மதுரை சென்ற அனுபவங்களாக ... ‘கோயில்களின் நகரம்’ மற்றும் ‘தமிழ்நாட்டின் கலாச்சாரத் தலைநகரம்’ என்று அழைக்கப்படும் மதுரைக்கு (20.12.2025) நானும் என் தோழி என்னுடன் கல்லூரியில் பணியாற்றும் பேராசிரியர் விஜயலட்சுமி அவர்களும் சென்றோம் . நாங்கள் கடந்த 2017 – ஆம் ஆண்டு முதல் வருடத்திற்கு இரண்டு அல்லது மூன்று முறை சென்று வருவோம் . இந்த ஆண்டு நாங்களும் மற்றொரு சகோதரி முசிறி அரசு கல்லூரியில் பணியாற்றும் தமிழ்த்துறை இணைப் பேராசிரியர் பாக்கியரதி அவர்களும் சேர்ந்து சென்றோம் . இந்த அனுபவம் மிகவும் மகிழ்ச்சியாகவும் , புது அனுபவமாகவும் இருந்தது . இதை உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சியடைகிறேன் . இந்த முறை மதுரையில் ஒத்தக்கடையில் உள்ள யோகநரசிம்மர் கோவில் , ப்ரத்தியங்கரா தேவி , முருகன் கோவில் , மதுரை மீனாட்சி அம்மன் கோவில் ஆகிய கோவில்களுக்கு மட்டும் தான் சென்றோம் . மதியம் 2மணிக்கு மேல் சிவா டெக்ஸ்டைல் என்ற புதியதாக ஆரம்பித்துள்ள கடைக்குச் சென்றோம். 4.30 மணி வரை சேலைகள் வாங்கினோம். பின்பு ம...
தமிழ் சிந்தனை மரபில் ‘வெளி' யும் காலமும் ‘ வெளி ’ என்பது நிலத்தையும் , நிலத்திற்கு மேலான பரப்பையும் குறிக்கிறது . மேலும் , நிலத்திற்கு மேல் உள்ள வான்வெளி , வீடு , விளைநிலம் , கட்டடங்கள் அமைகின்ற வீதிகள் , கண்ணுக்குப் புலனாகின்ற சுற்றுவெளி , புலனாகாத வெளி போன்றவற்றை உள்ளடக்கியது . தொல்காப்பியத்தில் திணை அடிப்படையில் தொடங்கும் வெளி பிரிவினை , சோழர் காலத்தில் சாதியடிப்படையில் நிலைபெறத் தொடங்கிப் பின்னர் நிலைபெற்று , இக்காலம் வரை நடைமுறையில் உள்ளது . இந்நூலில் பதினொரு தலைப்புக்களில் ‘ வெளி ’ சார்ந்த நிகழ்வுகளை விவரித்துள்ளார் . தமிழ்ச் சிந்தனை மரபில் வெளி தமிழ் சிந்தனை மரபில் நிலமும் பொழுதும் இன்றியமையாதன . இவற்றின் மேல்தான் உரிபொருளான வாழ்வு நடைபெறுகிறது . அகப்பொருளும் , புறப்பொருளும் நிலம் , பொழுது சார்ந்தே அமைகின்றன . நிலத்தைக் கைப்பற்றும் செயல் வீரர்கள் சார்ந்தவையாக எண்ணப்படுகின்றன . அ . மார்க்ஸ் என்பவர் ” நிலமென்பது வணிகர்களுக்கு விற்பனைப் பொருளாகவும் , புலம் பெயர்ந்த மக்களுக்கு இழந்த சொர்க்கமாகவு...