Skip to main content

ஆசை

 

ஆசை

          நாம் வாழும் வாழ்க்கைக்கு ஆசைதான் உந்து சக்தியாக இருக்கிறது. ஆனால் இந்த ஆசைதான் நாம் அனுபவிக்கும் துன்பங்களுக்கும், கவலைகளுக்கும் அடிப்படைக் காரணமாகும். ஆசைபடுகின்ற மனிதர்கள் அனைவரும் துன்பம் இல்லாத வாழ்வை அடைய விரும்புகின்றனர். ஆனால் ஒவ்வொரு இன்பத்திற்கும் துன்பம் தான் அடிப்படைக் காரணமாக அமைகிறது. இன்பத்தின் நிழலாய் துன்பம் தொடரும் என்பதை யாரும் எதிர்ப்பார்ப்பதில்லை.

          ஆசையை விலக்கிவிட்டு வாழ்வதற்கு நாம் யாரும் துறவிகளில்லை. ஆசையானது ஆசைப்படும் பொருள்களை அனுபவிப்பதனால் ஒரு போதும் அடங்குவதில்லை. அது மேலும் மேலும் தொடர்கிறது. முட்செடியைத் தின்று விட்டு நாக்கில் இரத்தம் வடிந்தாலும் ஒட்டகம் அந்த முட்செடியையே மீண்டும் மீண்டும் நாடுகிறது. அதுபோல் துன்பத்தில் துடித்தாலும் மனித மனம் ஆசை என்னும் தேரிலேயே அன்றாடம் பயணம் செய்கிறது.

          ‘பொருள்களை நினைப்பதால் பற்று உண்டாகிறது. பற்று ஆசையாகப் பரிணமிக்கிறது. ஆசை சினமாக வடிவெடுக்கிறது. சினத்தால் மனம் மயங்குகிறது. மயக்கத்தால் நினைவு அழிகிறது. நினைவு அழிவதால் புத்தி நாசமடைகிறது. புத்தி நாசத்தால் மனிதன் அழிகிறான்’. என்று பகவத் கீதை ஸாங்கிய யோகத்தில் மனித வாழ்வில் தொடர் சங்கிலி போல் ஆசையின் சீரழிவைப் பட்டியலிடுகிறது.

          ”ஆசைகள் அற்ற இடத்தில் குற்றங்கள் அற்றுப் போகின்றன. குற்றங்களும், பாபங்களும் அற்றுப் போய் விட்டால் மனிதனுக்கு அனுபவங்கள் இல்லாமற் போய்விடுகின்றன. அனுபவங்கள் இல்லையென்றால் நன்மை, தீமைகளைக் கண்டுபிடிக்க முடியாது. தவறுகளின் மூலமே மனிதன் உண்மையை உணரவேண்டும் என்பதற்காகவே இறைவன் ஆசையைத் தூண்டி விடுகிறான்” என்கிறார் அனுபவத்தில் சிறந்த கண்ணதாசன்.

          துன்பம் தரும் ஆசையின் அளவை நம்மால் குறைத்துக் கொள்ளலாம். ஆனால் ஆசைக்கு நாம் அணைக்கட்டலாகாது?

பார்வை நூல்

1.  தமிழருவி மணியன் – மனமும் மனிதனும், கற்பகம் புத்தகாலயம், சென்னை – 600 017.

Comments

Popular posts from this blog

எண்ணம் போல் வாழ்வு

                                                                        எண்ணம் போல் வாழ்வு             நினைவுகளே பழக்கவழக்கங்களாக மாறுகின்றன. எனவே தான் எண்ணம் போல் வாழ்வு அனைவருக்கும் அமைகிறது. வெற்றி பெற்ற அனைவரும் பிறரைத் தன் நடத்தையால் மகிழ்விக்க நினைத்தவர்களே என்பதை நாம் நினைவில் நிறுத்த வேண்டும். ·         வங்கியில் பணத்தைச் சேமிப்பதைவிட இதயத்தில் இனிய எண்ணங்களைச் சேமிப்பது மகிழ்ச்சியான வாழ்விற்கு உதவும் வைப்பு நிதியாகும். ·      மனம் - மகிழ்ச்சி அளிக்காத நிகழ்வுகளை மறந்து விடும் இயல்புடையது. ·         வெறுப்பு - மனத்தையும், உணர்வையும் பற்றிக் கொண்டுள்ள தொற்று நோய். எனவே வெறுப்பிற்கு விடுதலை தரும்வரை மகிழ்ச்சி நம்மை அணுகாது. ·   ...

மனிதனாக வாழ ...

  மனிதனாக வாழ ... ·         பிறர் உன்னை தூற்றும் பொழுது தலை நிமிர்ந்து நில். ·         பொறாமை, கோபம், வீண் மயக்கம் போன்ற குணங்களை விரோதிகளாக எண்ணுதல். ·         வெற்றி -   தோல்வி,   இன்பம் – துன்பம் இரண்டையும் சமமாக பாவித்தல். ·         உண்மைக்குப் புறம்பானவற்றைச் செய்யாதிருத்தல். ·         நண்பர்கள் இல்லையென்றாலும் பரவாயில்லை. பகைவர்கள் இல்லாமல் வாழ முயற்சி செய்தல். ·         மனத்திடத்தோடு வாழ்தல். ·         ஏற்றத் தாழ்வு இல்லா மனநிலையுடன் இருத்தல். ·         மனிதனுக்கு உரியது - கலங்காத அறிவு, அன்பு நிறைந்த மனம், ஆரோக்கியமான   உடல். ·         எதற்கும் அஞ்சாதே -   பயம் நம்மை கோழையாக்கி விடும்.      யாரையும் வெறுக்காதே ...

பொய்யில் புலவன் பொய்யா மொழிகள்

திருக்குறளில் எனது சிறு முயற்சியாக… .  " பொய்யில் புலவன் பொய்யா மொழிகள்"  என்ற இத்தலைப்பில் அமைந்த 133 வரிகள் கொண்ட இப்படைப்பு முருகனின் ” கந்த சஷ்டி  கவசம் ” போன்று உருவாக்கப்பட்டது. இப்பகுதி அறத்துப்பால் 38  அதிகாரங்கள், பொருட்பால் 70  அதிகாரங்களிலிருந்து மட்டும் சுருங்கச் சொல்லி விளங்க வைத்தல் என்ற முறையில், திருக்குறளின் சாராக அமைத்து வழங்கியுள்ளேன். அறமும், பொருளும் ஒருவருக்கு அமைந்தால் இன்பம் தானாகக் கிட்டும் என்ற நோக்கத்தில் அமைக்கப்பட்டது. ”பொய்யில் புலவன் பொய்யா மொழிகள்” காக்க காக்க அறத்தைக் காக்க (1) காக்க காக்கக் குறளைக் காக்க உலக மொழிகளில் ஒப்பற்ற நூலாம், நோக்க நோக்க பெயா்த்து நோக்க மனிதன் கற்று மனிதம் காக்க ஐம்பொறி உணா்வை காக்க காக்க புகழுடன் வாழ ஒழுக்கம் காக்க அறநெறி வாழ்வை இறைவழி காக்க வானம் பொய்யா வளத்தைக் காக்க பசிப்பிணி யில்லா உலகைக் காக்க பற்றற்ற வாழ்வை பரிவுடன் காக்க அறத்தைக் காக்க அன்பைக் காக்க (2) குறையிலா வாழ்வை குணமுடன் காக்க இல்லற வாழ்வுடன் நல்லறம் காக்க பண்பொடு பயனும் அறத்துடன் காக்க வாழ்க வாழ்க வளமுடன் வாழ்க வாழ்க வாழ்க...