Skip to main content

Posts

Showing posts from June, 2024

திருவையாறு சென்ற அனுபவங்கள் (நூல் வெளியீட்டு விழா)

  திருவையாறு சென்ற அனுபவங்கள் ( நூல் வெளியீட்டு விழா )               திருவையாறு தமிழ் ஐயா கல்விக்கழகம் , ஔவை அறக்கட்டளை நடத்திய உலகத் தாய்மொழி நாள் – 2026 (21.02.2026) நாளை முன்னிட்டு நடத்திய நூல் வெளியீட்டு விழா நிகழ்வில் என்னுடைய நூல் ‘ சங்க இலக்கியங்களில் வாழ்வியல் விழுமியங்கள் ’ எனும் தலைப்பில் வெளியானது . அந்த நாளில் நடந்த நினைவைப் பகிர்ந்து கொள்வதில் பெருமிதம்   கொள்கிறேன் .            திருச்சியிலிருந்து நானும் , முசிறி , அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பணியாற்றும் தமிழ்த்துறைத் தலைவராகப் பொறுப்பேற்ற இணைப்பேராசிரியர் முனைவர் பாக்கியரதி அவர்கள் , மற்றும் அவர்களின் மூத்தச் சகோதரி அவர்களும் திருவையாறு (21.02.2026) சனிக்கிழமை சென்றோம் . நூல் வெளியீட்டு விழா காலை 11.00 மணிக்கு என்பதால் நாங்கள் செல்லும் வழியில் உள்ள கோயில்களுக்குச் சென்று பார்த்து விட்டு சென்றோம் . திருமழப்பாடி தமிழ்நாட்டின் அரியலூர் மாவட்டம் , கொள்ளிடம் ஆற்றங்கரையில் அமைந்துள்ள திருமழப்பாடி வைத்தி...

நாட்டுப்புற மருத்துவ முறைகள்

  நாட்டுப்புற மருத்துவ முறைகள்           நாட்டுப்புற மக்கள் நாட்டுப்புற மருத்துவ முறைகளில் மிகுதியும் நம்பிக்கை வைத்தள்ளனர் . தங்களுக்கு ஏற்படும் நோய்கள் மற்றும் கால்நடைகள் , பயிர்கள் ஆகியவற்றிற்கு ஏற்படும் நோய்கள் அனைத்தும் தெய்வங்களின் சீற்றங்களினாலேயே உண்டாகின்றன என்று நம்புகின்றனர் . தெய்வக்குற்றம் , முன்வினை , மற்றவர்களின் தீயப் பார்வை ஆகியவற்றால்தான் நோய்கள் தோன்றுகின்றன என்றும் முன்னோர்களின் சீற்றம் , தீய ஆவிகளின் பார்வை ஆகியவற்றால் தான் நோய்கள் தோன்றுகின்றன என்பதும் நாட்டுப்புற மக்களின் நம்பிக்கை . ஆகவே , அதற்கு ஏற்றவாறு நோய்தீர்க்கும் முறைகளைக் கையாளுகின்றனர் .             தலைவியின் உடல்வேறுபாட்டிற்குக் காரணம் தலைவியின் களவு ஒழுக்கம் என்பதை அறியாமல் வேலன் வெறியாட்டிற்கு ஏற்பாடு செய்ததைப் பழந்தமிழ் இலக்கியங்கள் குறிப்பிடுகின்றன . சங்க காலம் தொடங்கி இன்று வரையில் நாட்டுப்புற மக்கள் இடையே நோய் தாக்கியதற்குக் காரணம் தெய்வக்குற்றமே என்று நம்பி வருகின்றனர் .       ...

நாட்டுப்புறப் பாடல்களில் வெள்ளையர்களின் ஆட்சியின் மேலாண்மை

  நாட்டுப்புறப் பாடல்களில் வெள்ளையர் களின் ஆட்சியி ன் மேலாண்மை             அரசியல் , பொருளாதார ரீதியில் நம்நாடு அடிமைப்பட்டுக் கிடந்த போதிலும் தங்கள் நாட்டு வளர்ச்சியில் நம் நாட்டையும் பயன்படுத்தும் நோக்கத்தோடு அவர்கள் வசதிக்கென சில வளர்ச்சிப் பணிகளையும் வெள்ளையர்கள் மேற்கொண்டனர் . இருப்புப் பாதை , புகை வண்டி விமானம் , மின்சாரம் , தொழிற்சாலைகள் , கல்விக் கூடங்கள் , கல்லூரிகள் , பல்கலைக் கழகங்கள் போன்றவை வெள்ளையர் ஆட்சியினால் நமக்கு வந்த வரவுகள் . இந்த வளர்ச்சியினால் யாருக்குப் பலன் என்பதில்தான் கருத்து வேறுபாடு . அவர்கள் தங்களுக்காக உருவாக்கியவற்றை எல்லாம் விடுதலை அடைந்தபோது நமக்கென விட்டுச் சென்றனர் .             இவ்வாறு பொருளாதாரப் போக்கில் , சமுதாய அமைப்பில் பயனுள்ள தடயங்களை அவர்கள் உருவாக்கிச் சென்றார்கள் என்பதை நாட்டுப்புறப் பாடல்கள் வழி தெரிந்து கொள்ளலாம் . மெத்தை வீடுகள்     ...

Popular posts from this blog

பொய்யில் புலவன் பொய்யா மொழிகள்

திருக்குறளில் எனது சிறு முயற்சியாக… .  " பொய்யில் புலவன் பொய்யா மொழிகள்"  என்ற இத்தலைப்பில் அமைந்த 133 வரிகள் கொண்ட இப்படைப்பு முருகனின் ” கந்த சஷ்டி  கவசம் ” போன்று உருவாக்கப்பட்டது. இப்பகுதி அறத்துப்பால் 38  அதிகாரங்கள், பொருட்பால் 70  அதிகாரங்களிலிருந்து மட்டும் சுருங்கச் சொல்லி விளங்க வைத்தல் என்ற முறையில், திருக்குறளின் சாராக அமைத்து வழங்கியுள்ளேன். அறமும், பொருளும் ஒருவருக்கு அமைந்தால் இன்பம் தானாகக் கிட்டும் என்ற நோக்கத்தில் அமைக்கப்பட்டது. ”பொய்யில் புலவன் பொய்யா மொழிகள்” காக்க காக்க அறத்தைக் காக்க (1) காக்க காக்கக் குறளைக் காக்க உலக மொழிகளில் ஒப்பற்ற நூலாம், நோக்க நோக்க பெயா்த்து நோக்க மனிதன் கற்று மனிதம் காக்க ஐம்பொறி உணா்வை காக்க காக்க புகழுடன் வாழ ஒழுக்கம் காக்க அறநெறி வாழ்வை இறைவழி காக்க வானம் பொய்யா வளத்தைக் காக்க பசிப்பிணி யில்லா உலகைக் காக்க பற்றற்ற வாழ்வை பரிவுடன் காக்க அறத்தைக் காக்க அன்பைக் காக்க (2) குறையிலா வாழ்வை குணமுடன் காக்க இல்லற வாழ்வுடன் நல்லறம் காக்க பண்பொடு பயனும் அறத்துடன் காக்க வாழ்க வாழ்க வளமுடன் வாழ்க வாழ்க வாழ்க...

எண்ணம் போல் வாழ்வு

                                   எண்ணம் போல் வாழ்வு   நினைவுகளே பழக்கவழக்கங்களாக மாறுகின்றன. எனவே தான் எண்ணம் போல் வாழ்வு அனைவருக்கும் அமைகிறது. வெற்றி பெற்ற அனைவரும் பிறரைத் தன் நடத்தையால் மகிழ்விக்க நினைத்தவர்களே என்பதை நாம் நினைவில் நிறுத்த வேண்டும். ·         வங்கியில் பணத்தைச் சேமிப்பதைவிட இதயத்தில் இனிய எண்ணங்களைச் சேமிப்பது மகிழ்ச்சியான வாழ்விற்கு உதவும் வைப்பு நிதியாகும். ·                    மனம் - மகிழ்ச்சி அளிக்காத நிகழ்வுகளை மறந்து விடும் இயல்புடையது. ·                      வெறுப்பு - மனத்தையும், உணர்வையும் பற்றிக் கொண்டுள்ள தொற்று நோய். எனவே வெறுப்பிற்கு விடுதலை தரும்வரை மகிழ்ச்சி நம்மை அணுகாது. ·         கடமையைச் செய்யுங்கள், மகிழ்ச்சியை அறுவடை செய்யலாம். நன்மை, தீமை என்று எது நடந்...

மனிதனாக வாழ ...

  மனிதனாக வாழ ... ·                       பிறர் உன்னை தூற்றும் பொழுது தலை நிமிர்ந்து நில். ·     பொறாமை, கோபம், வீண் மயக்கம் போன்ற குணங்களை விரோதிகளாக எண்ணுதல். ·         வெற்றி -   தோல்வி,   இன்பம் – துன்பம் இரண்டையும் சமமாக பாவித்தல்.             உண்மைக்குப் புறம்பானவற்றைச்  செய்யாதிருத்தல். ·     நண்பர்கள் இல்லை என்றாலும் பரவாயில்லை. பகைவர்கள் இல்லாமல் வாழ முயற்சி செய்தல். ·                 ம னத்திடத்தோடு வாழ்தல்,  ஏற்றத் தாழ்வு இல்லா மனநிலையுடன் இருத்தல். ·             மனிதனுக்கு உரியது - கலங்காத அறிவு, அன்பு நிறைந்த மனம், ஆரோக்கியமான   உடல். ·                      எதற்கும் அஞ்சாதே -   பயம் நம்மை கோழையாக்கி விடும்.              எவரையும் வெறுக்...