Skip to main content

என் எண்ணச் சிதறல்கள்! (3)

  என் எண்ணச் சிதறல்கள் ! (3)             Linkedin எனும் தளத்தில் என்னுடைய எண்ணங்களைக் கடந்த சில மாதங்களாகக்   கவிதைகளாக வெளியிட்டு வருகிறேன் . அந்தக் கவிதைகளை அனைத்தையும்   தொகுத்து இப்பகுதியில் வெளியிட்டுள்ளேன் . 1.     தன் நம்பிக்கை! சந்தேகம்! மனநிம்மதியைக் கெடுக்கும் ஆயுதம்! சஞ்சலம்! செயல்திறனைக் குறைக்கும் பேராயுதம்! 2.     வாசிப்பு! அச்சுறுத்தும் வாழ்வின் இருண்ட பக்கங்கள் வாசிக்க வாசிக்க வெளிச்சம் அடைகிறது! தாகத்திற்குத் தண்ணீர்போல தரமான நூல்களைத் தேடித் தேடிப் படிப்பதால் வெளிபடும் வாழ்வு இனிக்கிறது! அறைக்குள் அடங்கிக் கிடந்த எண்ணச் சிறைகளிலிருந்து விடுதலை அளிக்கிறது! நல்ல நூல்களின் வாசிப்பு! வாழ்வின் அடையாளம் சுவாசிப்பதைப் போல் வாசிப்பை நேசிப்பது! 3.     படைப்பு! தற்புகழ்ச்சிக்காகவோ பிறரை மகிழ்விப்பதற்காகவோ எழுதப்படும் எழுத்துக்களை விட உய்த்துணர்வதற்கும் உட்பொருள் காண்பதற்கும் நல்வழி காட்டுவதற்கும் தெளிவான தேடலுடன் சொல்லும் செய்த...

நெப்போலியன்

 

நெப்போலியன்


நெப்போலியன் வாழ்வில் நிகழ்ந்த நிகழ்வுகளாக...


·        ஓர் இராணுவ வீரனை நெப்போலியன் முன்னால் கொண்டு வந்து நிறுத்தினார் ஓர் உயர் அதிகாரி. இவன் அவ்வளவு திறமைசாலியான வீரன் அல்ல. அதனால் போரிலிருந்து இவனுக்கு ஓய்வுத் தரவேண்டும் என்று ஒரு குற்றச்சாட்டாக நெப்போலியனிடம் கூறினார்.

                             இவன் என்ன செய்தான்? என்று நெப்போலியன்

                              கேட்டார்.

எதிரிகளின் தாக்குதலில் காயப்பட்டு ஒன்பது முறை தரையில் விழுந்தான். பத்தாவது முறைதான் எழுந்தான்.

உடனே நெப்போலியன் முகம் பிரகாசமானது. வீரனைப் பார்த்து, ‘உன் விடாமுயற்சியையும், வீரத்தையும் பாராட்டுகிறேன். ஒன்பது முறை வீழ்ந்தாலும் சோர்ந்து விடாமல் பத்தாவது முறை எழுந்து நின்று வெற்றி பெற்றாயே... நீதான் மற்றவர்களைவிட மாவீரன்’ என வாழ்த்தினார்.

·        மன்னரும் மாவீரருமாகிய நெப்போலியன் ஒரு நாள் தன் அரண்மணையில் உலாவிக் கொண்டிருந்தார். அப்போது அவர் காவல் காக்கும் பணியில் இருந்த வீரன் ஒருவன் தூங்கி வழிந்து கொண்டிருப்பதைக் கண்டார். காவல் பணியின்போது தூங்குவது மிகப் பெரிய குற்றமாகும். ஆனால், நெப்போலியன் தூங்கிக் கொண்டிருந்த அவனை எழுப்பவில்லை. அதற்கு மாறாக அவனுடைய துப்பாக்கியை எடுத்துக் கொண்டு அன்றிரவு முழுவதும் அரண்மனையைக் காவல் காக்கும் பணியில் தானே ஈடுபட்டார்.

·        ஒரு சமயம் நெப்போலியனை மதகுரு ஒருவர் சந்தித்தார்.  ”சாம்ராஜ்ய ஆசை கொண்டு ஊர் ஊராக அலைகிறாயே! நீ இறந்து போன பின்பு உன்னுடைய சாம்ராஜ்யங்கள் உன்னுடையவையாக இருக்கப் போவதில்லையே” என்றார். ”சாம்ராஜ்யம் என்னுடையதாக இருக்காது. ஆனால் சாம்ராஜ்யங்களை எப்படி அமைக்க வேண்டும் என்ற என் எண்ணமும், அதன் காரணமாக எழுந்த வீரமும், அந்த வீரத்தினால் எழுந்த புகழும் இந்த உலகம் உள்ளவரை என்னுடையதாக இருக்கும்” என்று பெருமிதத்துடன் பதில் சொன்னார் நெப்போலியன்.

·        ஒரு முறை மாவீரன் நெப்போலியன் வெளியூரில் இருந்தார். அவர் வறுமையில் வாடி கொண்டிருந்த நேரம். அப்போது ஒரு நாள் கடிதம் ஒன்று அவருக்கு வந்தது.

நெப்போலியன் தாய் தானும் அவரின் உடன் பிறந்தவர்களும் வறுமையால் வாடுவதாக எழுதிய கடிதம் அது. அனலிடப்பட்டப் புழுவாகத் துடித்த அவருக்கு, ஆறுதலாக எங்கிருந்தோ அவரைக் காண வந்தான். தெமாஸிஸ் என்ற அவரது நண்பன்.

விஷயம் அறிந்ததும் தெமாஸிஸ் தன்னிடமிருந்த ஆறாயிரம் டாலரைத் தந்தான். அந்த நண்பனைக் கடந்த 15 ஆண்டுகளாகத் தேடித் தேடி அலுத்துப் போனார் ஃப்ரான்ஸ் நாட்டுப் பேரரசனான உயர்ந்த மாவீரன் நெப்போலியன். காலச்சக்கரம் சுழன்றாலும் அதன் உள்ளே நன்றி எனும் ஓர் அச்சாணி நடுநாயகமாக நிலைத்து நின்றது.

ஒரு நாள் தன் நண்பனை கண்டே விட்டார். அப்பொழுது அன்பொழுக அவருக்கு அவர் திருப்பித் தந்தது அறுபதாயிரம் டாலர்.

·        நெப்போலியன் ஒரு நூலகம் வைத்திருந்தார். ஏராளமான நூல்கள் இடம் பெற்றிருந்த அந்த நூலகத்தில் ஒரு தமிழ் நூலும் இடம் பெற்றிருந்தது.

அந்த நூல் கம்பராமாயணம்.

பார்வை நூல்

1.  அறிஞர்கள் வாழ்வில் நகைச்சுவைபிரியா பாலு, வானவில் புத்தகாலயம், தி.நகர், சென்னை – 600 017.

 

 

 

 

Comments

Popular posts from this blog

பொய்யில் புலவன் பொய்யா மொழிகள்

திருக்குறளில் எனது சிறு முயற்சியாக… .  " பொய்யில் புலவன் பொய்யா மொழிகள்"  என்ற இத்தலைப்பில் அமைந்த 133 வரிகள் கொண்ட இப்படைப்பு முருகனின் ” கந்த சஷ்டி  கவசம் ” போன்று உருவாக்கப்பட்டது. இப்பகுதி அறத்துப்பால் 38  அதிகாரங்கள், பொருட்பால் 70  அதிகாரங்களிலிருந்து மட்டும் சுருங்கச் சொல்லி விளங்க வைத்தல் என்ற முறையில், திருக்குறளின் சாராக அமைத்து வழங்கியுள்ளேன். அறமும், பொருளும் ஒருவருக்கு அமைந்தால் இன்பம் தானாகக் கிட்டும் என்ற நோக்கத்தில் அமைக்கப்பட்டது. ”பொய்யில் புலவன் பொய்யா மொழிகள்” காக்க காக்க அறத்தைக் காக்க (1) காக்க காக்கக் குறளைக் காக்க உலக மொழிகளில் ஒப்பற்ற நூலாம், நோக்க நோக்க பெயா்த்து நோக்க மனிதன் கற்று மனிதம் காக்க ஐம்பொறி உணா்வை காக்க காக்க புகழுடன் வாழ ஒழுக்கம் காக்க அறநெறி வாழ்வை இறைவழி காக்க வானம் பொய்யா வளத்தைக் காக்க பசிப்பிணி யில்லா உலகைக் காக்க பற்றற்ற வாழ்வை பரிவுடன் காக்க அறத்தைக் காக்க அன்பைக் காக்க (2) குறையிலா வாழ்வை குணமுடன் காக்க இல்லற வாழ்வுடன் நல்லறம் காக்க பண்பொடு பயனும் அறத்துடன் காக்க வாழ்க வாழ்க வளமுடன் வாழ்க வாழ்க வாழ்க...

கோப்பெருஞ்சோழன் – பிசிராந்தையார் நட்பு

  கோப்பெருஞ்சோழன் – பிசிராந்தையார் நட்பு   வடக்கிருத்தல் தமிழரின் நம்பிக்கை சார்ந்த பழக்கவழக்கங்களில் வடக்கிருத்தலை ஆடவர் மேற்கொண்டனர். ஊருக்கு வடபால் ஓரிடத்தில் வடக்குத் திசை நோக்கி அமர்ந்த வண்ணம் உண்ணாநோன்பிருந்து உயிர்த்துறப்பதை ‘ வடக்கிருத்தல் ’ எனக் கொண்டனர். வடக்கிருக்க அடிப்படைக் காரணியாக அமைவன மானம் , வீரம் , நட்பு , தன்நோக்கம் நிறைவேறாமை எனலாம். வீரர் , புலவர் , மன்னர் ஆகியோர் வடக்கிருந்தமையை இலக்கியங்கள் வாயிலாக அறிய முடிகிறது. அவ்வாறு உயிர் துறப்பவர் துறக்கம் பெறுவர் என நம்பினர்.       கலைக்களஞ்சியம் , வடக்கிருத்தலை ‘ உத்ரக மனம் ’ என்றும் ‘ மகாப் பிரத்தானம் ’ என்றும் கூறும். ‘ நாணத்தகு நிலை ’ நேர்ந்ததனாற் சிலர் வடக்கிருந்ததாகத் தமிழ் நூல்கள் கூறுகின்றன என்று கூறுகிறது.           கோப்பெருஞ்சோழன் வடக்கிருந்து உயிர் விட்டான். அவன் உயிர்விட்டப் பிறகு அவனை பார்க்காமலே நட்புக் கொண்டிருந்தப் பிசிராந்தையாரும், சோழனுடன் இருந்த பொத்தியார் என்ற புலவரும் அவன் வடக்கிருந்த இடத்தின் அருகில் வடக்கிருந்து உயிர்...

எண்ணம் போல் வாழ்வு

                                   எண்ணம் போல் வாழ்வு   நினைவுகளே பழக்கவழக்கங்களாக மாறுகின்றன. எனவே தான் எண்ணம் போல் வாழ்வு அனைவருக்கும் அமைகிறது. வெற்றி பெற்ற அனைவரும் பிறரைத் தன் நடத்தையால் மகிழ்விக்க நினைத்தவர்களே என்பதை நாம் நினைவில் நிறுத்த வேண்டும். ·         வங்கியில் பணத்தைச் சேமிப்பதைவிட இதயத்தில் இனிய எண்ணங்களைச் சேமிப்பது மகிழ்ச்சியான வாழ்விற்கு உதவும் வைப்பு நிதியாகும். ·                    மனம் - மகிழ்ச்சி அளிக்காத நிகழ்வுகளை மறந்து விடும் இயல்புடையது. ·                      வெறுப்பு - மனத்தையும், உணர்வையும் பற்றிக் கொண்டுள்ள தொற்று நோய். எனவே வெறுப்பிற்கு விடுதலை தரும்வரை மகிழ்ச்சி நம்மை அணுகாது. ·         கடமையைச் செய்யுங்கள், மகிழ்ச்சியை அறுவடை செய்யலாம். நன்மை, தீமை என்று எது நடந்...