Skip to main content

வாழ்க்கையின் வெற்றியில் தன்னம்பிக்கை (புத்தக மதிப்புரை)

  வாழ்க்கையின் வெற்றியில் தன்னம்பிக்கை ( புத்தக மதிப்புரை )               புத்தக மதிப்புரையில் முனைவர் சி . இலட்சுமணன் அவர்கள் எழுதிய ‘ வாழ்க்கையின் வெற்றியில் தன்னம்பிக்கை ’ என்ற   புத்தகத்தைப் பார்ப்போம் . இந்நூல்   2023 - ஆம் ஆண்டு ,   குமரி மாவட்டம் , தமிழ்ச் செம்மொழி வரலாற்று ஆய்வு மையம் வெளியிட்டுள்ளார்கள். பக்கங்கள் 205,   விலை 1 50 ரூபாய்.             முனைவர் சி . இலட்சுமணன் அவர்கள் , தமிழ்ச் செம்மொழி வரலாற்று ஆய்வு மையத்தின் விடிவெள்ளி ; சுயமுன்னேற்றத்திற்கான நூல்களை எழுதி வருகின்ற சமுதாயச் சிற்பி ; தமிழாய்வுக் களஞ்சியம் என்னும் இதழின் ஆசிரியராக இருந்து சிறப்புடன் நடத்தி வருகிறார் . பத்துக்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார் .             நூலாசிரியர் அவர்கள் தமிழ்ப் பல்கலைக் கழகத்தில் ஓலைச் சுவடித் துறையின் தலைவராக ,   பணியாற்றிய பொழுது பல்வேறு ஊர்களுக்குப் பயணம் ...

புத்தர்

 

புத்தர்

 

          இமயமலை அடிவாரத்தில்  கபில வஸ்துஎன்னுமிடத்தில் கி.மு. 563- இல் சித்தார்த்தன் (புத்தர்) பிறந்தார். புத்தரைப் பருவ வயது வரை அரண்மனைக்கு வெளியே விடாமல் போற்றி வளர்த்தனர். துன்பம் என்றால் என்னவென்று தெரியாமல் வளர்க்கப்பட்டனர். ஒரு நாள் அரண்மனைக்கு வெளியே வரும் போது மூப்பு, பிணி, சாக்காட்டைப் பார்த்தார். அதனால் உலக வாழ்வைத் துறந்து இதற்குக் காரணம் என்னவாக இருக்கும் என்ற சிந்தனையில் ஆழ்ந்தார். பீகார் மாநிலம் கயா என்னுமிடத்தில் ஆறு ஆண்டுகள் கடுந்தவம் இயற்றிய பின் ஆசையே அத்துணைத் துன்பத்திற்கும் காரணம் என்பதைக் கண்டறிந்தார்.  போதி மரத்தடியில் ஞானம் பெற்றபின் நாற்பத்தைந்து ஆண்டுகள் தமது உபதேசங்களை மக்களுக்கு அர்ப்பணித்தார். நல்லவர்தீயவர், ஏழைபணக்காரன் களைந்து அனைவரையும் சமமாக மதித்து அருளுரை வழங்கினார்.

பகுத்தறிவு சிந்தனைகள்

·        சாத்திரங்களை நம்பாதீர்கள்.

·        நடைமுறை என்பதற்காக மூடபழக்கங்களைப் பின்பற்றாதீர்கள்.

·        சிறுவயதில் உங்களுக்கு உபதேசிக்கப்பட்டதைப் பகுத்தறிந்து பாருங்கள்.

·        விசாலப்படுத்தி எதனையும் ஆராய்ந்து பாருங்கள்.

·        முதியோருக்கு உதவுங்கள்.

·         பணத்தையோ, புகழையோ விரும்பாதீர்கள் என்று மக்களுக்கு உபதேசம் செய்தார்.

உயிர்களிடத்தில் பரிவு காட்டுதல்

          புத்தர் அழகிய சோலையில் உலாவிக் கொண்டிருந்த போது அவரது தோழன் தேவதத்தன் அச்சோலைக்கு வந்தான். அவன் வில் எய்துவதில் வல்லவன். வானில் பறந்த பறவை மீது அம்பு எய்தான். ஓர் அன்னப் பறவை மீது அம்பு தைக்கப்பட்டுக் கீழே விழுந்தது. அதனைக் கண்டு கலங்கிய புத்தர் அந்த அன்னப் பறவையை எடுத்து அம்பினை நீக்கி மருந்திட்டுக் குணப்படுத்தினார். இச்செயல் எல்லா உயிர்கள் மீதும் பரிவு காட்ட வேண்டுமென்ற கருத்தை வலியுறுத்தியது. இச்செயலை வலியுறுத்தும் விதமாக புத்தர் ஞானம் பெற்றபின் ‘உயிர்க் கருணை உடையவர் இன்புற்று வாழ்வர்’ என்று உபதேசித்தார்.

          மகத நாட்டு அரசன் பிம்பிசாரன் வேள்வி செய்ய எத்தனித்தான். அதற்காக பெரும் எண்ணிக்கையிலான ஆட்டு மந்தைகளை வேள்வித் தீயிலிட நினைத்தான். அதனை அறிந்த புத்தர் பிம்பிசாரனுக்கு அறிவு புகட்டி அந்த ஆடுகளைக் காப்பாற்றினார்.

 அறியாமையைப் போக்கும் வழிகள்

          மகத நாட்டு இராஜ கிருகத்தில் புத்தர் தங்கியிருந்த பொழுது அந்தணச் சிறுவனொருவன் தமது சாதிப் பெருமையை உயர்வாகப் பேசினான். அதனைக் கண்ணுற்ற புத்தர் அச்சிறுவனின் செயலைக் கண்டித்துப் பேதைமையைப் போக்கும் வண்ணம் ‘பிறப்பினால் யாதொரு நன்மையும் விளையாது ஓழுக்கம் ஒன்றே உயர்வுக்கும் தாழ்வுக்கும் காரணம்’ என்று விளக்கினார். மேலும் தாயைக்  கொண்டோ, குல மூலத்தைக் கொண்டோ ஒருவனைப் பிராமணன் என்று கூறமாட்டேன். அவன் செல்வந்தனாயிருந்தால் அகம்பாவியாவான். எவன் எல்லா விதமான ஆசைகளிலிருந்தும் விடுபெற்ற ஏழையோ அவனையே பிராமணன் என்பேன் என்று கூறினார். ஒருவன் பிராமணன் ஆவது தன் சடைத் தலையால் அல்ல. தன் குலம் கோத்திரத்தால் அல்ல. பிறப்பினாலும் அல்ல. எவனிடம் உண்மையும் அறமும் நிலைத்திருக்கிறதோ அவனே பிராமணன் என்று தம்ம பதத்தில் கூறுகிறார்.

          ஒருவரின் அறியாமையே ஆசை, சினம், துன்பத்திற்குக் காரணம் என்று கூறுகிறார். இத்துன்பத்தை ஒழிப்பதற்கான நெறிகளாக,

·        நற்சாட்சி

·        நல்லூற்றம்

·        நல்வாய்மை

·        நற்செயல்

·        நல்வாழ்க்கை

·        நன்முயற்சி

·        நற்கடைப்பிடி

·        நல்ல நட்பு

மக்களுக்காகவே வாழ்ந்து மக்கள் துன்பத்தைப் போக்க முயன்றவர் புத்தர். அவர் தம் என்பதாம் வயதில் குசி நகரில் முக்தியடைந்தார். இவர் போதித்த போதித்த அன்பு, அகிம்சை இன்று உலகின் பல நாடுகளில் போற்றப்படுகின்றது.

பார்வை நூல்

1.  முனைவர் ஆ.ஜெகதீசன்இலக்கியத்தில் மனித உரிமைக் கோட்பாடுகள், அமர்நாத் பதிப்பகம், தஞ்சாவூர் மாவட்டம் -613 204,  முதற்பதிப்புசெப்டம்பர், 2008.

 

         

         

 

Comments

Popular posts from this blog

பொய்யில் புலவன் பொய்யா மொழிகள்

திருக்குறளில் எனது சிறு முயற்சியாக… .  " பொய்யில் புலவன் பொய்யா மொழிகள்"  என்ற இத்தலைப்பில் அமைந்த 133 வரிகள் கொண்ட இப்படைப்பு முருகனின் ” கந்த சஷ்டி  கவசம் ” போன்று உருவாக்கப்பட்டது. இப்பகுதி அறத்துப்பால் 38  அதிகாரங்கள், பொருட்பால் 70  அதிகாரங்களிலிருந்து மட்டும் சுருங்கச் சொல்லி விளங்க வைத்தல் என்ற முறையில், திருக்குறளின் சாராக அமைத்து வழங்கியுள்ளேன். அறமும், பொருளும் ஒருவருக்கு அமைந்தால் இன்பம் தானாகக் கிட்டும் என்ற நோக்கத்தில் அமைக்கப்பட்டது. ”பொய்யில் புலவன் பொய்யா மொழிகள்” காக்க காக்க அறத்தைக் காக்க (1) காக்க காக்கக் குறளைக் காக்க உலக மொழிகளில் ஒப்பற்ற நூலாம், நோக்க நோக்க பெயா்த்து நோக்க மனிதன் கற்று மனிதம் காக்க ஐம்பொறி உணா்வை காக்க காக்க புகழுடன் வாழ ஒழுக்கம் காக்க அறநெறி வாழ்வை இறைவழி காக்க வானம் பொய்யா வளத்தைக் காக்க பசிப்பிணி யில்லா உலகைக் காக்க பற்றற்ற வாழ்வை பரிவுடன் காக்க அறத்தைக் காக்க அன்பைக் காக்க (2) குறையிலா வாழ்வை குணமுடன் காக்க இல்லற வாழ்வுடன் நல்லறம் காக்க பண்பொடு பயனும் அறத்துடன் காக்க வாழ்க வாழ்க வளமுடன் வாழ்க வாழ்க வாழ்க...

எண்ணம் போல் வாழ்வு

                                   எண்ணம் போல் வாழ்வு   நினைவுகளே பழக்கவழக்கங்களாக மாறுகின்றன. எனவே தான் எண்ணம் போல் வாழ்வு அனைவருக்கும் அமைகிறது. வெற்றி பெற்ற அனைவரும் பிறரைத் தன் நடத்தையால் மகிழ்விக்க நினைத்தவர்களே என்பதை நாம் நினைவில் நிறுத்த வேண்டும். ·         வங்கியில் பணத்தைச் சேமிப்பதைவிட இதயத்தில் இனிய எண்ணங்களைச் சேமிப்பது மகிழ்ச்சியான வாழ்விற்கு உதவும் வைப்பு நிதியாகும். ·                    மனம் - மகிழ்ச்சி அளிக்காத நிகழ்வுகளை மறந்து விடும் இயல்புடையது. ·                      வெறுப்பு - மனத்தையும், உணர்வையும் பற்றிக் கொண்டுள்ள தொற்று நோய். எனவே வெறுப்பிற்கு விடுதலை தரும்வரை மகிழ்ச்சி நம்மை அணுகாது. ·         கடமையைச் செய்யுங்கள், மகிழ்ச்சியை அறுவடை செய்யலாம். நன்மை, தீமை என்று எது நடந்...

கோப்பெருஞ்சோழன் – பிசிராந்தையார் நட்பு

  கோப்பெருஞ்சோழன் – பிசிராந்தையார் நட்பு   வடக்கிருத்தல் தமிழரின் நம்பிக்கை சார்ந்த பழக்கவழக்கங்களில் வடக்கிருத்தலை ஆடவர் மேற்கொண்டனர். ஊருக்கு வடபால் ஓரிடத்தில் வடக்குத் திசை நோக்கி அமர்ந்த வண்ணம் உண்ணாநோன்பிருந்து உயிர்த்துறப்பதை ‘ வடக்கிருத்தல் ’ எனக் கொண்டனர். வடக்கிருக்க அடிப்படைக் காரணியாக அமைவன மானம் , வீரம் , நட்பு , தன்நோக்கம் நிறைவேறாமை எனலாம். வீரர் , புலவர் , மன்னர் ஆகியோர் வடக்கிருந்தமையை இலக்கியங்கள் வாயிலாக அறிய முடிகிறது. அவ்வாறு உயிர் துறப்பவர் துறக்கம் பெறுவர் என நம்பினர்.       கலைக்களஞ்சியம் , வடக்கிருத்தலை ‘ உத்ரக மனம் ’ என்றும் ‘ மகாப் பிரத்தானம் ’ என்றும் கூறும். ‘ நாணத்தகு நிலை ’ நேர்ந்ததனாற் சிலர் வடக்கிருந்ததாகத் தமிழ் நூல்கள் கூறுகின்றன என்று கூறுகிறது.           கோப்பெருஞ்சோழன் வடக்கிருந்து உயிர் விட்டான். அவன் உயிர்விட்டப் பிறகு அவனை பார்க்காமலே நட்புக் கொண்டிருந்தப் பிசிராந்தையாரும், சோழனுடன் இருந்த பொத்தியார் என்ற புலவரும் அவன் வடக்கிருந்த இடத்தின் அருகில் வடக்கிருந்து உயிர்...