Skip to main content

திருவையாறு சென்ற அனுபவங்கள் (நூல் வெளியீட்டு விழா)

  திருவையாறு சென்ற அனுபவங்கள் ( நூல் வெளியீட்டு விழா )               திருவையாறு தமிழ் ஐயா கல்விக்கழகம் , ஔவை அறக்கட்டளை நடத்திய உலகத் தாய்மொழி நாள் – 2026 (21.02.2026) நாளை முன்னிட்டு நடத்திய நூல் வெளியீட்டு விழா நிகழ்வில் என்னுடைய நூல் ‘ சங்க இலக்கியங்களில் வாழ்வியல் விழுமியங்கள் ’ எனும் தலைப்பில் வெளியானது . அந்த நாளில் நடந்த நினைவைப் பகிர்ந்து கொள்வதில் பெருமிதம்   கொள்கிறேன் .            திருச்சியிலிருந்து நானும் , முசிறி , அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பணியாற்றும் தமிழ்த்துறைத் தலைவராகப் பொறுப்பேற்ற இணைப்பேராசிரியர் முனைவர் பாக்கியரதி அவர்கள் , மற்றும் அவர்களின் மூத்தச் சகோதரி அவர்களும் திருவையாறு (21.02.2026) சனிக்கிழமை சென்றோம் . நூல் வெளியீட்டு விழா காலை 11.00 மணிக்கு என்பதால் நாங்கள் செல்லும் வழியில் உள்ள கோயில்களுக்குச் சென்று பார்த்து விட்டு சென்றோம் . திருமழப்பாடி தமிழ்நாட்டின் அரியலூர் மாவட்டம் , கொள்ளிடம் ஆற்றங்கரையில் அமைந்துள்ள திருமழப்பாடி வைத்தி...

இன்பமும் துன்பமும் கலந்தது தான் இவ்வுலகம்

 

இன்பமும் துன்பமும் கலந்தது தான் இவ்வுலகம்

 

புறநானூறு – 194

பாடியவர் – பக்குடுக்கை நன்கணியார்

திணை – பொதுவியல் திணை

துறை – பெருங்காஞ்சித் துறை

பாடலின் உட்பொருள் - உலக வாழ்வின் இயல்பை உள்ளபடி விளக்கும் பாடல்.

        ”ஓர்இல் நெய்தல் கறங்க ஓர்இல்

        ஈர்ந்தண் முழவின் பாணி ததும்பப்

        புணர்ந்தோர் பூஅணியப் பிரிந்தோர்

        பைதல் உண்கண் பனிவார்பு உறைப்பப்

        படைத்தோன் மன்றஅப்பண்பி லாளன்

        இன்னாது அம்மஇவ உலகம்

        இனிய காண்கஇதன் இயல்புணர்ந் தோரே”

         

          ஒரு வீட்டில் சாவு மேளம் ஒலிக்கிறது. இன்னொரு வீட்டில் இனிமையான மங்கல இசை முழங்குகிறது. மகிழ்வில் கூடியவர்கள் மலர் மாலை சூடி மகிழ்கின்றனர். துணையைப் பிரிந்தவர்கள் துன்பத்தில் வருந்துகிறார்கள். இந்த நேர்மாற்றங்கள் நிகழக் காரணம் உலகைப் படைத்தவனுடைய இரக்கமற்ற தன்மையே ஆகும். இன்பம் – துன்பம் என்னும் இரண்டும் நிறைந்தது. இந்த உண்மையை உணர்ந்தவர்கள், இந்த இரண்டிலிருந்து விடுபட்டு உண்மையான இன்பம் எதுவெனக் கண்டறியவே முயலுவர்.

 

Comments

Popular posts from this blog