வெற்றிப் பாதை ( புத்தக மதிப்புரை ) வள்ளுவர் வழியில் இன்று புத்தக மதிப்புரை சிறப்பு நிகழ்ச்சியில் அகிலன் கண்ணன் அவர்கள் எழுதிய வெற்றிப் பாதை வள்ளுவர் வழியில் என்ற புத்தகத்தைப் பார்ப்போம் . இந்தப் புத்தகத்தை டிசம்பர் 2003 - ஆம் ஆண்டு , சென்னை , தாகம் பதிப்பகம் வெளியிட்டுள்ளார்கள் . பக்கங்கள் 92, விலை 180 ரூபாய் . இந்நூலின் ஆசிரியர் திரு . அகிலன் கண்ணன் அவர்கள் பதிப்பாளர் , எழுத்தாளர் , விமர்சகர் , கவிஞர் , சமூக ஆர்வலர் , நாடக எழுத்தாளர் மற்றும் ஃப்ரீலான்ஸ் பத்திரிகையாளர் எனப் பன்முகத்தன்மை கொண்டவர். தனக்கு மட்டுமல்லாது தமிழ் மண்ணுக்கும் பெருமை சேர்த்து , தமிழ் மக்களின் மன தைக் கவர்ந்தப் புகழ்பெற்ற எழுத்தாளர் அகிலன் அவர்களின் மகனான கண்ணன் தமிழ் இலக்கிய உலகில் மிகுந்த கவனம் பெற்றவர் ஆவார். கண்ணன் தனது தமிழ்ப் புத்தகாலயம் - தாகம் பதிப்பகம் மூலமாக தமிழ் இலக்கிய உலகில் புகழ்பெற்ற படைப்புகளை உருவாக்கி தமிழை வளப்படுத்த இன்றும் தீவிரமாகச் செயல்பட்டு வருகிறார். மக்களிடையே வாசிப்புப் பழக்கத்தை மேம்படுத்துவதில் தொடர்ந்து சமூக வலைத்தளங்களில் தனது உற்...
தமிழ் சிந்தனை மரபில் ‘வெளி' யும் காலமும் ‘ வெளி ’ என்பது நிலத்தையும் , நிலத்திற்கு மேலான பரப்பையும் குறிக்கிறது . மேலும் , நிலத்திற்கு மேல் உள்ள வான்வெளி , வீடு , விளைநிலம் , கட்டடங்கள் அமைகின்ற வீதிகள் , கண்ணுக்குப் புலனாகின்ற சுற்றுவெளி , புலனாகாத வெளி போன்றவற்றை உள்ளடக்கியது . தொல்காப்பியத்தில் திணை அடிப்படையில் தொடங்கும் வெளி பிரிவினை , சோழர் காலத்தில் சாதியடிப்படையில் நிலைபெறத் தொடங்கிப் பின்னர் நிலைபெற்று , இக்காலம் வரை நடைமுறையில் உள்ளது . இந்நூலில் பதினொரு தலைப்புக்களில் ‘ வெளி ’ சார்ந்த நிகழ்வுகளை விவரித்துள்ளார் . தமிழ்ச் சிந்தனை மரபில் வெளி தமிழ் சிந்தனை மரபில் நிலமும் பொழுதும் இன்றியமையாதன . இவற்றின் மேல்தான் உரிபொருளான வாழ்வு நடைபெறுகிறது . அகப்பொருளும் , புறப்பொருளும் நிலம் , பொழுது சார்ந்தே அமைகின்றன . நிலத்தைக் கைப்பற்றும் செயல் வீரர்கள் சார்ந்தவையாக எண்ணப்படுகின்றன . அ . மார்க்ஸ் என்பவர் ” நிலமென்பது வணிகர்களுக்கு விற்பனைப் பொருளாகவும் , புலம் பெயர்ந்த மக்களுக்கு இழந்த சொர்க்கமாகவு...