இலக்கியங்களில் பொங்கல் திருநாள்! பொங்கல் திருநாளாம் இன்று நாம் அனைவரும் , ” உழுதுண்டு வாழும் தொழிலைக் காத்து உயர்வைக் கொடுக்கும் செல்வம் பெற்று உயிரினும் மேலான ஒழுக்கம் கொண்டு பாரோர் போற்றும் பண்பு பெற்று இடும்பை இல்லா இன்பம் போற்றி நிறைவான வாழ்வை நிலைபெற்று வாழ்வோம் ” என்ற வாழ்த்துக்களுடன் , நம் முன்னோர்கள் பொங்கல் திருநாளை எவ்வாறு கொண்டாடினார்கள் என்பதை இலக்கியங்கள் வாயிலாக நினைவுக் கூர்வோம் . இயற்கையை வணங்குதல் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் சொல்லாலும் பொருளாலும் சுவை மிகுந்த இலக்கியங்களைக் கொண்டு செந்தமிழ் மொழியைப் பேசிய மக்கள் ஈடு இணையற்ற பண்பாட்டுக்குச் சொந்தக்காரர்கள் . அவர்கள் , · அறிவியல் முதிர்ச்சியால் உலகத்திற்கே வழிகாட்டியவர்கள் , · விண்ணையும் , மண்ணையும் ஆராய்ந்து வியப்புமிக்க நூல்களை உருவாக்கியவர்கள் , · வானிலைக் கணக்கீட்டு வல்லமையால் கோள்களின் அசைவுகளைக் குறியீடு செய்தவர்கள். · நட்சத்திரங்களைய...
எடிசன்
தாமஸ் ஆல்வா எடிசன் காது கேளாதவர். பல முறை
ஆராய்ச்சியில் ஈடுபட்டிருக்கும் பொழுது அவர் கவனம் முழுவதும் கண்டுபிடிக்க வேண்டிய
பொருளின் மீதே இருந்தது. ஒரு நாள் நண்பர் ஒருவர், ”எடிசன் உங்களுக்கு காது கேட்கவில்லை.
இந்தக் குறைபாடு உங்களை எந்த அளவு பாதித்துள்ளது? என்றார். அதற்கு அவர், ”எனக்கு காது
கேட்கவில்லை என்பதற்காக நான் வருத்தப்படவில்லை. அது எனக்குப் பல வகையில் உதவியாக உள்ளது.
நான் ஆராய்ச்சியின் மீதே என் மனதைச் செலுத்தும் போது யார் கூப்பிட்டாலும் எனக்குக்
காது கேட்காது. என் எண்ணம் சிதறாமல் இருக்க அது உதவுகிறது” என்றார்.
பார்வை நூல்
1.
ப்ரியா பாலு
– அறிஞர்கள் வாழ்வில் நகைச்சுவை, வானவில் புத்தகாலயம், சென்னை – 600 017.
Comments
Post a Comment