Skip to main content

வாழ்க்கையின் வெற்றியில் தன்னம்பிக்கை (புத்தக மதிப்புரை)

  வாழ்க்கையின் வெற்றியில் தன்னம்பிக்கை ( புத்தக மதிப்புரை )               புத்தக மதிப்புரையில் முனைவர் சி . இலட்சுமணன் அவர்கள் எழுதிய ‘ வாழ்க்கையின் வெற்றியில் தன்னம்பிக்கை ’ என்ற   புத்தகத்தைப் பார்ப்போம் . இந்நூல்   2023 - ஆம் ஆண்டு ,   குமரி மாவட்டம் , தமிழ்ச் செம்மொழி வரலாற்று ஆய்வு மையம் வெளியிட்டுள்ளார்கள். பக்கங்கள் 205,   விலை 1 50 ரூபாய்.             முனைவர் சி . இலட்சுமணன் அவர்கள் , தமிழ்ச் செம்மொழி வரலாற்று ஆய்வு மையத்தின் விடிவெள்ளி ; சுயமுன்னேற்றத்திற்கான நூல்களை எழுதி வருகின்ற சமுதாயச் சிற்பி ; தமிழாய்வுக் களஞ்சியம் என்னும் இதழின் ஆசிரியராக இருந்து சிறப்புடன் நடத்தி வருகிறார் . பத்துக்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார் .             நூலாசிரியர் அவர்கள் தமிழ்ப் பல்கலைக் கழகத்தில் ஓலைச் சுவடித் துறையின் தலைவராக ,   பணியாற்றிய பொழுது பல்வேறு ஊர்களுக்குப் பயணம் ...

இலக்கியத்தில் தமிழர் காதல்

 

இலக்கியத்தில் தமிழர் காதல் 

 

          உணர்வும், அறிவும் ஒருங்கிணைந்த கலவையே மனித இனம். உணர்வுக்கு இடமில்லாத வறண்ட அறிவு நன்மையின் பக்கமே எப்போதும் நடக்கும் என்று எதிர்பார்க்க முடியாது. உணர்வில் முகிழ்க்கும் அன்பு தான் இதயங்களை ஈரப்படுத்தும். இல்லறத்தை மேன்மைப்படுத்தும். மனிதநேயத்தை வளர்த்தெடுக்கும். உலகத்தை ஒருங்கிணைக்கும்.

       நாடு, இனம், மொழி, மதம், சாதி, அனைத்தும் ஒரு வகையில் மனிதகுலத்தைப் பேதப்படுத்தும் தடைச்சுவர்கள். அன்பு ஒன்று தான் உயிர்களைத்தையும் ஒன்றாக இணைக்கும் உயரிய பாலம். அதனால் தான் ‘அன்பின் வழியது உயிர்நிலை’ என்று வள்ளுவர் அறிவுறுத்துகிறார். அன்பே ஓர் ஆணையும், ஒரு பெண்ணையும் காதலர்களாக்கி அகவாழ்க்கையில் ஈடுபட அடித்தளமாக்குகிறது.

          சங்க இலக்கியம் அகத்திணையில் காதல் பாடுவதால் சிறப்பு என்பதில்லை. இவ்வகையான காதலை இவ்வகையாகத்தான் பாடுவது என்ற கட்டுப்பாடே அகத்திணையின் சிறப்பு. காதல் பொருளிலும் கட்டுப்பாடு. அதனைச் சொல்லும் முறையிலும் கட்டுப்பாடு. இவை அகத்திணை நெறிகள். பிற இலக்கியங்கள் சுவைக்காக எக்காதலையும் பாடும். அகத்திணை அன்புக் காதலை மட்டுமே பாடும். அறிவுறுத்தும். ஐந்திணைக் காதலின் இயல்பினை விளக்கும் தொல்காப்பியத்தில்,

          இன்பமும் பொருளும் அறனும் என்றாங்கு

           அன்பொடு புணர்ந்த ஐந்திணை”

என்று குறிப்பிடுவதை நாம் கருத்தூன்றிச் சிந்தித்தால், வெறும் உடல் இச்சையால் உந்தப்படும் இரண்டு உள்ளங்களில் உயர்ந்த காதல் ஒரு போதும் உருவாவதில்லை. இழிந்த காமத்தில் அன்பும் இல்லை; அறனும் இல்லை;  உண்மையான இன்பமும் இல்லை; ‘அன்பொடு புணர்ந்த ஐந்திணை’ இதுதான் நேரிய காதலின் நல்ல அடையாளமாகும்.

    சங்த தமிழர்களிடத்தில் அன்புடைய தலைவனும் தலைவியும் கூடிக் கலந்தொழுகும் காதலொழுக்கம் களவு என்றும், கற்பு என்றும் இருவகைப்பட்டது. உருவும், திருவும், பருவமும், குலனும், குணனும், அன்பும் ஒத்த தலைமகனும், தலைமகளும் அடுப்பாரும் கொடுப்பாரும் இன்றித் தாமே எதிர்ப்பட்டுக் கூடிக் கலப்பது களவு என்றும், இருவரும் முறைப்படி மணந்து இல்லிருந்து அறம் புரிந்து ஒழுகுவது கற்பென்றும் விதிக்கப்பட்டது. அதுதான் தமிழினப் பண்பாடு. இந்த வாழ்க்கை தமிழருக்கே உரியது. இன்றும் மலைவாழ் பழங்குடி மக்களிடையே அங்குமிங்குமாய் முந்தைய களவு நெறியின் எச்சத்தைக் காண முடிகிறது.

          சங்க இலக்கியத்தின் அகப்பாடல்களின் தனிச் சிறப்பு, அவற்றுள் எந்தப் பாடலும் ஒரு தனி மனிதனை மையப்படுத்திப் பாடப்படவில்லை என்பதுதான்,

          ”மக்கள் நுதலிய அகனைந் திணையும்

           சுட்டி ஒருவர்ப் பெயர்கொளப் பெறாஅர்”

என்ற பாடலில், தனிப்பட்ட ஒருவரின் இயற்பெயரோ, குடிப்பெயரோ, ஊரோ, அடையாள மாலையோ அகப்பாடலில் சொல்லப் பெறுவதில்லை.

       அன்புக் கற்களால் கட்டப்படாத குடும்ப மாளிகையில் அவநம்பிக்கை மட்டுமே குடியிருக்கும்.

பார்வை நூல்

1.  மனமும் மனிதனும் – தமிழருவி மணியன், கற்பகம் புத்தகாலயம், சென்னை – 600 017.

Comments

Popular posts from this blog

பொய்யில் புலவன் பொய்யா மொழிகள்

திருக்குறளில் எனது சிறு முயற்சியாக… .  " பொய்யில் புலவன் பொய்யா மொழிகள்"  என்ற இத்தலைப்பில் அமைந்த 133 வரிகள் கொண்ட இப்படைப்பு முருகனின் ” கந்த சஷ்டி  கவசம் ” போன்று உருவாக்கப்பட்டது. இப்பகுதி அறத்துப்பால் 38  அதிகாரங்கள், பொருட்பால் 70  அதிகாரங்களிலிருந்து மட்டும் சுருங்கச் சொல்லி விளங்க வைத்தல் என்ற முறையில், திருக்குறளின் சாராக அமைத்து வழங்கியுள்ளேன். அறமும், பொருளும் ஒருவருக்கு அமைந்தால் இன்பம் தானாகக் கிட்டும் என்ற நோக்கத்தில் அமைக்கப்பட்டது. ”பொய்யில் புலவன் பொய்யா மொழிகள்” காக்க காக்க அறத்தைக் காக்க (1) காக்க காக்கக் குறளைக் காக்க உலக மொழிகளில் ஒப்பற்ற நூலாம், நோக்க நோக்க பெயா்த்து நோக்க மனிதன் கற்று மனிதம் காக்க ஐம்பொறி உணா்வை காக்க காக்க புகழுடன் வாழ ஒழுக்கம் காக்க அறநெறி வாழ்வை இறைவழி காக்க வானம் பொய்யா வளத்தைக் காக்க பசிப்பிணி யில்லா உலகைக் காக்க பற்றற்ற வாழ்வை பரிவுடன் காக்க அறத்தைக் காக்க அன்பைக் காக்க (2) குறையிலா வாழ்வை குணமுடன் காக்க இல்லற வாழ்வுடன் நல்லறம் காக்க பண்பொடு பயனும் அறத்துடன் காக்க வாழ்க வாழ்க வளமுடன் வாழ்க வாழ்க வாழ்க...

எண்ணம் போல் வாழ்வு

                                   எண்ணம் போல் வாழ்வு   நினைவுகளே பழக்கவழக்கங்களாக மாறுகின்றன. எனவே தான் எண்ணம் போல் வாழ்வு அனைவருக்கும் அமைகிறது. வெற்றி பெற்ற அனைவரும் பிறரைத் தன் நடத்தையால் மகிழ்விக்க நினைத்தவர்களே என்பதை நாம் நினைவில் நிறுத்த வேண்டும். ·         வங்கியில் பணத்தைச் சேமிப்பதைவிட இதயத்தில் இனிய எண்ணங்களைச் சேமிப்பது மகிழ்ச்சியான வாழ்விற்கு உதவும் வைப்பு நிதியாகும். ·                    மனம் - மகிழ்ச்சி அளிக்காத நிகழ்வுகளை மறந்து விடும் இயல்புடையது. ·                      வெறுப்பு - மனத்தையும், உணர்வையும் பற்றிக் கொண்டுள்ள தொற்று நோய். எனவே வெறுப்பிற்கு விடுதலை தரும்வரை மகிழ்ச்சி நம்மை அணுகாது. ·         கடமையைச் செய்யுங்கள், மகிழ்ச்சியை அறுவடை செய்யலாம். நன்மை, தீமை என்று எது நடந்...

கோப்பெருஞ்சோழன் – பிசிராந்தையார் நட்பு

  கோப்பெருஞ்சோழன் – பிசிராந்தையார் நட்பு   வடக்கிருத்தல் தமிழரின் நம்பிக்கை சார்ந்த பழக்கவழக்கங்களில் வடக்கிருத்தலை ஆடவர் மேற்கொண்டனர். ஊருக்கு வடபால் ஓரிடத்தில் வடக்குத் திசை நோக்கி அமர்ந்த வண்ணம் உண்ணாநோன்பிருந்து உயிர்த்துறப்பதை ‘ வடக்கிருத்தல் ’ எனக் கொண்டனர். வடக்கிருக்க அடிப்படைக் காரணியாக அமைவன மானம் , வீரம் , நட்பு , தன்நோக்கம் நிறைவேறாமை எனலாம். வீரர் , புலவர் , மன்னர் ஆகியோர் வடக்கிருந்தமையை இலக்கியங்கள் வாயிலாக அறிய முடிகிறது. அவ்வாறு உயிர் துறப்பவர் துறக்கம் பெறுவர் என நம்பினர்.       கலைக்களஞ்சியம் , வடக்கிருத்தலை ‘ உத்ரக மனம் ’ என்றும் ‘ மகாப் பிரத்தானம் ’ என்றும் கூறும். ‘ நாணத்தகு நிலை ’ நேர்ந்ததனாற் சிலர் வடக்கிருந்ததாகத் தமிழ் நூல்கள் கூறுகின்றன என்று கூறுகிறது.           கோப்பெருஞ்சோழன் வடக்கிருந்து உயிர் விட்டான். அவன் உயிர்விட்டப் பிறகு அவனை பார்க்காமலே நட்புக் கொண்டிருந்தப் பிசிராந்தையாரும், சோழனுடன் இருந்த பொத்தியார் என்ற புலவரும் அவன் வடக்கிருந்த இடத்தின் அருகில் வடக்கிருந்து உயிர்...