Skip to main content

சூதாட்டம்

                                                                  சூதாட்டம்

 

வாழ்க்கை முழுவதும் நம்மிடம் ஒரு கேள்வி கேட்கப்படுகிறது. அதுவா? இதுவா? வாழ்க்கையை உன்னிப்பாக ஆய்ந்தால், இஃது உங்களுக்கு விளங்கும்!

·        துன்பப்பட்டுப் படிக்க வேண்டும் என்பது இல்லைதான்! ஆனால், வாழ்வில் முன்னேற முடியாது. அதுவா? இதுவா? நீங்கள் எதைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.

·        உறவு என்று பார்ப்பதா! கடமை என்று பார்ப்பதா! அதுவா? இதுவா? உறவைப் பெரிதாக நினைத்தால், கடமை தவறியதாக ஆகும். கடமையைப் பெரியதாக மதித்தால் உறவு படுதாகும். நடக்கிறதா? இல்லையா?

இப்படி எதை எடுத்தாலும் இதுவா? அதுவா? கேட்கப்பட்டுக் கொண்டே இருக்கிறது. இதில் தான் மனிதன் இழுபடுகிறான். இதில்தான் சின்னா பின்னப்படுத்தப் படுகிறான்.

இந்தத் தத்துவத்தை அடிப்படையாகக் கொண்டு எழுந்ததுதான் சூதாட்டம் (Gambling).

சூது +ஆட்டம் = சூதாட்டம்

சூது – எச்சரிக்கை, கவனம்

சூதில் கவனமாகவும், எச்சரிக்கையாகவும் இருக்க வேண்டிய ஆட்டம் சூதாட்டம். அதாவது வெளிப்படையாகத் தெரியாத ஒன்று பற்றி, ஊகித்து, எச்சரிக்கையாகச் செயல்பட  வேண்டும்.

கால்பந்து, கபடி போன்ற விளையாட்டுகளிலும் கவனம் தேவைதான்! ஆனால் இவற்றில் கண்ணுக்குத் தெரியாத சூது எதுவும் இராது. வெளிப்படையாகத் தெரிகிற நுணுக்கமே இருக்கும். அதனால், இவை சூதாட்டம் ஆவதில்லை.

சூதாட்டத்தின் ஆரம்ப நிலம் தமிழ் நிலம் தான்! த்த்துவங்களில் சிறந்த நிலமே, சூதிலும் சிறக்க முடியும். இதுவா அதுவாப் போராட்டத்தை உணர்ந்தவர்களே சூதாட்டத்தை அமைத்திருக்க முடியும். தமிழக அகழ்வாய்வுகளில் சூதாடுகருவிகள், தாயக்கட்டைகள் கிடைத்துள்ளன என்பதே இதற்குச் சான்றாகும்.

நால்வகைப் படைகளை அடிப்படையாகக் கொண்டு விளையாட்டே சதுரங்கம் (Chess). இதிலும் சூது உண்டு. நேரடியாக ஒரு காய் நகர்த்தப்படும். ஆனால் அதன் உள் நோக்கம் வேறாக இருக்கும். இதுவே சூது. இன்றும் தமிழகக் கிராமங்களில் தாயம் போன்ற சூதாட்டங்கள் நீக்கமற நடந்து கொண்டிருக்கிறது.

மகாபாரதக் காலத்தில் தமிழகத்தில் சூதாட்டம் பெருகியிருந்தது.

‘சூதானமாகப் போய் வா’ என்ற தமிழ் சொல்லிற்கு ‘பார்த்துப் போய் வா’ என்பதே பொருள்.

சில மலையடிவாரங்களில் பார்த்தால், தாயக்கட்டம் உளியால் செதுக்கப்பட்டிருக்கும். பாறைகளிலும், மணலிலும் கீறி விளையாடப்பட்ட விளையாட்டு பின் தாள் வரவே தாளில் வரையப்பட்டு விளையாடினர்.

முதலில் கூறியது போல, அதுவா? இதுவா? என்ற வினா, சூது விளையாட்டில் ஒவ்வொரு மணித்துளியிலும் கேட்கப்படும். அதற்கு விளையாடுபவர் விடை தந்து கொண்டே இருக்க வேண்டும். அதில்தான் இன்பநடுக்கம் (Thrill) உள்ளது.

இந்த இன்ப நடுக்கத்தினை அடைவதற்காக மட்டும் பழந்தமிழர்கள் சூதாடவில்லை. முன்னர் கண்ட தத்துவ நுட்பத்திற்காகவும் தான்.

பார்வை நூல்

1.  முனைவர் சு. சௌந்தரபாண்டியன், மறைந்து போன தமிழர் பண்பாடுகள், மாரிமுத்து பதிப்பகம், சாலி கிராமம், சென்னை – 600 093.

Comments

Popular posts from this blog

எண்ணம் போல் வாழ்வு

                                                                        எண்ணம் போல் வாழ்வு             நினைவுகளே பழக்கவழக்கங்களாக மாறுகின்றன. எனவே தான் எண்ணம் போல் வாழ்வு அனைவருக்கும் அமைகிறது. வெற்றி பெற்ற அனைவரும் பிறரைத் தன் நடத்தையால் மகிழ்விக்க நினைத்தவர்களே என்பதை நாம் நினைவில் நிறுத்த வேண்டும். ·         வங்கியில் பணத்தைச் சேமிப்பதைவிட இதயத்தில் இனிய எண்ணங்களைச் சேமிப்பது மகிழ்ச்சியான வாழ்விற்கு உதவும் வைப்பு நிதியாகும். ·      மனம் - மகிழ்ச்சி அளிக்காத நிகழ்வுகளை மறந்து விடும் இயல்புடையது. ·         வெறுப்பு - மனத்தையும், உணர்வையும் பற்றிக் கொண்டுள்ள தொற்று நோய். எனவே வெறுப்பிற்கு விடுதலை தரும்வரை மகிழ்ச்சி நம்மை அணுகாது. ·   ...

மனிதனாக வாழ ...

  மனிதனாக வாழ ... ·         பிறர் உன்னை தூற்றும் பொழுது தலை நிமிர்ந்து நில். ·         பொறாமை, கோபம், வீண் மயக்கம் போன்ற குணங்களை விரோதிகளாக எண்ணுதல். ·         வெற்றி -   தோல்வி,   இன்பம் – துன்பம் இரண்டையும் சமமாக பாவித்தல். ·         உண்மைக்குப் புறம்பானவற்றைச் செய்யாதிருத்தல். ·         நண்பர்கள் இல்லையென்றாலும் பரவாயில்லை. பகைவர்கள் இல்லாமல் வாழ முயற்சி செய்தல். ·         மனத்திடத்தோடு வாழ்தல். ·         ஏற்றத் தாழ்வு இல்லா மனநிலையுடன் இருத்தல். ·         மனிதனுக்கு உரியது - கலங்காத அறிவு, அன்பு நிறைந்த மனம், ஆரோக்கியமான   உடல். ·         எதற்கும் அஞ்சாதே -   பயம் நம்மை கோழையாக்கி விடும்.      யாரையும் வெறுக்காதே ...

பொய்யில் புலவன் பொய்யா மொழிகள்

திருக்குறளில் எனது சிறு முயற்சியாக… .  " பொய்யில் புலவன் பொய்யா மொழிகள்"  என்ற இத்தலைப்பில் அமைந்த 133 வரிகள் கொண்ட இப்படைப்பு முருகனின் ” கந்த சஷ்டி  கவசம் ” போன்று உருவாக்கப்பட்டது. இப்பகுதி அறத்துப்பால் 38  அதிகாரங்கள், பொருட்பால் 70  அதிகாரங்களிலிருந்து மட்டும் சுருங்கச் சொல்லி விளங்க வைத்தல் என்ற முறையில், திருக்குறளின் சாராக அமைத்து வழங்கியுள்ளேன். அறமும், பொருளும் ஒருவருக்கு அமைந்தால் இன்பம் தானாகக் கிட்டும் என்ற நோக்கத்தில் அமைக்கப்பட்டது. ”பொய்யில் புலவன் பொய்யா மொழிகள்” காக்க காக்க அறத்தைக் காக்க (1) காக்க காக்கக் குறளைக் காக்க உலக மொழிகளில் ஒப்பற்ற நூலாம், நோக்க நோக்க பெயா்த்து நோக்க மனிதன் கற்று மனிதம் காக்க ஐம்பொறி உணா்வை காக்க காக்க புகழுடன் வாழ ஒழுக்கம் காக்க அறநெறி வாழ்வை இறைவழி காக்க வானம் பொய்யா வளத்தைக் காக்க பசிப்பிணி யில்லா உலகைக் காக்க பற்றற்ற வாழ்வை பரிவுடன் காக்க அறத்தைக் காக்க அன்பைக் காக்க (2) குறையிலா வாழ்வை குணமுடன் காக்க இல்லற வாழ்வுடன் நல்லறம் காக்க பண்பொடு பயனும் அறத்துடன் காக்க வாழ்க வாழ்க வளமுடன் வாழ்க வாழ்க வாழ்க...