என் எண்ணச் சிதறல்கள்! (2) Linkedin எனும் தளத்தில் என்னுடைய எண்ண ங்களைக் கடந்த சில மாதங்களாக க் கவிதைக ளாக வெளியிட்டு வ ருகிறேன். அந்தக் கவிதைகளை அனைத்தையும் தொகுத்து இப்பகுதியில் வெளியிட்டுள்ளேன் . 1. சேவை! தேவை! முகம் பார்த்து செய்வது சேவை! அகம் பார்த்து செய்வது தேவை! 2. சோதனை! சாதனை! சங்கடம் இல்லாத சோதனை இல்லை! சவால் இல்லாத சாதனை இல்லை! 3. புத்தகத்தின் பலன்களாக! நம் வாழ்நாளில் படிக்கும் புத்தகங்கள் சில கிலோ எடைதான் பலன் ? பல டன்களாக இருக்கும்! 4. ஆலோசனை! பலரிடம் ஆலோசனை கேட்கலாம்-முடிவு உனதாக இருக்க வேண்டும்! 5. மெளனம்! மெளனம் - என்பது பேச்சில்லாமல் இருப்பது என்பதல்ல! நினைவுகள் -என்ற சப்தம் இல்லாமல் இருப்பது! 6. அனுபவப் பாடம்! நம் வாழ்க்கை அனுபவத்தில் கற்றுக் கொள்வதை விட அடுத்தவர்களின் வாழ்க்கை அனுபவத்தைப் பாடமாக நெறிப்படுத்திக் கொள்பவனே சா...
எடிசன்
தாமஸ் ஆல்வா எடிசன் காது கேளாதவர். பல முறை
ஆராய்ச்சியில் ஈடுபட்டிருக்கும் பொழுது அவர் கவனம் முழுவதும் கண்டுபிடிக்க வேண்டிய
பொருளின் மீதே இருந்தது. ஒரு நாள் நண்பர் ஒருவர், ”எடிசன் உங்களுக்கு காது கேட்கவில்லை.
இந்தக் குறைபாடு உங்களை எந்த அளவு பாதித்துள்ளது? என்றார். அதற்கு அவர், ”எனக்கு காது
கேட்கவில்லை என்பதற்காக நான் வருத்தப்படவில்லை. அது எனக்குப் பல வகையில் உதவியாக உள்ளது.
நான் ஆராய்ச்சியின் மீதே என் மனதைச் செலுத்தும் போது யார் கூப்பிட்டாலும் எனக்குக்
காது கேட்காது. என் எண்ணம் சிதறாமல் இருக்க அது உதவுகிறது” என்றார்.
பார்வை நூல்
1.
ப்ரியா பாலு
– அறிஞர்கள் வாழ்வில் நகைச்சுவை, வானவில் புத்தகாலயம், சென்னை – 600 017.
Comments
Post a Comment