Skip to main content

இரத்தம் தூய்மையாக ...

 

இரத்தம் தூய்மையாக ...


  உடல் தூய்மைக்கும் நீண்ட ஆயுளுக்கும் ரத்தம் இன்றியமையாதது. ரத்தம் தூய்மையாக இல்லாமல்  உடல் உறுப்புகள் தூய்மையாக இருந்தாலும் பயனில்லை. இப்போது மருத்துவ வளர்ச்சியின் காரணத்தினால், இரத்த மாற்றுச் சிகிச்சையும் நடைபெறுகிறது. அத்தகைய இடர்பாட்டுக்கெல்லாம் இடந்தராமல், ரத்தத்தைத் தூய்மையாக வைத்துக் கொள்ள வேண்டியது நம் கடமையாகும்.

      உடலில் நோய் உண்டானால், அந்நோய் ரத்தத்தைப் பாதிக்கிறது. அதனால், ரத்தத்தைச் சோதித்து உடலில் தோன்றிய நோய்களை அறிகிறார்கள். எனவே, ரத்தத்தின் தூய்மைக்கும் உடல் தூய்மைக்கும் தொடர்பு இருக்கிறது. ரத்தத்தில் தோன்றிய நோய்க்கிருமிகளை அழிப்பதே மருத்துவத்தின் தலையாயப் பணியாக இருந்து வருகிறது. உடலில் நோய் இருந்தால் துர்நாற்றம் வீசும். தோலில் நிற மாற்றம் தோன்றும். இம்மாற்றத்திற்குக் காரணம் இரத்தத்தில் இருக்கும் நோய்க்கிருமிகளாகும்.

          இரத்தத்தைத் தூய்மை செய்ய ஆயிரக்கணக்கில் லட்சக் கணக்காக செலவு செய்ய வேண்டிய அவசியமில்லை. ஆடுகளும் மாடுகளும் தின்னக்கூடிய தாவரங்கள் இரத்தத்தைத் தூய்மை செய்து விடும்.

       கரிசாலை, குப்பைமேனி, கரந்தை, வல்லாரை, நீலி, பொற்றலை, செருப்படை ஆகியவற்றை நிழலில் உலர்த்தி இடித்துச் சூரணம் செய்து வெருகடி அளவு தினமும் தேனில் ஒரு மண்டலம் உண்டு வந்தால் உடலில் உள்ள நோய்கள் எல்லாம் போய் ரத்தம் தூய்மையாகும். நோய் கிருமிகள் அழிந்து விடும். கண்ணின் பார்வையும் கூர்மையாகும்.

பார்வை நூல்

1.   வாசுதேவன். இர, - உடல் நலம் காக்கும் இயற்கை மருத்துவம், New Horizon media Pvt.Ltd., Alwarpet, Chennai – 600 018, june, 2008.

---

 

Comments

Popular posts from this blog

எண்ணம் போல் வாழ்வு

                                                                        எண்ணம் போல் வாழ்வு             நினைவுகளே பழக்கவழக்கங்களாக மாறுகின்றன. எனவே தான் எண்ணம் போல் வாழ்வு அனைவருக்கும் அமைகிறது. வெற்றி பெற்ற அனைவரும் பிறரைத் தன் நடத்தையால் மகிழ்விக்க நினைத்தவர்களே என்பதை நாம் நினைவில் நிறுத்த வேண்டும். ·         வங்கியில் பணத்தைச் சேமிப்பதைவிட இதயத்தில் இனிய எண்ணங்களைச் சேமிப்பது மகிழ்ச்சியான வாழ்விற்கு உதவும் வைப்பு நிதியாகும். ·      மனம் - மகிழ்ச்சி அளிக்காத நிகழ்வுகளை மறந்து விடும் இயல்புடையது. ·         வெறுப்பு - மனத்தையும், உணர்வையும் பற்றிக் கொண்டுள்ள தொற்று நோய். எனவே வெறுப்பிற்கு விடுதலை தரும்வரை மகிழ்ச்சி நம்மை அணுகாது. ·   ...

பொய்யில் புலவன் பொய்யா மொழிகள்

திருக்குறளில் எனது சிறு முயற்சியாக… .  " பொய்யில் புலவன் பொய்யா மொழிகள்"  என்ற இத்தலைப்பில் அமைந்த 133 வரிகள் கொண்ட இப்படைப்பு முருகனின் ” கந்த சஷ்டி  கவசம் ” போன்று உருவாக்கப்பட்டது. இப்பகுதி அறத்துப்பால் 38  அதிகாரங்கள், பொருட்பால் 70  அதிகாரங்களிலிருந்து மட்டும் சுருங்கச் சொல்லி விளங்க வைத்தல் என்ற முறையில், திருக்குறளின் சாராக அமைத்து வழங்கியுள்ளேன். அறமும், பொருளும் ஒருவருக்கு அமைந்தால் இன்பம் தானாகக் கிட்டும் என்ற நோக்கத்தில் அமைக்கப்பட்டது. ”பொய்யில் புலவன் பொய்யா மொழிகள்” காக்க காக்க அறத்தைக் காக்க (1) காக்க காக்கக் குறளைக் காக்க உலக மொழிகளில் ஒப்பற்ற நூலாம், நோக்க நோக்க பெயா்த்து நோக்க மனிதன் கற்று மனிதம் காக்க ஐம்பொறி உணா்வை காக்க காக்க புகழுடன் வாழ ஒழுக்கம் காக்க அறநெறி வாழ்வை இறைவழி காக்க வானம் பொய்யா வளத்தைக் காக்க பசிப்பிணி யில்லா உலகைக் காக்க பற்றற்ற வாழ்வை பரிவுடன் காக்க அறத்தைக் காக்க அன்பைக் காக்க (2) குறையிலா வாழ்வை குணமுடன் காக்க இல்லற வாழ்வுடன் நல்லறம் காக்க பண்பொடு பயனும் அறத்துடன் காக்க வாழ்க வாழ்க வளமுடன் வாழ்க வாழ்க வாழ்க...

மனிதனாக வாழ ...

  மனிதனாக வாழ ... ·         பிறர் உன்னை தூற்றும் பொழுது தலை நிமிர்ந்து நில். ·         பொறாமை, கோபம், வீண் மயக்கம் போன்ற குணங்களை விரோதிகளாக எண்ணுதல். ·         வெற்றி -   தோல்வி,   இன்பம் – துன்பம் இரண்டையும் சமமாக பாவித்தல். ·         உண்மைக்குப் புறம்பானவற்றைச் செய்யாதிருத்தல். ·         நண்பர்கள் இல்லையென்றாலும் பரவாயில்லை. பகைவர்கள் இல்லாமல் வாழ முயற்சி செய்தல். ·         மனத்திடத்தோடு வாழ்தல். ·         ஏற்றத் தாழ்வு இல்லா மனநிலையுடன் இருத்தல். ·         மனிதனுக்கு உரியது - கலங்காத அறிவு, அன்பு நிறைந்த மனம், ஆரோக்கியமான   உடல். ·         எதற்கும் அஞ்சாதே -   பயம் நம்மை கோழையாக்கி விடும்.      யாரையும் வெறுக்காதே ...