Skip to main content

சிந்திக்காததால் கேடு

 

சிந்திக்காததால் கேடு


          ‘நாத்திகன்’ என்றால் ஞானி. அறிவாளி என்றுதான் பெயர். கடவுள் இல்லை என்பவர் என்பது பொருள் அல்ல. ஞானி என்றால் முனிவர் என்பது அல்ல – ஞானம் உடையவன்; அறிவு உடையவன் என்பது பொருள். எவன் ஒருவன் அறிவை உபயோகப் படுத்துகிறானோ – எவன் ஒருவன் அறிவு கொண்டு எதையும் விவகாரம் பண்ணுகிறானோ அவன் நாத்திகன் என்று கூறப்படுகிறான்.

     ‘ஆத்திகன்’ என்றால் அறிவில் நம்பிக்கை வைக்காமல் – சாஸ்திரம், புராணங்கள் முதலியவைகளை அப்படியே ஒப்புக் கொண்டு, ஆராயாமல் நடப்பவன் என்று பொருள்.

          தோழர்களே! இராமாயணத்திலேயே ஓர் இடத்தில் நாத்திகனைப் பற்றிக் குறிப்பிடும்போது, ‘எவன் ஒருவன் நீதியில் நம்பிக்கை வைத்து நடக்கின்றானோ அவன் நாத்திகன்’ என்று குறிக்கப்பட்டுள்ளது. அப்படி அறிவில் நம்பிக்கை வைத்து நடக்க வேண்டும் என்று சொன்னவர்கள் எல்லாம் ஒழிக்கப்பட்டே இருக்கின்றனர். அதன் காரணமாகவே இந்தத் துறையில் இறங்கிப் பாடுபட முன்வருவதில்லை.

          2500 ஆண்டுகளுக்கு முன் புத்தர் தோன்றிப் பாடுபட்டார். ‘உன் அறிவு என்ன சொன்னதோ அதன்படி நட; முன்னோர்கள் – பெரியவர்கள் சொன்னார்கள், வெகு காலத்துக்கு முன் சொல்லப்பட்ட கருத்தாயிற்றே என்று நம்பாதே! மோட்சம், நரகம் என்பது எல்லாம் பித்தலாட்டம்’ என்று எடுத்துக்காட்டி விளக்கினார். அவருடைய இயக்கம் காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை பரவி இருந்தது என்றாலும், புத்தருக்குப் பிறகு அது ஒழிக்கப்பட்டு, சின்னாபின்ன மாக்கப்பட்டுவிட்டது. பிறகு யாரும் வரவில்லை. நாங்கள்தான் பாடுபடுகின்றோம்.

          மாணவர்களாகிய நீங்கள் நல்ல வாழ்வில் நம்பிக்கை வைக்கவேண்டும். அறிவில் நம்பிக்கை வைத்து ஒழுக வேண்டும்.      

                     (மதுரை தியாகராயர் கல்லூரியல், 13-3-1961 ல் சொற்பொழிவு,

                     ‘விடுதலை’ 4-4-1961)

பார்வை நூல்

1. கல்விச் சிந்தனைகள் பெரியார் - தொகுப்பு அ.மார்க்ஸ், மூன்றாம் பதிப்பு - சனவரி 2013, பாரதி புத்தகாலயத்தின் ஓர் அங்கம், 421, அண்ணாசாலை, சென்னை - 600 018.

Comments

Popular posts from this blog

எண்ணம் போல் வாழ்வு

                                                                        எண்ணம் போல் வாழ்வு             நினைவுகளே பழக்கவழக்கங்களாக மாறுகின்றன. எனவே தான் எண்ணம் போல் வாழ்வு அனைவருக்கும் அமைகிறது. வெற்றி பெற்ற அனைவரும் பிறரைத் தன் நடத்தையால் மகிழ்விக்க நினைத்தவர்களே என்பதை நாம் நினைவில் நிறுத்த வேண்டும். ·         வங்கியில் பணத்தைச் சேமிப்பதைவிட இதயத்தில் இனிய எண்ணங்களைச் சேமிப்பது மகிழ்ச்சியான வாழ்விற்கு உதவும் வைப்பு நிதியாகும். ·      மனம் - மகிழ்ச்சி அளிக்காத நிகழ்வுகளை மறந்து விடும் இயல்புடையது. ·         வெறுப்பு - மனத்தையும், உணர்வையும் பற்றிக் கொண்டுள்ள தொற்று நோய். எனவே வெறுப்பிற்கு விடுதலை தரும்வரை மகிழ்ச்சி நம்மை அணுகாது. ·   ...

பொய்யில் புலவன் பொய்யா மொழிகள்

திருக்குறளில் எனது சிறு முயற்சியாக… .  " பொய்யில் புலவன் பொய்யா மொழிகள்"  என்ற இத்தலைப்பில் அமைந்த 133 வரிகள் கொண்ட இப்படைப்பு முருகனின் ” கந்த சஷ்டி  கவசம் ” போன்று உருவாக்கப்பட்டது. இப்பகுதி அறத்துப்பால் 38  அதிகாரங்கள், பொருட்பால் 70  அதிகாரங்களிலிருந்து மட்டும் சுருங்கச் சொல்லி விளங்க வைத்தல் என்ற முறையில், திருக்குறளின் சாராக அமைத்து வழங்கியுள்ளேன். அறமும், பொருளும் ஒருவருக்கு அமைந்தால் இன்பம் தானாகக் கிட்டும் என்ற நோக்கத்தில் அமைக்கப்பட்டது. ”பொய்யில் புலவன் பொய்யா மொழிகள்” காக்க காக்க அறத்தைக் காக்க (1) காக்க காக்கக் குறளைக் காக்க உலக மொழிகளில் ஒப்பற்ற நூலாம், நோக்க நோக்க பெயா்த்து நோக்க மனிதன் கற்று மனிதம் காக்க ஐம்பொறி உணா்வை காக்க காக்க புகழுடன் வாழ ஒழுக்கம் காக்க அறநெறி வாழ்வை இறைவழி காக்க வானம் பொய்யா வளத்தைக் காக்க பசிப்பிணி யில்லா உலகைக் காக்க பற்றற்ற வாழ்வை பரிவுடன் காக்க அறத்தைக் காக்க அன்பைக் காக்க (2) குறையிலா வாழ்வை குணமுடன் காக்க இல்லற வாழ்வுடன் நல்லறம் காக்க பண்பொடு பயனும் அறத்துடன் காக்க வாழ்க வாழ்க வளமுடன் வாழ்க வாழ்க வாழ்க...

மனிதனாக வாழ ...

  மனிதனாக வாழ ... ·         பிறர் உன்னை தூற்றும் பொழுது தலை நிமிர்ந்து நில். ·         பொறாமை, கோபம், வீண் மயக்கம் போன்ற குணங்களை விரோதிகளாக எண்ணுதல். ·         வெற்றி -   தோல்வி,   இன்பம் – துன்பம் இரண்டையும் சமமாக பாவித்தல். ·         உண்மைக்குப் புறம்பானவற்றைச் செய்யாதிருத்தல். ·         நண்பர்கள் இல்லையென்றாலும் பரவாயில்லை. பகைவர்கள் இல்லாமல் வாழ முயற்சி செய்தல். ·         மனத்திடத்தோடு வாழ்தல். ·         ஏற்றத் தாழ்வு இல்லா மனநிலையுடன் இருத்தல். ·         மனிதனுக்கு உரியது - கலங்காத அறிவு, அன்பு நிறைந்த மனம், ஆரோக்கியமான   உடல். ·         எதற்கும் அஞ்சாதே -   பயம் நம்மை கோழையாக்கி விடும்.      யாரையும் வெறுக்காதே ...