Skip to main content

வாழ்க்கையே ஒரு வழிபாடு – வெ. இறையன்பு (புத்தக மதிப்புரை)

  வாழ்க்கையே ஒரு வழிபாடு – வெ . இறையன்பு ( புத்தக மதிப்புரை )   புத்தக மதிப்புரை சிறப்பு நிகழ்ச்சியில் வெ . இறையன்பு அவர்கள் எழுதிய ‘ வாழ்க்கையே ஒரு வழிபாடு ’ என்ற   புத்தகத்தைப் பார்ப்போம் . இந்நூல்   ஆறாம் பதிப்பாக 2011 - ஆம் ஆண்டு ,   விஜயா பதிப்பகம் வெளியிட்டுள்ளார்கள். பக்கங்கள் 1 96,   விலை 1 00 ரூபாய். வெ . இறையன்பு அவர்கள் பள்ளிக் காலத்தில் பல போட்டிகளில் கலந்து கொண்டு பரிசுகள் பெற்றார் . பேச்சாளராகப் பரிணமித்தார் . பரிசாகக் கிடைத்த நூல்கள் இலக்கிய ஆர்வத்தை வளர்த்தன . கல்லூரிக் காலத்தில் எழுதிய கவிதைகளைத் தொகுத்து ‘ பூபாளத்திற்கொரு புல்லாங்குழல் ’ என்ற தலைப்பில் கவிதைத் தொகுப்பை வெளியிட்டார் . அமுதசுரபி , ஆனந்தவிகடன் , இதயம் பேசுகிறது , தாமரை , கணையாழி , புதிய பார்வை , தமிழன் எக்ஸ்பிரஸ் என்று பல இதழ்களில் கதை , கவிதை , கட்டுரைகளை எழுதியுள்ளார் .   முதல் நாவல் ‘ ஆத்தங்கரை ஓரம் ‘ ஜெயகாந்தனின் அணிந்துரையுடன் வெளியானது . நர்மதா அணை கட்டப்படுவதற்காக கரையோரத்தில் வசித்த மக்கள் விரட்டப்பட்டதை அடிப்படையாக கொண்டது இந்நாவல் . இறை...

மக்களிடம் வாட்டி வதைக்காமல் வரி வசூலிக்கும் முறை

 

மக்களிடம் வாட்டி வதைக்காமல்

வரி வசூலிக்கும் முறை

புறநானூறு – 184

பாடியவர் – பிசிராந்தையார்

பாடப்பட்டவர் – பாண்டியன் அறிவுடை நம்பி

திணை – பாடாண் திணை

துறை – செவியறிவுறூத் துறை

        மக்களை வாட்டி வதைக்காமல் வரி வசூலிக்க வேண்டும் என்பதை அழகிய யானை புகுந்த வயல் உவமையால் விளக்கும் இப்பாடல் எக்காலத்துக்கும் பொருந்தும் பாடலாக அமைந்துள்ளது.

        ”காய்நெல் அறுத்துக் கவளம் கொளினே

        மாநிறைவு இல்லதும் பன்நாட்கு ஆகும்

        நூறுசெறு ஆயினும் தமித்துப்புக்கு உணினே

        வாய்புகு வதனினும் கால்பெரிது கெடுக்கும்

        அறிவுடை வேந்தன் நெறிஅறிந்து கொளினே

 

        கொடி யாத்து நாடுபெரிது நந்தும்

        மெல்லியன் கிழவன் ஆகி வைகலும்

        வரிசை அறியாக் கல்லென் சுற்றமொடு

        பரிவுதப எடுக்கும் பிண்டம் நச்சின்

        யானை புக்க புலம்போலத்

 

        தானும் உண்ணான் உலகமும் கெடுமே!”

 

        விளைந்த வயலிலிருந்து நெல்லைக் கொண்டு போய்ச சேமித்து வைத்துக் கொண்டு, கவளம் கவளமாகக் கொடுத்து வந்தால், ஒரு ‘மா‘ வுக்கும் குறைவான நிலத்தில் விளைந்த நெல் கூட யானைக்குப் பல நாள் உணவாகத் தரப் பயன்படும். ஆனால், அதே யானையை அதன் விருப்பத்திற்கு மேய்ந்து தின்ன விட்டு விட்டால் நூறு வயலில் விளைந்த நெல்கூட அதன் பசிக்குப் போதாதாகிவிடும். காரணம், யானையின் வாய்க்குள் போவதை விடக் காலில் மிதிபட்டு அழிவமே அதிகமிருக்கும். இந்த உண்மையை அறிவுடைய அரசன் புரிந்து கொள்ள வேண்டும்.

          மக்களிடம் வரி வாங்குவதில் இந்த வழியையே அவன் மேற்கொள்ள வேண்டும். மேற் கொண்டால், நாடு கோடி கோடியாக வருவாய் தந்து வளமும் தழைக்கச் செய்யும். அவ்வாறு அல்லாமல், அரசன் அறிவுத் திறம் அற்றவனாகி, தரமற்ற தன்னுடைய சுற்றத்தார்கள் பேச்சைக் கேட்டு, மக்களை வருத்தி, அன்றாடம் வரி வாங்கிப் பணம் சேர்க்க விரும்பினால் அவனுடைய நாடு யானை புகுந்த வயல் போல் கெடும். அவனும் வாழ மாட்டான். அவனுடைய நாடும் வாழாது - அழியும்.

         

Comments

Popular posts from this blog