Skip to main content

உமையொருபாகன்

 

உமையொருபாகன்  

   முனிவர்களில் சிறந்த பிருங்கி என்பவர் வண்டு உருவங் கொண்டு உமாதேவியாரை நீக்கிவிட்டு, சிவபெருமானை மட்டும் வலம் வந்து வணங்கினார். தாம் சிவபெருமானின் வேறாகத் தனி உருவம் கொண்டு இருந்ததால் தானே இவ்வாறு நிகழ்ந்தது என்று எண்ணி, தாம் இறைவனோடு பிரிவறக்கலந்து ஒன்றிநிற்கும் தவத்தை ஏற்று உமையம்மையைத் தம்மிற் பிரிவறத் தம்முடைய இடபாகத்தில் பாதியளவு இடம்கொடுத்து என்றும் தம்முடன் ஒன்றியிருக்கும் நிலையில் ஏற்றுக் கொண்டருளினார்.

          இவ்வாறு ஒருதிரு மேனியில் வலப்பாதியில் சிவபெருமானும் இடப்பாதியில் உமையுமாக ஒருவரையொருவர் பிரிக்க இயலாமல் விளங்கும் நிலையே அர்த்த நாரீசுவர மூர்த்தியாகும். இம்மூர்த்தத்தையே ‘மாதொரு பாகர்’ என்றும் கூறுவார்கள்.

          இதனை,

”உமையவனொரு திறனாக வோங்கிய இமையவன்” (சிலம்பு 42-43)

”பெண்ணுரு வொருதிற னாகின் றவ்வுருந்

தன்னுள் அடக்கிக் கரக்கினும் கரக்கும்” (புறம், 17,8)

பாரதம் பாடிய பெருந்தேவனார்,

”நீலமேனி வாலிழை பாகத்து ஒருவன்”

                                                  (ஐங்குறுநூறு, கடவுள் வாழ்த்து)

          திருமூலர்,

          ”மாதுநல் லாளும் மணாளன் இருந்திடப்

           பாதிநல் லாளும் பகவனு மானது

           சோதிநல் லாளைத் துணைப்பெய்ய வல்லிரேல்

           வேதனை தீர்த்தரும் வெள்ளடை யாமே” (திருமந்திரம்,1157)

          மேற்கூறிய வற்றிலிருந்து சிவபெருமான் அர்த்த நாரீசுவரமூர்த்தியாக இருப்பதற்கு இலக்கியங்களில் சான்றுகள் உண்டென்று அறிய முடிகின்றது.

பார்வை நூல்

1.  சங்க கால இறைநெறியும் வாழ்வியல் நெறியும் – புலவர் சக்தி தரும நடராசன், சரஸ்வதி பதிப்பகம்,  வேலூர் முதன்மைச்சாலை, ஆர்க்காடு – 632 503,  முதற் பதிப்பு, 2017.

Comments

Popular posts from this blog

எண்ணம் போல் வாழ்வு

                                                                        எண்ணம் போல் வாழ்வு             நினைவுகளே பழக்கவழக்கங்களாக மாறுகின்றன. எனவே தான் எண்ணம் போல் வாழ்வு அனைவருக்கும் அமைகிறது. வெற்றி பெற்ற அனைவரும் பிறரைத் தன் நடத்தையால் மகிழ்விக்க நினைத்தவர்களே என்பதை நாம் நினைவில் நிறுத்த வேண்டும். ·         வங்கியில் பணத்தைச் சேமிப்பதைவிட இதயத்தில் இனிய எண்ணங்களைச் சேமிப்பது மகிழ்ச்சியான வாழ்விற்கு உதவும் வைப்பு நிதியாகும். ·      மனம் - மகிழ்ச்சி அளிக்காத நிகழ்வுகளை மறந்து விடும் இயல்புடையது. ·         வெறுப்பு - மனத்தையும், உணர்வையும் பற்றிக் கொண்டுள்ள தொற்று நோய். எனவே வெறுப்பிற்கு விடுதலை தரும்வரை மகிழ்ச்சி நம்மை அணுகாது. ·   ...

மனிதனாக வாழ ...

  மனிதனாக வாழ ... ·         பிறர் உன்னை தூற்றும் பொழுது தலை நிமிர்ந்து நில். ·         பொறாமை, கோபம், வீண் மயக்கம் போன்ற குணங்களை விரோதிகளாக எண்ணுதல். ·         வெற்றி -   தோல்வி,   இன்பம் – துன்பம் இரண்டையும் சமமாக பாவித்தல். ·         உண்மைக்குப் புறம்பானவற்றைச் செய்யாதிருத்தல். ·         நண்பர்கள் இல்லையென்றாலும் பரவாயில்லை. பகைவர்கள் இல்லாமல் வாழ முயற்சி செய்தல். ·         மனத்திடத்தோடு வாழ்தல். ·         ஏற்றத் தாழ்வு இல்லா மனநிலையுடன் இருத்தல். ·         மனிதனுக்கு உரியது - கலங்காத அறிவு, அன்பு நிறைந்த மனம், ஆரோக்கியமான   உடல். ·         எதற்கும் அஞ்சாதே -   பயம் நம்மை கோழையாக்கி விடும்.      யாரையும் வெறுக்காதே ...

பொய்யில் புலவன் பொய்யா மொழிகள்

திருக்குறளில் எனது சிறு முயற்சியாக… .  " பொய்யில் புலவன் பொய்யா மொழிகள்"  என்ற இத்தலைப்பில் அமைந்த 133 வரிகள் கொண்ட இப்படைப்பு முருகனின் ” கந்த சஷ்டி  கவசம் ” போன்று உருவாக்கப்பட்டது. இப்பகுதி அறத்துப்பால் 38  அதிகாரங்கள், பொருட்பால் 70  அதிகாரங்களிலிருந்து மட்டும் சுருங்கச் சொல்லி விளங்க வைத்தல் என்ற முறையில், திருக்குறளின் சாராக அமைத்து வழங்கியுள்ளேன். அறமும், பொருளும் ஒருவருக்கு அமைந்தால் இன்பம் தானாகக் கிட்டும் என்ற நோக்கத்தில் அமைக்கப்பட்டது. ”பொய்யில் புலவன் பொய்யா மொழிகள்” காக்க காக்க அறத்தைக் காக்க (1) காக்க காக்கக் குறளைக் காக்க உலக மொழிகளில் ஒப்பற்ற நூலாம், நோக்க நோக்க பெயா்த்து நோக்க மனிதன் கற்று மனிதம் காக்க ஐம்பொறி உணா்வை காக்க காக்க புகழுடன் வாழ ஒழுக்கம் காக்க அறநெறி வாழ்வை இறைவழி காக்க வானம் பொய்யா வளத்தைக் காக்க பசிப்பிணி யில்லா உலகைக் காக்க பற்றற்ற வாழ்வை பரிவுடன் காக்க அறத்தைக் காக்க அன்பைக் காக்க (2) குறையிலா வாழ்வை குணமுடன் காக்க இல்லற வாழ்வுடன் நல்லறம் காக்க பண்பொடு பயனும் அறத்துடன் காக்க வாழ்க வாழ்க வளமுடன் வாழ்க வாழ்க வாழ்க...