மதுரை சென்ற அனுபவங்களாக ... ‘கோயில்களின் நகரம்’ மற்றும் ‘தமிழ்நாட்டின் கலாச்சாரத் தலைநகரம்’ என்று அழைக்கப்படும் மதுரைக்கு (20.12.2025) நானும் என் தோழி என்னுடன் கல்லூரியில் பணியாற்றும் பேராசிரியர் விஜயலட்சுமி அவர்களும் சென்றோம் . நாங்கள் கடந்த 2017 – ஆம் ஆண்டு முதல் வருடத்திற்கு இரண்டு அல்லது மூன்று முறை சென்று வருவோம் . இந்த ஆண்டு நாங்களும் மற்றொரு சகோதரி முசிறி அரசு கல்லூரியில் பணியாற்றும் தமிழ்த்துறை இணைப் பேராசிரியர் பாக்கியரதி அவர்களும் சேர்ந்து சென்றோம் . இந்த அனுபவம் மிகவும் மகிழ்ச்சியாகவும் , புது அனுபவமாகவும் இருந்தது . இதை உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சியடைகிறேன் . இந்த முறை மதுரையில் ஒத்தக்கடையில் உள்ள யோகநரசிம்மர் கோவில் , ப்ரத்தியங்கரா தேவி , முருகன் கோவில் , மதுரை மீனாட்சி அம்மன் கோவில் ஆகிய கோவில்களுக்கு மட்டும் தான் சென்றோம் . மதியம் 2மணிக்கு மேல் சிவா டெக்ஸ்டைல் என்ற புதியதாக ஆரம்பித்துள்ள கடைக்குச் சென்றோம். 4.30 மணி வரை சேலைகள் வாங்கினோம். பின்பு ம...
நாட்டுப்புற மக்களின் வழிபாடுகள் வழிபாடு என்னும் சொல் ‘ வழியில் செல்லுகை ’ என்னும் பொருளில் தொடங்கியது . பிறகாலத்தில் வணங்குதல் என்ற பொருளில் நிலைபெற்றது . பல பொருள்களில் வளர்ச்சி அடைந்த வழிபாடு என்னும் சொல் முழுக்க முழுக்க சமயக் கோட்பாட்டு அடிப்படைகளில் ஒன்றான வழிபட்டு நிற்றல் என்பதில் பொருள் கொண்டது . உள உடல் செயல்பாட்டையே தன் பொருளைக் கொண்டு வழிபாடு விளங்குகிறது . மக்கள் தங்களின் தெய்வங்களை வழிபடும் முறைகளைக் குறிக்க வழிபாடு என்ற சொல் உலக வழக்கில் கையாளப் பெறுகிறது . நாட்டுப்புற மக்களின் வழிபாட்டில் இயற்கை வழிபாடு , ஆவிகள் வழிபாடு , குலக்குறி வழிபாடு , புனிதப் போலிப் பொருள் வழிபாடு , முன்னோர் வழிபாடு ஆகியவை சிறப்பிடம் பெறுகின்றன . 1. இயற்கை வழிபாடு நாட்டுப்புற மக்கள் ஞாயிறு , சந்திரன் , மழை , மரம் , விலங்குகள் என்று வழிபடுகின்றனர் . இவ்வழிபாடு இன்றும் தொடர்ந்து நிலைபெற்றுள்ளது . இயற்கையின் மீது கொண்ட அச்சம் வழிபாடாக மலர்ந்தது என்று மானுடவியலாரும்...