Skip to main content

வாழ்க்கையின் வெற்றியில் தன்னம்பிக்கை (புத்தக மதிப்புரை)

  வாழ்க்கையின் வெற்றியில் தன்னம்பிக்கை ( புத்தக மதிப்புரை )               புத்தக மதிப்புரையில் முனைவர் சி . இலட்சுமணன் அவர்கள் எழுதிய ‘ வாழ்க்கையின் வெற்றியில் தன்னம்பிக்கை ’ என்ற   புத்தகத்தைப் பார்ப்போம் . இந்நூல்   2023 - ஆம் ஆண்டு ,   குமரி மாவட்டம் , தமிழ்ச் செம்மொழி வரலாற்று ஆய்வு மையம் வெளியிட்டுள்ளார்கள். பக்கங்கள் 205,   விலை 1 50 ரூபாய்.             முனைவர் சி . இலட்சுமணன் அவர்கள் , தமிழ்ச் செம்மொழி வரலாற்று ஆய்வு மையத்தின் விடிவெள்ளி ; சுயமுன்னேற்றத்திற்கான நூல்களை எழுதி வருகின்ற சமுதாயச் சிற்பி ; தமிழாய்வுக் களஞ்சியம் என்னும் இதழின் ஆசிரியராக இருந்து சிறப்புடன் நடத்தி வருகிறார் . பத்துக்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார் .             நூலாசிரியர் அவர்கள் தமிழ்ப் பல்கலைக் கழகத்தில் ஓலைச் சுவடித் துறையின் தலைவராக ,   பணியாற்றிய பொழுது பல்வேறு ஊர்களுக்குப் பயணம் ...

பெரியாரின் பெருநெறிகள்

பெரியாரின் பெருநெறிகள்

 

  பெரியாரின் தீவிரமான கருத்துகள் அனைத்தும் மேலைநாடுகளில் தீவிரமாகச் செயல்பட்டு விட்டன. நமது மக்கள் பெரியாரின் வழியில் கண்ணைமூடி கண்ணைத் திறப்பதற்குள் திடீர் மாற்றம் கொண்டு முன்னேற முடியும் என்பதை எதிர்பார்ப்பது முடவன் கொம்புத்தேனுக்கு ஆசைப்பட கதையாக முடியும்.

          பழுக்கக் காய்ச்சப்பட்ட இரும்புதான் பல வடிவம் பெற்றிட இயலும். இன்று நம்மில் பலர் மண்ணில் மறைந்திருக்கும் இரும்புக் கனிமவளமாக, வலுவில்லாத வார்ப்பட இரும்பாக, வெறும் இரும்பாக, விஞ்ஞான ரீதீயில் மேலும் பலம் பெற்ற இரும்பாகவும் காட்சி தருகிறோம்.

          பெரியாரின் முயற்சியினால் ஒரு சிலரே காய்ச்சப்பட்டு, வெகுசிலர் பழுக்க காய்ச்சப்பட்டனர். அவரால் பல உருவங்களை பெற்றிருக்கிறோம். ஓட்டப் பந்தயத்தில் கடைசி அணியில் ஓடி வருபவரையும் பார்த்து உற்சாக மூட்டுவதைப் போல தந்தை பெரியார் நமக்குச் சமயத்தில் கை கொடுத்துக் கரையேற்றி விட்டார்.

பெரியார் நாட்டிற்கு நல்கிய திட்டங்கள்

·        முதல் திட்டமாக பிறவியால் கீழ் – மேல், உயர்வு – தாழ்வு கற்பிக்கும் ஜாதிமுறை என்பதை அடியோடு போக்க வேண்டும்.

·        கோயில் முறை எடுக்கப்பட்டு பிராத்தனை இடங்களாக – உருவ சம்பந்தமே இல்லாத பொது மண்டபங்கள் இருக்கலாம் என்றும் கூறுகிறார்.

·        மடம், மடாதிபதி, குரு – கோயில் சொத்து, மட சொத்து ஆகியவைகள் எடுக்கப்பட வேண்டும்.

·        கோயில் உற்சவங்களை நிறுத்தி, சமூகவியல், அறிவியல், பொருளியல் கண்காட்சிகள் நடத்த வேண்டும்.

·        எல்லோருக்கும் ஒரே மாதிரி உடை சாயல் ஏற்படுத்த வேண்டும்.

·        அகராதியில் மக்களுக்கு, சமூகத்திற்கும் தேவையற்ற சொற்களை நீக்க வேண்டும்.

·        அவசியமில்லாத வசதிகளுக்கு இடம் கொடுக்கக் கூடாது.

·        லாபம் வரையறுக்கப் படவேண்டும்.

·        அதிக மதிப்புள்ள நகைகள் அணிவதை அனுமதிக்கக் கூடாது.

·        உத்தியோகங்களில் சரிபாதி பெண்களுக்கு ஒதுக்கப்பட வேண்டும்.

இவ்வாறு பலப்பல யோசனைகளைப் பெரியார்  கூறியுள்ளார்.

பார்வை நூல்

1.  வேணு ஏ.எஸ், - பெரியார் ஒரு சரித்திரம், பூம்புகார் பிரசுரம்,மேகலை எண்டர்பிரைசஸ், சென்னை -5, முதற்பதிப்பு – 1980. 

 

          

Comments

Popular posts from this blog

பொய்யில் புலவன் பொய்யா மொழிகள்

திருக்குறளில் எனது சிறு முயற்சியாக… .  " பொய்யில் புலவன் பொய்யா மொழிகள்"  என்ற இத்தலைப்பில் அமைந்த 133 வரிகள் கொண்ட இப்படைப்பு முருகனின் ” கந்த சஷ்டி  கவசம் ” போன்று உருவாக்கப்பட்டது. இப்பகுதி அறத்துப்பால் 38  அதிகாரங்கள், பொருட்பால் 70  அதிகாரங்களிலிருந்து மட்டும் சுருங்கச் சொல்லி விளங்க வைத்தல் என்ற முறையில், திருக்குறளின் சாராக அமைத்து வழங்கியுள்ளேன். அறமும், பொருளும் ஒருவருக்கு அமைந்தால் இன்பம் தானாகக் கிட்டும் என்ற நோக்கத்தில் அமைக்கப்பட்டது. ”பொய்யில் புலவன் பொய்யா மொழிகள்” காக்க காக்க அறத்தைக் காக்க (1) காக்க காக்கக் குறளைக் காக்க உலக மொழிகளில் ஒப்பற்ற நூலாம், நோக்க நோக்க பெயா்த்து நோக்க மனிதன் கற்று மனிதம் காக்க ஐம்பொறி உணா்வை காக்க காக்க புகழுடன் வாழ ஒழுக்கம் காக்க அறநெறி வாழ்வை இறைவழி காக்க வானம் பொய்யா வளத்தைக் காக்க பசிப்பிணி யில்லா உலகைக் காக்க பற்றற்ற வாழ்வை பரிவுடன் காக்க அறத்தைக் காக்க அன்பைக் காக்க (2) குறையிலா வாழ்வை குணமுடன் காக்க இல்லற வாழ்வுடன் நல்லறம் காக்க பண்பொடு பயனும் அறத்துடன் காக்க வாழ்க வாழ்க வளமுடன் வாழ்க வாழ்க வாழ்க...

எண்ணம் போல் வாழ்வு

                                   எண்ணம் போல் வாழ்வு   நினைவுகளே பழக்கவழக்கங்களாக மாறுகின்றன. எனவே தான் எண்ணம் போல் வாழ்வு அனைவருக்கும் அமைகிறது. வெற்றி பெற்ற அனைவரும் பிறரைத் தன் நடத்தையால் மகிழ்விக்க நினைத்தவர்களே என்பதை நாம் நினைவில் நிறுத்த வேண்டும். ·         வங்கியில் பணத்தைச் சேமிப்பதைவிட இதயத்தில் இனிய எண்ணங்களைச் சேமிப்பது மகிழ்ச்சியான வாழ்விற்கு உதவும் வைப்பு நிதியாகும். ·                    மனம் - மகிழ்ச்சி அளிக்காத நிகழ்வுகளை மறந்து விடும் இயல்புடையது. ·                      வெறுப்பு - மனத்தையும், உணர்வையும் பற்றிக் கொண்டுள்ள தொற்று நோய். எனவே வெறுப்பிற்கு விடுதலை தரும்வரை மகிழ்ச்சி நம்மை அணுகாது. ·         கடமையைச் செய்யுங்கள், மகிழ்ச்சியை அறுவடை செய்யலாம். நன்மை, தீமை என்று எது நடந்...

கோப்பெருஞ்சோழன் – பிசிராந்தையார் நட்பு

  கோப்பெருஞ்சோழன் – பிசிராந்தையார் நட்பு   வடக்கிருத்தல் தமிழரின் நம்பிக்கை சார்ந்த பழக்கவழக்கங்களில் வடக்கிருத்தலை ஆடவர் மேற்கொண்டனர். ஊருக்கு வடபால் ஓரிடத்தில் வடக்குத் திசை நோக்கி அமர்ந்த வண்ணம் உண்ணாநோன்பிருந்து உயிர்த்துறப்பதை ‘ வடக்கிருத்தல் ’ எனக் கொண்டனர். வடக்கிருக்க அடிப்படைக் காரணியாக அமைவன மானம் , வீரம் , நட்பு , தன்நோக்கம் நிறைவேறாமை எனலாம். வீரர் , புலவர் , மன்னர் ஆகியோர் வடக்கிருந்தமையை இலக்கியங்கள் வாயிலாக அறிய முடிகிறது. அவ்வாறு உயிர் துறப்பவர் துறக்கம் பெறுவர் என நம்பினர்.       கலைக்களஞ்சியம் , வடக்கிருத்தலை ‘ உத்ரக மனம் ’ என்றும் ‘ மகாப் பிரத்தானம் ’ என்றும் கூறும். ‘ நாணத்தகு நிலை ’ நேர்ந்ததனாற் சிலர் வடக்கிருந்ததாகத் தமிழ் நூல்கள் கூறுகின்றன என்று கூறுகிறது.           கோப்பெருஞ்சோழன் வடக்கிருந்து உயிர் விட்டான். அவன் உயிர்விட்டப் பிறகு அவனை பார்க்காமலே நட்புக் கொண்டிருந்தப் பிசிராந்தையாரும், சோழனுடன் இருந்த பொத்தியார் என்ற புலவரும் அவன் வடக்கிருந்த இடத்தின் அருகில் வடக்கிருந்து உயிர்...