மதுரை சென்ற அனுபவங்களாக ... ‘கோயில்களின் நகரம்’ மற்றும் ‘தமிழ்நாட்டின் கலாச்சாரத் தலைநகரம்’ என்று அழைக்கப்படும் மதுரைக்கு (20.12.2025) நானும் என் தோழி என்னுடன் கல்லூரியில் பணியாற்றும் பேராசிரியர் விஜயலட்சுமி அவர்களும் சென்றோம் . நாங்கள் கடந்த 2017 – ஆம் ஆண்டு முதல் வருடத்திற்கு இரண்டு அல்லது மூன்று முறை சென்று வருவோம் . இந்த ஆண்டு நாங்களும் மற்றொரு சகோதரி முசிறி அரசு கல்லூரியில் பணியாற்றும் தமிழ்த்துறை இணைப் பேராசிரியர் பாக்கியரதி அவர்களும் சேர்ந்து சென்றோம் . இந்த அனுபவம் மிகவும் மகிழ்ச்சியாகவும் , புது அனுபவமாகவும் இருந்தது . இதை உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சியடைகிறேன் . இந்த முறை மதுரையில் ஒத்தக்கடையில் உள்ள யோகநரசிம்மர் கோவில் , ப்ரத்தியங்கரா தேவி , முருகன் கோவில் , மதுரை மீனாட்சி அம்மன் கோவில் ஆகிய கோவில்களுக்கு மட்டும் தான் சென்றோம் . மதியம் 2மணிக்கு மேல் சிவா டெக்ஸ்டைல் என்ற புதியதாக ஆரம்பித்துள்ள கடைக்குச் சென்றோம். 4.30 மணி வரை சேலைகள் வாங்கினோம். பின்பு ம...
தொலைநோக்கு ( புத்தக மதிப்புரை ) இன்று நாம் புத்தக மதிப்புரை சிறப்பு நிகழ்ச்சிக்காக , தொலைநோக்கு என்னும் தலைப்பில் முனைவர் ஆ . மணவழகன் அவர்கள் எழுதிய புத்தகத்தைப் பார்ப்போம் . இப்புத்தகத்தைச் சென்னை , அய்யனார் பதிப்பகம் வெளியிட்டுள்ளார்கள் . முனைவர் ஆ . மணவழகன் சேலம் மாவட்டம் கெங்கவல்லியைச் சேர்ந்தவர் . சென்னை உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் முனைவர் பட்டம் பெற்றவர் . செம்மொழித் தமிழுக்கான குடியரசுத் தலைவரின் ‘ இளம் தமிழ் அறிஞர் ’ என்ற விருதினைப் பெற்றவர் . தற்பொழுது எஸ் . ஆர் . எம் பல்கலைக்கழகத்தில் தமிழ்த்துறைத் தலைவராகப் பணியாற்றி வருகிறார் . இத்தகைய சிறப்புமிக்க ஆசிரியரின் நூலான ‘ தொலை நோக்கு ’ என்னும் ஆய்வு நூலில் , இக்கால சமூகத் தேவைகளையும் , பழந்தமிழர் சமூக ச் சிந்தனைகளையும் ஒருங்கே கொண்டு விளக்கும் வகையில் இந்நூலை இயற்றியுள்ளார் . பழந்தமிழர் இலக்கியப் பதிவுகளைக் கொண்டு , அக்காலச் சமூகத்தின் முன்னேற்றத்திற்கு அவர்களால் முன்னெடுக்கப்பட்ட தொலை நோக்குச் சிந்தனைகளை முதன்மை நோக்கமாகவும் , ...