Skip to main content

வாழ்க்கையின் வெற்றியில் தன்னம்பிக்கை (புத்தக மதிப்புரை)

  வாழ்க்கையின் வெற்றியில் தன்னம்பிக்கை ( புத்தக மதிப்புரை )               புத்தக மதிப்புரையில் முனைவர் சி . இலட்சுமணன் அவர்கள் எழுதிய ‘ வாழ்க்கையின் வெற்றியில் தன்னம்பிக்கை ’ என்ற   புத்தகத்தைப் பார்ப்போம் . இந்நூல்   2023 - ஆம் ஆண்டு ,   குமரி மாவட்டம் , தமிழ்ச் செம்மொழி வரலாற்று ஆய்வு மையம் வெளியிட்டுள்ளார்கள். பக்கங்கள் 205,   விலை 1 50 ரூபாய்.             முனைவர் சி . இலட்சுமணன் அவர்கள் , தமிழ்ச் செம்மொழி வரலாற்று ஆய்வு மையத்தின் விடிவெள்ளி ; சுயமுன்னேற்றத்திற்கான நூல்களை எழுதி வருகின்ற சமுதாயச் சிற்பி ; தமிழாய்வுக் களஞ்சியம் என்னும் இதழின் ஆசிரியராக இருந்து சிறப்புடன் நடத்தி வருகிறார் . பத்துக்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார் .             நூலாசிரியர் அவர்கள் தமிழ்ப் பல்கலைக் கழகத்தில் ஓலைச் சுவடித் துறையின் தலைவராக ,   பணியாற்றிய பொழுது பல்வேறு ஊர்களுக்குப் பயணம் ...

சிகாகோ to திருச்சி வந்த அனுபவங்களாக…

 சிகாகோ to திருச்சி வந்த அனுபவங்களாக

   நானும் எங்கள் மகள் குடும்பமும் சூன் மாதம் 5 - ந் தேதி வியாழன் கிழமை சின்சினாட்டியிலிருந்து சிகாகோ வந்தோம். அங்கு அவர்களின்  நண்பர் வீட்டில் தங்கியிருந்தோம். சிகாகோவில் மிச்சிகன் ஏரி, மில்லினியம் பூங்கா, பக்கிம்ஹாம் நீருற்று என்று ஒரு சில இடங்களைப் பார்த்தோம்.  சூன் 7 - ந் தேதி சனிக்கிழமை மாலை 4.15 மணிக்கு விமான நிலையத்திற்கு வந்தடைந்தோம்.  இரவு  Emarites விமானம்  8.35 மணிக்குக் கிளம்பி, துபாய்க்கு இரவு 7.10 மணிக்கு வந்தடைந்தது. இந்த 13 மணிநேர விமான பயணத்தில் நான் மூன்று நான்கு தமிழ் சினிமா பார்த்தேன். நான்கு மணிநேரம் தூங்கினேன். விமான பயணம் மிகவும் சிறப்பாக அமைந்தது. துபாயில் இரவு 9.00 மணிக்குக் கிளம்பி சென்னைக்கு 9 -ந்தேதி திங்கள் கிழமை இரவு 2.30 மணிக்கு வந்தடைந்தது. பின்பு சென்னையிலிருந்து திருச்சி 8 மணிக்கு வந்தடைந்தேன். இந்த சின்சினாட்டியில் 49 நாள் இருந்த அனுபவம் மிகவும் பயனுள்ளதாகவும், மகிழ்ச்சியாகவும் அமைந்தது. அதுவும் என் மகள்  குடும்பம் பேத்தியுடன்  சேர்ந்து இருந்த அனுபவம் மிகவும் மன நிறைவாக இருந்தது. என்னுடைய விடுமுறை நாட்கள் இந்த ஆண்டு சிறப்பாக அமைந்தது.

மிச்சிகன் ஏரி



மிச்சிகன் ஏரியின் நன்னீர் ஏரியின் கரையில் அமைந்துள்ள சிகாகோ, இல்லினாய்ஸ் மாநிலத்தில் உள்ள ஒரு பெருநகர நகரமாகும். பெரும்பாலும் 'காற்றோட்ட நகரம்' என்று குறிப்பிடப்படும் இது அமெரிக்காவின் மூன்றாவது பெரிய நகரமாகும், மேலும் நிதி, தொழில் மற்றும் வணிகத்திற்கான முக்கிய மையமாகவும் உள்ளது. இந்த நகரம் ஈர்க்கக்கூடிய அருங்காட்சியகங்கள், சுவாரஸ்யமான கட்டிடக்கலை, அழகான பூங்காக்கள், உயரமான வானளாவிய கட்டிடங்கள், அழகிய கடற்கரைகள் மற்றும் USA டூர் பேக்கேஜ்களின் ஒரு பகுதியாகப் பார்வையிடத் தகுந்த உயர்மட்ட சுற்றுலா இடங்களால் சூழப்பட்டுள்ளது.

மில்லினியம் பூங்கா

                                             

மில்லினியம் பூங்கா என்பது மிச்சிகன் ஏரிக்கு அருகில் அமைந்துள்ள ஒரு பெரிய பொது பூங்கா ஆகும். 2004 ஆம் ஆண்டு திறக்கப்பட்டப் பூங்கா, சிகாகோவில் பார்வையிட சிறந்த இடங்களில் ஒன்றாகும். 25 ஏக்கர் பரப்பளவைக் கொண்ட இந்த பூங்கா, மேற்கில் மிச்சிகன் அவென்யூ, கிழக்கில் கொலம்பஸ் டிரைவ், வடக்கே ராண்டால்ஃப் தெரு மற்றும் தெற்கே மன்ரோ தெரு ஆகியவற்றால் சூழப்பட்டுள்ளது. இங்குள்ள முக்கிய சிறப்பம்சம் கிரவுன் ஃபவுண்டன் ஆகும், இது சிகாகோ குடிமக்களின் திட்டமிடப்பட்ட படங்களின் வாய்களிலிருந்து பாயும் நீரின் தோற்றத்தை அளிக்கும் பண்டைய கார்கோயிலின் அதிர்ச்சியூட்டும் நவீன விளக்கமாகும். இங்குள்ள மற்றொரு சிறப்பம்சம் 'தி பீன்' என்று அழைக்கப்படும் கிளவுட் கேட் ஆகும், இது நகரத்தின் வானலையை அதன் மேற்பரப்பில் பிரதிபலிக்கும் முற்றிலும் துருப்பிடிக்காத எஃகு தகடுகளால் ஆன நீள்வட்ட வடிவ சிற்பமாகும். இது ஆண்டுதோறும் நடைபெறும் கிராண்ட் பார்க் இசை விழா உட்பட பல முக்கியமான நிகழ்வுகளின் தளமாகும்.

பக்கிங்ஹாம் நீரூற்று

                            

புகழ்பெற்ற ஆர்ட் டெகோ பாணியில் வடிவமைக்கப்பட்ட பக்கிங்ஹாம் நீரூற்று, கிராண்ட் பூங்காவின் மையத்தில் அமைந்துள்ளது. 1927 -ஆம் ஆண்டு நிறுவப்பட்ட இந்த அசாதாரண நீரூற்று, உலகின் மிகப்பெரிய நீரூற்றுகளில் ஒன்றாகவும், சிகாகோவில் பார்க்க வேண்டிய இடமாகவும் கருதப்படுகிறது. இந்த நீரூற்று, ஜார்ஜியா இளஞ்சிவப்பு பளிங்குக் கல்லால் ரோகோகோ கேக் வடிவத்தில் கட்டப்பட்டுள்ளது மற்றும் மிச்சிகன் ஏரி முழுவதும் நான்கு மாநிலங்களைக் குறிக்கும் நான்கு கடல் குதிரை சிலைகளால் சூழப்பட்டுள்ளது. வெர்சாய்ஸில் உள்ள லடோனா நீரூற்றுக்குப் பிறகு இது கட்டிடக் கலைஞர் எட்வர்ட் பென்னட்டால் வடிவமைக்கப்பட்டது. இது பகலின் உச்ச நேரங்களில் செயல்படும் அதே வேளையில், மாலையில் விளக்குகளுடன் அதன் மாயாஜாலத்தைக் காட்டுகிறது. அழகான வடிவமைப்புகளை உருவாக்க 15,000 கேலன் தண்ணீர் நகரும் போது, ​​சிகாகோவில் பார்வையிட சின்னமான இடங்களைத் தேடும் அனைத்து சுற்றுலாப் பயணிகளும் கட்டாயம் பார்க்க வேண்டிய இடமாக இந்த நீரூற்று மாறுகிறது.

நேவி பியர்

                      

நேவி பியர் என்பது சிகாகோவின் மிச்சிகன் ஏரியின் கரையோரத்தில் அமைந்துள்ள 3,300 அடி நீளமுள்ள ஒரு கப்பல் தளமாகும். முதலில், இது 1916 -ஆம் ஆண்டு ஒரு பொழுதுபோக்கு பகுதி மற்றும் கப்பல் போக்குவரத்து வசதியாக திறக்கப்பட்டது. ஆனால் இப்போது, ​​இது சிகாகோவின் பிரபலமான சுற்றுலா தலங்களில் ஒன்றாகும், இது 50 ஏக்கர் தோட்டங்கள், திரையரங்குகள், அருங்காட்சியகங்கள், கடைகள், உணவகங்கள், இசை நிகழ்ச்சி அரங்குகள் மற்றும் பூங்காக்களைக் கொண்டுள்ளது. இந்த கப்பலில் 150 அடி பெர்ரிஸ் சக்கரம் மற்றும் ஒரு வரலாற்று சிறப்புமிக்க கேரோசல் ஆகியவை உள்ளன.

BAPS ஸ்ரீ சுவாமிநாராயண் மந்திர் வளாகம்

         இல்லினாய்ஸின் பார்ட்லெட்டில் உள்ள BAPS ஸ்ரீ சுவாமிநாராயண் மந்திர் வளாகம், ஆயிரக்கணக்கான உள்ளூர் குடிமக்கள் மற்றும் சிகாகோவிலிருந்து வருகை தரும் மக்களின் ஆர்வத்தையும் ஆச்சரியத்தையும் மையமாகக் கொண்டுள்ளது. நவீன தொழில்நுட்பத்துடன் பாரம்பரிய இந்திய கட்டிடக்கலையின் இணைவு அனைத்து தரப்பு மக்களையும் ஈர்த்துள்ளது. மந்திரின் கட்டிடக்கலை மற்றும் கலைத்திறனைக் கண்டு அனைவரும் ஆச்சிரியத்தில் ஆழ்த்தும் வகையில் அமைந்துள்ளது. 16 மாதங்களில் கட்டப்பட்ட இந்த பழங்கால வடிவமைப்பு மற்றும் வேலைப்பாடுகளின் தலைசிறந்த படைப்பு,  தன்னார்வலர்களின் முழுமையான அர்ப்பணிப்புக்குத் தக்க சான்றாகும்.

                                      

                              


சிகாகோவில் எனது அனுபவங்கள்

            சிகாகோவில் வானுயர கட்டடங்கள், மிகவும் அதிக பரப்பளவை கொண்ட ஏரி, பூங்கா என்று அனைத்தும் கண்ணுக்கும் மனதிற்கும் மகிழ்வாக அமைந்தது. 7 ந்தேதி சிகாகோ விமான நிலையத்தில் என் மகள், மருமகன், என்னுடைய செல்ல பெயர்த்தி என்று அனைவரையும் பிரிந்து வருவது மிகவும் வருத்தமாக இருந்தது. இருந்தாலும் எதுவும் நிரந்தரமில்லை என்பதற்கேற்ப மனதை திடப்படுத்திக் கொண்டு கிளம்பினேன்.

       நம்முடைய தமிழ்நாட்டிற்கு வந்தவுடன் இனம்புரியாத மகிழ்ச்சியாக இருந்தது. ஏனென்றால் நம் மொழி. நாம் வாழும் இடத்தில் மொழி முக்கியம். அமெரிக்காவில் மக்கள் இன்முகத்துடன் இருந்தார்கள். ஆனால் பேசும் மொழியில் நமக்கு பிரச்சனை. ஏனவே Hi, Thank you, Sorry என்ற ஒரு சில ஆங்கில வார்த்தைகள் மட்டுமே பயன்படுத்தினேன். நினைப்பதை நினைத்த நேரத்தில் பேசுவதற்கு என் மகள், மருமகன், தமிழ் நாட்டு நண்பர்கள் தவிர வேறு யாரிடமும்  மனம் விட்டு பேசமுடியவில்லை. என்னுடைய பெயர்த்தியிடமும் பேசி பழக மொழி தடையாக உள்ளது. பெயர்த்திக்குத் தமிழில் ஒரு சில வார்த்தைகள் தவிர தெரியவில்லை. ஆகையால் என்னுடைய அன்பை வெளிப்படுத்த என்னால் முழுமனதுடன் பழக முடியவில்லை. ஆகையால் எனக்கு மிகவும் வருத்தமாக உள்ளது. எனது மகள் குடும்பம் வெளிநாட்டில் வாழ்வது ஒரு பக்கம் மகிழ்ச்சியாக இருந்தாலும், என்னுடைய பெயர்த்தி இவ்வாறு தமிழில் பேசாமல் இருப்பது மிகவும் வருத்தமாக உள்ளது. ஒன்று பெற்றால் ஒன்று இழக்க நேரிடுகிறது.

நிறைவாக,

                                                       

            சென்னை வந்தடைந்தவுடன் தான் எனக்கு ஒன்று மனதில் தோன்றியது. பாரதியார் கூறியது போல ”செந்தமிழ் நாடெனும் போதினிலே, இன்ப தேன் வந்து பாயுது காதினிலே” என்பது போல சென்னை வந்தவுடன் தான் தமிழ் மொழியில் மனம் விட்டு பேச முடிந்தது. நம் நாட்டில் நாம் இருப்பது சுதந்திரமாக பேசவும், மனம் விட்டு பழகவும் மிகப் பெரிய மகிழ்ச்சி தான்.

           







Comments

Popular posts from this blog

பொய்யில் புலவன் பொய்யா மொழிகள்

திருக்குறளில் எனது சிறு முயற்சியாக… .  " பொய்யில் புலவன் பொய்யா மொழிகள்"  என்ற இத்தலைப்பில் அமைந்த 133 வரிகள் கொண்ட இப்படைப்பு முருகனின் ” கந்த சஷ்டி  கவசம் ” போன்று உருவாக்கப்பட்டது. இப்பகுதி அறத்துப்பால் 38  அதிகாரங்கள், பொருட்பால் 70  அதிகாரங்களிலிருந்து மட்டும் சுருங்கச் சொல்லி விளங்க வைத்தல் என்ற முறையில், திருக்குறளின் சாராக அமைத்து வழங்கியுள்ளேன். அறமும், பொருளும் ஒருவருக்கு அமைந்தால் இன்பம் தானாகக் கிட்டும் என்ற நோக்கத்தில் அமைக்கப்பட்டது. ”பொய்யில் புலவன் பொய்யா மொழிகள்” காக்க காக்க அறத்தைக் காக்க (1) காக்க காக்கக் குறளைக் காக்க உலக மொழிகளில் ஒப்பற்ற நூலாம், நோக்க நோக்க பெயா்த்து நோக்க மனிதன் கற்று மனிதம் காக்க ஐம்பொறி உணா்வை காக்க காக்க புகழுடன் வாழ ஒழுக்கம் காக்க அறநெறி வாழ்வை இறைவழி காக்க வானம் பொய்யா வளத்தைக் காக்க பசிப்பிணி யில்லா உலகைக் காக்க பற்றற்ற வாழ்வை பரிவுடன் காக்க அறத்தைக் காக்க அன்பைக் காக்க (2) குறையிலா வாழ்வை குணமுடன் காக்க இல்லற வாழ்வுடன் நல்லறம் காக்க பண்பொடு பயனும் அறத்துடன் காக்க வாழ்க வாழ்க வளமுடன் வாழ்க வாழ்க வாழ்க...

எண்ணம் போல் வாழ்வு

                                   எண்ணம் போல் வாழ்வு   நினைவுகளே பழக்கவழக்கங்களாக மாறுகின்றன. எனவே தான் எண்ணம் போல் வாழ்வு அனைவருக்கும் அமைகிறது. வெற்றி பெற்ற அனைவரும் பிறரைத் தன் நடத்தையால் மகிழ்விக்க நினைத்தவர்களே என்பதை நாம் நினைவில் நிறுத்த வேண்டும். ·         வங்கியில் பணத்தைச் சேமிப்பதைவிட இதயத்தில் இனிய எண்ணங்களைச் சேமிப்பது மகிழ்ச்சியான வாழ்விற்கு உதவும் வைப்பு நிதியாகும். ·                    மனம் - மகிழ்ச்சி அளிக்காத நிகழ்வுகளை மறந்து விடும் இயல்புடையது. ·                      வெறுப்பு - மனத்தையும், உணர்வையும் பற்றிக் கொண்டுள்ள தொற்று நோய். எனவே வெறுப்பிற்கு விடுதலை தரும்வரை மகிழ்ச்சி நம்மை அணுகாது. ·         கடமையைச் செய்யுங்கள், மகிழ்ச்சியை அறுவடை செய்யலாம். நன்மை, தீமை என்று எது நடந்...

கோப்பெருஞ்சோழன் – பிசிராந்தையார் நட்பு

  கோப்பெருஞ்சோழன் – பிசிராந்தையார் நட்பு   வடக்கிருத்தல் தமிழரின் நம்பிக்கை சார்ந்த பழக்கவழக்கங்களில் வடக்கிருத்தலை ஆடவர் மேற்கொண்டனர். ஊருக்கு வடபால் ஓரிடத்தில் வடக்குத் திசை நோக்கி அமர்ந்த வண்ணம் உண்ணாநோன்பிருந்து உயிர்த்துறப்பதை ‘ வடக்கிருத்தல் ’ எனக் கொண்டனர். வடக்கிருக்க அடிப்படைக் காரணியாக அமைவன மானம் , வீரம் , நட்பு , தன்நோக்கம் நிறைவேறாமை எனலாம். வீரர் , புலவர் , மன்னர் ஆகியோர் வடக்கிருந்தமையை இலக்கியங்கள் வாயிலாக அறிய முடிகிறது. அவ்வாறு உயிர் துறப்பவர் துறக்கம் பெறுவர் என நம்பினர்.       கலைக்களஞ்சியம் , வடக்கிருத்தலை ‘ உத்ரக மனம் ’ என்றும் ‘ மகாப் பிரத்தானம் ’ என்றும் கூறும். ‘ நாணத்தகு நிலை ’ நேர்ந்ததனாற் சிலர் வடக்கிருந்ததாகத் தமிழ் நூல்கள் கூறுகின்றன என்று கூறுகிறது.           கோப்பெருஞ்சோழன் வடக்கிருந்து உயிர் விட்டான். அவன் உயிர்விட்டப் பிறகு அவனை பார்க்காமலே நட்புக் கொண்டிருந்தப் பிசிராந்தையாரும், சோழனுடன் இருந்த பொத்தியார் என்ற புலவரும் அவன் வடக்கிருந்த இடத்தின் அருகில் வடக்கிருந்து உயிர்...