விடுகதை யில் காணலாகும் சமுதாயச் சிந்தனைகள் வாழ்க்கையின் உயிர்ப் பண்புகளாகிய உணர்வுப் பண்புகள் இலக்கியங்களின் கருவாக அமைகின்றபோது அவை படைப்போனின் உணர்ச்சிக்குத் தக்க உருவம் பெற்றுச் சாவாப் பேற்றினைப் பெறுவதுண்டு . அத்தகைய சாவாமையும் மூவாமையும் பெற்ற கருவூலமே விடுகதைகளாகும் . மானுடத்தின் சிந்தனைத் திறனையும் , பண்பாட்டுப் படிநிலைகளையும் அறிந்துகொள்ளும் வரலாற்றுப் பெட்டகமாகவும் , இலக்கியத்தின் கூறுகள் படிந்து விளங்குவதாகவும் உள்ளதால் விடுகதைகள் ‘ இலக்கியம் ’ எனும் பெருமை அடைகின்றன . அறியாமையால் உடனுக்குடன் மனிதனை வெட்கப்பட வைக்கும் இலக்கியம் விடுகதை ஒன்றேயாகும் . இலக்கியங்களில் விடுகதை தமிழ் இலக்கண நூலான தொல்காப்பியத்தில் விடுகதையைப் ‘ பிசி ’ என்று குறிப்பிடுவதைக் காணலாம் . தொல்காப்பியர் பிசிக்குரிய இலக்கணத்தைக் கூறும் போது , ” ஒப்பொடு புணர்ந்த வுவமத் தானும் ...
ஔவையார் அருநெல்லிக்கனி ஈந்த அதியமானை வாழ்த்திப் பாடியது!
புறநானூறு
பாடல் எண் –
92
துறை – இயன்மொழி
வாழ்த்து
பாடப்பட்டவர்
– அதியமான் நெடுமானஞ்சி
”யாழொடும் கொள்ளா பொழுதொடும் புணரா
பொருளறி வாரா ஆயினும் தந்தையர்க்கு
அருள்வந் தனவால் புதல்வர்தம் மழலை
என்வாய்ச் சொல்லும் அன்ன ஒன்னார்
கடிமதில் அரண்பல கடந்த
நெடுமான் அஞ்சிநீ அருளல் மாறே!”
பெற்றோர்க்குத் தம் பிள்ளையின் மழலை மொழி
இன்பந் தருவது போல், அருநெல்லிக் கனி அளித்த அதியனை வாழ்த்திக் கூறும் புகழ் மொழியும்
அவனுக்கு இன்பூட்டி அருளும் என்று ஔவையார் பாடியுள்ளார்.
Comments
Post a Comment