மதுரை சென்ற அனுபவங்களாக ... ‘கோயில்களின் நகரம்’ மற்றும் ‘தமிழ்நாட்டின் கலாச்சாரத் தலைநகரம்’ என்று அழைக்கப்படும் மதுரைக்கு (20.12.2025) நானும் என் தோழி என்னுடன் கல்லூரியில் பணியாற்றும் பேராசிரியர் விஜயலட்சுமி அவர்களும் சென்றோம் . நாங்கள் கடந்த 2017 – ஆம் ஆண்டு முதல் வருடத்திற்கு இரண்டு அல்லது மூன்று முறை சென்று வருவோம் . இந்த ஆண்டு நாங்களும் மற்றொரு சகோதரி முசிறி அரசு கல்லூரியில் பணியாற்றும் தமிழ்த்துறை இணைப் பேராசிரியர் பாக்கியரதி அவர்களும் சேர்ந்து சென்றோம் . இந்த அனுபவம் மிகவும் மகிழ்ச்சியாகவும் , புது அனுபவமாகவும் இருந்தது . இதை உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சியடைகிறேன் . இந்த முறை மதுரையில் ஒத்தக்கடையில் உள்ள யோகநரசிம்மர் கோவில் , ப்ரத்தியங்கரா தேவி , முருகன் கோவில் , மதுரை மீனாட்சி அம்மன் கோவில் ஆகிய கோவில்களுக்கு மட்டும் தான் சென்றோம் . மதியம் 2மணிக்கு மேல் சிவா டெக்ஸ்டைல் என்ற புதியதாக ஆரம்பித்துள்ள கடைக்குச் சென்றோம். 4.30 மணி வரை சேலைகள் வாங்கினோம். பின்பு ம...
ஹிட்லர்
ஹிட்லர் ஒரு சமயம் பைத்தியக்கார மருத்துவமனையைப் பார்வையிடச் சென்றார். ஹிட்லர்
வரும் சமயம் ‘ஹிட்லர் வாழ்க’ என்று கத்தும்படி பைத்தியக்காரர்களுக்குச் சொல்லியிருக்கிறார்கள்.
அதே போல ஹிட்லர் வந்ததும் பைத்தியகாரர்கள் ‘ஹிட்லர் வாழ்க’ என்று கத்தினார்கள். அதில் ஒரு ஆள்
மட்டும் கத்தாமல் இருந்தார். ஹிட்லர் அவரிடம் சென்று ‘நீ ஏன் ‘ஹிட்லர் வாழ்க’ என்று
கத்தவில்லை என்று கோபமாகக் கேட்டார். அதற்கு வெகு அமைதியாக ‘நான் பைத்தியம் அல்ல’ டாக்டர்
என்று பதிலளித்தார் அவர்.
Comments
Post a Comment