விருந்தோம்பல் (புத்தக மதிப்புரை) (முனைவர் வெ. இறையன்பு ) புத்தக மதிப்புரை யில் இறையன்பு அவர்கள் எழுதிய விருந்தோம்பல் இலக்கியங்கள் கூறுபவை என்னும் நூலை பார்ப்போம் . இந்நூலை சென்னை கற்பகம் புத்தகாலயம் வெளியிட்டுள்ளார்கள் . பக்கங்கள் 200, விலை 200 ரூபாய். நூலாசிரியர் முனைவர் வெ . இறையன்பு ஐயா அவர்கள் சேலம் மாவட்டத்தில் உள்ள காட்டூரில் பிறந்தவர் . · வணிக மேலாண்மையியல் , ஆங்கில இலக்கியம் , தொழிலாளர் மேலாண்மையியல் , உளவியல் என்று நான்கு துறைகளிலும் முதுகலைப் பட்டம் பெற்றவர் . · வர்த்தக நிர்வாகம் , ஆங்கில இலக்கியம் என்ற இரண்டு துறைகளில் முனைவர் பட்டம் பெற்றவர் . · மேலாண்மையியலில் முதுமுனைவர் பட்டம் பெற்றவர் . பல்வேறு அரசுத் து...
திருக்குறளில் எனது சிறு முயற்சியாக… . " பொய்யில் புலவன் பொய்யா மொழிகள்" என்ற இத்தலைப்பில் அமைந்த 133 வரிகள் கொண்ட இப்படைப்பு முருகனின் ” கந்த சஷ்டி கவசம் ” போன்று உருவாக்கப்பட்டது. இப்பகுதி அறத்துப்பால் 38 அதிகாரங்கள், பொருட்பால் 70 அதிகாரங்களிலிருந்து மட்டும் சுருங்கச் சொல்லி விளங்க வைத்தல் என்ற முறையில், திருக்குறளின் சாராக அமைத்து வழங்கியுள்ளேன். அறமும், பொருளும் ஒருவருக்கு அமைந்தால் இன்பம் தானாகக் கிட்டும் என்ற நோக்கத்தில் அமைக்கப்பட்டது. ”பொய்யில் புலவன் பொய்யா மொழிகள்” காக்க காக்க அறத்தைக் காக்க (1) காக்க காக்கக் குறளைக் காக்க உலக மொழிகளில் ஒப்பற்ற நூலாம், நோக்க நோக்க பெயா்த்து நோக்க மனிதன் கற்று மனிதம் காக்க ஐம்பொறி உணா்வை காக்க காக்க புகழுடன் வாழ ஒழுக்கம் காக்க அறநெறி வாழ்வை இறைவழி காக்க வானம் பொய்யா வளத்தைக் காக்க பசிப்பிணி யில்லா உலகைக் காக்க பற்றற்ற வாழ்வை பரிவுடன் காக்க அறத்தைக் காக்க அன்பைக் காக்க (2) குறையிலா வாழ்வை குணமுடன் காக்க இல்லற வாழ்வுடன் நல்லறம் காக்க பண்பொடு பயனும் அறத்துடன் காக்க வாழ்க வாழ்க வளமுடன் வாழ்க வாழ்க வாழ்க...
Comments
Post a Comment