Skip to main content

வாழ்க்கையின் வெற்றியில் தன்னம்பிக்கை (புத்தக மதிப்புரை)

  வாழ்க்கையின் வெற்றியில் தன்னம்பிக்கை ( புத்தக மதிப்புரை )               புத்தக மதிப்புரையில் முனைவர் சி . இலட்சுமணன் அவர்கள் எழுதிய ‘ வாழ்க்கையின் வெற்றியில் தன்னம்பிக்கை ’ என்ற   புத்தகத்தைப் பார்ப்போம் . இந்நூல்   2023 - ஆம் ஆண்டு ,   குமரி மாவட்டம் , தமிழ்ச் செம்மொழி வரலாற்று ஆய்வு மையம் வெளியிட்டுள்ளார்கள். பக்கங்கள் 205,   விலை 1 50 ரூபாய்.             முனைவர் சி . இலட்சுமணன் அவர்கள் , தமிழ்ச் செம்மொழி வரலாற்று ஆய்வு மையத்தின் விடிவெள்ளி ; சுயமுன்னேற்றத்திற்கான நூல்களை எழுதி வருகின்ற சமுதாயச் சிற்பி ; தமிழாய்வுக் களஞ்சியம் என்னும் இதழின் ஆசிரியராக இருந்து சிறப்புடன் நடத்தி வருகிறார் . பத்துக்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார் .             நூலாசிரியர் அவர்கள் தமிழ்ப் பல்கலைக் கழகத்தில் ஓலைச் சுவடித் துறையின் தலைவராக ,   பணியாற்றிய பொழுது பல்வேறு ஊர்களுக்குப் பயணம் ...

சிரிப்பின் மகத்துவம்!

சிரிப்பின் மகத்துவம்!


          ஒருவரின் மனநிலைக்கும் மகிழ்ச்சிக்கும் நெருங்கிய தொடர்பு இருக்கிறது. மனதின் மகிழ்ச்சி குறையக்குறைய உடல்நலமும் மனநலமும் பாதிக்கத் தொடங்கும். வாழ்க்கையில் நிகழும் நிகழ்ச்சிகள் ஒவ்வொன்றும் மகிழ்ச்சியை அல்லது துன்பத்தைத் தரக் கூடியவையாக அமையும். நாம்தான் மனத்தை பாதிக்காதவாறு அவற்றிலிருந்து விடுபட வேண்டும்.

          ஒரு தொழிலில் லாபம் ஈட்ட வேண்டும் என்பதற்காகச் சில உத்திகளைக் கையாண்டு வெற்றிப் பெறுவதைப் போல, வாழ்க்கையில் இன்பம் உண்டாகவும் சில உத்திகள் இருக்கின்றன. அவற்றைப் பயன்படுத்த முன் வந்தால், வாழ்வே மகிழ்ச்சிதான்! செய்யும் செயல்கள் சீராகவும், உடலும் மனமும் வளமாகவும் கவலைகள் நீங்க வாழ்க்கை உத்திகள் வகை செய்யும்.

          மனத்தின் இயல்பு எது எளிதாக இருக்கிறதோ அதை நாடிச் செல்வது. ஒன்று திருப்தி, மற்றொன்று பேராசை. இந்த இரண்டும் மனதின் இரண்டு பக்கங்கள். இதனை பெறுவதற்காக நாம் கடுமையாக உழைப்போம். அதனால் மனத்தில் இயல்பு மாறி மனஇறுக்கம், மனச்சோர்வு, மன உளைச்சல், மனப்புழுக்கம் போன்றவை தோன்றும். இவை அனைத்தையும் மாற்று மருந்தாக பயன்படுவது சிரிப்பு. சிரிப்புக்கு விலைக் கிடையாது. ‘வாய் விட்டு சிரித்தால் நோய் விட்டுப் போகும்!’ என்றால் அதனை நாம் செய்ய வேண்டும்.

சிரிப்புகளின் வகைகள்

·        நமட்டுச் சிரிப்பு

·        வெடிச் சிரிப்பு

·        புன் சிரிப்பு

·        கபடச் சிரிப்பு

·        அசட்டுச் சிரிப்பு

·        ஆணவச் சிரிப்பு

·        அகந்தைச் சிரிப்பு

·        கள்ளச் சிரிப்பு

·        காதல் சிரிப்பு

என்று கூறப்பட்டாலும் மகிழ்ச்சிக்காகச் சிரிக்கும் சிரிப்பே சிரிப்பு. நகைச் சிரிப்புக்காகவும், பிறரைக் கேலி செய்வதற்காகவும் சிரிப்புப் பயன்படுகிறது. சிலரது நகைச் சுவை, சிந்தனையைத் தூண்டுவதாகவும், அறிவுக்கு விருந்தாகவும் அமையும். நகைச் சுவையினால் ஏற்படக் கூடிய சிரிப்பு மனதுக்கு ஊட்டமாக அமைகிறது. மனத்தின் சுமையைக் குறைக்கிறது. உடலுக்கு ஆரோக்கியத்தை, புத்துணர்ச்சியைத் தருகிறது.

         சிரிக்க சிரிக்க மலரும் தாமரை போல், மனம் வீசத் தொடங்குகிறது. மனதுக்கு இருக்கும் ஒரே மருந்து சிரிப்பு மட்டும் தான். அந்தச் சிரிப்பு மருந்து கசப்போ, புளிப்போ, கார்ப்போ, துவர்ப்போ இல்லை. சிரிப்புக்கு என்றிருப்பதும் ஒரே சுவை. அது இனிப்பு. நமக்கு இனிப்பு பிடிக்கும் போது சிரிப்பு பிடிக்காமல் இருக்குமா? சிரியுங்கள்.

          மருந்துகளை ஆராய்ச்சி செய்த ஆராய்ச்சியாளர்கள், மருந்துக்ளுக்கெல்லாம் மருந்தாக இருப்பது சிரிப்பு மருந்து என்று கூறியுள்ளார்கள். சிரிப்பு என்னும் மருந்து நோய்களை விரைவாகக் குணப்படுத்துகிறது. நோய்களைப் போக்கவும் மீண்டும் அவை வராமலிருக்கவும் நோய் எதிர்ப்புச் சக்தியை உடலுக்குத் தருகிறது.

          உடம்பிலுள்ள நரம்புகள் ஒரு வகையான இரசாயனத்தை வெளியிட்டுக் கொண்டிருக்கின்றன. அதற்கு CGRP என்று பெயரிட்டுள்ளார்கள். இது உடம்பிலுள்ள நோயெதிர்ப்புச் சக்தியாகச் செயல்படுகின்ற செல்களை ஊக்குவிக்கிறது. மனதில் உண்டாகும் சிரிப்பினால் நரம்புகள் அதிர்கின்றன. மேலும் நாம் சிரிக்கும் போது மூக்கிலுள்ள சளியில் இம்யூனோகுறோபுலின்- ஏ என்னும் நோய் எதிர்ப்புப் பொருள் அதிகரிக்கிறது. அதனால் பாக்டீரியா, வைரஸ், புற்றுநோய் திசுக்கள் உடலுக்குள் சென்று விடாதபடி தடுக்கிறது.

          கொழுப்பின் மிகுதியினால் மாரடைப்பு என்னும் நோய் மரணத்தைத் தருவதாக இருக்கிறது. அவ்வாறு ஏற்படாதிருக்க நாள் தோறும் குறைந்தது ஒரு மணி நேரமாவது சிரித்துப் பழக வேண்டும். மேலும் வெள்ளை அணுக்களுக்கு மிகவும் விருப்பமானது சிரிப்பு. சிரிப்பைக் கேட்டால் வெள்ளை அணுக்கள் அதிக அளவில் உற்பத்தியாகின்றன.

·        சிரிப்பினால் இரத்தம் தூய்மையாகிறது.

·        ரத்த அழுத்தம் குறைகிறது.

·        நுரையீரல் நன்கு செயல்படுகிறது.

·        ‘என்சிபேலின்ஸ்’ என்னும் ஹார்மோன் சுரக்கிறது. அதனால் தசைகளில் ஏற்படும் வலிகளை நீக்குகிறது.

·        ஸெப்டிக் அல்சர் என்னும் இரைப்பைப் புண் குணமாகிறது.

நகைச்சுவையினால் நண்பர்கள் வட்டம் அதிகமாகிறது. உறவு பலமாக இருக்கும். புன்னகை என்பது ஆன்மாவின் உருவம். கண்ணுக்குத் தெரியாமல் உள்ளுக்குள் இருக்கும் ஆன்மா. தனது அழகை வெளிப்படுத்தும் போது புன்னகை தோன்றுகிறது. நம்பினால் சிரியுங்கள். பிறரது சிரிப்பிலும் மகிழுங்கள்.

பார்வை நூல்

1.   வாசுதேவன். இர, - உடல் நலம் காக்கும் இயற்கை மருத்துவம், New Horizon media Pvt.Ltd., Alwarpet, Chennai – 600 018, june, 2008.

 

  

Comments

Popular posts from this blog

பொய்யில் புலவன் பொய்யா மொழிகள்

திருக்குறளில் எனது சிறு முயற்சியாக… .  " பொய்யில் புலவன் பொய்யா மொழிகள்"  என்ற இத்தலைப்பில் அமைந்த 133 வரிகள் கொண்ட இப்படைப்பு முருகனின் ” கந்த சஷ்டி  கவசம் ” போன்று உருவாக்கப்பட்டது. இப்பகுதி அறத்துப்பால் 38  அதிகாரங்கள், பொருட்பால் 70  அதிகாரங்களிலிருந்து மட்டும் சுருங்கச் சொல்லி விளங்க வைத்தல் என்ற முறையில், திருக்குறளின் சாராக அமைத்து வழங்கியுள்ளேன். அறமும், பொருளும் ஒருவருக்கு அமைந்தால் இன்பம் தானாகக் கிட்டும் என்ற நோக்கத்தில் அமைக்கப்பட்டது. ”பொய்யில் புலவன் பொய்யா மொழிகள்” காக்க காக்க அறத்தைக் காக்க (1) காக்க காக்கக் குறளைக் காக்க உலக மொழிகளில் ஒப்பற்ற நூலாம், நோக்க நோக்க பெயா்த்து நோக்க மனிதன் கற்று மனிதம் காக்க ஐம்பொறி உணா்வை காக்க காக்க புகழுடன் வாழ ஒழுக்கம் காக்க அறநெறி வாழ்வை இறைவழி காக்க வானம் பொய்யா வளத்தைக் காக்க பசிப்பிணி யில்லா உலகைக் காக்க பற்றற்ற வாழ்வை பரிவுடன் காக்க அறத்தைக் காக்க அன்பைக் காக்க (2) குறையிலா வாழ்வை குணமுடன் காக்க இல்லற வாழ்வுடன் நல்லறம் காக்க பண்பொடு பயனும் அறத்துடன் காக்க வாழ்க வாழ்க வளமுடன் வாழ்க வாழ்க வாழ்க...

எண்ணம் போல் வாழ்வு

                                   எண்ணம் போல் வாழ்வு   நினைவுகளே பழக்கவழக்கங்களாக மாறுகின்றன. எனவே தான் எண்ணம் போல் வாழ்வு அனைவருக்கும் அமைகிறது. வெற்றி பெற்ற அனைவரும் பிறரைத் தன் நடத்தையால் மகிழ்விக்க நினைத்தவர்களே என்பதை நாம் நினைவில் நிறுத்த வேண்டும். ·         வங்கியில் பணத்தைச் சேமிப்பதைவிட இதயத்தில் இனிய எண்ணங்களைச் சேமிப்பது மகிழ்ச்சியான வாழ்விற்கு உதவும் வைப்பு நிதியாகும். ·                    மனம் - மகிழ்ச்சி அளிக்காத நிகழ்வுகளை மறந்து விடும் இயல்புடையது. ·                      வெறுப்பு - மனத்தையும், உணர்வையும் பற்றிக் கொண்டுள்ள தொற்று நோய். எனவே வெறுப்பிற்கு விடுதலை தரும்வரை மகிழ்ச்சி நம்மை அணுகாது. ·         கடமையைச் செய்யுங்கள், மகிழ்ச்சியை அறுவடை செய்யலாம். நன்மை, தீமை என்று எது நடந்...

கோப்பெருஞ்சோழன் – பிசிராந்தையார் நட்பு

  கோப்பெருஞ்சோழன் – பிசிராந்தையார் நட்பு   வடக்கிருத்தல் தமிழரின் நம்பிக்கை சார்ந்த பழக்கவழக்கங்களில் வடக்கிருத்தலை ஆடவர் மேற்கொண்டனர். ஊருக்கு வடபால் ஓரிடத்தில் வடக்குத் திசை நோக்கி அமர்ந்த வண்ணம் உண்ணாநோன்பிருந்து உயிர்த்துறப்பதை ‘ வடக்கிருத்தல் ’ எனக் கொண்டனர். வடக்கிருக்க அடிப்படைக் காரணியாக அமைவன மானம் , வீரம் , நட்பு , தன்நோக்கம் நிறைவேறாமை எனலாம். வீரர் , புலவர் , மன்னர் ஆகியோர் வடக்கிருந்தமையை இலக்கியங்கள் வாயிலாக அறிய முடிகிறது. அவ்வாறு உயிர் துறப்பவர் துறக்கம் பெறுவர் என நம்பினர்.       கலைக்களஞ்சியம் , வடக்கிருத்தலை ‘ உத்ரக மனம் ’ என்றும் ‘ மகாப் பிரத்தானம் ’ என்றும் கூறும். ‘ நாணத்தகு நிலை ’ நேர்ந்ததனாற் சிலர் வடக்கிருந்ததாகத் தமிழ் நூல்கள் கூறுகின்றன என்று கூறுகிறது.           கோப்பெருஞ்சோழன் வடக்கிருந்து உயிர் விட்டான். அவன் உயிர்விட்டப் பிறகு அவனை பார்க்காமலே நட்புக் கொண்டிருந்தப் பிசிராந்தையாரும், சோழனுடன் இருந்த பொத்தியார் என்ற புலவரும் அவன் வடக்கிருந்த இடத்தின் அருகில் வடக்கிருந்து உயிர்...