Skip to main content

டால்ஸ்டாய் எழுதிய கதை

 

டால்ஸ்டாய் எழுதிய கதை

மனிதனுக்கு எவ்வளவு நிலம் வேண்டும்?

(How much land does a man require?)

(பேராசை பெரு நஷ்டம் என்பதற்கிணங்க இக்கதை அமைந்துள்ளது. மிகச் சிறந்த கதை)

          பக்கோம் பேராசைக்காரன், ஒரு முறை நிலச் சொந்தக்காரனான பாஷ்கீரைச் சந்தித்தான்.

          ”உங்கள் நிலத்திற்கு என்ன விலை?” என்று கேட்டான்.

          ”காலால் நடந்து ஒரு நாளில் எவ்வளவு நிலத்தைச் சுற்றி வருகிறாயோ, அவ்வளவும் உன்னுடையதுதான்.”

          பக்கோமுக்கு ஒரே மகிழ்ச்சி! கையிலிருந்ததை முன் பணமாகக் கொடுத்து விட்டு ஓட ஆரம்பித்தான்.

          காலையில் சூரியன் உதித்தவுடன் ஓட ஆரம்பித்தவன் தொடர்ந்து ஓடிக் கொண்டே இருந்தான். நண்பகலுக்குப் பிறகு அவனால் ஓட முடியவில்லை. கால்கள் வலித்தன.

          சூரியன் அவனுக்காக காத்திருக்கவில்லை. அது மேற்கு வானில் விரைவாக நகர்ந்து கொண்டே இருந்தது.

          பக்கோமால் ஓட முடியவில்லை. உட்கார்ந்து தரையில் தேய்த்துக் கொண்டே நகர்ந்தாள்.

          கடைசி முறையாக சூரியனைப் பார்த்தான். அது பெரியதாக சிவப்பாகத் தெரிந்தது.

          பக்கோமால் நகரவும் முடியவில்லை. கீழே விழுந்து விட்டான். வாயில் நுரை தள்ளியது. இரத்தமும் வழிந்தது.

          கைகால்கள் துடித்து ஓய்ந்தன.

          பக்கோம் உயிர் பிரிந்து விட்டது. பாஷ்கீரன் அருகில் வந்தான்.

          தன் வேலைக்காரனைக் கூப்பிட்டான். ஆறடி நீளமும் மூன்று அடி அகலமுள்ள ஆழமான குழி தோண்டினான். பக்கோமை அதில் புதைத்தான்!.

பார்வை நூல்

1. தமிழ் வளர்த்த சான்றோர்கள், பிரேமா அரவிந்தன், பாக்கியம் பதிப்பகம், தஞ்சாவூர் - 613 001.

 

 

Comments

Popular posts from this blog

பொய்யில் புலவன் பொய்யா மொழிகள்

திருக்குறளில் எனது சிறு முயற்சியாக… .  " பொய்யில் புலவன் பொய்யா மொழிகள்"  என்ற இத்தலைப்பில் அமைந்த 133 வரிகள் கொண்ட இப்படைப்பு முருகனின் ” கந்த சஷ்டி  கவசம் ” போன்று உருவாக்கப்பட்டது. இப்பகுதி அறத்துப்பால் 38  அதிகாரங்கள், பொருட்பால் 70  அதிகாரங்களிலிருந்து மட்டும் சுருங்கச் சொல்லி விளங்க வைத்தல் என்ற முறையில், திருக்குறளின் சாராக அமைத்து வழங்கியுள்ளேன். அறமும், பொருளும் ஒருவருக்கு அமைந்தால் இன்பம் தானாகக் கிட்டும் என்ற நோக்கத்தில் அமைக்கப்பட்டது. ”பொய்யில் புலவன் பொய்யா மொழிகள்” காக்க காக்க அறத்தைக் காக்க (1) காக்க காக்கக் குறளைக் காக்க உலக மொழிகளில் ஒப்பற்ற நூலாம், நோக்க நோக்க பெயா்த்து நோக்க மனிதன் கற்று மனிதம் காக்க ஐம்பொறி உணா்வை காக்க காக்க புகழுடன் வாழ ஒழுக்கம் காக்க அறநெறி வாழ்வை இறைவழி காக்க வானம் பொய்யா வளத்தைக் காக்க பசிப்பிணி யில்லா உலகைக் காக்க பற்றற்ற வாழ்வை பரிவுடன் காக்க அறத்தைக் காக்க அன்பைக் காக்க (2) குறையிலா வாழ்வை குணமுடன் காக்க இல்லற வாழ்வுடன் நல்லறம் காக்க பண்பொடு பயனும் அறத்துடன் காக்க வாழ்க வாழ்க வளமுடன் வாழ்க வாழ்க வாழ்க...

எண்ணம் போல் வாழ்வு

                                   எண்ணம் போல் வாழ்வு   நினைவுகளே பழக்கவழக்கங்களாக மாறுகின்றன. எனவே தான் எண்ணம் போல் வாழ்வு அனைவருக்கும் அமைகிறது. வெற்றி பெற்ற அனைவரும் பிறரைத் தன் நடத்தையால் மகிழ்விக்க நினைத்தவர்களே என்பதை நாம் நினைவில் நிறுத்த வேண்டும். ·         வங்கியில் பணத்தைச் சேமிப்பதைவிட இதயத்தில் இனிய எண்ணங்களைச் சேமிப்பது மகிழ்ச்சியான வாழ்விற்கு உதவும் வைப்பு நிதியாகும். ·                    மனம் - மகிழ்ச்சி அளிக்காத நிகழ்வுகளை மறந்து விடும் இயல்புடையது. ·                      வெறுப்பு - மனத்தையும், உணர்வையும் பற்றிக் கொண்டுள்ள தொற்று நோய். எனவே வெறுப்பிற்கு விடுதலை தரும்வரை மகிழ்ச்சி நம்மை அணுகாது. ·         கடமையைச் செய்யுங்கள், மகிழ்ச்சியை அறுவடை செய்யலாம். நன்மை, தீமை என்று எது நடந்...

மனிதனாக வாழ ...

  மனிதனாக வாழ ... ·                       பிறர் உன்னை தூற்றும் பொழுது தலை நிமிர்ந்து நில். ·     பொறாமை, கோபம், வீண் மயக்கம் போன்ற குணங்களை விரோதிகளாக எண்ணுதல். ·         வெற்றி -   தோல்வி,   இன்பம் – துன்பம் இரண்டையும் சமமாக பாவித்தல்.             உண்மைக்குப் புறம்பானவற்றைச்  செய்யாதிருத்தல். ·     நண்பர்கள் இல்லை என்றாலும் பரவாயில்லை. பகைவர்கள் இல்லாமல் வாழ முயற்சி செய்தல். ·                 ம னத்திடத்தோடு வாழ்தல்,  ஏற்றத் தாழ்வு இல்லா மனநிலையுடன் இருத்தல். ·             மனிதனுக்கு உரியது - கலங்காத அறிவு, அன்பு நிறைந்த மனம், ஆரோக்கியமான   உடல். ·                      எதற்கும் அஞ்சாதே -   பயம் நம்மை கோழையாக்கி விடும்.              எவரையும் வெறுக்...