Skip to main content

இலக்கியங்களில் பொங்கல் திருநாள்!

  இலக்கியங்களில் பொங்கல் திருநாள்!   பொங்கல் திருநாளாம் இன்று நாம் அனைவரும் , ” உழுதுண்டு வாழும் தொழிலைக் காத்து உயர்வைக் கொடுக்கும் செல்வம் பெற்று உயிரினும் மேலான ஒழுக்கம் கொண்டு பாரோர் போற்றும் பண்பு பெற்று இடும்பை இல்லா இன்பம் போற்றி நிறைவான வாழ்வை நிலைபெற்று வாழ்வோம் ” என்ற வாழ்த்துக்களுடன் , நம் முன்னோர்கள் பொங்கல் திருநாளை எவ்வாறு கொண்டாடினார்கள் என்பதை இலக்கியங்கள் வாயிலாக நினைவுக் கூர்வோம் . இயற்கையை வணங்குதல் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் சொல்லாலும் பொருளாலும் சுவை மிகுந்த இலக்கியங்களைக் கொண்டு செந்தமிழ் மொழியைப் பேசிய மக்கள் ஈடு இணையற்ற பண்பாட்டுக்குச் சொந்தக்காரர்கள் . அவர்கள் , ·         அறிவியல் முதிர்ச்சியால் உலகத்திற்கே  வழிகாட்டியவர்கள் , ·    விண்ணையும் , மண்ணையும் ஆராய்ந்து வியப்புமிக்க நூல்களை உருவாக்கியவர்கள் , ·       வானிலைக் கணக்கீட்டு வல்லமையால் கோள்களின் அசைவுகளைக் குறியீடு செய்தவர்கள். ·         நட்சத்திரங்களைய...

நம் நிழல் கூட நமக்கு உதவாது?

 

நம் நிழல் கூட நமக்கு உதவாது?

 

          ஒரு பெரிய பணக்காரன், வல்லவன், பலசாலி, நான் தான் எல்லாம் என்றும், தனக்கு எல்லாம் தெரியும் என்று கர்வத்தில் அலைந்து திரிபவன். இவன் ஒரு நாள் குருவைக் காண்பதற்கு வந்திருந்தான். அவரிடத்தில் அந்த செல்வந்தன், குருவே! என்னிடத்தில் எல்லா செல்வமும் இருக்கிறது. என் உடலில் பலமும் நன்றாக இருக்கிறது. நான் யாரையும் சார்ந்து வாழ்ந்திட வேண்டிய அவசியம் இல்லை. எவ்வித எதிர்பார்ப்பும் இல்லை. என் கடமைகளையும், என்னால் முடிந்த பல புண்ணியங்களையும் செய்திருக்கிறேன். என்னிடம் அனைத்தும் இருக்கும் நான் ஏன் கடவுளை வழிபடவேண்டும்? அதனால் கால விரயம் என்று நான் நினைக்கின்றேன் என்றான். குருவிடம் அந்த பணக்காரன்.

          குரு, அப்படியா? சரி, நான் சொல்கின்ற அன்று நீ என்னோடு வர முடியுமா? என்று கேட்டார். வருகின்றேன் என்றான் பணக்காரன். சரி என்று ஒரு நாளை குரு சொல்ல, அந்த நாளில் இருவரும் புறப்பட்டுப் போனார்கள். போன இடம் பாலைவனம்.

          அந்தப் பாலைவனத்தில் குரு அந்த பணக்காரனை அழைத்துக் கொண்டு, வா போகலாம் என்று நெடுந்தூரம் அழைத்துச் சென்றார். இவ்வாறு நெடுந்தூரம் போக, பணக்காரனால் நடக்க முடியவில்லை.

          பரிதாபம், அவனுக்கு உடலெல்லாம் எரிச்சல் வேர்வை வந்து உடல் தளர்ந்து நொந்து போய் நிற்கிறான். பாலைவனத்தில் கடுமையான வெயில். குருவோ சர்வ சாதாரணமாக போய்க் கொண்டே இருக்கிறார். பணக்காரனோ, என்னால் இனி ஒரு அடிக் கூட நடக்க முடியவில்லை.

          குரு, ஏனப்பா, அதோ உன் பின்னால் உன் நிழலே உள்ளதே, அதில் ஒதுங்கி இளைப்பாறலாமே என்றார் குரு. என் நிழலில் நான் நின்றாலும் பயன்தராது சுவாமி என்றான். உடனே குரு, இப்பொழுது புரிகிறதா? உன் நிழலே உனக்கு உதவாத பொழுது நீ எவ்வளவு பெற்றாலும், என்ன செய்தாலும் எந்த சூழலிலும் சமாளிக்கும் நிஜமான திறமையும், பலமும் இறைவன் அருளால் மட்டும்தான் ஒருவர் பெற முடியும் என்பதை நீ உணரவேண்டும். அதே போல் ஒரே மரக்கிளையை ஒரே வெட்டில் வெட்டுபவன் பலசாலி இல்லை. வெட்டுப்பட்டுப் பிரிந்த கிளையை மீண்டும் எடுத்து வைத்து ஒட்டுபவனே நிஜமான பலசாலி. நிஜமான செல்வந்தன். புரிகிறதா? இதை ஆழ்ந்து சிந்தித்தால் நீ இறந்து போனால் உன் உடன் வருவது ஒரு ரூபாய் நாணயம் மட்டுமே நெற்றியில். புரிந்து கொள் நண்பா. ஒரு ரூபாய்க்குத் தான் நீ சொந்தக்காரன்!

         

         

Comments

Popular posts from this blog

பொய்யில் புலவன் பொய்யா மொழிகள்

திருக்குறளில் எனது சிறு முயற்சியாக… .  " பொய்யில் புலவன் பொய்யா மொழிகள்"  என்ற இத்தலைப்பில் அமைந்த 133 வரிகள் கொண்ட இப்படைப்பு முருகனின் ” கந்த சஷ்டி  கவசம் ” போன்று உருவாக்கப்பட்டது. இப்பகுதி அறத்துப்பால் 38  அதிகாரங்கள், பொருட்பால் 70  அதிகாரங்களிலிருந்து மட்டும் சுருங்கச் சொல்லி விளங்க வைத்தல் என்ற முறையில், திருக்குறளின் சாராக அமைத்து வழங்கியுள்ளேன். அறமும், பொருளும் ஒருவருக்கு அமைந்தால் இன்பம் தானாகக் கிட்டும் என்ற நோக்கத்தில் அமைக்கப்பட்டது. ”பொய்யில் புலவன் பொய்யா மொழிகள்” காக்க காக்க அறத்தைக் காக்க (1) காக்க காக்கக் குறளைக் காக்க உலக மொழிகளில் ஒப்பற்ற நூலாம், நோக்க நோக்க பெயா்த்து நோக்க மனிதன் கற்று மனிதம் காக்க ஐம்பொறி உணா்வை காக்க காக்க புகழுடன் வாழ ஒழுக்கம் காக்க அறநெறி வாழ்வை இறைவழி காக்க வானம் பொய்யா வளத்தைக் காக்க பசிப்பிணி யில்லா உலகைக் காக்க பற்றற்ற வாழ்வை பரிவுடன் காக்க அறத்தைக் காக்க அன்பைக் காக்க (2) குறையிலா வாழ்வை குணமுடன் காக்க இல்லற வாழ்வுடன் நல்லறம் காக்க பண்பொடு பயனும் அறத்துடன் காக்க வாழ்க வாழ்க வளமுடன் வாழ்க வாழ்க வாழ்க...

எண்ணம் போல் வாழ்வு

                                   எண்ணம் போல் வாழ்வு   நினைவுகளே பழக்கவழக்கங்களாக மாறுகின்றன. எனவே தான் எண்ணம் போல் வாழ்வு அனைவருக்கும் அமைகிறது. வெற்றி பெற்ற அனைவரும் பிறரைத் தன் நடத்தையால் மகிழ்விக்க நினைத்தவர்களே என்பதை நாம் நினைவில் நிறுத்த வேண்டும். ·         வங்கியில் பணத்தைச் சேமிப்பதைவிட இதயத்தில் இனிய எண்ணங்களைச் சேமிப்பது மகிழ்ச்சியான வாழ்விற்கு உதவும் வைப்பு நிதியாகும். ·                    மனம் - மகிழ்ச்சி அளிக்காத நிகழ்வுகளை மறந்து விடும் இயல்புடையது. ·                      வெறுப்பு - மனத்தையும், உணர்வையும் பற்றிக் கொண்டுள்ள தொற்று நோய். எனவே வெறுப்பிற்கு விடுதலை தரும்வரை மகிழ்ச்சி நம்மை அணுகாது. ·         கடமையைச் செய்யுங்கள், மகிழ்ச்சியை அறுவடை செய்யலாம். நன்மை, தீமை என்று எது நடந்...

மனிதனாக வாழ ...

  மனிதனாக வாழ ... ·                       பிறர் உன்னை தூற்றும் பொழுது தலை நிமிர்ந்து நில். ·     பொறாமை, கோபம், வீண் மயக்கம் போன்ற குணங்களை விரோதிகளாக எண்ணுதல். ·         வெற்றி -   தோல்வி,   இன்பம் – துன்பம் இரண்டையும் சமமாக பாவித்தல்.             உண்மைக்குப் புறம்பானவற்றைச்  செய்யாதிருத்தல். ·     நண்பர்கள் இல்லை என்றாலும் பரவாயில்லை. பகைவர்கள் இல்லாமல் வாழ முயற்சி செய்தல். ·                 ம னத்திடத்தோடு வாழ்தல்,  ஏற்றத் தாழ்வு இல்லா மனநிலையுடன் இருத்தல். ·             மனிதனுக்கு உரியது - கலங்காத அறிவு, அன்பு நிறைந்த மனம், ஆரோக்கியமான   உடல். ·                      எதற்கும் அஞ்சாதே -   பயம் நம்மை கோழையாக்கி விடும்.              எவரையும் வெறுக்...