Skip to main content

வாழ்க்கையின் வெற்றியில் தன்னம்பிக்கை (புத்தக மதிப்புரை)

  வாழ்க்கையின் வெற்றியில் தன்னம்பிக்கை ( புத்தக மதிப்புரை )               புத்தக மதிப்புரையில் முனைவர் சி . இலட்சுமணன் அவர்கள் எழுதிய ‘ வாழ்க்கையின் வெற்றியில் தன்னம்பிக்கை ’ என்ற   புத்தகத்தைப் பார்ப்போம் . இந்நூல்   2023 - ஆம் ஆண்டு ,   குமரி மாவட்டம் , தமிழ்ச் செம்மொழி வரலாற்று ஆய்வு மையம் வெளியிட்டுள்ளார்கள். பக்கங்கள் 205,   விலை 1 50 ரூபாய்.             முனைவர் சி . இலட்சுமணன் அவர்கள் , தமிழ்ச் செம்மொழி வரலாற்று ஆய்வு மையத்தின் விடிவெள்ளி ; சுயமுன்னேற்றத்திற்கான நூல்களை எழுதி வருகின்ற சமுதாயச் சிற்பி ; தமிழாய்வுக் களஞ்சியம் என்னும் இதழின் ஆசிரியராக இருந்து சிறப்புடன் நடத்தி வருகிறார் . பத்துக்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார் .             நூலாசிரியர் அவர்கள் தமிழ்ப் பல்கலைக் கழகத்தில் ஓலைச் சுவடித் துறையின் தலைவராக ,   பணியாற்றிய பொழுது பல்வேறு ஊர்களுக்குப் பயணம் ...

‘சங்க இலக்கியங்களில் அரசியலும் அறவாழ்க்கையும்’ - நூல் வெளியீட்டு விழா



‘சங்க இலக்கியங்களில் அரசியலும் அறவாழ்க்கையும்’

நூல் வெளியீட்டு விழா

          திருவையாறு ஔவை அறக்கட்டளை நடத்திய பதின்மப் பெருவிழா நிகழ்ச்சியில் ஒன்றாக நூல் வெளியீட்டு விழாவும் நடந்தது. அந்த விழாவில் என்னுடைய நூலான சங்க இலக்கியங்களில் அரசியலும் அறவாழ்க்கையும் வெளியானது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. இதுவரை என்னுடைய வெளியிட்ட  பத்து நூல்களும் இதுபோல் வெளியிட்டதில்லை. பதினொன்றாவது நூலான தமிழ் இலக்கிய வரலாறு - சேலம் மகிழம் தமிழ்ச் சங்கத்தில் வெளியானது.

          சங்க இலக்கியங்களில் அரசியலும் அறவாழ்க்கையும் என்ற நூல் என்னுடைய முனைவர் பட்ட ஆய்வு நூலாகும். முனைவர் பட்டத்தில் சங்க இலக்கியத்தில் வரலாற்றுக் கூறுகள் என்னும் தலைப்பில் ஆய்வு மேற்கொண்டேன். அந்தத் தலைப்பினை சிறிது மாற்றம் செய்து சங்க இலக்கியங்களில் அரசியலும் அறவாழ்க்கையும் என்னும் தலைப்பில் இந்த பதின்மப் பெருவிழாவில் வெளியிடப்பட்டது.  மேலும் மனதிற்கு நெகிழ்வை ஏற்படுத்தும் நிகழ்வாக எனக்குச் சிறந்த நூலாசிரியர் விருதினை வழங்கிக் கௌரவப்படுத்தினார்கள். நூலினை வெளியிட்டு விருதினையும் வழங்கி சிறப்பு செய்த ஔவை அடிபொடி முனைவர் மு. கலைவேந்தன் ஐயா அவர்களுக்கு நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

                                   

                                                  


     இவ்விழாவை கலைவேந்தன் ஐயா அவர்கள் மிகச் சிறந்த முறையில் நடத்தினார்கள். இதுவரை நான் அவர்களை நேரில் பார்த்ததில்லை. அன்று தான் முதன் முதலில் பார்த்தேன். நிகழ்ச்சியை நேரம் தாமதிக்காமல் தேனீ போல் சுறுசுறுப்பாக, மிக நேர்த்தியாகவும் மிகவும் அழகாகவும் நடத்தினார்கள். அயல்நாட்டில் உள்ளவர்களும் இணையவழியில் பங்காற்றி சிறப்பு செய்தார்கள். ஔவை கோட்ட அறக்கட்டளையில் உள்ள ஒவ்வொரு இடத்திலும் ஐயா அவர்களின் தமிழ்ப்பற்று வெளிபட்டது. ஔவையில் கொன்றைவேந்தன் பாடல் வரிகள், ஔவைக்குக் கோவில், ஔவை பிராட்டியின் சிலை என்று அந்த கட்டிடத்தின் ஒவ்வொரு கோணத்திலும் தமிழின் பற்று வெளிபடுத்தி நிற்கிறது. அதைப் பார்ப்பதற்கு மனநிறைவாக இருந்தது.



Comments

Popular posts from this blog

பொய்யில் புலவன் பொய்யா மொழிகள்

திருக்குறளில் எனது சிறு முயற்சியாக… .  " பொய்யில் புலவன் பொய்யா மொழிகள்"  என்ற இத்தலைப்பில் அமைந்த 133 வரிகள் கொண்ட இப்படைப்பு முருகனின் ” கந்த சஷ்டி  கவசம் ” போன்று உருவாக்கப்பட்டது. இப்பகுதி அறத்துப்பால் 38  அதிகாரங்கள், பொருட்பால் 70  அதிகாரங்களிலிருந்து மட்டும் சுருங்கச் சொல்லி விளங்க வைத்தல் என்ற முறையில், திருக்குறளின் சாராக அமைத்து வழங்கியுள்ளேன். அறமும், பொருளும் ஒருவருக்கு அமைந்தால் இன்பம் தானாகக் கிட்டும் என்ற நோக்கத்தில் அமைக்கப்பட்டது. ”பொய்யில் புலவன் பொய்யா மொழிகள்” காக்க காக்க அறத்தைக் காக்க (1) காக்க காக்கக் குறளைக் காக்க உலக மொழிகளில் ஒப்பற்ற நூலாம், நோக்க நோக்க பெயா்த்து நோக்க மனிதன் கற்று மனிதம் காக்க ஐம்பொறி உணா்வை காக்க காக்க புகழுடன் வாழ ஒழுக்கம் காக்க அறநெறி வாழ்வை இறைவழி காக்க வானம் பொய்யா வளத்தைக் காக்க பசிப்பிணி யில்லா உலகைக் காக்க பற்றற்ற வாழ்வை பரிவுடன் காக்க அறத்தைக் காக்க அன்பைக் காக்க (2) குறையிலா வாழ்வை குணமுடன் காக்க இல்லற வாழ்வுடன் நல்லறம் காக்க பண்பொடு பயனும் அறத்துடன் காக்க வாழ்க வாழ்க வளமுடன் வாழ்க வாழ்க வாழ்க...

எண்ணம் போல் வாழ்வு

                                   எண்ணம் போல் வாழ்வு   நினைவுகளே பழக்கவழக்கங்களாக மாறுகின்றன. எனவே தான் எண்ணம் போல் வாழ்வு அனைவருக்கும் அமைகிறது. வெற்றி பெற்ற அனைவரும் பிறரைத் தன் நடத்தையால் மகிழ்விக்க நினைத்தவர்களே என்பதை நாம் நினைவில் நிறுத்த வேண்டும். ·         வங்கியில் பணத்தைச் சேமிப்பதைவிட இதயத்தில் இனிய எண்ணங்களைச் சேமிப்பது மகிழ்ச்சியான வாழ்விற்கு உதவும் வைப்பு நிதியாகும். ·                    மனம் - மகிழ்ச்சி அளிக்காத நிகழ்வுகளை மறந்து விடும் இயல்புடையது. ·                      வெறுப்பு - மனத்தையும், உணர்வையும் பற்றிக் கொண்டுள்ள தொற்று நோய். எனவே வெறுப்பிற்கு விடுதலை தரும்வரை மகிழ்ச்சி நம்மை அணுகாது. ·         கடமையைச் செய்யுங்கள், மகிழ்ச்சியை அறுவடை செய்யலாம். நன்மை, தீமை என்று எது நடந்...

கோப்பெருஞ்சோழன் – பிசிராந்தையார் நட்பு

  கோப்பெருஞ்சோழன் – பிசிராந்தையார் நட்பு   வடக்கிருத்தல் தமிழரின் நம்பிக்கை சார்ந்த பழக்கவழக்கங்களில் வடக்கிருத்தலை ஆடவர் மேற்கொண்டனர். ஊருக்கு வடபால் ஓரிடத்தில் வடக்குத் திசை நோக்கி அமர்ந்த வண்ணம் உண்ணாநோன்பிருந்து உயிர்த்துறப்பதை ‘ வடக்கிருத்தல் ’ எனக் கொண்டனர். வடக்கிருக்க அடிப்படைக் காரணியாக அமைவன மானம் , வீரம் , நட்பு , தன்நோக்கம் நிறைவேறாமை எனலாம். வீரர் , புலவர் , மன்னர் ஆகியோர் வடக்கிருந்தமையை இலக்கியங்கள் வாயிலாக அறிய முடிகிறது. அவ்வாறு உயிர் துறப்பவர் துறக்கம் பெறுவர் என நம்பினர்.       கலைக்களஞ்சியம் , வடக்கிருத்தலை ‘ உத்ரக மனம் ’ என்றும் ‘ மகாப் பிரத்தானம் ’ என்றும் கூறும். ‘ நாணத்தகு நிலை ’ நேர்ந்ததனாற் சிலர் வடக்கிருந்ததாகத் தமிழ் நூல்கள் கூறுகின்றன என்று கூறுகிறது.           கோப்பெருஞ்சோழன் வடக்கிருந்து உயிர் விட்டான். அவன் உயிர்விட்டப் பிறகு அவனை பார்க்காமலே நட்புக் கொண்டிருந்தப் பிசிராந்தையாரும், சோழனுடன் இருந்த பொத்தியார் என்ற புலவரும் அவன் வடக்கிருந்த இடத்தின் அருகில் வடக்கிருந்து உயிர்...