Skip to main content

என் எண்ணச் சிதறல்கள்! (3)

  என் எண்ணச் சிதறல்கள் ! (3)             Linkedin எனும் தளத்தில் என்னுடைய எண்ணங்களைக் கடந்த சில மாதங்களாகக்   கவிதைகளாக வெளியிட்டு வருகிறேன் . அந்தக் கவிதைகளை அனைத்தையும்   தொகுத்து இப்பகுதியில் வெளியிட்டுள்ளேன் . 1.     தன் நம்பிக்கை! சந்தேகம்! மனநிம்மதியைக் கெடுக்கும் ஆயுதம்! சஞ்சலம்! செயல்திறனைக் குறைக்கும் பேராயுதம்! 2.     வாசிப்பு! அச்சுறுத்தும் வாழ்வின் இருண்ட பக்கங்கள் வாசிக்க வாசிக்க வெளிச்சம் அடைகிறது! தாகத்திற்குத் தண்ணீர்போல தரமான நூல்களைத் தேடித் தேடிப் படிப்பதால் வெளிபடும் வாழ்வு இனிக்கிறது! அறைக்குள் அடங்கிக் கிடந்த எண்ணச் சிறைகளிலிருந்து விடுதலை அளிக்கிறது! நல்ல நூல்களின் வாசிப்பு! வாழ்வின் அடையாளம் சுவாசிப்பதைப் போல் வாசிப்பை நேசிப்பது! 3.     படைப்பு! தற்புகழ்ச்சிக்காகவோ பிறரை மகிழ்விப்பதற்காகவோ எழுதப்படும் எழுத்துக்களை விட உய்த்துணர்வதற்கும் உட்பொருள் காண்பதற்கும் நல்வழி காட்டுவதற்கும் தெளிவான தேடலுடன் சொல்லும் செய்த...

சூதாட்டம்

                                                                  சூதாட்டம்

 

வாழ்க்கை முழுவதும் நம்மிடம் ஒரு கேள்வி கேட்கப்படுகிறது. அதுவா? இதுவா? வாழ்க்கையை உன்னிப்பாக ஆய்ந்தால், இஃது உங்களுக்கு விளங்கும்!

·        துன்பப்பட்டுப் படிக்க வேண்டும் என்பது இல்லைதான்! ஆனால், வாழ்வில் முன்னேற முடியாது. அதுவா? இதுவா? நீங்கள் எதைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.

·        உறவு என்று பார்ப்பதா! கடமை என்று பார்ப்பதா! அதுவா? இதுவா? உறவைப் பெரிதாக நினைத்தால், கடமை தவறியதாக ஆகும். கடமையைப் பெரியதாக மதித்தால் உறவு படுதாகும். நடக்கிறதா? இல்லையா?

இப்படி எதை எடுத்தாலும் இதுவா? அதுவா? கேட்கப்பட்டுக் கொண்டே இருக்கிறது. இதில் தான் மனிதன் இழுபடுகிறான். இதில்தான் சின்னா பின்னப்படுத்தப் படுகிறான்.

இந்தத் தத்துவத்தை அடிப்படையாகக் கொண்டு எழுந்ததுதான் சூதாட்டம் (Gambling).

சூது +ஆட்டம் = சூதாட்டம்

சூது – எச்சரிக்கை, கவனம்

சூதில் கவனமாகவும், எச்சரிக்கையாகவும் இருக்க வேண்டிய ஆட்டம் சூதாட்டம். அதாவது வெளிப்படையாகத் தெரியாத ஒன்று பற்றி, ஊகித்து, எச்சரிக்கையாகச் செயல்பட  வேண்டும்.

கால்பந்து, கபடி போன்ற விளையாட்டுகளிலும் கவனம் தேவைதான்! ஆனால் இவற்றில் கண்ணுக்குத் தெரியாத சூது எதுவும் இராது. வெளிப்படையாகத் தெரிகிற நுணுக்கமே இருக்கும். அதனால், இவை சூதாட்டம் ஆவதில்லை.

சூதாட்டத்தின் ஆரம்ப நிலம் தமிழ் நிலம் தான்! த்த்துவங்களில் சிறந்த நிலமே, சூதிலும் சிறக்க முடியும். இதுவா அதுவாப் போராட்டத்தை உணர்ந்தவர்களே சூதாட்டத்தை அமைத்திருக்க முடியும். தமிழக அகழ்வாய்வுகளில் சூதாடுகருவிகள், தாயக்கட்டைகள் கிடைத்துள்ளன என்பதே இதற்குச் சான்றாகும்.

நால்வகைப் படைகளை அடிப்படையாகக் கொண்டு விளையாட்டே சதுரங்கம் (Chess). இதிலும் சூது உண்டு. நேரடியாக ஒரு காய் நகர்த்தப்படும். ஆனால் அதன் உள் நோக்கம் வேறாக இருக்கும். இதுவே சூது. இன்றும் தமிழகக் கிராமங்களில் தாயம் போன்ற சூதாட்டங்கள் நீக்கமற நடந்து கொண்டிருக்கிறது.

மகாபாரதக் காலத்தில் தமிழகத்தில் சூதாட்டம் பெருகியிருந்தது.

‘சூதானமாகப் போய் வா’ என்ற தமிழ் சொல்லிற்கு ‘பார்த்துப் போய் வா’ என்பதே பொருள்.

சில மலையடிவாரங்களில் பார்த்தால், தாயக்கட்டம் உளியால் செதுக்கப்பட்டிருக்கும். பாறைகளிலும், மணலிலும் கீறி விளையாடப்பட்ட விளையாட்டு பின் தாள் வரவே தாளில் வரையப்பட்டு விளையாடினர்.

முதலில் கூறியது போல, அதுவா? இதுவா? என்ற வினா, சூது விளையாட்டில் ஒவ்வொரு மணித்துளியிலும் கேட்கப்படும். அதற்கு விளையாடுபவர் விடை தந்து கொண்டே இருக்க வேண்டும். அதில்தான் இன்பநடுக்கம் (Thrill) உள்ளது.

இந்த இன்ப நடுக்கத்தினை அடைவதற்காக மட்டும் பழந்தமிழர்கள் சூதாடவில்லை. முன்னர் கண்ட தத்துவ நுட்பத்திற்காகவும் தான்.

பார்வை நூல்

1.  முனைவர் சு. சௌந்தரபாண்டியன், மறைந்து போன தமிழர் பண்பாடுகள், மாரிமுத்து பதிப்பகம், சாலி கிராமம், சென்னை – 600 093.

Comments

Popular posts from this blog

பொய்யில் புலவன் பொய்யா மொழிகள்

திருக்குறளில் எனது சிறு முயற்சியாக… .  " பொய்யில் புலவன் பொய்யா மொழிகள்"  என்ற இத்தலைப்பில் அமைந்த 133 வரிகள் கொண்ட இப்படைப்பு முருகனின் ” கந்த சஷ்டி  கவசம் ” போன்று உருவாக்கப்பட்டது. இப்பகுதி அறத்துப்பால் 38  அதிகாரங்கள், பொருட்பால் 70  அதிகாரங்களிலிருந்து மட்டும் சுருங்கச் சொல்லி விளங்க வைத்தல் என்ற முறையில், திருக்குறளின் சாராக அமைத்து வழங்கியுள்ளேன். அறமும், பொருளும் ஒருவருக்கு அமைந்தால் இன்பம் தானாகக் கிட்டும் என்ற நோக்கத்தில் அமைக்கப்பட்டது. ”பொய்யில் புலவன் பொய்யா மொழிகள்” காக்க காக்க அறத்தைக் காக்க (1) காக்க காக்கக் குறளைக் காக்க உலக மொழிகளில் ஒப்பற்ற நூலாம், நோக்க நோக்க பெயா்த்து நோக்க மனிதன் கற்று மனிதம் காக்க ஐம்பொறி உணா்வை காக்க காக்க புகழுடன் வாழ ஒழுக்கம் காக்க அறநெறி வாழ்வை இறைவழி காக்க வானம் பொய்யா வளத்தைக் காக்க பசிப்பிணி யில்லா உலகைக் காக்க பற்றற்ற வாழ்வை பரிவுடன் காக்க அறத்தைக் காக்க அன்பைக் காக்க (2) குறையிலா வாழ்வை குணமுடன் காக்க இல்லற வாழ்வுடன் நல்லறம் காக்க பண்பொடு பயனும் அறத்துடன் காக்க வாழ்க வாழ்க வளமுடன் வாழ்க வாழ்க வாழ்க...

கோப்பெருஞ்சோழன் – பிசிராந்தையார் நட்பு

  கோப்பெருஞ்சோழன் – பிசிராந்தையார் நட்பு   வடக்கிருத்தல் தமிழரின் நம்பிக்கை சார்ந்த பழக்கவழக்கங்களில் வடக்கிருத்தலை ஆடவர் மேற்கொண்டனர். ஊருக்கு வடபால் ஓரிடத்தில் வடக்குத் திசை நோக்கி அமர்ந்த வண்ணம் உண்ணாநோன்பிருந்து உயிர்த்துறப்பதை ‘ வடக்கிருத்தல் ’ எனக் கொண்டனர். வடக்கிருக்க அடிப்படைக் காரணியாக அமைவன மானம் , வீரம் , நட்பு , தன்நோக்கம் நிறைவேறாமை எனலாம். வீரர் , புலவர் , மன்னர் ஆகியோர் வடக்கிருந்தமையை இலக்கியங்கள் வாயிலாக அறிய முடிகிறது. அவ்வாறு உயிர் துறப்பவர் துறக்கம் பெறுவர் என நம்பினர்.       கலைக்களஞ்சியம் , வடக்கிருத்தலை ‘ உத்ரக மனம் ’ என்றும் ‘ மகாப் பிரத்தானம் ’ என்றும் கூறும். ‘ நாணத்தகு நிலை ’ நேர்ந்ததனாற் சிலர் வடக்கிருந்ததாகத் தமிழ் நூல்கள் கூறுகின்றன என்று கூறுகிறது.           கோப்பெருஞ்சோழன் வடக்கிருந்து உயிர் விட்டான். அவன் உயிர்விட்டப் பிறகு அவனை பார்க்காமலே நட்புக் கொண்டிருந்தப் பிசிராந்தையாரும், சோழனுடன் இருந்த பொத்தியார் என்ற புலவரும் அவன் வடக்கிருந்த இடத்தின் அருகில் வடக்கிருந்து உயிர்...

எண்ணம் போல் வாழ்வு

                                   எண்ணம் போல் வாழ்வு   நினைவுகளே பழக்கவழக்கங்களாக மாறுகின்றன. எனவே தான் எண்ணம் போல் வாழ்வு அனைவருக்கும் அமைகிறது. வெற்றி பெற்ற அனைவரும் பிறரைத் தன் நடத்தையால் மகிழ்விக்க நினைத்தவர்களே என்பதை நாம் நினைவில் நிறுத்த வேண்டும். ·         வங்கியில் பணத்தைச் சேமிப்பதைவிட இதயத்தில் இனிய எண்ணங்களைச் சேமிப்பது மகிழ்ச்சியான வாழ்விற்கு உதவும் வைப்பு நிதியாகும். ·                    மனம் - மகிழ்ச்சி அளிக்காத நிகழ்வுகளை மறந்து விடும் இயல்புடையது. ·                      வெறுப்பு - மனத்தையும், உணர்வையும் பற்றிக் கொண்டுள்ள தொற்று நோய். எனவே வெறுப்பிற்கு விடுதலை தரும்வரை மகிழ்ச்சி நம்மை அணுகாது. ·         கடமையைச் செய்யுங்கள், மகிழ்ச்சியை அறுவடை செய்யலாம். நன்மை, தீமை என்று எது நடந்...