விடுகதை யில் காணலாகும் சமுதாயச் சிந்தனைகள் வாழ்க்கையின் உயிர்ப் பண்புகளாகிய உணர்வுப் பண்புகள் இலக்கியங்களின் கருவாக அமைகின்றபோது அவை படைப்போனின் உணர்ச்சிக்குத் தக்க உருவம் பெற்றுச் சாவாப் பேற்றினைப் பெறுவதுண்டு . அத்தகைய சாவாமையும் மூவாமையும் பெற்ற கருவூலமே விடுகதைகளாகும் . மானுடத்தின் சிந்தனைத் திறனையும் , பண்பாட்டுப் படிநிலைகளையும் அறிந்துகொள்ளும் வரலாற்றுப் பெட்டகமாகவும் , இலக்கியத்தின் கூறுகள் படிந்து விளங்குவதாகவும் உள்ளதால் விடுகதைகள் ‘ இலக்கியம் ’ எனும் பெருமை அடைகின்றன . அறியாமையால் உடனுக்குடன் மனிதனை வெட்கப்பட வைக்கும் இலக்கியம் விடுகதை ஒன்றேயாகும் . இலக்கியங்களில் விடுகதை தமிழ் இலக்கண நூலான தொல்காப்பியத்தில் விடுகதையைப் ‘ பிசி ’ என்று குறிப்பிடுவதைக் காணலாம் . தொல்காப்பியர் பிசிக்குரிய இலக்கணத்தைக் கூறும் போது , ” ஒப்பொடு புணர்ந்த வுவமத் தானும் ...
பிளாட்டோ
ஒரு சமயம் அறிஞர் பிளாட்டோவிடம் செல்வந்தர்
ஒருவர் வந்தார். ‘என் மகனுக்கு நீங்கள் கல்வி கற்றுத் தரவேண்டும். அதற்கு எவ்வளவு பணம்
கேட்கிறீர்கள்?” என்று கேட்டார். ”ஐந்நூறு பவுண்டுகள்” என்றார் பிளாட்டோ. ”என் மகனுக்கு
கல்வி கற்றுத் தர ஐந்நூறு பவுண்டுகளா? இந்த விலையில் ஓர் அடிமையையே விலைக்கு வாங்கி
விடலாமே” என்று கேட்டார்.
”நீங்கள் சொல்வதும் சரிதான். இந்தத் தொகைக்கு
ஓர் அடிமையையே வாங்கிக் கொள்ளுங்கள். அப்படி ஓர் அடிமையை நீங்கள் விலைக்கு வாங்கிக்
கொண்டால் உங்கள் மகனையும் சேர்த்து இரண்டு அடிமைகள் உங்கள் வீட்டில் இருப்பார்களே?”
என்று பதில் அளித்தார். செல்வந்தர் முகத்தில் ஈயாடவில்லை.
Comments
Post a Comment