எழுதுகோல் கனவுகள் ( புத்தக மதிப்புரை ) புத்தக மதிப்புரை சிறப்பு நிகழ்ச்சியில் கவிஞர் மலர் மன்னன் அவர்கள் எழுதிய எழுதுகோல் கனவுகள் என்ற கவிதைப் புத்தகத்தைப் பார்ப்போம் . இப்புத்தகத்தைத் திருச்சி , இராஜா பப்ளிகேஷன்ஸ் வெளியிட்டுள்ளார்கள் . பக்கங்கள் 170, விலை 130 ரூபாய் . கவிஞர் மலர் மன்னன் அவர்கள் எழுதிய எழுதுகோல் கனவுகள் என்ற இந்த கவிதைப் புத்தகம் மூன்றாவது படைப்பாகும் . பல பத்திரிக்கைகளில் கவிதைகள் எழுதியுள்ளார் . கவிதை எழுத புலவர் பட்டம் தேவையில்லை என்பதை பட்டுக் கோட்டையார் , கவியரசு கண்ணதாசன் , கவிஞர் வாலி , போன்றவர்களின் வாழ்க்கை வரலாறு காட்டுகின்றது . கவிதை எழுத தேவை சிந்தனை , பயிற்சி , முயற்சி என்று தெரிந்து கொண்டேன் என்று நூலாசிரியர் தம் முன்னுரையில் குறிப்பிட்டுள்ளார் . இந்நூலுக்குக் கவிஞர் மணமேடு குருநாதன் அய்யர் அவர்கள் இந்நூலைப் பாராட்டி அன்பான அணிந்துரை வழங்கியுள்ளார் . முசிறி , தலைமையாசிரியர் ( ஓய்வு ) பெ . முத்துகிருஷ்ணன் அவர்...
ஹிட்லர்
ஹிட்லர் ஒரு சமயம் பைத்தியக்கார மருத்துவமனையைப் பார்வையிடச் சென்றார். ஹிட்லர்
வரும் சமயம் ‘ஹிட்லர் வாழ்க’ என்று கத்தும்படி பைத்தியக்காரர்களுக்குச் சொல்லியிருக்கிறார்கள்.
அதே போல ஹிட்லர் வந்ததும் பைத்தியகாரர்கள் ‘ஹிட்லர் வாழ்க’ என்று கத்தினார்கள். அதில் ஒரு ஆள்
மட்டும் கத்தாமல் இருந்தார். ஹிட்லர் அவரிடம் சென்று ‘நீ ஏன் ‘ஹிட்லர் வாழ்க’ என்று
கத்தவில்லை என்று கோபமாகக் கேட்டார். அதற்கு வெகு அமைதியாக ‘நான் பைத்தியம் அல்ல’ டாக்டர்
என்று பதிலளித்தார் அவர்.
Comments
Post a Comment