என் எண்ணச் சிதறல்கள்! கவிதைகளாக... -1 Linkedin எனும் இணைய தளத்தில் என்னுடைய எண்ணச் சிதறல்களைக் கவிதைகளாக்க் கடந்த சில மாதங்களாக வெளியிட்டு வந்தேன். அந்தக் கவிதைகள் அனைத்தையும் தொகுத்து இப்பகுதியில் வெளியிட்டுள்ளேன். மாற்றி யோசி! புலியிடம் பகையென்றால் நரியிடம் நட்பு தொள்ளாதே! உனக்கு உயர்வில்லையென்றால் மலைமீது கற்களை விட்டெறியாதே! வாழ்க்கை உனக்கு அறைகூவலிட்டால் சாவிடம் யோசனை கேட்காதே! உனது இன்ப துன்பத்தின் திறவுகோல் உன்னிடமே இருக்கிறது! திறந்து அனுபவிப்பது உனது மனநிலையைப் பொறுத்தது! மாற்றி யோசி! மாற்றம் என்பது நிலையானதல்ல! சந்தர்ப்பம்! தவறுகள் செய்வது தவறில்லை!- ஏனெனில் ஏதாவது ஒரு தவறில் ச...
ஹிட்லர்
ஹிட்லர் ஒரு சமயம் பைத்தியக்கார மருத்துவமனையைப் பார்வையிடச் சென்றார். ஹிட்லர்
வரும் சமயம் ‘ஹிட்லர் வாழ்க’ என்று கத்தும்படி பைத்தியக்காரர்களுக்குச் சொல்லியிருக்கிறார்கள்.
அதே போல ஹிட்லர் வந்ததும் பைத்தியகாரர்கள் ‘ஹிட்லர் வாழ்க’ என்று கத்தினார்கள். அதில் ஒரு ஆள்
மட்டும் கத்தாமல் இருந்தார். ஹிட்லர் அவரிடம் சென்று ‘நீ ஏன் ‘ஹிட்லர் வாழ்க’ என்று
கத்தவில்லை என்று கோபமாகக் கேட்டார். அதற்கு வெகு அமைதியாக ‘நான் பைத்தியம் அல்ல’ டாக்டர்
என்று பதிலளித்தார் அவர்.
Comments
Post a Comment