Skip to main content

வாழ்க்கையின் வெற்றியில் தன்னம்பிக்கை (புத்தக மதிப்புரை)

  வாழ்க்கையின் வெற்றியில் தன்னம்பிக்கை ( புத்தக மதிப்புரை )               புத்தக மதிப்புரையில் முனைவர் சி . இலட்சுமணன் அவர்கள் எழுதிய ‘ வாழ்க்கையின் வெற்றியில் தன்னம்பிக்கை ’ என்ற   புத்தகத்தைப் பார்ப்போம் . இந்நூல்   2023 - ஆம் ஆண்டு ,   குமரி மாவட்டம் , தமிழ்ச் செம்மொழி வரலாற்று ஆய்வு மையம் வெளியிட்டுள்ளார்கள். பக்கங்கள் 205,   விலை 1 50 ரூபாய்.             முனைவர் சி . இலட்சுமணன் அவர்கள் , தமிழ்ச் செம்மொழி வரலாற்று ஆய்வு மையத்தின் விடிவெள்ளி ; சுயமுன்னேற்றத்திற்கான நூல்களை எழுதி வருகின்ற சமுதாயச் சிற்பி ; தமிழாய்வுக் களஞ்சியம் என்னும் இதழின் ஆசிரியராக இருந்து சிறப்புடன் நடத்தி வருகிறார் . பத்துக்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார் .             நூலாசிரியர் அவர்கள் தமிழ்ப் பல்கலைக் கழகத்தில் ஓலைச் சுவடித் துறையின் தலைவராக ,   பணியாற்றிய பொழுது பல்வேறு ஊர்களுக்குப் பயணம் ...

பொங்கல் திருநாள் வாழ்த்துகள்

 

 

பொங்கல் திருநாள் வாழ்த்துகள்

 அனைவருக்கும் பொங்கல் திருநாள் வாழ்த்துகள்.

பொங்கல் திருநாள்

·         தமிழர்களுக்கு  உழைப்பின் பயனை கொண்டாடும்  திருநாள்,

·         இயற்கைக்கும் விவசாயிக்கும் நன்றி செலுத்தும் நாள்

·         தமிழர்களின் பண்பாடு, ஒற்றுமை, மனிதநேயம் ஆகியவற்றை உலகிற்கு எடுத்துரைக்கும் நாள்.

பொங்கல் திருநாளின் சிறப்பு

பொங்கல் என்பது அறுவடைத் திருநாள். வயல்களில் விளைந்த நெல்லை அரிசியாக மாற்றி, புதிய பானையில் பால் பொங்கச் செய்து, சூரியனுக்கும் இயற்கைக்கும் நன்றி கூறும் நாளாகும் . "பொங்கலோ பொங்கல்" என்ற மகிழ்ச்சிக் குரல், இல்லங்களிலும் மனங்களிலும் மகிழ்ச்சியை நிரப்பும் நாள்.

பொங்கலுக்குத்   தலைநாள் போகி பண்டிகைபோகி என்றால் இந்திரன்அவன் மேகங்களை இயக்கும் இறைவன்தமிழ்நாட்டார் பழங்காலத்தில் விளைநிலங்களை இறைவனாக வைத்து வணங்கினார்கள்சோழ நாட்டில் இந்திர விழா இருபத்தெட்டு நாள்  கொண்டாடப்பட்டது.

          பசியும் பிணியும் பகையும் நீங்கி

          வசியும் வளனும் சுரக்க

என  வானவரை வழிப்பட்டார்கள்அக்காலத்தில் சிறப்பாக நடைபெற்ற அத்திருநாள்இப்பொழுது குன்றிக் குறுகி ஒரு நாள் பண்டிகையாக நடைபெறுகின்றது.

பொங்கல் புதுநாள்

போகிப் பண்டிகையை அடுத்து வருவது பொங்கல் புதுநாள்அந்நாளில் ‘பழையன கழிதலும் புதியன புகுதலும் நிகழும்; வீட்டிலுள்ள பழம் பானைகள் விடைபெறும்; புதுப் பானைகளில் பொங்கல் வைத்துப் பால் பொங்கும் பொழுது, ”பொங்கலோ பொங்கல்என்னும் மங்கல ஒலி எங்கும் ஒலிக்கும். அப்பொழுது பெண்கள் குரவையாடுவர்; பிறகு பூவும் புகையும் பொங்கலும் கொண்டு இல்லுறைத் தெய்வத்தை வணங்குவர். அனைவரும் வயிரார உண்டு மகிழ்வர்.   

 மாட்டுப் பொங்கல்

பொங்கலுக்கு அடுத்த நாள் நிகழ்வது மாட்டுப் பொங்கல். நாட்டுப் புறங்களில் மிகச் சிறப்பாகக் கொண்டாடுவர். முற்காலத்தில் மாடு செல்வமாக மதிக்கப்பட்டது. மாடு என்ற சொல்லுக்கே செல்வம் என்னும் பொருள் உண்டு. நமக்காக நிலத்தில் அறுவடை காலத்தில் களத்து நெல்லைக் களஞ்சியத்தில் சேர்ப்பது மாடு. மாடு இல்லையென்றால் பண்ணையும் இல்லை. பயிர்த் தொழிலும் இல்லை.

அறந்தரு நெஞ்சொடு அருள் சுரந்து ஊட்டும் பசுக்களை ஆதரிக்கவேண்டும் என்பது தமிழர் கொள்கை. கழனியில் பணி செய்யும் காளை மாடுகளும், கறவை மாடுகளும் நோயின்றிச் செழித்து வளர்வதற்காக நிகழ்வது மாட்டுப் பொங்கல்.

      இனி வரும் காலங்களில் விவசாயம் பெருக வேண்டும். விளைநிலங்களை வீட்டு மனைகளாக மாற்றாமல் உழவுத் தொழிலை போற்ற வேண்டும். நம் நாட்டின் இயற்கை கொடுத்த  மண்வளம், மலை வளம், கனிம வளம் ஆகியவற்றைப் பாதுகாத்து வருங்கால சந்ததியினர் கையில் ஒப்படைக்க வேண்டும்.

காணும் பொங்கல்

உறவினர்கள் ஒன்றுகூடி மகிழ்ச்சியைப் பகிரும் நாள். இந்த நான்கு நாட்களும் தமிழர்களின் வாழ்க்கையில் ஒவ்வொரு அம்சத்தையும் பிரதிபலிக்கின்றன.

இன்றைய நவீன காலத்தில் பொங்கல்

இன்றைய நவீன வாழ்க்கை முறையிலும் பொங்கல் திருநாள் தனது முக்கியத்துவத்தை இழக்கவில்லை. நகரங்களில் வசிப்பவர்களும் தங்கள் ஊர்களுக்குச் சென்று குடும்பத்துடன் பொங்கலைக் கொண்டாடுகின்றனர். இது பண்பாட்டை காக்கும் ஒரு முக்கிய நிகழ்வாகும்.

நிறைவாக

பொங்கல் திருநாள் தமிழர்களின் வாழ்வியலை பிரதிபலிக்கும் ஒரு சிறந்த திருவிழா. உழைப்பின் பெருமை, இயற்கையின் அவசியம், உறவுகளின் இனிமை ஆகியவற்றை நினைவூட்டும் இந்தத் திருநாளை மனமாரக் கொண்டாடுவோம். அனைவரின் வாழ்விலும் மகிழ்ச்சியும், இன்பமும் பெருகட்டும்.

உயிர்காக்கும் உணவை தரும்

உழவருக்குத் திருநாள்

நான் என்னும் எண்ணம் இன்றி

நாமெனும் உறவுகள் யாவும்

கூடி மகிழும் நாள்!

           பொங்கல் திருநாள் !

என்று கூறி மீண்டும் உலகில் உள்ள அனைத்துத் தமிழ் சொந்தங்கள் மற்றும் நண்பர்களுக்கும் பொங்கல் திருநாள் வாழ்த்துகள்.

 

         

 

Comments

Popular posts from this blog

பொய்யில் புலவன் பொய்யா மொழிகள்

திருக்குறளில் எனது சிறு முயற்சியாக… .  " பொய்யில் புலவன் பொய்யா மொழிகள்"  என்ற இத்தலைப்பில் அமைந்த 133 வரிகள் கொண்ட இப்படைப்பு முருகனின் ” கந்த சஷ்டி  கவசம் ” போன்று உருவாக்கப்பட்டது. இப்பகுதி அறத்துப்பால் 38  அதிகாரங்கள், பொருட்பால் 70  அதிகாரங்களிலிருந்து மட்டும் சுருங்கச் சொல்லி விளங்க வைத்தல் என்ற முறையில், திருக்குறளின் சாராக அமைத்து வழங்கியுள்ளேன். அறமும், பொருளும் ஒருவருக்கு அமைந்தால் இன்பம் தானாகக் கிட்டும் என்ற நோக்கத்தில் அமைக்கப்பட்டது. ”பொய்யில் புலவன் பொய்யா மொழிகள்” காக்க காக்க அறத்தைக் காக்க (1) காக்க காக்கக் குறளைக் காக்க உலக மொழிகளில் ஒப்பற்ற நூலாம், நோக்க நோக்க பெயா்த்து நோக்க மனிதன் கற்று மனிதம் காக்க ஐம்பொறி உணா்வை காக்க காக்க புகழுடன் வாழ ஒழுக்கம் காக்க அறநெறி வாழ்வை இறைவழி காக்க வானம் பொய்யா வளத்தைக் காக்க பசிப்பிணி யில்லா உலகைக் காக்க பற்றற்ற வாழ்வை பரிவுடன் காக்க அறத்தைக் காக்க அன்பைக் காக்க (2) குறையிலா வாழ்வை குணமுடன் காக்க இல்லற வாழ்வுடன் நல்லறம் காக்க பண்பொடு பயனும் அறத்துடன் காக்க வாழ்க வாழ்க வளமுடன் வாழ்க வாழ்க வாழ்க...

எண்ணம் போல் வாழ்வு

                                   எண்ணம் போல் வாழ்வு   நினைவுகளே பழக்கவழக்கங்களாக மாறுகின்றன. எனவே தான் எண்ணம் போல் வாழ்வு அனைவருக்கும் அமைகிறது. வெற்றி பெற்ற அனைவரும் பிறரைத் தன் நடத்தையால் மகிழ்விக்க நினைத்தவர்களே என்பதை நாம் நினைவில் நிறுத்த வேண்டும். ·         வங்கியில் பணத்தைச் சேமிப்பதைவிட இதயத்தில் இனிய எண்ணங்களைச் சேமிப்பது மகிழ்ச்சியான வாழ்விற்கு உதவும் வைப்பு நிதியாகும். ·                    மனம் - மகிழ்ச்சி அளிக்காத நிகழ்வுகளை மறந்து விடும் இயல்புடையது. ·                      வெறுப்பு - மனத்தையும், உணர்வையும் பற்றிக் கொண்டுள்ள தொற்று நோய். எனவே வெறுப்பிற்கு விடுதலை தரும்வரை மகிழ்ச்சி நம்மை அணுகாது. ·         கடமையைச் செய்யுங்கள், மகிழ்ச்சியை அறுவடை செய்யலாம். நன்மை, தீமை என்று எது நடந்...

கோப்பெருஞ்சோழன் – பிசிராந்தையார் நட்பு

  கோப்பெருஞ்சோழன் – பிசிராந்தையார் நட்பு   வடக்கிருத்தல் தமிழரின் நம்பிக்கை சார்ந்த பழக்கவழக்கங்களில் வடக்கிருத்தலை ஆடவர் மேற்கொண்டனர். ஊருக்கு வடபால் ஓரிடத்தில் வடக்குத் திசை நோக்கி அமர்ந்த வண்ணம் உண்ணாநோன்பிருந்து உயிர்த்துறப்பதை ‘ வடக்கிருத்தல் ’ எனக் கொண்டனர். வடக்கிருக்க அடிப்படைக் காரணியாக அமைவன மானம் , வீரம் , நட்பு , தன்நோக்கம் நிறைவேறாமை எனலாம். வீரர் , புலவர் , மன்னர் ஆகியோர் வடக்கிருந்தமையை இலக்கியங்கள் வாயிலாக அறிய முடிகிறது. அவ்வாறு உயிர் துறப்பவர் துறக்கம் பெறுவர் என நம்பினர்.       கலைக்களஞ்சியம் , வடக்கிருத்தலை ‘ உத்ரக மனம் ’ என்றும் ‘ மகாப் பிரத்தானம் ’ என்றும் கூறும். ‘ நாணத்தகு நிலை ’ நேர்ந்ததனாற் சிலர் வடக்கிருந்ததாகத் தமிழ் நூல்கள் கூறுகின்றன என்று கூறுகிறது.           கோப்பெருஞ்சோழன் வடக்கிருந்து உயிர் விட்டான். அவன் உயிர்விட்டப் பிறகு அவனை பார்க்காமலே நட்புக் கொண்டிருந்தப் பிசிராந்தையாரும், சோழனுடன் இருந்த பொத்தியார் என்ற புலவரும் அவன் வடக்கிருந்த இடத்தின் அருகில் வடக்கிருந்து உயிர்...