை விட்டுப் பிரிய வேண்டும் என்று ஜனகர் துக்கப்பட்டார். தெய்வீகப் பெண்ணாகிய இவளை, மனைவியாகப் பெறக்கூடிய அரசகுமாரன் யார் என்று யோசித்து, வெகு காலம் மிகவும் வருத்தப்பட்டார். இந்த நிலையில் ஜனகர் முடிவு செய்தார். முன்னொரு சமயம் மகாயாகம் செய்த காலத்தில் வருணன் ஜனகருடைய யாகத்தைப் போற்றி, ருத்திர வில்லையும் இரண்டு அம்பறாத் துணிகளையும் ஜனகருக்குத் தந்தான். அந்த வில்லானது மிக புராதன தெய்வீகமான வில். அதைச் சாமான்ய ஜனங்கள் கையால் அசைக்கக் கூட முடியாது. எடுத்து, வளைத்து, நாண் ஏற்றவதைப் பற்றி சொல்ல  வேண்டாம்! முடியாத காரியம். ஜனகர் அரச சமூகத்துக்குத் தெரியப்படுத்தினார்.

          ”என்னிடம் இருக்கும் வருணதேவப் பிரசாதமான இந்த ருத்திரவில்லை எந்த அரசகுமாரன் வளைத்து நாண் பூட்டுகிறானோ அவனுக்கு என் மகள் சீதையைத் தருவேன். இதுவே என் மகளுடைய சுயம்வர நிபந்தனை.

          சீதையின் அழகைப் பற்றிக் கேள்விப்பட்டு பல அரச குமாரர்கள்  வில்லைப் பார்த்துவிட்டு, ஒன்றும் செய்ய முடியாமல் திரும்பிவிட்டார்கள்.

Comments

Popular posts from this blog

பொய்யில் புலவன் பொய்யா மொழிகள்

திருக்குறளில் எனது சிறு முயற்சியாக… .  " பொய்யில் புலவன் பொய்யா மொழிகள்"  என்ற இத்தலைப்பில் அமைந்த 133 வரிகள் கொண்ட இப்படைப்பு முருகனின் ” கந்த சஷ்டி  கவசம் ” போன்று உருவாக்கப்பட்டது. இப்பகுதி அறத்துப்பால் 38  அதிகாரங்கள், பொருட்பால் 70  அதிகாரங்களிலிருந்து மட்டும் சுருங்கச் சொல்லி விளங்க வைத்தல் என்ற முறையில், திருக்குறளின் சாராக அமைத்து வழங்கியுள்ளேன். அறமும், பொருளும் ஒருவருக்கு அமைந்தால் இன்பம் தானாகக் கிட்டும் என்ற நோக்கத்தில் அமைக்கப்பட்டது. ”பொய்யில் புலவன் பொய்யா மொழிகள்” காக்க காக்க அறத்தைக் காக்க (1) காக்க காக்கக் குறளைக் காக்க உலக மொழிகளில் ஒப்பற்ற நூலாம், நோக்க நோக்க பெயா்த்து நோக்க மனிதன் கற்று மனிதம் காக்க ஐம்பொறி உணா்வை காக்க காக்க புகழுடன் வாழ ஒழுக்கம் காக்க அறநெறி வாழ்வை இறைவழி காக்க வானம் பொய்யா வளத்தைக் காக்க பசிப்பிணி யில்லா உலகைக் காக்க பற்றற்ற வாழ்வை பரிவுடன் காக்க அறத்தைக் காக்க அன்பைக் காக்க (2) குறையிலா வாழ்வை குணமுடன் காக்க இல்லற வாழ்வுடன் நல்லறம் காக்க பண்பொடு பயனும் அறத்துடன் காக்க வாழ்க வாழ்க வளமுடன் வாழ்க வாழ்க வாழ்க...

எண்ணம் போல் வாழ்வு

                                   எண்ணம் போல் வாழ்வு   நினைவுகளே பழக்கவழக்கங்களாக மாறுகின்றன. எனவே தான் எண்ணம் போல் வாழ்வு அனைவருக்கும் அமைகிறது. வெற்றி பெற்ற அனைவரும் பிறரைத் தன் நடத்தையால் மகிழ்விக்க நினைத்தவர்களே என்பதை நாம் நினைவில் நிறுத்த வேண்டும். ·         வங்கியில் பணத்தைச் சேமிப்பதைவிட இதயத்தில் இனிய எண்ணங்களைச் சேமிப்பது மகிழ்ச்சியான வாழ்விற்கு உதவும் வைப்பு நிதியாகும். ·                    மனம் - மகிழ்ச்சி அளிக்காத நிகழ்வுகளை மறந்து விடும் இயல்புடையது. ·                      வெறுப்பு - மனத்தையும், உணர்வையும் பற்றிக் கொண்டுள்ள தொற்று நோய். எனவே வெறுப்பிற்கு விடுதலை தரும்வரை மகிழ்ச்சி நம்மை அணுகாது. ·         கடமையைச் செய்யுங்கள், மகிழ்ச்சியை அறுவடை செய்யலாம். நன்மை, தீமை என்று எது நடந்...

கோப்பெருஞ்சோழன் – பிசிராந்தையார் நட்பு

  கோப்பெருஞ்சோழன் – பிசிராந்தையார் நட்பு   வடக்கிருத்தல் தமிழரின் நம்பிக்கை சார்ந்த பழக்கவழக்கங்களில் வடக்கிருத்தலை ஆடவர் மேற்கொண்டனர். ஊருக்கு வடபால் ஓரிடத்தில் வடக்குத் திசை நோக்கி அமர்ந்த வண்ணம் உண்ணாநோன்பிருந்து உயிர்த்துறப்பதை ‘ வடக்கிருத்தல் ’ எனக் கொண்டனர். வடக்கிருக்க அடிப்படைக் காரணியாக அமைவன மானம் , வீரம் , நட்பு , தன்நோக்கம் நிறைவேறாமை எனலாம். வீரர் , புலவர் , மன்னர் ஆகியோர் வடக்கிருந்தமையை இலக்கியங்கள் வாயிலாக அறிய முடிகிறது. அவ்வாறு உயிர் துறப்பவர் துறக்கம் பெறுவர் என நம்பினர்.       கலைக்களஞ்சியம் , வடக்கிருத்தலை ‘ உத்ரக மனம் ’ என்றும் ‘ மகாப் பிரத்தானம் ’ என்றும் கூறும். ‘ நாணத்தகு நிலை ’ நேர்ந்ததனாற் சிலர் வடக்கிருந்ததாகத் தமிழ் நூல்கள் கூறுகின்றன என்று கூறுகிறது.           கோப்பெருஞ்சோழன் வடக்கிருந்து உயிர் விட்டான். அவன் உயிர்விட்டப் பிறகு அவனை பார்க்காமலே நட்புக் கொண்டிருந்தப் பிசிராந்தையாரும், சோழனுடன் இருந்த பொத்தியார் என்ற புலவரும் அவன் வடக்கிருந்த இடத்தின் அருகில் வடக்கிருந்து உயிர்...