பிளாட்டோ
ஒரு சமயம் அறிஞர் பிளாட்டோவிடம் செல்வந்தர்
ஒருவர் வந்தார். ‘என் மகனுக்கு நீங்கள் கல்வி கற்றுத் தரவேண்டும். அதற்கு எவ்வளவு பணம்
கேட்கிறீர்கள்?” என்று கேட்டார். ”ஐந்நூறு பவுண்டுகள்” என்றார் பிளாட்டோ. ”என் மகனுக்கு
கல்வி கற்றுத் தர ஐந்நூறு பவுண்டுகளா? இந்த விலையில் ஓர் அடிமையையே விலைக்கு வாங்கி
விடலாமே” என்று கேட்டார்.
”நீங்கள் சொல்வதும் சரிதான். இந்தத் தொகைக்கு
ஓர் அடிமையையே வாங்கிக் கொள்ளுங்கள். அப்படி ஓர் அடிமையை நீங்கள் விலைக்கு வாங்கிக்
கொண்டால் உங்கள் மகனையும் சேர்த்து இரண்டு அடிமைகள் உங்கள் வீட்டில் இருப்பார்களே?”
என்று பதில் அளித்தார். செல்வந்தர் முகத்தில் ஈயாடவில்லை.
Comments
Post a Comment