Skip to main content

சேலம் மகிழம் தமிழ்ச் சங்கத்தில் நூல் வெளியீட்டு நிகழ்வாக...

  சேலம் மகிழம் தமிழ்ச் சங்கத்தில் நூல் வெளியீட்டு நிகழ்வாக...           சேலம் , மகிழம் தமிழ்ச் சங்கம் மற்றும் டுடே பன்னாட்டு ஆய்விதழ் இணைந்து உலக தாய்மொழி தினம் - 2026 ஐ முன்னிட்டு சேலம் , செளடேஸ்வரி மகளிர் கல்லூரியில் முப்பெரும் விழா ( 29.03.2026) இன்று நடந்தது. இவ் விழாவில் என்னுடைய நாட்டுப்புற இலக்கியங்களில் பண்பாட்டுக் கலைகள் எனும் புத்தகமும் , மக்கள் தகவல் தொடர்பு சாதனங்களில் தமிழ் எனும் ஆய்வுக் கட்டுரையும் வெளியானது.           மகிழம் தமிழ்ச் சங்கத்தின் தலைவர் முனைவர் கற்பகராமன் அவர்கள் சோனா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தமிழ்த்துறையில் உதவிப் பேராசிரியராகப் பணியாற்றி வருகிறார். இவ்விழாவினை மிகவும் சிறப்பாக நடத்தினார்கள். நாங்கள் விழா முடிந்து வீட்டிற்கு வந்தவுடன் 7 மணிக்கு அனைத்துப் புகைப்படங்களையும் எங்களுக்கு அனுப்பி வைத்தார்கள். மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. புத்தக வெளியீட்டு நிகழ்வு           புத்தக வெளியீட்டு விழாவிற்கு இன்ற...

இலக்கியத்தில் தமிழர் காதல்

 

இலக்கியத்தில் தமிழர் காதல் 

 

          உணர்வும், அறிவும் ஒருங்கிணைந்த கலவையே மனித இனம். உணர்வுக்கு இடமில்லாத வறண்ட அறிவு நன்மையின் பக்கமே எப்போதும் நடக்கும் என்று எதிர்பார்க்க முடியாது. உணர்வில் முகிழ்க்கும் அன்பு தான் இதயங்களை ஈரப்படுத்தும். இல்லறத்தை மேன்மைப்படுத்தும். மனிதநேயத்தை வளர்த்தெடுக்கும். உலகத்தை ஒருங்கிணைக்கும்.

       நாடு, இனம், மொழி, மதம், சாதி, அனைத்தும் ஒரு வகையில் மனிதகுலத்தைப் பேதப்படுத்தும் தடைச்சுவர்கள். அன்பு ஒன்று தான் உயிர்களைத்தையும் ஒன்றாக இணைக்கும் உயரிய பாலம். அதனால் தான் ‘அன்பின் வழியது உயிர்நிலை’ என்று வள்ளுவர் அறிவுறுத்துகிறார். அன்பே ஓர் ஆணையும், ஒரு பெண்ணையும் காதலர்களாக்கி அகவாழ்க்கையில் ஈடுபட அடித்தளமாக்குகிறது.

          சங்க இலக்கியம் அகத்திணையில் காதல் பாடுவதால் சிறப்பு என்பதில்லை. இவ்வகையான காதலை இவ்வகையாகத்தான் பாடுவது என்ற கட்டுப்பாடே அகத்திணையின் சிறப்பு. காதல் பொருளிலும் கட்டுப்பாடு. அதனைச் சொல்லும் முறையிலும் கட்டுப்பாடு. இவை அகத்திணை நெறிகள். பிற இலக்கியங்கள் சுவைக்காக எக்காதலையும் பாடும். அகத்திணை அன்புக் காதலை மட்டுமே பாடும். அறிவுறுத்தும். ஐந்திணைக் காதலின் இயல்பினை விளக்கும் தொல்காப்பியத்தில்,

          இன்பமும் பொருளும் அறனும் என்றாங்கு

           அன்பொடு புணர்ந்த ஐந்திணை”

என்று குறிப்பிடுவதை நாம் கருத்தூன்றிச் சிந்தித்தால், வெறும் உடல் இச்சையால் உந்தப்படும் இரண்டு உள்ளங்களில் உயர்ந்த காதல் ஒரு போதும் உருவாவதில்லை. இழிந்த காமத்தில் அன்பும் இல்லை; அறனும் இல்லை;  உண்மையான இன்பமும் இல்லை; ‘அன்பொடு புணர்ந்த ஐந்திணை’ இதுதான் நேரிய காதலின் நல்ல அடையாளமாகும்.

    சங்த தமிழர்களிடத்தில் அன்புடைய தலைவனும் தலைவியும் கூடிக் கலந்தொழுகும் காதலொழுக்கம் களவு என்றும், கற்பு என்றும் இருவகைப்பட்டது. உருவும், திருவும், பருவமும், குலனும், குணனும், அன்பும் ஒத்த தலைமகனும், தலைமகளும் அடுப்பாரும் கொடுப்பாரும் இன்றித் தாமே எதிர்ப்பட்டுக் கூடிக் கலப்பது களவு என்றும், இருவரும் முறைப்படி மணந்து இல்லிருந்து அறம் புரிந்து ஒழுகுவது கற்பென்றும் விதிக்கப்பட்டது. அதுதான் தமிழினப் பண்பாடு. இந்த வாழ்க்கை தமிழருக்கே உரியது. இன்றும் மலைவாழ் பழங்குடி மக்களிடையே அங்குமிங்குமாய் முந்தைய களவு நெறியின் எச்சத்தைக் காண முடிகிறது.

          சங்க இலக்கியத்தின் அகப்பாடல்களின் தனிச் சிறப்பு, அவற்றுள் எந்தப் பாடலும் ஒரு தனி மனிதனை மையப்படுத்திப் பாடப்படவில்லை என்பதுதான்,

          ”மக்கள் நுதலிய அகனைந் திணையும்

           சுட்டி ஒருவர்ப் பெயர்கொளப் பெறாஅர்”

என்ற பாடலில், தனிப்பட்ட ஒருவரின் இயற்பெயரோ, குடிப்பெயரோ, ஊரோ, அடையாள மாலையோ அகப்பாடலில் சொல்லப் பெறுவதில்லை.

       அன்புக் கற்களால் கட்டப்படாத குடும்ப மாளிகையில் அவநம்பிக்கை மட்டுமே குடியிருக்கும்.

பார்வை நூல்

1.  மனமும் மனிதனும் – தமிழருவி மணியன், கற்பகம் புத்தகாலயம், சென்னை – 600 017.

Comments

Popular posts from this blog

பொய்யில் புலவன் பொய்யா மொழிகள்

திருக்குறளில் எனது சிறு முயற்சியாக… .  " பொய்யில் புலவன் பொய்யா மொழிகள்"  என்ற இத்தலைப்பில் அமைந்த 133 வரிகள் கொண்ட இப்படைப்பு முருகனின் ” கந்த சஷ்டி  கவசம் ” போன்று உருவாக்கப்பட்டது. இப்பகுதி அறத்துப்பால் 38  அதிகாரங்கள், பொருட்பால் 70  அதிகாரங்களிலிருந்து மட்டும் சுருங்கச் சொல்லி விளங்க வைத்தல் என்ற முறையில், திருக்குறளின் சாராக அமைத்து வழங்கியுள்ளேன். அறமும், பொருளும் ஒருவருக்கு அமைந்தால் இன்பம் தானாகக் கிட்டும் என்ற நோக்கத்தில் அமைக்கப்பட்டது. ”பொய்யில் புலவன் பொய்யா மொழிகள்” காக்க காக்க அறத்தைக் காக்க (1) காக்க காக்கக் குறளைக் காக்க உலக மொழிகளில் ஒப்பற்ற நூலாம், நோக்க நோக்க பெயா்த்து நோக்க மனிதன் கற்று மனிதம் காக்க ஐம்பொறி உணா்வை காக்க காக்க புகழுடன் வாழ ஒழுக்கம் காக்க அறநெறி வாழ்வை இறைவழி காக்க வானம் பொய்யா வளத்தைக் காக்க பசிப்பிணி யில்லா உலகைக் காக்க பற்றற்ற வாழ்வை பரிவுடன் காக்க அறத்தைக் காக்க அன்பைக் காக்க (2) குறையிலா வாழ்வை குணமுடன் காக்க இல்லற வாழ்வுடன் நல்லறம் காக்க பண்பொடு பயனும் அறத்துடன் காக்க வாழ்க வாழ்க வளமுடன் வாழ்க வாழ்க வாழ்க...

எண்ணம் போல் வாழ்வு

                                   எண்ணம் போல் வாழ்வு   நினைவுகளே பழக்கவழக்கங்களாக மாறுகின்றன. எனவே தான் எண்ணம் போல் வாழ்வு அனைவருக்கும் அமைகிறது. வெற்றி பெற்ற அனைவரும் பிறரைத் தன் நடத்தையால் மகிழ்விக்க நினைத்தவர்களே என்பதை நாம் நினைவில் நிறுத்த வேண்டும். ·         வங்கியில் பணத்தைச் சேமிப்பதைவிட இதயத்தில் இனிய எண்ணங்களைச் சேமிப்பது மகிழ்ச்சியான வாழ்விற்கு உதவும் வைப்பு நிதியாகும். ·                    மனம் - மகிழ்ச்சி அளிக்காத நிகழ்வுகளை மறந்து விடும் இயல்புடையது. ·                      வெறுப்பு - மனத்தையும், உணர்வையும் பற்றிக் கொண்டுள்ள தொற்று நோய். எனவே வெறுப்பிற்கு விடுதலை தரும்வரை மகிழ்ச்சி நம்மை அணுகாது. ·         கடமையைச் செய்யுங்கள், மகிழ்ச்சியை அறுவடை செய்யலாம். நன்மை, தீமை என்று எது நடந்...

மனிதனாக வாழ ...

  மனிதனாக வாழ ... ·                       பிறர் உன்னை தூற்றும் பொழுது தலை நிமிர்ந்து நில். ·     பொறாமை, கோபம், வீண் மயக்கம் போன்ற குணங்களை விரோதிகளாக எண்ணுதல். ·         வெற்றி -   தோல்வி,   இன்பம் – துன்பம் இரண்டையும் சமமாக பாவித்தல்.             உண்மைக்குப் புறம்பானவற்றைச்  செய்யாதிருத்தல். ·     நண்பர்கள் இல்லை என்றாலும் பரவாயில்லை. பகைவர்கள் இல்லாமல் வாழ முயற்சி செய்தல். ·                 ம னத்திடத்தோடு வாழ்தல்,  ஏற்றத் தாழ்வு இல்லா மனநிலையுடன் இருத்தல். ·             மனிதனுக்கு உரியது - கலங்காத அறிவு, அன்பு நிறைந்த மனம், ஆரோக்கியமான   உடல். ·                      எதற்கும் அஞ்சாதே -   பயம் நம்மை கோழையாக்கி விடும்.              எவரையும் வெறுக்...