Skip to main content

வாழ்க்கையின் வெற்றியில் தன்னம்பிக்கை (புத்தக மதிப்புரை)

  வாழ்க்கையின் வெற்றியில் தன்னம்பிக்கை ( புத்தக மதிப்புரை )               புத்தக மதிப்புரையில் முனைவர் சி . இலட்சுமணன் அவர்கள் எழுதிய ‘ வாழ்க்கையின் வெற்றியில் தன்னம்பிக்கை ’ என்ற   புத்தகத்தைப் பார்ப்போம் . இந்நூல்   2023 - ஆம் ஆண்டு ,   குமரி மாவட்டம் , தமிழ்ச் செம்மொழி வரலாற்று ஆய்வு மையம் வெளியிட்டுள்ளார்கள். பக்கங்கள் 205,   விலை 1 50 ரூபாய்.             முனைவர் சி . இலட்சுமணன் அவர்கள் , தமிழ்ச் செம்மொழி வரலாற்று ஆய்வு மையத்தின் விடிவெள்ளி ; சுயமுன்னேற்றத்திற்கான நூல்களை எழுதி வருகின்ற சமுதாயச் சிற்பி ; தமிழாய்வுக் களஞ்சியம் என்னும் இதழின் ஆசிரியராக இருந்து சிறப்புடன் நடத்தி வருகிறார் . பத்துக்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார் .             நூலாசிரியர் அவர்கள் தமிழ்ப் பல்கலைக் கழகத்தில் ஓலைச் சுவடித் துறையின் தலைவராக ,   பணியாற்றிய பொழுது பல்வேறு ஊர்களுக்குப் பயணம் ...

பெண்ணே உன் வாழ்க்கை உன் கையில்!

 

பெண்ணே உன் வாழ்க்கை உன் கையில்!


          ஒளிஇருள், பகல்இரவு, மலை-மடு, ஆக்கம்அழிவு, தோற்றம்மறைவு, என்பன போன்ற இருமைகள் உலகை இயக்குகின்றன. உலகின் உயிரோட்டம் உயிரினங்களின் ஆண்பெண் எனும் இருமையால் இயங்குகின்றது.

          இவ்வுலகில் இயற்கையாகத் தோன்றியது உலகம், இயற்கையாக தோன்றிய இவ்வுலகில், ஓர் அறிவு முதல் ஐந்தறிவு வரை உள்ள உயிரினங்கள் இயற்கையின் போக்கில் சூழலுக்குக் கேற்ப வாழ்க்கையை நடத்துகிறது. அவ்வுயிர்களினால் இந்த உலகம் மாற்றம் அடையாமல், சுற்றுச்சூழல் பாதுகாப்புடன் இருந்தது.

   ஆனால் மனித உயிர்களாகிய நாம் இயற்கையாஉருவான இவ்வுலகத்தையும், ஆண்பெண் என்று சரிநிகர் சமமாக வாழாமல், ஆணுக்குப் பெண் அடிமை, பெண்ணுக்கு ஆண் அடிமை என்றும் ஆண் தான் மூலதனம் என்றும் நம் முன்னோர்கள் உருவாக்கியுள்ளனர். ஆணுக்கு முக்கியத்துவம் கொடுத்து பெண்கள் ஆண்கள் வழி வாழவேண்டும் என்றும் மாற்றி விட்டோம். இம்மாற்றம் மனித சமூகத்தைத் தவிர எந்த உயிரினங்களிலும்  இல்லை.

          நம் முன்னோர்கள் தாத்தா, பாட்டி, அம்மா, அப்பா என்று அனைவரும் ஆண் குழந்தைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து அவர்களுக்கு ஆணாதிக்க மனநிலையை உருவாக்கிவிட்டனர். நம்நாட்டில் உள்ள தொலைக்காட்சிகளில் ஒளிப்பப்படும் நாடகங்களும், திரைப்படங்கள், சிறுகதை, நாவல், நாடகம் என்று அனைத்தும் ஊடகங்களும் இதையே வலியுறுத்துகின்றன.

          ஒரு நாடு நன்கு முன்னேற வேண்டுமானால் குடும்பம் ஒற்றுமையாக இருக்கவேண்டும். அதற்கு நான் பெரிது நீ பெரிது என்ற ஈகோ இருந்தால் குடும்பமும் முன்னேறாது. நாடும் முன்னேறாது. எனவே அடிமைத்தனம், போட்டி, பொறாமை இல்லாமல் அவரவர் வேலையை பொறுப்புணர்ந்து செய்தால் குடும்பமும் நாடும் முன்னேறும். ஊடகங்கள் அனைத்தும் இக்கால குழந்தைகளுக்கு மனதில் பதியும் வண்ணம் நல்ல கருத்துக்கள் கொண்டு நிகழ்ச்சிகள் வழங்க வேண்டும்.

          அக்காலத்தில் கூட்டுக் குடும்ப வாழ்க்கை இருந்தது. அப்பொழுது தாத்தா- பாட்டி, பெரியப்பா -பெரியம்மா, சித்தப்பா- சித்தி, அத்தை - மாமா, அண்ணா, அக்கா, தம்பி, தங்கை என்று வாழ்ந்தார்கள். அக்கம்பக்கம் வாழ்பவர்களும் சாதி, மதம் வேற்றுமையின்றி முறை வைத்து தாத்தா, பாட்டி, அத்தை, மாமா என்று பழகி மகிழ்ச்சியுடன் வாழ்ந்தார்கள். ஆகையால் பிள்ளைகள் மகிழ்ச்சியாக பாதுகாப்புடன் இருந்தார்கள். பாலியல் வன்கொடுமை நாம் பார்த்ததில்லை. கேட்டதில்லை. ஆனால் இன்றைய நிலையில் பாலியல் கொடுமை அதிகமாக உள்ளது. முற்காலத்தில் அங்கொன்றும் இங்கொன்றுமாக இருந்தது இன்று அதிகளவில் நடைபெறுகிறது. இச்செய்தி எல்லாம் படிக்கும்போதும், கேட்கும்போது மனம் பாரமாக உள்ளது. அம்மாக்கள் பெண்பிள்ளைக்கு அறிவுரைக் கூறுவது போல் ஆண்பிள்ளைகளுக்கும் கூறுவேண்டும்.

          பாலியல் பிரச்சனைகளுக்குச் சட்டம் கடுமையானதாக இருக்க வேண்டும். தண்டனை அதிகமானால் தவறுகள் குறையும். எனவே பாராபட்சம் பார்க்காமல் கடுந்தண்டனை வழங்கவேண்டும். எதிர்வரும் சமுதாயத்திற்கு நல்ல வளமான வாழ்க்கையை அமைத்துக் கொடுப்போம். எனவே ஆண்கள் பெண் பிள்ளைகளைப் பொறுப்புணர்வுடன் நடத்த வேண்டும்.

          எங்கள் காலத்தில்  அம்மா அப்பாவிடம் பயம் இருந்தது.  நம் அப்பா, அம்மாவிற்குக் கெட்ட பெயர் வரக்கூடாது என்று முன் எச்சரிக்கையுடன் இருப்போம். ஆண்பிள்ளைகளிடம் அதிகம் பேசமாட்டோம். தொட்டுப் பழக மாட்டோம். ஆனால் இன்று தொடுதல் சர்வ சாதாரணமானதாக ஆகிவிட்டது. இந்த நிலை மாறவேண்டும். நமக்கு சரிநிகர் சம உரிமை வேண்டும் தான். அதை நாம் கல்வியில், முன்னேற்றத்தில், வேலையில், தொழிலில், காட்ட வேண்டும். தொட்டுப் பேசுவதிலோ, Love. Bestie. Living என்று வாழ்க்கை என்று வாழக் கூடாது.

          பெண்கள் தங்களைத் தாங்களே பாதுகாத்துக் கொள்ள வேண்டும். முள் மேல் சேலை பட்டாலும், சேலை மேல் முள் பட்டாலும் சேலைக்குத்தான் சேதம் முள்ளுக்கு இல்லை. எனவே அதை மனதில் கொண்டு நாம் நம்மை பாதுகாத்துக் கொள்ள வேண்டும்.

வாழ்வது ஒரு வாழ்க்கை அதை சிறந்த முறையில் வாழ்வோம். அடுத்தவர் பொறாமை கொள்ளுமாறு வாழ்வோம். ஒவ்வொரு நிமிடமும் நமக்கு பொக்கிஷம். அதை வீணடிக்காமல் மகிழ்ச்சியாக வாழ்! பிறரை மகிழ்வித்து மகிழ்!

பெண்ணே உன் வாழ்க்கை மற்றவர் கையில் இல்லை!

 உன் வாழ்க்கை உன் கையில்!

அனைத்துச் சகோதரிகளுக்கும் மகளிர் தின வாழ்த்துகள்!

         

Comments

Popular posts from this blog

பொய்யில் புலவன் பொய்யா மொழிகள்

திருக்குறளில் எனது சிறு முயற்சியாக… .  " பொய்யில் புலவன் பொய்யா மொழிகள்"  என்ற இத்தலைப்பில் அமைந்த 133 வரிகள் கொண்ட இப்படைப்பு முருகனின் ” கந்த சஷ்டி  கவசம் ” போன்று உருவாக்கப்பட்டது. இப்பகுதி அறத்துப்பால் 38  அதிகாரங்கள், பொருட்பால் 70  அதிகாரங்களிலிருந்து மட்டும் சுருங்கச் சொல்லி விளங்க வைத்தல் என்ற முறையில், திருக்குறளின் சாராக அமைத்து வழங்கியுள்ளேன். அறமும், பொருளும் ஒருவருக்கு அமைந்தால் இன்பம் தானாகக் கிட்டும் என்ற நோக்கத்தில் அமைக்கப்பட்டது. ”பொய்யில் புலவன் பொய்யா மொழிகள்” காக்க காக்க அறத்தைக் காக்க (1) காக்க காக்கக் குறளைக் காக்க உலக மொழிகளில் ஒப்பற்ற நூலாம், நோக்க நோக்க பெயா்த்து நோக்க மனிதன் கற்று மனிதம் காக்க ஐம்பொறி உணா்வை காக்க காக்க புகழுடன் வாழ ஒழுக்கம் காக்க அறநெறி வாழ்வை இறைவழி காக்க வானம் பொய்யா வளத்தைக் காக்க பசிப்பிணி யில்லா உலகைக் காக்க பற்றற்ற வாழ்வை பரிவுடன் காக்க அறத்தைக் காக்க அன்பைக் காக்க (2) குறையிலா வாழ்வை குணமுடன் காக்க இல்லற வாழ்வுடன் நல்லறம் காக்க பண்பொடு பயனும் அறத்துடன் காக்க வாழ்க வாழ்க வளமுடன் வாழ்க வாழ்க வாழ்க...

எண்ணம் போல் வாழ்வு

                                   எண்ணம் போல் வாழ்வு   நினைவுகளே பழக்கவழக்கங்களாக மாறுகின்றன. எனவே தான் எண்ணம் போல் வாழ்வு அனைவருக்கும் அமைகிறது. வெற்றி பெற்ற அனைவரும் பிறரைத் தன் நடத்தையால் மகிழ்விக்க நினைத்தவர்களே என்பதை நாம் நினைவில் நிறுத்த வேண்டும். ·         வங்கியில் பணத்தைச் சேமிப்பதைவிட இதயத்தில் இனிய எண்ணங்களைச் சேமிப்பது மகிழ்ச்சியான வாழ்விற்கு உதவும் வைப்பு நிதியாகும். ·                    மனம் - மகிழ்ச்சி அளிக்காத நிகழ்வுகளை மறந்து விடும் இயல்புடையது. ·                      வெறுப்பு - மனத்தையும், உணர்வையும் பற்றிக் கொண்டுள்ள தொற்று நோய். எனவே வெறுப்பிற்கு விடுதலை தரும்வரை மகிழ்ச்சி நம்மை அணுகாது. ·         கடமையைச் செய்யுங்கள், மகிழ்ச்சியை அறுவடை செய்யலாம். நன்மை, தீமை என்று எது நடந்...

கோப்பெருஞ்சோழன் – பிசிராந்தையார் நட்பு

  கோப்பெருஞ்சோழன் – பிசிராந்தையார் நட்பு   வடக்கிருத்தல் தமிழரின் நம்பிக்கை சார்ந்த பழக்கவழக்கங்களில் வடக்கிருத்தலை ஆடவர் மேற்கொண்டனர். ஊருக்கு வடபால் ஓரிடத்தில் வடக்குத் திசை நோக்கி அமர்ந்த வண்ணம் உண்ணாநோன்பிருந்து உயிர்த்துறப்பதை ‘ வடக்கிருத்தல் ’ எனக் கொண்டனர். வடக்கிருக்க அடிப்படைக் காரணியாக அமைவன மானம் , வீரம் , நட்பு , தன்நோக்கம் நிறைவேறாமை எனலாம். வீரர் , புலவர் , மன்னர் ஆகியோர் வடக்கிருந்தமையை இலக்கியங்கள் வாயிலாக அறிய முடிகிறது. அவ்வாறு உயிர் துறப்பவர் துறக்கம் பெறுவர் என நம்பினர்.       கலைக்களஞ்சியம் , வடக்கிருத்தலை ‘ உத்ரக மனம் ’ என்றும் ‘ மகாப் பிரத்தானம் ’ என்றும் கூறும். ‘ நாணத்தகு நிலை ’ நேர்ந்ததனாற் சிலர் வடக்கிருந்ததாகத் தமிழ் நூல்கள் கூறுகின்றன என்று கூறுகிறது.           கோப்பெருஞ்சோழன் வடக்கிருந்து உயிர் விட்டான். அவன் உயிர்விட்டப் பிறகு அவனை பார்க்காமலே நட்புக் கொண்டிருந்தப் பிசிராந்தையாரும், சோழனுடன் இருந்த பொத்தியார் என்ற புலவரும் அவன் வடக்கிருந்த இடத்தின் அருகில் வடக்கிருந்து உயிர்...