Skip to main content

உருமு தனலெட்சுமி கல்லூரிக்குச் சென்ற அனுபவங்களாக...

 

உருமு தனலெட்சுமி கல்லூரிக்குச் சென்ற அனுபவங்களாக...


   இன்று (26.03.2025) திருச்சி, உருமு தனலெட்சுமி கல்லூரி, தமிழாய்வுத்துறையில்  காலை 10.00 மணிக்கு செயற்கை நுண்ணறிவியலின் பயன்கள் (Artificial Intellegence in Tamil) என்ற தலைப்பில் பயிலரங்கம் நடைபெற்றது. அதற்குச் சிறப்பு விருந்தினராக திரு. ஜெ. வீரநாதன் எம்.ஏ., எம்.ஏ., எம்ஃபில்., Director, Balaji insititute of Computer Graphics, Coimbatore-45 என்பவர் கலந்து கொண்டு சிறப்பாகப் பயிலரங்கம் நடத்தினார். அப்பயிலரங்கில் பி.லிட், எம்.ஏ முதலாமாண்டு, இரண்டாமாண்டு மாணவ, மாணவிகள் ஆர்வமுடன் கலந்து கொண்டு பயனடைந்தார்கள். நானும் பயனடைந்தேன். 






     செயற்கை நுண்ணறிவின் websites, அதைப் பயன்படுத்தி எவ்வாறு Picture Download பண்ணும் முறை, Key board Usage. Download பண்ணிய Picture பேச வைக்கும் முறை, பாடல் பாட வைக்கும் முறை என்று அனைத்தையும் மாணவர்களுக்குக் கற்றுக் கொடுத்தார்கள். எங்கள் கல்லூரி மாணவர்களுக்கும் பயலரங்கம் நடத்தித் தாருங்கள் என்று  அவரிடம் கேட்டுக் கொண்டேன். 

      




அந்நிகழ்ச்சியில் கல்லூரி முதல்வர் முனைவர் இ.ஆர்.இரவிசந்திரன் அவர்கள் சிறப்புரை ஆற்றினார். துறைத்தலைவர் (பொறுப்பு) முனைவர் என். விஜயசுந்தரி, நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் முனைவர் டி.இந்திரகுமாரி அவர்களுடன் நானும் சிறப்பு அழைப்பாளராகச் சென்றிருந்தேன். காலை நிகழ்வுக்கு உதவிப் பேராசிரியர், முனைவர் ஆசிக் அகமது அவர்கள் நன்றியுரை வழங்கி சிறப்பு செய்தார்.

          உருமு தனலெட்சுமி கல்லூரித் தமிழ்த்துறையில் பணியாற்றும் அனைவரும் எனக்கு நெருங்கிய நண்பர்கள். செயற்கை நுண்ணறிவியல் பயிலரங்கில் கலந்து கொண்டு  நானும் பயனடைந்தேன். அதற்கு தோழி உதவிப் பேராசிரியர் முனைவர் டி.இந்திரகுமாரி அவர்களுக்கு மிகவும் நன்றிக் கூறுவதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.

    மதியம் 2 மணியளவில் சான்றிதழ் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது. அந்நிகழ்ச்சியில் நான் சிறப்புரை ஆற்றினேன். என் உரையில் எனது வாழ்க்கைப் பயண அனுபவம், கணினி சார்ந்த என் அனுபவம், வலைதளம் உருவாக்கிய விதம் என்று மாணவர்களுக்குப் பயன்தரும் செய்திகளுடன் என் உரையை முடித்துக் கொண்டேன். அடுத்த நிகழ்வாக மாணவ, மாணவியர்களுக்குச் சான்றிதழ் வழங்கி நிகழ்ச்சி 3.30 மணிக்கு நிறைவடைந்தது. விழாவின் இறுதியாக உதவிப் பேராசிரியர் முனைவர் ஆர்.ஹேமலதா அவர்கள் நன்றியுரை வழங்கிச் சிறப்பு செய்தார். 

மாணவ, மாணவியர்கள், மற்றும் சக பேராசிரியர்கள் என அனைவரும் ஒன்றாக மதிய உணவு சாப்பிட்டு, தேநீர் அருந்தி மிகவும் மகிழ்ச்சியாகவும், மனநிறைவாகவும் இன்றைய நாள் இனிதே சென்றது.

Comments

Popular posts from this blog

பொய்யில் புலவன் பொய்யா மொழிகள்

திருக்குறளில் எனது சிறு முயற்சியாக… .  " பொய்யில் புலவன் பொய்யா மொழிகள்"  என்ற இத்தலைப்பில் அமைந்த 133 வரிகள் கொண்ட இப்படைப்பு முருகனின் ” கந்த சஷ்டி  கவசம் ” போன்று உருவாக்கப்பட்டது. இப்பகுதி அறத்துப்பால் 38  அதிகாரங்கள், பொருட்பால் 70  அதிகாரங்களிலிருந்து மட்டும் சுருங்கச் சொல்லி விளங்க வைத்தல் என்ற முறையில், திருக்குறளின் சாராக அமைத்து வழங்கியுள்ளேன். அறமும், பொருளும் ஒருவருக்கு அமைந்தால் இன்பம் தானாகக் கிட்டும் என்ற நோக்கத்தில் அமைக்கப்பட்டது. ”பொய்யில் புலவன் பொய்யா மொழிகள்” காக்க காக்க அறத்தைக் காக்க (1) காக்க காக்கக் குறளைக் காக்க உலக மொழிகளில் ஒப்பற்ற நூலாம், நோக்க நோக்க பெயா்த்து நோக்க மனிதன் கற்று மனிதம் காக்க ஐம்பொறி உணா்வை காக்க காக்க புகழுடன் வாழ ஒழுக்கம் காக்க அறநெறி வாழ்வை இறைவழி காக்க வானம் பொய்யா வளத்தைக் காக்க பசிப்பிணி யில்லா உலகைக் காக்க பற்றற்ற வாழ்வை பரிவுடன் காக்க அறத்தைக் காக்க அன்பைக் காக்க (2) குறையிலா வாழ்வை குணமுடன் காக்க இல்லற வாழ்வுடன் நல்லறம் காக்க பண்பொடு பயனும் அறத்துடன் காக்க வாழ்க வாழ்க வளமுடன் வாழ்க வாழ்க வாழ்க...

எண்ணம் போல் வாழ்வு

                                   எண்ணம் போல் வாழ்வு   நினைவுகளே பழக்கவழக்கங்களாக மாறுகின்றன. எனவே தான் எண்ணம் போல் வாழ்வு அனைவருக்கும் அமைகிறது. வெற்றி பெற்ற அனைவரும் பிறரைத் தன் நடத்தையால் மகிழ்விக்க நினைத்தவர்களே என்பதை நாம் நினைவில் நிறுத்த வேண்டும். ·         வங்கியில் பணத்தைச் சேமிப்பதைவிட இதயத்தில் இனிய எண்ணங்களைச் சேமிப்பது மகிழ்ச்சியான வாழ்விற்கு உதவும் வைப்பு நிதியாகும். ·                    மனம் - மகிழ்ச்சி அளிக்காத நிகழ்வுகளை மறந்து விடும் இயல்புடையது. ·                      வெறுப்பு - மனத்தையும், உணர்வையும் பற்றிக் கொண்டுள்ள தொற்று நோய். எனவே வெறுப்பிற்கு விடுதலை தரும்வரை மகிழ்ச்சி நம்மை அணுகாது. ·         கடமையைச் செய்யுங்கள், மகிழ்ச்சியை அறுவடை செய்யலாம். நன்மை, தீமை என்று எது நடந்...

மனிதனாக வாழ ...

  மனிதனாக வாழ ... ·                       பிறர் உன்னை தூற்றும் பொழுது தலை நிமிர்ந்து நில். ·     பொறாமை, கோபம், வீண் மயக்கம் போன்ற குணங்களை விரோதிகளாக எண்ணுதல். ·         வெற்றி -   தோல்வி,   இன்பம் – துன்பம் இரண்டையும் சமமாக பாவித்தல்.             உண்மைக்குப் புறம்பானவற்றைச்  செய்யாதிருத்தல். ·     நண்பர்கள் இல்லை என்றாலும் பரவாயில்லை. பகைவர்கள் இல்லாமல் வாழ முயற்சி செய்தல். ·                 ம னத்திடத்தோடு வாழ்தல்,  ஏற்றத் தாழ்வு இல்லா மனநிலையுடன் இருத்தல். ·             மனிதனுக்கு உரியது - கலங்காத அறிவு, அன்பு நிறைந்த மனம், ஆரோக்கியமான   உடல். ·                      எதற்கும் அஞ்சாதே -   பயம் நம்மை கோழையாக்கி விடும்.              எவரையும் வெறுக்...