Skip to main content

Posts

Showing posts from July, 2025

புத்தாண்டு வாழ்த்துகள்!

 அன்பில் தொடங்கி ஆனந்தத்தில் முடியட்டும்! புன்னகையில் தொடங்கி மகிழ்ச்சியில் முடியட்டும்! சிந்தனையில் தொடங்கி செயலில் முடியட்டும்! துன்பங்கள் நீங்கி இன்பங்கள் பிறக்கட்டும்!!! அனைத்து நண்பர்களுக்கும் புத்தாண்டு நல் வாழ்த்துகள்!!!

பழமொழிகள் உணர்த்தும் வாழ்க்கைத் தத்துவங்கள்

  பழமொழிகள் உணர்த்தும் வாழ்க்கைத் தத்துவங்கள்             சங்கம் கண்ட தங்கத் தமிழின் அமுத ஊற்றுகளே பழமொழிகள் . பழமையும் பெருமையும் கொண்ட அம்மொழிகள் நம் உளவியல் , உணர்வியல் கூறுகளை மட்டுமின்றி நாட்டு நடப்பு மற்றும் கலை , கலாச்சாரப் பகிர்வுகளையும் தன்னகத்தே கொண்டு இலங்குகின்றது . நமக்குள் தரும் வியப்பு . சின்னசிறு சொற்றொடரால் காலந்தோறும் வாய்மொழியாகவே வழங்கி மக்களால் இன்றும் வழக்கினில் இருப்பதே அவற்றின் தொன்மைக்குச் சான்றாகும் . பழமொழிகள் இறைமை சார்ந்த பழமொழிகள் , இல்லறம் சார்ந்த பழமொழிகள் , திருமணம் சார்ந்த பழமொழிகள் , உறவுமுறை பற்றிய பழமொழிகள் , பெண்மை நிலை பற்றிய பழமொழிகள் , உளவியல் , மருத்துவம் , அறிவியல் , அறிவுரை என்று அனைத்து நிலைகளிலும் பழமொழிகள் மனிதன் வாழ்வில்   இடம்பெற்று வழிநடத்துகிறது . ·         சுண்டைக்காய் கால் பணம் சுமை கூலி முக்கால் பணம்           சுண்டைக்காய் என்பது சாதாரணக் காய் வகை ! மிகவும் சிறிய அளவிலான மருத்துவ குணம் ...

தமிழர் பண்பாட்டில் விளையாட்டுக்கள் (புத்தக மதிப்புரை)

  தமிழர் பண்பாட்டில் விளையாட்டுக்கள்   இன்று (3.07.2025) நாம் புத்தக மதிப்புரை சிறப்பு நிகழ்ச்சிக்காக , தமிழர் பண்பாட்டில் விளையாட்டுக்கள் என்னும் தலைப்பில் காந்தி கிராமியப் பல்கலைக் கழகம் , முனைவர் அ . பிச்சை , அவர்கள் எழுதிய புத்தகத்தைப் பார்ப்போம் . இப்புத்தகத்தைச் சென்னை , தமிழ்ப் புத்தகாலயம் வெளியிட்டுள்ளார்கள் . முதல் பதிப்பு 1983- ஆம் ஆண்டு , செப்டம்பர் மாதமும் , இரண்டாம் பதிப்பு 2002 - ஆம் ஆண்டு டிசம்பர் மாதமும் வெளியிட்டுள்ளார்கள் . தமிழர்களின் விளையாட்டுக்களை அறிந்து கொள்பவர்கள் அனைவருக்கும் இந்நூல் பெரிதும் பயன்படும்   என்பதில் ஐயமில்லை . இந்நூலில் உள்ள மொழிவழிப் பொழுது போக்குகள் என்னும் கட்டுரை மொழியியல் என்னும் இதழில் வெளியிடப்பட்டது . மேலும் கிட்டிப்புள் , பாவையர் ஆடும் பல்லாங்குழி , மஞ்சு விரட்டு ஆகிய கட்டுரைகள் வெவ்வேறு சந்தர்ப்பங்களில் தினமணிச் சுடரில் வெளிவந்த கட்டுரைகள் ஆகும் . தமிழர் பண்பாட்டில் விளையாட்டுக்கள் என்னும் இந்நூலில் விளையாட்டு – சில அடிப்படைக் கருத்துக்கள் , உடல்வளக் கல்வியின் வரலாறு , சங்க கால விளையாட்டுக்கள் , மொழிவழிப் ...

Popular posts from this blog

பொய்யில் புலவன் பொய்யா மொழிகள்

திருக்குறளில் எனது சிறு முயற்சியாக… .  " பொய்யில் புலவன் பொய்யா மொழிகள்"  என்ற இத்தலைப்பில் அமைந்த 133 வரிகள் கொண்ட இப்படைப்பு முருகனின் ” கந்த சஷ்டி  கவசம் ” போன்று உருவாக்கப்பட்டது. இப்பகுதி அறத்துப்பால் 38  அதிகாரங்கள், பொருட்பால் 70  அதிகாரங்களிலிருந்து மட்டும் சுருங்கச் சொல்லி விளங்க வைத்தல் என்ற முறையில், திருக்குறளின் சாராக அமைத்து வழங்கியுள்ளேன். அறமும், பொருளும் ஒருவருக்கு அமைந்தால் இன்பம் தானாகக் கிட்டும் என்ற நோக்கத்தில் அமைக்கப்பட்டது. ”பொய்யில் புலவன் பொய்யா மொழிகள்” காக்க காக்க அறத்தைக் காக்க (1) காக்க காக்கக் குறளைக் காக்க உலக மொழிகளில் ஒப்பற்ற நூலாம், நோக்க நோக்க பெயா்த்து நோக்க மனிதன் கற்று மனிதம் காக்க ஐம்பொறி உணா்வை காக்க காக்க புகழுடன் வாழ ஒழுக்கம் காக்க அறநெறி வாழ்வை இறைவழி காக்க வானம் பொய்யா வளத்தைக் காக்க பசிப்பிணி யில்லா உலகைக் காக்க பற்றற்ற வாழ்வை பரிவுடன் காக்க அறத்தைக் காக்க அன்பைக் காக்க (2) குறையிலா வாழ்வை குணமுடன் காக்க இல்லற வாழ்வுடன் நல்லறம் காக்க பண்பொடு பயனும் அறத்துடன் காக்க வாழ்க வாழ்க வளமுடன் வாழ்க வாழ்க வாழ்க...

எண்ணம் போல் வாழ்வு

                                   எண்ணம் போல் வாழ்வு   நினைவுகளே பழக்கவழக்கங்களாக மாறுகின்றன. எனவே தான் எண்ணம் போல் வாழ்வு அனைவருக்கும் அமைகிறது. வெற்றி பெற்ற அனைவரும் பிறரைத் தன் நடத்தையால் மகிழ்விக்க நினைத்தவர்களே என்பதை நாம் நினைவில் நிறுத்த வேண்டும். ·         வங்கியில் பணத்தைச் சேமிப்பதைவிட இதயத்தில் இனிய எண்ணங்களைச் சேமிப்பது மகிழ்ச்சியான வாழ்விற்கு உதவும் வைப்பு நிதியாகும். ·                    மனம் - மகிழ்ச்சி அளிக்காத நிகழ்வுகளை மறந்து விடும் இயல்புடையது. ·                      வெறுப்பு - மனத்தையும், உணர்வையும் பற்றிக் கொண்டுள்ள தொற்று நோய். எனவே வெறுப்பிற்கு விடுதலை தரும்வரை மகிழ்ச்சி நம்மை அணுகாது. ·         கடமையைச் செய்யுங்கள், மகிழ்ச்சியை அறுவடை செய்யலாம். நன்மை, தீமை என்று எது நடந்...

மனிதனாக வாழ ...

  மனிதனாக வாழ ... ·                       பிறர் உன்னை தூற்றும் பொழுது தலை நிமிர்ந்து நில். ·     பொறாமை, கோபம், வீண் மயக்கம் போன்ற குணங்களை விரோதிகளாக எண்ணுதல். ·         வெற்றி -   தோல்வி,   இன்பம் – துன்பம் இரண்டையும் சமமாக பாவித்தல்.             உண்மைக்குப் புறம்பானவற்றைச்  செய்யாதிருத்தல். ·     நண்பர்கள் இல்லை என்றாலும் பரவாயில்லை. பகைவர்கள் இல்லாமல் வாழ முயற்சி செய்தல். ·                 ம னத்திடத்தோடு வாழ்தல்,  ஏற்றத் தாழ்வு இல்லா மனநிலையுடன் இருத்தல். ·             மனிதனுக்கு உரியது - கலங்காத அறிவு, அன்பு நிறைந்த மனம், ஆரோக்கியமான   உடல். ·                      எதற்கும் அஞ்சாதே -   பயம் நம்மை கோழையாக்கி விடும்.              எவரையும் வெறுக்...