சேலம் மகிழம் தமிழ்ச் சங்கத்தில் நூல் வெளியீட்டு நிகழ்வாக... சேலம் , மகிழம் தமிழ்ச் சங்கம் மற்றும் டுடே பன்னாட்டு ஆய்விதழ் இணைந்து உலக தாய்மொழி தினம் - 2026 ஐ முன்னிட்டு சேலம் , செளடேஸ்வரி மகளிர் கல்லூரியில் முப்பெரும் விழா ( 29.03.2026) இன்று நடந்தது. இவ் விழாவில் என்னுடைய நாட்டுப்புற இலக்கியங்களில் பண்பாட்டுக் கலைகள் எனும் புத்தகமும் , மக்கள் தகவல் தொடர்பு சாதனங்களில் தமிழ் எனும் ஆய்வுக் கட்டுரையும் வெளியானது. மகிழம் தமிழ்ச் சங்கத்தின் தலைவர் முனைவர் கற்பகராமன் அவர்கள் சோனா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தமிழ்த்துறையில் உதவிப் பேராசிரியராகப் பணியாற்றி வருகிறார். இவ்விழாவினை மிகவும் சிறப்பாக நடத்தினார்கள். நாங்கள் விழா முடிந்து வீட்டிற்கு வந்தவுடன் 7 மணிக்கு அனைத்துப் புகைப்படங்களையும் எங்களுக்கு அனுப்பி வைத்தார்கள். மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. புத்தக வெளியீட்டு நிகழ்வு புத்தக வெளியீட்டு விழாவிற்கு இன்ற...
எடிசன்
தாமஸ் ஆல்வா எடிசன் காது கேளாதவர். பல முறை
ஆராய்ச்சியில் ஈடுபட்டிருக்கும் பொழுது அவர் கவனம் முழுவதும் கண்டுபிடிக்க வேண்டிய
பொருளின் மீதே இருந்தது. ஒரு நாள் நண்பர் ஒருவர், ”எடிசன் உங்களுக்கு காது கேட்கவில்லை.
இந்தக் குறைபாடு உங்களை எந்த அளவு பாதித்துள்ளது? என்றார். அதற்கு அவர், ”எனக்கு காது
கேட்கவில்லை என்பதற்காக நான் வருத்தப்படவில்லை. அது எனக்குப் பல வகையில் உதவியாக உள்ளது.
நான் ஆராய்ச்சியின் மீதே என் மனதைச் செலுத்தும் போது யார் கூப்பிட்டாலும் எனக்குக்
காது கேட்காது. என் எண்ணம் சிதறாமல் இருக்க அது உதவுகிறது” என்றார்.
பார்வை நூல்
1.
ப்ரியா பாலு
– அறிஞர்கள் வாழ்வில் நகைச்சுவை, வானவில் புத்தகாலயம், சென்னை – 600 017.
Comments
Post a Comment