திருவையாறு சென்ற அனுபவங்கள்
(நூல் வெளியீட்டு விழா)
திருவையாறு தமிழ் ஐயா கல்விக்கழகம், ஔவை அறக்கட்டளை நடத்திய உலகத் தாய்மொழி நாள் – 2026 (21.02.2026) நாளை முன்னிட்டு நடத்திய நூல் வெளியீட்டு விழா நிகழ்வில் என்னுடைய நூல் ‘சங்க இலக்கியங்களில்
வாழ்வியல் விழுமியங்கள்’ எனும் தலைப்பில்
வெளியானது. அந்த நாளில்
நடந்த நினைவைப் பகிர்ந்து கொள்வதில் பெருமிதம் கொள்கிறேன்.
திருச்சியிலிருந்து நானும், முசிறி, அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பணியாற்றும் தமிழ்த்துறைத்
தலைவராகப் பொறுப்பேற்ற இணைப்பேராசிரியர் முனைவர் பாக்கியரதி அவர்கள், மற்றும் அவர்களின்
மூத்தச் சகோதரி அவர்களும் திருவையாறு
(21.02.2026) சனிக்கிழமை சென்றோம். நூல் வெளியீட்டு விழா காலை 11.00 மணிக்கு என்பதால் நாங்கள் செல்லும் வழியில் உள்ள கோயில்களுக்குச்
சென்று பார்த்து விட்டு சென்றோம்.
திருமழப்பாடி
தமிழ்நாட்டின் அரியலூர்
மாவட்டம்,
கொள்ளிடம் ஆற்றங்கரையில் அமைந்துள்ள திருமழப்பாடி வைத்தியநாதசுவாமி
கோயில், தேவாரப்
பாடல் பெற்ற 54-வது சிவத்தலமாகும். இங்கு மூலவர்
வைத்தியநாதசுவாமியாகவும், அம்பிகை சுந்தராம்பிகையாகவும்
அருள்பாலிக்கின்றனர். நந்தி தேவர் திருமணத் தலமான இது, நந்தி
கல்யாணம் மற்றும் மாசி மாத திருவிழாவிற்குப் பெயர் பெற்ற, சுந்தரரால்
பாடப்பட்ட சிறப்புமிக்க பழமையான சிவாலயமாகும்.
பனை மரம் தல விருட்சமாகவும், கொள்ளிடம் ஆறு, லட்சுமி தீர்த்தம், சிவகங்கை தீர்த்தம் ஆகியவை இத்தலத்தின் தீர்த்தங்களாகவும் உள்ளன.
திருவையாறு
ஐயாறப்பர் கோயில்
திருவையாறு ஐயாறப்பர் கோயில் என்ற கோயில் திருவையாற்றில் காவிரிக் கரையில்
அமைந்துள்ளது. இக்கோயில் திருஞானசம்பந்தர்,
திருநாவுக்கரசர், சுந்தரர், ஆகிய மூவராலும் தேவாரம் பாடல் பெற்றத் தலமாகும். அதோடு மாணிக்கவாசகரால் இயற்றப்பட்டத் திருவாசகம் பாடல் பெற்ற
தலங்களில் ஒன்று எனும் பெருமையைக் கொண்டது. தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் சோழநாடு காவிரியின் வடகரையில் அமைந்துள்ள 51வது தலமாகும். இச்சிவாலயத்தின் மூலவர் ஐயாறப்பர்,
இறைவியின் பெயர் அறம்வளர்த்தநாயகி (வடமொழியில் தர்மசம்வர்தினி).
இத்தலத்தில் தான் சிவபெருமான் திருநாவுக்கரசருக்குத் திருக்கயிலாய காட்சி கொடுத்தருளினார் என்பது நம்பிக்கையாகும்.
திருவையாறு ஐயா கல்விக் கழகம், ஔவை அறக்கட்டளை
காலை 11 மணிக்கு நூல் வெளியீட்டு விழா திருவையாறு, ஔவைக் கோட்டத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்வை வி.ஜி.பி. உலகத் தமிழ்ச் சங்கம், ஆஸ்திரேலியா தொல்காப்பிய மன்றம், திருவையாறு தமிழ் ஐயா கல்விக் கழகம் ஔவை அறக்கட்டளை இணைந்து நடத்தும் நூல் வெளியீட்டு விழா மிகவும் சிறப்பாக நடைபெற்றது. மதியம் 1 மணிக்கு முடிந்தது. மதிய உணவினை ஔவை அறக்கோட்டத்தில் சாப்பிட்டோம். பின் நூல்கள் 50 படிகள் பெற்றுக் கொண்டு கும்பகோணம் கோயில் பார்க்கச் சென்றோம்.
கரைவெட்டி பறவைகள் சரணாலயம்
வனவிலங்கு
பாதுகாப்புச் சட்டம் 1972 பிரிவு 18(1) இன் படியும்
அரசு ஆணை எண். 219,சுற்றுச்சூழல் மற்றும் வனத் துறை, நாள் 10.06.1997 இன் படியும் கரையவெட்டி பறவைகள்
சரணாலயம் 453.71 ஹெக்டேர் பரப்பளவில் அமைக்க
அறிவிக்கப்பட்டது . இச்சரணாலயம் அடிப்படையில் ஒரு பாசன ஏரியாகும். இந்த ஏரி,
செப்டம்பர் மாதம் முதல் மேட்டூர் நீர்த்தேக்கத்திலிருந்து நீர்
பெறுகின்றது. மேலும் அக்டோபர் முதல் ஜனவரி வரை வடகிழக்கு பருவக்காற்று மூலமும்
கூடுதலாக நீரைப் பெறுகிறது.
இச்சரணாலயம், புலம்பெயரும் நீர்ப்பறவைகளுக்கான, தமிழ்நாட்டிலுள்ள
மிக முக்கியமான நன்னீர் ஏரிகளுள் ஒன்றாக விளங்குகிறது. மாநிலத்தின் பெரிய ஏரிகளுள்
இதுவும் ஒன்று. இந்த ஏரி, மாநிலத்தின் மிக அதிக அளவிலான
நீர்ப்பறவைகள் வந்து கூடும் இடமாக பதிவு செய்யப்பட்டிருக்கிறது. இச்சரணாலயத்தில்
உள்ள 188 பறவை இனங்களில் 82 இனங்கள்
நீர்ப்பறவைகளாகும். அருகிவரும் பட்டைதலை வாத்து, இந்த
ஏரியின் முக்கிய வருகையாளர்களுள் ஒன்றாகும்.
ஆதி கும்பேஸ்வரர் கோவில்
கிழக்கு
நோக்கிய ஆதி கும்பேஸ்வரர் ஆலயம் மூன்று பிரகாரங்களைக் கொண்டது. அதன் பிரதான
கோபுரம் ஒன்பது நிலைகளைக் கொண்டுள்ளது. நூற்றி இருபத்தியெட்டு அடி உயரத்தில்
உள்ளது.சிவன் மற்றும் பார்வதி தேவி சன்னதிகள் உள்ளன. இங்கு கிராத மூர்த்திக்கு தனி
சன்னதி உள்ளது. லிங்கம் மணலால் ஆனது என்பதால் அதன் அடிப்பகுதியான ஆவுடைக்கு
மட்டும் அபிஷேகம் செய்யப்படுகிறது. லிங்கத்தின் மீது எப்போதாவது ஒருமுறை புனுகு
மட்டுமே பயன்படுத்தப்படுகிறது. லிங்கம் பெரிய அளவில் சாய்ந்த நிலையில் உள்ளது. அது
எப்போதும் தங்கக் கவசத்தால் மூடப்பட்டிருக்கும்.
இராமசாமி கோவில் சாரங்கபாணி கோவில்
கும்பகோணத்திலுள்ள
வைணவக் கோவில்களில் மிகப் பழைமை வாய்ந்தது சாரங்கபாணி கோவிலாகும். இது
ஆழ்வார்களின் பாடல் பெற்ற தலம் ஆகும். கருவறையிலுள்ள தெய்வங்கள் அழகுற
அமைக்கப்பட்டுள்ளன. இக்கோவிலின் நடுப்பகுதி தேரின் அமைப்பைக் கொண்டுள்ளது. இதன்
குதிரைகள், யானைகள் ஆகியவையும், சக்கரங்களும்,
கல்லினால் ஆனவை. இக்கல்தேர் ஒரு சிறந்த கலைப்படைப்பு. இங்குள்ள
கோபுரத்தில் நாட்டிய சாஸ்திரத்தின் 108 கரண வகைகள்
சிற்பங்களாகச் செதுக்கப்பட்டிருப்பது இக்கோவிலின் மற்றொரு சிறப்பாகும். சோழர்களால் கட்டப்பட்டது. இக்கோவிலின்
கலைநயம் மிகுந்த சிற்பங்கள், தூண்கள் கொண்ட மண்டபங்கள்
மற்றும் கோபுரங்கள் ஆகியவை தஞ்சை நாயக்கர் மன்னர்களால் கட்டப்பட்டவையாகும்.
தாராசுரம்
தாராசுரம் ஐராவதேஸ்வரர்
கோயில் தமிழ்நாட்டில் தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணத்திற்கு அருகில் உள்ள தாராசுரம் என்னும் ஊரில் உள்ள ஓர் இந்துக் கோவில் ஆகும். இக்கோவில் இரண்டாம் ராசராசனால் பன்னிரெண்டாம்
நூற்றாண்டில் கட்டப்பட்டது. இக்கோவில், கங்கைகொண்ட
சோழீஸ்வரர் கோயில், பெருவுடையார் கோயில் ஆகிய மூன்றும் சேர்த்து அழியாத சோழர்
பெருங்கோயில்கள் எனப்படுகின்றன. தமிழ்
நாடு தொல்லியல் துறை இக்கோயிலின் அமைப்புக்களை ஆராய்ந்து இக்கோயிலில் உள்ள
கல்வெட்டுக்களைப் படியெடுத்து சோழ மன்னர்களைப் பற்றிய பல தகவல்களை
பதிப்பித்துள்ளது.
நிறைவாக,
திருவையாறு
நூல் வெளியீட்டு நிகழ்ச்சிக்காகச் சென்றோம். அப்பொழுது அருகில் கோயில்களையும் தரிசித்து
வந்தது மனதிற்கு மிகவும் மகிழ்ச்சியை அளிக்கிறது. ஒவ்வொரு இடத்திலும் அதன் சிறப்பையும்,
அழகையும் காணும்போது கண்ணிற்கும் மனதிற்கும் விருந்தாதி இன்பம் அளிக்கிறது. அன்றைய
நாள் மிகவும் மகிழ்வாகவும் நிறைவாகவும் இருந்தது. அந்த நிகழ்வை பகிர்ந்து கொள்வதில்
இரட்டிப்பு மகிழ்ச்சி.







.jpeg)
.jpeg)
Comments
Post a Comment