Skip to main content

புளியஞ்சோலை சென்ற அனுபவங்களாக…

 

 

புளியஞ்சோலை சென்ற அனுபவங்களாக…

 

(21.03.2025 அன்று வெள்ளி கிழமை அன்று மாலை புளியஞ்சோலை நானும் என் தோழிகளும் சென்றோம். அந்த அனுபவத்தை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.)

 

கொங்கு நாட்டில் நாமக்கல் மாவட்டத்தில் அமைந்துள்ள கிழக்குத் தொடா்ச்சி மலை தான் கொல்லிமலை. செந்தமிழ் நாட்டின் சங்ககாலப் புலவா்களால் புகழ்ந்து பாடப்பெற்றது. இம்மலை தென் வடலாக 28 கி.மீ (18 மைல்கள்) கிழ மேற்காக 9 கி.மீ (12 மைல்கள்) அகலமும் கொண்டது. மொத்தம் 283.9 சதுர கி.மீ பரப்பளவில் உடையது. கடல் மட்டத்திலிருந்து 3500 அடி உயரமுடையது. அருவி வளமும், நில வளமும் மிக்கது சங்கப் பாடல்களில் உள்ள கொல்லிமலைப் பாவையைத் தன்பால் கொண்டு,  சிறந்த சுற்றுலாத்தலமாகத் திகழும் கொல்லிமலை நாமக்கல் மாவட்டத்திற்கும், திருச்சி மாவட்டத்திற்கும் எல்லையாக உள்ளது. இம்மலையின் அருவி வளத்தால், திருச்சி மாவட்டம் துறையூா் வட்டத்தின் பல ஊா்கள் வளம் பெறுகின்றன. காவிரியின் துணையாறுகளில் ஒன்றாகிய ஐயாறு இம்மலையில் தான் தோன்றிப் பல ஊா்களை வளப்படுத்திக் காவிரியில் கலக்கிறது. அம்பல வாணக் கவிராயரால் பாடப்பெற்றஅறப்பளீசுர சதகம்என்னும் சிறந்த நூலுக்குச் சொந்தமான கொல்லிமலை.

புளியஞ்சோலை





                புளியஞ்சோலை என்பது தமிழ்நாட்டின், கிழக்குத் தொடர்ச்சி மலையின் கொல்லிமலை பள்ளத்தாக்கில் அமைந்துள்ள ஒரு சிறு வனக் கிராமமாகும். சுமார் 30 குடும்பங்களுக்கு மேல் வாழ்கின்றனர். புளியஞ்சோலை திருச்சியிலிருந்து சுமார் 72 கி.மீ தூரத்தில் அமைந்துள்ளது. சிறந்த சுற்றுலாத் தலமாக அமைந்துள்ளது. இங்கு வாழும் மக்களின் முக்கிய வாழ்வு குறு விவசாயமாகும்.

            நாங்கள் சென்றது மாலை நேரம் என்பதால் சிறிது நேரம் தான் அங்கு இருந்தோம். அந்த சூழல் மிகவும் ரம்மியமாக அமைந்தது. அங்கு மாசி பெரியசாமி தெய்வமான கருப்பு, முனி போன்ற தெய்வக் கோவில்களும் இருந்தது. அக்கோவில் சென்று வந்தோம். மிகவும் மகிழ்ச்சியான நாளாக அமைந்தது.

 

Comments

Popular posts from this blog

பொய்யில் புலவன் பொய்யா மொழிகள்

திருக்குறளில் எனது சிறு முயற்சியாக… .  " பொய்யில் புலவன் பொய்யா மொழிகள்"  என்ற இத்தலைப்பில் அமைந்த 133 வரிகள் கொண்ட இப்படைப்பு முருகனின் ” கந்த சஷ்டி  கவசம் ” போன்று உருவாக்கப்பட்டது. இப்பகுதி அறத்துப்பால் 38  அதிகாரங்கள், பொருட்பால் 70  அதிகாரங்களிலிருந்து மட்டும் சுருங்கச் சொல்லி விளங்க வைத்தல் என்ற முறையில், திருக்குறளின் சாராக அமைத்து வழங்கியுள்ளேன். அறமும், பொருளும் ஒருவருக்கு அமைந்தால் இன்பம் தானாகக் கிட்டும் என்ற நோக்கத்தில் அமைக்கப்பட்டது. ”பொய்யில் புலவன் பொய்யா மொழிகள்” காக்க காக்க அறத்தைக் காக்க (1) காக்க காக்கக் குறளைக் காக்க உலக மொழிகளில் ஒப்பற்ற நூலாம், நோக்க நோக்க பெயா்த்து நோக்க மனிதன் கற்று மனிதம் காக்க ஐம்பொறி உணா்வை காக்க காக்க புகழுடன் வாழ ஒழுக்கம் காக்க அறநெறி வாழ்வை இறைவழி காக்க வானம் பொய்யா வளத்தைக் காக்க பசிப்பிணி யில்லா உலகைக் காக்க பற்றற்ற வாழ்வை பரிவுடன் காக்க அறத்தைக் காக்க அன்பைக் காக்க (2) குறையிலா வாழ்வை குணமுடன் காக்க இல்லற வாழ்வுடன் நல்லறம் காக்க பண்பொடு பயனும் அறத்துடன் காக்க வாழ்க வாழ்க வளமுடன் வாழ்க வாழ்க வாழ்க...

எண்ணம் போல் வாழ்வு

                                   எண்ணம் போல் வாழ்வு   நினைவுகளே பழக்கவழக்கங்களாக மாறுகின்றன. எனவே தான் எண்ணம் போல் வாழ்வு அனைவருக்கும் அமைகிறது. வெற்றி பெற்ற அனைவரும் பிறரைத் தன் நடத்தையால் மகிழ்விக்க நினைத்தவர்களே என்பதை நாம் நினைவில் நிறுத்த வேண்டும். ·         வங்கியில் பணத்தைச் சேமிப்பதைவிட இதயத்தில் இனிய எண்ணங்களைச் சேமிப்பது மகிழ்ச்சியான வாழ்விற்கு உதவும் வைப்பு நிதியாகும். ·                    மனம் - மகிழ்ச்சி அளிக்காத நிகழ்வுகளை மறந்து விடும் இயல்புடையது. ·                      வெறுப்பு - மனத்தையும், உணர்வையும் பற்றிக் கொண்டுள்ள தொற்று நோய். எனவே வெறுப்பிற்கு விடுதலை தரும்வரை மகிழ்ச்சி நம்மை அணுகாது. ·         கடமையைச் செய்யுங்கள், மகிழ்ச்சியை அறுவடை செய்யலாம். நன்மை, தீமை என்று எது நடந்...

மனிதனாக வாழ ...

  மனிதனாக வாழ ... ·                       பிறர் உன்னை தூற்றும் பொழுது தலை நிமிர்ந்து நில். ·     பொறாமை, கோபம், வீண் மயக்கம் போன்ற குணங்களை விரோதிகளாக எண்ணுதல். ·         வெற்றி -   தோல்வி,   இன்பம் – துன்பம் இரண்டையும் சமமாக பாவித்தல்.             உண்மைக்குப் புறம்பானவற்றைச்  செய்யாதிருத்தல். ·     நண்பர்கள் இல்லை என்றாலும் பரவாயில்லை. பகைவர்கள் இல்லாமல் வாழ முயற்சி செய்தல். ·                 ம னத்திடத்தோடு வாழ்தல்,  ஏற்றத் தாழ்வு இல்லா மனநிலையுடன் இருத்தல். ·             மனிதனுக்கு உரியது - கலங்காத அறிவு, அன்பு நிறைந்த மனம், ஆரோக்கியமான   உடல். ·                      எதற்கும் அஞ்சாதே -   பயம் நம்மை கோழையாக்கி விடும்.              எவரையும் வெறுக்...