கீழடிப் புதையல் இந்நூல் கீழடி அகழ்வாராய்ச்சி பற்றிய முழுமையான ஒரு புரிதலை அளிக்கும் ஆய்வு நூலாகும் . கீழடி அகழாய்வில் கண்டறியப்பட்ட முதுமக்கள் தாழிகள் , சுடுமண் சிற்பங்கள் , பகடைக்காய்கள் , செங்கல் கட்டுமானங்கள் இவைகளைக் கொண்டு கீழடி நாகரிகம் , பண்பாடு , தொழில் , வாணிகம் , பொருளாதாரம் , விளையாட்டு எனப் பல தலைப்புகளில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளை உள்ளடக்கியுள்ளது . இக்கருத்தை மையமாகக் கொண்டு கீழடிப் புதையல் என்னும் தலைப்பில் இந்நூலை எழுதியுள்ளார் ஆசிரியர் . இவர் சென்னையில் நடைபெற்ற 11- ஆம் உலக தமிழ் மாநாட்டில் அளித்த ஆய்வுக் கட்டுரை ‘ கீழடி அகழாய்வுகள் – மீளுருவாகும் சங்கத் தமிழர் பண்பாட்டு வரலாறு ’ என்ற தலைப்பில் வெளியிட்டக் கட்டுரையைக் கீழடிப் புதையல் என்னும் தலைப்பில் நூலாக உருவாக்கியுள்ளார் . இந்நூலில் அகழாய்வில் கண்டறியப்பட்ட தொல்பொருட்களின் புகைப்படங்களையும் , கீழடி அருங்காட்சியகம் குறித்தச் செய்திகளையும் இந்நூலில் முன் வைத்துள்ளார் . இந்நூலில் கீழடி புதையல் , கலைகள் , வணிகம் , வேளாண்மை , நானோ தொழில் நுட்பம் , புவியியல் , வைகை ஆற்றுச் சமவெளி ...
பிளாட்டோ
ஒரு சமயம் அறிஞர் பிளாட்டோவிடம் செல்வந்தர்
ஒருவர் வந்தார். ‘என் மகனுக்கு நீங்கள் கல்வி கற்றுத் தரவேண்டும். அதற்கு எவ்வளவு பணம்
கேட்கிறீர்கள்?” என்று கேட்டார். ”ஐந்நூறு பவுண்டுகள்” என்றார் பிளாட்டோ. ”என் மகனுக்கு
கல்வி கற்றுத் தர ஐந்நூறு பவுண்டுகளா? இந்த விலையில் ஓர் அடிமையையே விலைக்கு வாங்கி
விடலாமே” என்று கேட்டார்.
”நீங்கள் சொல்வதும் சரிதான். இந்தத் தொகைக்கு
ஓர் அடிமையையே வாங்கிக் கொள்ளுங்கள். அப்படி ஓர் அடிமையை நீங்கள் விலைக்கு வாங்கிக்
கொண்டால் உங்கள் மகனையும் சேர்த்து இரண்டு அடிமைகள் உங்கள் வீட்டில் இருப்பார்களே?”
என்று பதில் அளித்தார். செல்வந்தர் முகத்தில் ஈயாடவில்லை.
Comments
Post a Comment