Skip to main content

விவேகானந்தரின் சிந்தனைகள்!

 

விவேகானந்தரின் சிந்தனைகள்!

       

          விவேகானந்தர் ஒரு துறவி; வீரமும் விவேகமும் மனிதநேயமும் எதிர்கால இந்தியாவைப் பற்றிய தொலை நோக்குப் பார்வையும் கொண்டவர். ஆசைகளை வென்றவர். தவமுனிவராகத் திகழ்ந்தவர். எனினும் விவேகானந்தரின் சொற்பொழிவுகளில் ஆசையின்மை, தவம் போன்ற கருத்துக்களை வெளிப்படுத்தியதைவிட அதிகமாக மக்கள் நல சிந்தனைகளை வெளிப்படுத்தினார்.

          ஏழைமக்களைப் பற்றிக் கவலைப்பட்டார். அவர்களுக்கு உணவும் உடையும் இருப்பிடமும் கிடைக்கவேண்டும் என்று வலியுறுத்தினார்.

       சோறு வேண்டும், சோறு வேண்டும். இங்கே ஒரு பிடி சோறு தரமாட்டாராம். சொர்க்கத்தில் நித்தியானந்தத்தைத் தருவாராம்இத்தகைய ஒரு கடவுள் மீது எனக்கு நம்பிக்கை இல்லைஎன்று இதயம் குமுறினார் விவேகானந்தர்.

விவேகானந்தரின் வாழ்க்கை

          நாடு முழுவதும் சுற்றுப் பயணம் செய்து ஏழை எளிய, இன்னல் பல பெற்ற உழைக்கும் மக்களை நேரடியாகச் சந்தித்து, அவர்களின் பொருளாதார நிலையை நன்கறிந்தவர். சொந்தத் தந்தை இறந்தபின் வறுமையின் கொடுமையை, இளமையில் வெறுமையை நேரடியாக அனுபவித்தவர். பதினைந்து ரூபாய் சம்பளத்தில் வேலை கிடைத்தால் கூட போதும் என்று முயற்சி செய்தவர். வேலையில்லா திண்டாட்டம் குடும்பங்களில் எத்தகைய துயரங்களை சுமத்திவிடும் என்று அறிந்தவர். பசி, பட்டினிக் கொடுமையை அணிந்தவர்.

·        அவர் நேரில் தரிசித்த இந்தியாவை மாற்றி அமைக்க விரும்பினார். இந்தியர்களுக்குத் தேவை மதம் அல்ல. தொழிற்கல்வி என்று முழங்கினார்.

·        நீ எதை நினைக்கிறாயோ அதுவாகவே ஆகிறாய். நீ உன்னைப் பலவீனன் என்று நினைத்தால் நீ பலவீனனாகவே ஆகிவிடுவாய். நீ உன்னை வலிமையுடையவன் என்று நினைத்தால் வலிமை படைத்தவனாகவே ஆகிவிடுவாய்.

          இக்கருத்து சோர்ந்து கிடக்கும் உள்ளங்களில் வலிமை சேர்க்கும். தன் பலம் இன்னதென்று அறியாமல் விழுந்து கிடக்கும் மனங்களை எடுத்து நிறுத்தும் ஆற்றல் விவேகானந்தரின் சொற்களில் காணப்படுகின்றனர்.

          இல்லை என்று ஒரு  போதும் சொல்லாதே என்னால் இயலாது என்று ஒருநாளும் சொல்லாதே. ஏனெனில் நீ வரம்பில்லா வலிமை பெற்றவன். உன்னுடைய உண்மை இயல்போடு ஒப்பிடும்போது, காலமும் இடமும் கூட உனக்கு ஒரு பொருட்டல்ல. நீ எதையும், எல்லாவற்றையும் சாதிக்கக் கூடியவன். சர்வ வல்லமை படைத்தவன் நீ.

கல்வியின் முக்கியத்துவத்தை உணர்த்தியவர்

          பொதுமக்கள் தங்கள் வாழ்க்கைப் போராட்டத்திற்கு தகுதியானவர்களாகக் கூடிய கல்வி வேண்டும் என்று விரும்பினார் விவேகானந்தர். அந்தக் கல்வி அவர்களைத் தங்கள் சொந்தக்காலில் நிற்கும்படிச் செய்யவேண்டும் என்பது அவருடையக் கருத்து. பாமர மக்களாகிய பொது மக்களை வாழ்க்கைப் போராட்டத்திற்குத் தகுதி பெற்றவர்களாக இருக்க உதவி செய்யாத கல்வி, உறுதியான நல்லொழுக்கத்தையும், பிறருக்கு உதவி புரியும் ஊக்கத்தையும், சிங்கம் போன்ற மன உறுதியையும் வெளிப்படுத்தப் பயன்படாத கல்வி, அதைக் கல்வி என்று சொல்வது பொருத்தமா? எத்தகை கல்வி தன்னம்பிக்கையைத் தந்து ஒருவனை தன் சொந்தக் காலில் நிற்கும்படி செய்கிறதோ, அதுதான் உண்மையான கல்வி.”

          மக்கள் தொண்டே மகேசன் தொண்டு என்பதில் உறுதியாக இருந்தவர் விவேகானந்தர். 1902 சூலை 4 ந் தேதி விவேகானந்தர் மறைந்தார். அவர் 39 ஆண்டுகளும் 5 மாதங்களும் இவ்வுலகில் வாழ்ந்தார். பத்தாண்டு காலம் பொதுத்தொண்டில் ஈடுபட்டது, உலக வரலாற்றில் இடம்பெற்றுவிட்டது.

·        சிகாகோ, மாநாட்டுக்கு அறிமுகமே இல்லாத துறவியாகச் சென்று, மாநாட்டில் பேசிய அந்தக் கணத்திலிருந்து உலகம் அறிந்தவரான மாபெரும் மனிதநேயச் சிந்தனையாளர் விவேகானந்தர்.

·        உலக அரங்கில் இந்தியா இழந்திருந்த சுயமரியாதையை மீட்டெடுத்தவர்.

·        இந்தியச் சுதந்திரத்தின் விடிவெள்ளி!

பார்வை நூல்

1.  விடிவெள்ளி விவேகானந்தர்பசுமைக்குமார், அறிவுப் பதிப்பகம், ராயப் பேட்டை, சென்னை -14.

Comments

Popular posts from this blog

பொய்யில் புலவன் பொய்யா மொழிகள்

திருக்குறளில் எனது சிறு முயற்சியாக… .  " பொய்யில் புலவன் பொய்யா மொழிகள்"  என்ற இத்தலைப்பில் அமைந்த 133 வரிகள் கொண்ட இப்படைப்பு முருகனின் ” கந்த சஷ்டி  கவசம் ” போன்று உருவாக்கப்பட்டது. இப்பகுதி அறத்துப்பால் 38  அதிகாரங்கள், பொருட்பால் 70  அதிகாரங்களிலிருந்து மட்டும் சுருங்கச் சொல்லி விளங்க வைத்தல் என்ற முறையில், திருக்குறளின் சாராக அமைத்து வழங்கியுள்ளேன். அறமும், பொருளும் ஒருவருக்கு அமைந்தால் இன்பம் தானாகக் கிட்டும் என்ற நோக்கத்தில் அமைக்கப்பட்டது. ”பொய்யில் புலவன் பொய்யா மொழிகள்” காக்க காக்க அறத்தைக் காக்க (1) காக்க காக்கக் குறளைக் காக்க உலக மொழிகளில் ஒப்பற்ற நூலாம், நோக்க நோக்க பெயா்த்து நோக்க மனிதன் கற்று மனிதம் காக்க ஐம்பொறி உணா்வை காக்க காக்க புகழுடன் வாழ ஒழுக்கம் காக்க அறநெறி வாழ்வை இறைவழி காக்க வானம் பொய்யா வளத்தைக் காக்க பசிப்பிணி யில்லா உலகைக் காக்க பற்றற்ற வாழ்வை பரிவுடன் காக்க அறத்தைக் காக்க அன்பைக் காக்க (2) குறையிலா வாழ்வை குணமுடன் காக்க இல்லற வாழ்வுடன் நல்லறம் காக்க பண்பொடு பயனும் அறத்துடன் காக்க வாழ்க வாழ்க வளமுடன் வாழ்க வாழ்க வாழ்க...

எண்ணம் போல் வாழ்வு

                                   எண்ணம் போல் வாழ்வு   நினைவுகளே பழக்கவழக்கங்களாக மாறுகின்றன. எனவே தான் எண்ணம் போல் வாழ்வு அனைவருக்கும் அமைகிறது. வெற்றி பெற்ற அனைவரும் பிறரைத் தன் நடத்தையால் மகிழ்விக்க நினைத்தவர்களே என்பதை நாம் நினைவில் நிறுத்த வேண்டும். ·         வங்கியில் பணத்தைச் சேமிப்பதைவிட இதயத்தில் இனிய எண்ணங்களைச் சேமிப்பது மகிழ்ச்சியான வாழ்விற்கு உதவும் வைப்பு நிதியாகும். ·                    மனம் - மகிழ்ச்சி அளிக்காத நிகழ்வுகளை மறந்து விடும் இயல்புடையது. ·                      வெறுப்பு - மனத்தையும், உணர்வையும் பற்றிக் கொண்டுள்ள தொற்று நோய். எனவே வெறுப்பிற்கு விடுதலை தரும்வரை மகிழ்ச்சி நம்மை அணுகாது. ·         கடமையைச் செய்யுங்கள், மகிழ்ச்சியை அறுவடை செய்யலாம். நன்மை, தீமை என்று எது நடந்...

மனிதனாக வாழ ...

  மனிதனாக வாழ ... ·                       பிறர் உன்னை தூற்றும் பொழுது தலை நிமிர்ந்து நில். ·     பொறாமை, கோபம், வீண் மயக்கம் போன்ற குணங்களை விரோதிகளாக எண்ணுதல். ·         வெற்றி -   தோல்வி,   இன்பம் – துன்பம் இரண்டையும் சமமாக பாவித்தல்.             உண்மைக்குப் புறம்பானவற்றைச்  செய்யாதிருத்தல். ·     நண்பர்கள் இல்லை என்றாலும் பரவாயில்லை. பகைவர்கள் இல்லாமல் வாழ முயற்சி செய்தல். ·                 ம னத்திடத்தோடு வாழ்தல்,  ஏற்றத் தாழ்வு இல்லா மனநிலையுடன் இருத்தல். ·             மனிதனுக்கு உரியது - கலங்காத அறிவு, அன்பு நிறைந்த மனம், ஆரோக்கியமான   உடல். ·                      எதற்கும் அஞ்சாதே -   பயம் நம்மை கோழையாக்கி விடும்.              எவரையும் வெறுக்...