தமிழ் கற்பித்தலில் அவசியமும் தகவல் தொடர்பியலின் பன்முகபார்வையும் பண்டைக் காலத்தில் மனிதனுக்கு அடிப்படைத் தேவைகளாக உணவு , உடை , இருப்பிடம் என்ற மூன்றும் தேவைப்பட்டன . விஞ்ஞான உலகத்திலோ இம்மூன்றுடன் தொடர்பியல் சாதனமும் அடிப்படைத் தேவைகளில் ஒன்றாக இருக்கிறது . தொடர்பியல் , உலகின் ஒரு மூலையில் நடைபெறும் நிகழ்வுகளையும் கண்முன் நிறுத்தி , உலக நாடுகளை எல்லாம் ஒரு நாடு என்ற அளவில் சுருக்கி நெருங்க வைத்துள்ளது . மக்கள் ஒருவருக்கொருவர் தங்கள் எண்ணங்களையும் கருத்துகளையும் பரிமாறிக் கொள்ள தொடர்பியல் கருவிகள் பயன்படுகிறது . ” காசிநகர்ப் புலவர் பேசுமுறைதான் காஞ்சியிற் கேட்பதற்கோர் கருவி செய்வோம் ” என்றார் பாரதியார் . ஆனால் , தீர்க்கதரிசியான அவர் நினைத்ததைவிட இன்று தொடர்பியல் பன்மடங்கு வளர்ச்சிப் பெற்றுள்ளது . தகவல் தொடர்பு ஒருவர் மற்றவரோடு பல்வேறு ...
அறிவைப் பகிர்ந்து கொள்வோம்!