கீழடிப் புதையல் இந்நூல் கீழடி அகழ்வாராய்ச்சி பற்றிய முழுமையான ஒரு புரிதலை அளிக்கும் ஆய்வு நூலாகும் . கீழடி அகழாய்வில் கண்டறியப்பட்ட முதுமக்கள் தாழிகள் , சுடுமண் சிற்பங்கள் , பகடைக்காய்கள் , செங்கல் கட்டுமானங்கள் இவைகளைக் கொண்டு கீழடி நாகரிகம் , பண்பாடு , தொழில் , வாணிகம் , பொருளாதாரம் , விளையாட்டு எனப் பல தலைப்புகளில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளை உள்ளடக்கியுள்ளது . இக்கருத்தை மையமாகக் கொண்டு கீழடிப் புதையல் என்னும் தலைப்பில் இந்நூலை எழுதியுள்ளார் ஆசிரியர் . இவர் சென்னையில் நடைபெற்ற 11- ஆம் உலக தமிழ் மாநாட்டில் அளித்த ஆய்வுக் கட்டுரை ‘ கீழடி அகழாய்வுகள் – மீளுருவாகும் சங்கத் தமிழர் பண்பாட்டு வரலாறு ’ என்ற தலைப்பில் வெளியிட்டக் கட்டுரையைக் கீழடிப் புதையல் என்னும் தலைப்பில் நூலாக உருவாக்கியுள்ளார் . இந்நூலில் அகழாய்வில் கண்டறியப்பட்ட தொல்பொருட்களின் புகைப்படங்களையும் , கீழடி அருங்காட்சியகம் குறித்தச் செய்திகளையும் இந்நூலில் முன் வைத்துள்ளார் . இந்நூலில் கீழடி புதையல் , கலைகள் , வணிகம் , வேளாண்மை , நானோ தொழில் நுட்பம் , புவியியல் , வைகை ஆற்றுச் சமவெளி ...
நாட்டுப்புற மருத்துவ முறைகள் நாட்டுப்புற மக்கள் நாட்டுப்புற மருத்துவ முறைகளில் மிகுதியும் நம்பிக்கை வைத்தள்ளனர் . தங்களுக்கு ஏற்படும் நோய்கள் மற்றும் கால்நடைகள் , பயிர்கள் ஆகியவற்றிற்கு ஏற்படும் நோய்கள் அனைத்தும் தெய்வங்களின் சீற்றங்களினாலேயே உண்டாகின்றன என்று நம்புகின்றனர் . தெய்வக்குற்றம் , முன்வினை , மற்றவர்களின் தீயப் பார்வை ஆகியவற்றால்தான் நோய்கள் தோன்றுகின்றன என்றும் முன்னோர்களின் சீற்றம் , தீய ஆவிகளின் பார்வை ஆகியவற்றால் தான் நோய்கள் தோன்றுகின்றன என்பதும் நாட்டுப்புற மக்களின் நம்பிக்கை . ஆகவே , அதற்கு ஏற்றவாறு நோய்தீர்க்கும் முறைகளைக் கையாளுகின்றனர் . தலைவியின் உடல்வேறுபாட்டிற்குக் காரணம் தலைவியின் களவு ஒழுக்கம் என்பதை அறியாமல் வேலன் வெறியாட்டிற்கு ஏற்பாடு செய்ததைப் பழந்தமிழ் இலக்கியங்கள் குறிப்பிடுகின்றன . சங்க காலம் தொடங்கி இன்று வரையில் நாட்டுப்புற மக்கள் இடையே நோய் தாக்கியதற்குக் காரணம் தெய்வக்குற்றமே என்று நம்பி வருகின்றனர் . ...