Skip to main content

சந்திரசேகரமூர்த்தி

 

சந்திரசேகரமூர்த்தி

          தக்கனின் சாபத்தால் சந்திரனின் கலைகள் ஒவ்வொன்றும் தேய்ந்து வந்தன. ஒளியும் சிறப்பும் இழந்து வருந்தி நின்றான். சிவபெருமானிடம் சென்று தன்னைக் காத்தருள வேண்டினான். அடைக்கலம் வேண்டிவந்த சந்திரன் மீது இரக்கம் கொண்ட சிவபெருமான். தன் காலில் வீழ்ந்த வணங்கிய சந்திரனை எடுத்து தன் தலையில் வைத்துக் கொண்டார். மேலும் தன்னை வணங்குகின்றவர்கள் எல்லாம் சந்திரனையும் வணங்கும்படி செய்துவிட்டார். இத்திருக் கோலமே ‘சந்திரசேகரமூர்த்தி’ ஆகும். இதனை,

          ”குறைவதாய குளிர்திங்கள் சூடிக் குளிர்த்தான் வினை

         பறைவதாக்கும் பரமன் பகவன் பரந்தாடை

         இறைவன் எங்கள் பெருமான் இடம்போல் இடும்பை தனுள்

         மறைகள் வல்லார் வணங்கித் தொழுகின்ற மாகாளமே”

(திருஞானசம்பந்தர்)

          தவறு செய்தவர்கள் மனம் திருந்தி சிவபெருமான் வழிபட்டால், அவர்கள் மீது இரக்கம் கொண்டு காப்பாற்றி அருளுவதோடு, அவர்களைச் சிறப்படையவும் செய்தார்.

          புனல்கூனல் பிறை அணிந்தான்’ (திருக்கோய்எழுபது,43)

        ‘தீர்தன அன்றியே திங்கள் தண்ணிடை

        வார்த்திடும் சடைமிசை வயங்கச் சேர்த்தினான்

        சார்ந்தில் தவவழித் தக்கன் சாபமே” (கந்தபுராணம்)

இந்த எடுத்துக்காட்டுகளில் இருந்து இலக்கியங்களில் சிவபெருமான் சந்திரசேகரமூர்த்தியாக விளங்கியமை அறியலாம். இதனை,

          ”தூமதி சடைமிசை சூடுதல் தூநெறி

           யாம் மதியான் எனஅமைந்த ஆறே”

என்று கூறி பட்டினத்தடிகள் இது தான் உண்மை என்று விளக்குகிறார்.

பார்வை நூல்

1.  சங்க கால இறைநெறியும் வாழ்வியல் நெறியும் புலவர் சக்தி தரும நடராசன், சரஸ்வதி பதிப்பகம்,  வேலூர் முதன்மைச்சாலை, ஆர்க்காடு – 632 503,  முதற் பதிப்பு, 2017.

 

         

Comments

Popular posts from this blog

எண்ணம் போல் வாழ்வு

                                                                        எண்ணம் போல் வாழ்வு             நினைவுகளே பழக்கவழக்கங்களாக மாறுகின்றன. எனவே தான் எண்ணம் போல் வாழ்வு அனைவருக்கும் அமைகிறது. வெற்றி பெற்ற அனைவரும் பிறரைத் தன் நடத்தையால் மகிழ்விக்க நினைத்தவர்களே என்பதை நாம் நினைவில் நிறுத்த வேண்டும். ·         வங்கியில் பணத்தைச் சேமிப்பதைவிட இதயத்தில் இனிய எண்ணங்களைச் சேமிப்பது மகிழ்ச்சியான வாழ்விற்கு உதவும் வைப்பு நிதியாகும். ·      மனம் - மகிழ்ச்சி அளிக்காத நிகழ்வுகளை மறந்து விடும் இயல்புடையது. ·         வெறுப்பு - மனத்தையும், உணர்வையும் பற்றிக் கொண்டுள்ள தொற்று நோய். எனவே வெறுப்பிற்கு விடுதலை தரும்வரை மகிழ்ச்சி நம்மை அணுகாது. ·   ...

மனிதனாக வாழ ...

  மனிதனாக வாழ ... ·         பிறர் உன்னை தூற்றும் பொழுது தலை நிமிர்ந்து நில். ·         பொறாமை, கோபம், வீண் மயக்கம் போன்ற குணங்களை விரோதிகளாக எண்ணுதல். ·         வெற்றி -   தோல்வி,   இன்பம் – துன்பம் இரண்டையும் சமமாக பாவித்தல். ·         உண்மைக்குப் புறம்பானவற்றைச் செய்யாதிருத்தல். ·         நண்பர்கள் இல்லையென்றாலும் பரவாயில்லை. பகைவர்கள் இல்லாமல் வாழ முயற்சி செய்தல். ·         மனத்திடத்தோடு வாழ்தல். ·         ஏற்றத் தாழ்வு இல்லா மனநிலையுடன் இருத்தல். ·         மனிதனுக்கு உரியது - கலங்காத அறிவு, அன்பு நிறைந்த மனம், ஆரோக்கியமான   உடல். ·         எதற்கும் அஞ்சாதே -   பயம் நம்மை கோழையாக்கி விடும்.      யாரையும் வெறுக்காதே ...

பொய்யில் புலவன் பொய்யா மொழிகள்

திருக்குறளில் எனது சிறு முயற்சியாக… .  " பொய்யில் புலவன் பொய்யா மொழிகள்"  என்ற இத்தலைப்பில் அமைந்த 133 வரிகள் கொண்ட இப்படைப்பு முருகனின் ” கந்த சஷ்டி  கவசம் ” போன்று உருவாக்கப்பட்டது. இப்பகுதி அறத்துப்பால் 38  அதிகாரங்கள், பொருட்பால் 70  அதிகாரங்களிலிருந்து மட்டும் சுருங்கச் சொல்லி விளங்க வைத்தல் என்ற முறையில், திருக்குறளின் சாராக அமைத்து வழங்கியுள்ளேன். அறமும், பொருளும் ஒருவருக்கு அமைந்தால் இன்பம் தானாகக் கிட்டும் என்ற நோக்கத்தில் அமைக்கப்பட்டது. ”பொய்யில் புலவன் பொய்யா மொழிகள்” காக்க காக்க அறத்தைக் காக்க (1) காக்க காக்கக் குறளைக் காக்க உலக மொழிகளில் ஒப்பற்ற நூலாம், நோக்க நோக்க பெயா்த்து நோக்க மனிதன் கற்று மனிதம் காக்க ஐம்பொறி உணா்வை காக்க காக்க புகழுடன் வாழ ஒழுக்கம் காக்க அறநெறி வாழ்வை இறைவழி காக்க வானம் பொய்யா வளத்தைக் காக்க பசிப்பிணி யில்லா உலகைக் காக்க பற்றற்ற வாழ்வை பரிவுடன் காக்க அறத்தைக் காக்க அன்பைக் காக்க (2) குறையிலா வாழ்வை குணமுடன் காக்க இல்லற வாழ்வுடன் நல்லறம் காக்க பண்பொடு பயனும் அறத்துடன் காக்க வாழ்க வாழ்க வளமுடன் வாழ்க வாழ்க வாழ்க...