Skip to main content

மனிதநெறிகளாக...

 

மனிதநெறிகளாக...

          விழியுள்ளவன் விழியற்றவனுக்கு வழிகாட்ட வேண்டும். இருப்பவன் இல்லாதவனைப் பராமரிக்க வேண்டும். கற்றவன் கல்லாதவனின் கண் திறக்க வேண்டும். தன்னுடைய அடிப்படைத் தேவைகளுக்கு மிஞ்சியதைத் தானே மனம் உவந்து இல்லாதவனுக்குத் தர வேண்டும். சமூகத்தின் மேடு பள்ளங்களைச் சமன்படுத்த மதங்கள் கண்டுபிடித்த மனிதநெறிதான் தானம். இதுதான் மனிதநேயத்தின் அடையாளமாகும்.

          ”வழங்கலும் துய்த்தலும் தேற்றாதான் பெற்ற

         முழங்கு முரசுடைச் செல்வம் – தழங்கருவி

         வேய்முற்றி முத்துதிரும் வெற்ப! அதுவன்றோ

         நாய் பெற்ற தெங்கம் பழம்” (பழமொழி -151)

என்ற பழமொழி பாடலில், ஒருவனிடம் செல்வம் இருந்தால் அடுத்தவனுக்கு வழங்க வேண்டும். தானும் அனுபவிக்க வேண்டும். இரண்டும் இல்லாமல் பெட்டியில் வைத்துப் பூட்டி மகிழ்ந்தால், அச்செல்வம் தானும் தின்னவியலாமல், பிறருக்கும் தர விரும்பாமல் நாய் உருட்டிப் பார்க்கும் தேங்காய்க்கு சமம். இந்தச் சிந்தனை எத்தனை செல்வந்தர்கள் உணர்ந்துள்ளார்கள். இருப்பவன் இல்லாதவனுடன் பகிர்ந்து கொள்ளவேண்டும் என்பதுதான் மனிதநெறியாகும்.

    பிறர் துயர் தீர்க்கும் பெருங்ருணை ஒன்றுதான் மனித வாழ்வை அர்த்தமுள்ளதாக ஆக்கும். ”தன்பெண்டு, தன் பிள்ளை, சோறு, வீடு, சம்பாத்யம் இவையுண்டு, தானுண்டு” என்று வாழும் தன்னலத்தில் மனிதப் பிறவிக்கு எந்த மகத்துவமும் இல்லை.

          வாழ்க்கையின் நோக்கத்தை “Life is to give. Not to take’ என்று ஒரு வரியில் விளக்கினார் பிரெஞ்சு எழுத்தாளர் விக்டர் ஹயூகோ. பசுவின் பால் கன்றுக்கு, தாயின் பால் குழந்தைக்கு என்பதுதான் இயற்கையின் கொள்கை.

         

 

Comments

Popular posts from this blog

எண்ணம் போல் வாழ்வு

                                                                        எண்ணம் போல் வாழ்வு             நினைவுகளே பழக்கவழக்கங்களாக மாறுகின்றன. எனவே தான் எண்ணம் போல் வாழ்வு அனைவருக்கும் அமைகிறது. வெற்றி பெற்ற அனைவரும் பிறரைத் தன் நடத்தையால் மகிழ்விக்க நினைத்தவர்களே என்பதை நாம் நினைவில் நிறுத்த வேண்டும். ·         வங்கியில் பணத்தைச் சேமிப்பதைவிட இதயத்தில் இனிய எண்ணங்களைச் சேமிப்பது மகிழ்ச்சியான வாழ்விற்கு உதவும் வைப்பு நிதியாகும். ·      மனம் - மகிழ்ச்சி அளிக்காத நிகழ்வுகளை மறந்து விடும் இயல்புடையது. ·         வெறுப்பு - மனத்தையும், உணர்வையும் பற்றிக் கொண்டுள்ள தொற்று நோய். எனவே வெறுப்பிற்கு விடுதலை தரும்வரை மகிழ்ச்சி நம்மை அணுகாது. ·   ...

மனிதனாக வாழ ...

  மனிதனாக வாழ ... ·         பிறர் உன்னை தூற்றும் பொழுது தலை நிமிர்ந்து நில். ·         பொறாமை, கோபம், வீண் மயக்கம் போன்ற குணங்களை விரோதிகளாக எண்ணுதல். ·         வெற்றி -   தோல்வி,   இன்பம் – துன்பம் இரண்டையும் சமமாக பாவித்தல். ·         உண்மைக்குப் புறம்பானவற்றைச் செய்யாதிருத்தல். ·         நண்பர்கள் இல்லையென்றாலும் பரவாயில்லை. பகைவர்கள் இல்லாமல் வாழ முயற்சி செய்தல். ·         மனத்திடத்தோடு வாழ்தல். ·         ஏற்றத் தாழ்வு இல்லா மனநிலையுடன் இருத்தல். ·         மனிதனுக்கு உரியது - கலங்காத அறிவு, அன்பு நிறைந்த மனம், ஆரோக்கியமான   உடல். ·         எதற்கும் அஞ்சாதே -   பயம் நம்மை கோழையாக்கி விடும்.      யாரையும் வெறுக்காதே ...

பொய்யில் புலவன் பொய்யா மொழிகள்

திருக்குறளில் எனது சிறு முயற்சியாக… .  " பொய்யில் புலவன் பொய்யா மொழிகள்"  என்ற இத்தலைப்பில் அமைந்த 133 வரிகள் கொண்ட இப்படைப்பு முருகனின் ” கந்த சஷ்டி  கவசம் ” போன்று உருவாக்கப்பட்டது. இப்பகுதி அறத்துப்பால் 38  அதிகாரங்கள், பொருட்பால் 70  அதிகாரங்களிலிருந்து மட்டும் சுருங்கச் சொல்லி விளங்க வைத்தல் என்ற முறையில், திருக்குறளின் சாராக அமைத்து வழங்கியுள்ளேன். அறமும், பொருளும் ஒருவருக்கு அமைந்தால் இன்பம் தானாகக் கிட்டும் என்ற நோக்கத்தில் அமைக்கப்பட்டது. ”பொய்யில் புலவன் பொய்யா மொழிகள்” காக்க காக்க அறத்தைக் காக்க (1) காக்க காக்கக் குறளைக் காக்க உலக மொழிகளில் ஒப்பற்ற நூலாம், நோக்க நோக்க பெயா்த்து நோக்க மனிதன் கற்று மனிதம் காக்க ஐம்பொறி உணா்வை காக்க காக்க புகழுடன் வாழ ஒழுக்கம் காக்க அறநெறி வாழ்வை இறைவழி காக்க வானம் பொய்யா வளத்தைக் காக்க பசிப்பிணி யில்லா உலகைக் காக்க பற்றற்ற வாழ்வை பரிவுடன் காக்க அறத்தைக் காக்க அன்பைக் காக்க (2) குறையிலா வாழ்வை குணமுடன் காக்க இல்லற வாழ்வுடன் நல்லறம் காக்க பண்பொடு பயனும் அறத்துடன் காக்க வாழ்க வாழ்க வளமுடன் வாழ்க வாழ்க வாழ்க...