அறம் பழகு ! ( புத்தக மதிப்புரை ) புத்தக மதிப்புரையில் குரும்பலூர் இராஜீ மோகன் அவர்கள் எழுதிய அறம் பழகு ! என்ற கவிதைப் புத்தகத்தைப் பார்ப்போம் . இந்தப் புத்தகத்தை நவம்பர் 2022 - ஆம் ஆண்டு , சென்னை , ரத்னா ஆப்செட் பிரிண்டர்ஸ் வெளியிட்டுள்ளார்கள் . பக்கங்கள் 92, விலை 180 ரூபாய் . ஐயா இராஜீமோகன் அவர்கள் பெரம்பலூர் மாவட்டம் குரும்பலூரில் பிறந்தவர் . அரசுப்பள்ளியில் 7 வது வரை படித்தவர் . ஸ்ரீ இராமகிருஷ்ணா மிஷன் குருகுலத்தில் உயர்க்கல்வியும் , அண்ணா பல்கலைக் கழகத்தில் எந்திரவியலில் பொறியியல் படிப்பையும் , நிர்வாக மேலாண்மை என்ற முதுநிலை படிப்பையும் பயின்றவர் . 37 வருடங்கள் என்எல்சி இந்திய நிறுவனத்தில் வெவ்வேறு துறைகளில் பணியாற்றியவர் . · மாணவர்களின் ஆற்றலை நெறிப்படுத்தும் இந்நூலுக்கு பெருமை சேர்க்கும் வகையில் தஞ்சாவூர் பல்கலைக்கழக துணைவேந்தர் மாண்பமை முனைவர் வி . திருவள்ளுவன் அவர்கள் வாழ்த்துரை வழங்கியுள்ளார் . · சென்னை , தெற்கு இயில்வேயில் பணி...
நாட்டுப்புற மருத்துவ முறைகள் நாட்டுப்புற மக்கள் நாட்டுப்புற மருத்துவ முறைகளில் மிகுதியும் நம்பிக்கை வைத்தள்ளனர் . தங்களுக்கு ஏற்படும் நோய்கள் மற்றும் கால்நடைகள் , பயிர்கள் ஆகியவற்றிற்கு ஏற்படும் நோய்கள் அனைத்தும் தெய்வங்களின் சீற்றங்களினாலேயே உண்டாகின்றன என்று நம்புகின்றனர் . தெய்வக்குற்றம் , முன்வினை , மற்றவர்களின் தீயப் பார்வை ஆகியவற்றால்தான் நோய்கள் தோன்றுகின்றன என்றும் முன்னோர்களின் சீற்றம் , தீய ஆவிகளின் பார்வை ஆகியவற்றால் தான் நோய்கள் தோன்றுகின்றன என்பதும் நாட்டுப்புற மக்களின் நம்பிக்கை . ஆகவே , அதற்கு ஏற்றவாறு நோய்தீர்க்கும் முறைகளைக் கையாளுகின்றனர் . தலைவியின் உடல்வேறுபாட்டிற்குக் காரணம் தலைவியின் களவு ஒழுக்கம் என்பதை அறியாமல் வேலன் வெறியாட்டிற்கு ஏற்பாடு செய்ததைப் பழந்தமிழ் இலக்கியங்கள் குறிப்பிடுகின்றன . சங்க காலம் தொடங்கி இன்று வரையில் நாட்டுப்புற மக்கள் இடையே நோய் தாக்கியதற்குக் காரணம் தெய்வக்குற்றமே என்று நம்பி வருகின்றனர் . ...