Skip to main content

இலக்கியங்களில் பொங்கல் திருநாள்!

  இலக்கியங்களில் பொங்கல் திருநாள்!   பொங்கல் திருநாளாம் இன்று நாம் அனைவரும் , ” உழுதுண்டு வாழும் தொழிலைக் காத்து உயர்வைக் கொடுக்கும் செல்வம் பெற்று உயிரினும் மேலான ஒழுக்கம் கொண்டு பாரோர் போற்றும் பண்பு பெற்று இடும்பை இல்லா இன்பம் போற்றி நிறைவான வாழ்வை நிலைபெற்று வாழ்வோம் ” என்ற வாழ்த்துக்களுடன் , நம் முன்னோர்கள் பொங்கல் திருநாளை எவ்வாறு கொண்டாடினார்கள் என்பதை இலக்கியங்கள் வாயிலாக நினைவுக் கூர்வோம் . இயற்கையை வணங்குதல் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் சொல்லாலும் பொருளாலும் சுவை மிகுந்த இலக்கியங்களைக் கொண்டு செந்தமிழ் மொழியைப் பேசிய மக்கள் ஈடு இணையற்ற பண்பாட்டுக்குச் சொந்தக்காரர்கள் . அவர்கள் , ·         அறிவியல் முதிர்ச்சியால் உலகத்திற்கே  வழிகாட்டியவர்கள் , ·    விண்ணையும் , மண்ணையும் ஆராய்ந்து வியப்புமிக்க நூல்களை உருவாக்கியவர்கள் , ·       வானிலைக் கணக்கீட்டு வல்லமையால் கோள்களின் அசைவுகளைக் குறியீடு செய்தவர்கள். ·         நட்சத்திரங்களைய...

பொங்கல் திருநாள் வாழ்த்துகள்

 

 

பொங்கல் திருநாள் வாழ்த்துகள்

 அனைவருக்கும் பொங்கல் திருநாள் வாழ்த்துகள்.

பொங்கல் திருநாள்

·         தமிழர்களுக்கு  உழைப்பின் பயனை கொண்டாடும்  திருநாள்,

·         இயற்கைக்கும் விவசாயிக்கும் நன்றி செலுத்தும் நாள்

·         தமிழர்களின் பண்பாடு, ஒற்றுமை, மனிதநேயம் ஆகியவற்றை உலகிற்கு எடுத்துரைக்கும் நாள்.

பொங்கல் திருநாளின் சிறப்பு

பொங்கல் என்பது அறுவடைத் திருநாள். வயல்களில் விளைந்த நெல்லை அரிசியாக மாற்றி, புதிய பானையில் பால் பொங்கச் செய்து, சூரியனுக்கும் இயற்கைக்கும் நன்றி கூறும் நாளாகும் . "பொங்கலோ பொங்கல்" என்ற மகிழ்ச்சிக் குரல், இல்லங்களிலும் மனங்களிலும் மகிழ்ச்சியை நிரப்பும் நாள்.

பொங்கலுக்குத்   தலைநாள் போகி பண்டிகைபோகி என்றால் இந்திரன்அவன் மேகங்களை இயக்கும் இறைவன்தமிழ்நாட்டார் பழங்காலத்தில் விளைநிலங்களை இறைவனாக வைத்து வணங்கினார்கள்சோழ நாட்டில் இந்திர விழா இருபத்தெட்டு நாள்  கொண்டாடப்பட்டது.

          பசியும் பிணியும் பகையும் நீங்கி

          வசியும் வளனும் சுரக்க

என  வானவரை வழிப்பட்டார்கள்அக்காலத்தில் சிறப்பாக நடைபெற்ற அத்திருநாள்இப்பொழுது குன்றிக் குறுகி ஒரு நாள் பண்டிகையாக நடைபெறுகின்றது.

பொங்கல் புதுநாள்

போகிப் பண்டிகையை அடுத்து வருவது பொங்கல் புதுநாள்அந்நாளில் ‘பழையன கழிதலும் புதியன புகுதலும் நிகழும்; வீட்டிலுள்ள பழம் பானைகள் விடைபெறும்; புதுப் பானைகளில் பொங்கல் வைத்துப் பால் பொங்கும் பொழுது, ”பொங்கலோ பொங்கல்என்னும் மங்கல ஒலி எங்கும் ஒலிக்கும். அப்பொழுது பெண்கள் குரவையாடுவர்; பிறகு பூவும் புகையும் பொங்கலும் கொண்டு இல்லுறைத் தெய்வத்தை வணங்குவர். அனைவரும் வயிரார உண்டு மகிழ்வர்.   

 மாட்டுப் பொங்கல்

பொங்கலுக்கு அடுத்த நாள் நிகழ்வது மாட்டுப் பொங்கல். நாட்டுப் புறங்களில் மிகச் சிறப்பாகக் கொண்டாடுவர். முற்காலத்தில் மாடு செல்வமாக மதிக்கப்பட்டது. மாடு என்ற சொல்லுக்கே செல்வம் என்னும் பொருள் உண்டு. நமக்காக நிலத்தில் அறுவடை காலத்தில் களத்து நெல்லைக் களஞ்சியத்தில் சேர்ப்பது மாடு. மாடு இல்லையென்றால் பண்ணையும் இல்லை. பயிர்த் தொழிலும் இல்லை.

அறந்தரு நெஞ்சொடு அருள் சுரந்து ஊட்டும் பசுக்களை ஆதரிக்கவேண்டும் என்பது தமிழர் கொள்கை. கழனியில் பணி செய்யும் காளை மாடுகளும், கறவை மாடுகளும் நோயின்றிச் செழித்து வளர்வதற்காக நிகழ்வது மாட்டுப் பொங்கல்.

      இனி வரும் காலங்களில் விவசாயம் பெருக வேண்டும். விளைநிலங்களை வீட்டு மனைகளாக மாற்றாமல் உழவுத் தொழிலை போற்ற வேண்டும். நம் நாட்டின் இயற்கை கொடுத்த  மண்வளம், மலை வளம், கனிம வளம் ஆகியவற்றைப் பாதுகாத்து வருங்கால சந்ததியினர் கையில் ஒப்படைக்க வேண்டும்.

காணும் பொங்கல்

உறவினர்கள் ஒன்றுகூடி மகிழ்ச்சியைப் பகிரும் நாள். இந்த நான்கு நாட்களும் தமிழர்களின் வாழ்க்கையில் ஒவ்வொரு அம்சத்தையும் பிரதிபலிக்கின்றன.

இன்றைய நவீன காலத்தில் பொங்கல்

இன்றைய நவீன வாழ்க்கை முறையிலும் பொங்கல் திருநாள் தனது முக்கியத்துவத்தை இழக்கவில்லை. நகரங்களில் வசிப்பவர்களும் தங்கள் ஊர்களுக்குச் சென்று குடும்பத்துடன் பொங்கலைக் கொண்டாடுகின்றனர். இது பண்பாட்டை காக்கும் ஒரு முக்கிய நிகழ்வாகும்.

நிறைவாக

பொங்கல் திருநாள் தமிழர்களின் வாழ்வியலை பிரதிபலிக்கும் ஒரு சிறந்த திருவிழா. உழைப்பின் பெருமை, இயற்கையின் அவசியம், உறவுகளின் இனிமை ஆகியவற்றை நினைவூட்டும் இந்தத் திருநாளை மனமாரக் கொண்டாடுவோம். அனைவரின் வாழ்விலும் மகிழ்ச்சியும், இன்பமும் பெருகட்டும்.

உயிர்காக்கும் உணவை தரும்

உழவருக்குத் திருநாள்

நான் என்னும் எண்ணம் இன்றி

நாமெனும் உறவுகள் யாவும்

கூடி மகிழும் நாள்!

           பொங்கல் திருநாள் !

என்று கூறி மீண்டும் உலகில் உள்ள அனைத்துத் தமிழ் சொந்தங்கள் மற்றும் நண்பர்களுக்கும் பொங்கல் திருநாள் வாழ்த்துகள்.

 

         

 

Comments

Popular posts from this blog

பொய்யில் புலவன் பொய்யா மொழிகள்

திருக்குறளில் எனது சிறு முயற்சியாக… .  " பொய்யில் புலவன் பொய்யா மொழிகள்"  என்ற இத்தலைப்பில் அமைந்த 133 வரிகள் கொண்ட இப்படைப்பு முருகனின் ” கந்த சஷ்டி  கவசம் ” போன்று உருவாக்கப்பட்டது. இப்பகுதி அறத்துப்பால் 38  அதிகாரங்கள், பொருட்பால் 70  அதிகாரங்களிலிருந்து மட்டும் சுருங்கச் சொல்லி விளங்க வைத்தல் என்ற முறையில், திருக்குறளின் சாராக அமைத்து வழங்கியுள்ளேன். அறமும், பொருளும் ஒருவருக்கு அமைந்தால் இன்பம் தானாகக் கிட்டும் என்ற நோக்கத்தில் அமைக்கப்பட்டது. ”பொய்யில் புலவன் பொய்யா மொழிகள்” காக்க காக்க அறத்தைக் காக்க (1) காக்க காக்கக் குறளைக் காக்க உலக மொழிகளில் ஒப்பற்ற நூலாம், நோக்க நோக்க பெயா்த்து நோக்க மனிதன் கற்று மனிதம் காக்க ஐம்பொறி உணா்வை காக்க காக்க புகழுடன் வாழ ஒழுக்கம் காக்க அறநெறி வாழ்வை இறைவழி காக்க வானம் பொய்யா வளத்தைக் காக்க பசிப்பிணி யில்லா உலகைக் காக்க பற்றற்ற வாழ்வை பரிவுடன் காக்க அறத்தைக் காக்க அன்பைக் காக்க (2) குறையிலா வாழ்வை குணமுடன் காக்க இல்லற வாழ்வுடன் நல்லறம் காக்க பண்பொடு பயனும் அறத்துடன் காக்க வாழ்க வாழ்க வளமுடன் வாழ்க வாழ்க வாழ்க...

எண்ணம் போல் வாழ்வு

                                   எண்ணம் போல் வாழ்வு   நினைவுகளே பழக்கவழக்கங்களாக மாறுகின்றன. எனவே தான் எண்ணம் போல் வாழ்வு அனைவருக்கும் அமைகிறது. வெற்றி பெற்ற அனைவரும் பிறரைத் தன் நடத்தையால் மகிழ்விக்க நினைத்தவர்களே என்பதை நாம் நினைவில் நிறுத்த வேண்டும். ·         வங்கியில் பணத்தைச் சேமிப்பதைவிட இதயத்தில் இனிய எண்ணங்களைச் சேமிப்பது மகிழ்ச்சியான வாழ்விற்கு உதவும் வைப்பு நிதியாகும். ·                    மனம் - மகிழ்ச்சி அளிக்காத நிகழ்வுகளை மறந்து விடும் இயல்புடையது. ·                      வெறுப்பு - மனத்தையும், உணர்வையும் பற்றிக் கொண்டுள்ள தொற்று நோய். எனவே வெறுப்பிற்கு விடுதலை தரும்வரை மகிழ்ச்சி நம்மை அணுகாது. ·         கடமையைச் செய்யுங்கள், மகிழ்ச்சியை அறுவடை செய்யலாம். நன்மை, தீமை என்று எது நடந்...

மனிதனாக வாழ ...

  மனிதனாக வாழ ... ·                       பிறர் உன்னை தூற்றும் பொழுது தலை நிமிர்ந்து நில். ·     பொறாமை, கோபம், வீண் மயக்கம் போன்ற குணங்களை விரோதிகளாக எண்ணுதல். ·         வெற்றி -   தோல்வி,   இன்பம் – துன்பம் இரண்டையும் சமமாக பாவித்தல்.             உண்மைக்குப் புறம்பானவற்றைச்  செய்யாதிருத்தல். ·     நண்பர்கள் இல்லை என்றாலும் பரவாயில்லை. பகைவர்கள் இல்லாமல் வாழ முயற்சி செய்தல். ·                 ம னத்திடத்தோடு வாழ்தல்,  ஏற்றத் தாழ்வு இல்லா மனநிலையுடன் இருத்தல். ·             மனிதனுக்கு உரியது - கலங்காத அறிவு, அன்பு நிறைந்த மனம், ஆரோக்கியமான   உடல். ·                      எதற்கும் அஞ்சாதே -   பயம் நம்மை கோழையாக்கி விடும்.              எவரையும் வெறுக்...