Skip to main content

Posts

Showing posts from September, 2025

மயில் & கான மயில்

  மயில் & கான மயில்        இந்திய துணைக் கண்டத்தைப் பூர்வீகமாகக் கொண்ட பறவையினம் மயில். இவை இந்தியாவிலும் இலங்கையிலும் அதிகமாகக் காணப்படுகின்றன. ஆயினும் உலகில் பல நாடுகளிலும் இப்போது மயில் பரந்து விரிந்து காணப்படுகிறது.             ஒரு காலத்தில் காடுகளில் மட்டுமே காணப்பட்டு வந்த மயில், தற்பொழுது கிராமங்களில் வீடுகளில் வளர்க்கப்படுகின்றது. பொதுவாக ஆண் மயில்கள் தலை, கழுத்து மற்றும் நெஞ்சுப் பகுதிகளில் பிரகாசமான நீல நிறத்தைக் கொண்டிருப்பதுடன், வால் பகுதியில் நீலமும் பச்சையும் கலந்த மிக நீண்ட கண் போன்ற சிறகுகளில் அமையப் பெற்றுக் காணப்படும். உடல் நீளத்தில் மூன்றில் இரண்டு பங்கு தோகையைக் கொண்டு இருக்கும். ஆண் மயில் வால் பகுதியில் மேலாகக் காணப்படும்.             நீண்ட வண்ண மயமான இறகுகளில் தொகுப்பு மயிற்பீலி, மயில் தோகை, மயிலிறகு என்ற வெவ்வேறு பெயர்களில் அழைக்கப்படுகிறது. பள்ளி பருவ மாணவர்களை இது மிகவும் கவர்ந்த ஒன்றாகும். இந்த அழகிய மயிலிறகு...

தமிழ் கற்பித்தலில் அவசியமும் தகவல் தொடர்பியலின் பன்முகபார்வையும்

  தமிழ் கற்பித்தலில் அவசியமும் தகவல் தொடர்பியலின் பன்முகபார்வையும்           பண்டைக் காலத்தில் மனிதனுக்கு அடிப்படைத் தேவைகளாக உணவு , உடை , இருப்பிடம் என்ற மூன்றும் தேவைப்பட்டன . விஞ்ஞான உலகத்திலோ இம்மூன்றுடன் தொடர்பியல் சாதனமும் அடிப்படைத் தேவைகளில் ஒன்றாக இருக்கிறது . தொடர்பியல் , உலகின் ஒரு மூலையில் நடைபெறும் நிகழ்வுகளையும் கண்முன் நிறுத்தி , உலக நாடுகளை எல்லாம் ஒரு நாடு என்ற அளவில் சுருக்கி நெருங்க வைத்துள்ளது . மக்கள் ஒருவருக்கொருவர் தங்கள் எண்ணங்களையும் கருத்துகளையும் பரிமாறிக் கொள்ள தொடர்பியல் கருவிகள் பயன்படுகிறது .             ” காசிநகர்ப் புலவர் பேசுமுறைதான்               காஞ்சியிற் கேட்பதற்கோர் கருவி செய்வோம் ” என்றார் பாரதியார் . ஆனால் , தீர்க்கதரிசியான அவர் நினைத்ததைவிட இன்று தொடர்பியல் பன்மடங்கு வளர்ச்சிப் பெற்றுள்ளது . தகவல் தொடர்பு             ஒருவர் மற்றவரோடு பல்வேறு ...

தமிழ் கற்பித்தலில் தகவல் தொடர்பு சாதனங்கள்

தமிழ் கற்பித்தலில் தகவல் தொடர் பு சாதனங்கள்   தகவல் தொடர்பு  அறிவியல் சார்ந்த வாழ்க்கைக்கு மட்டுமல்லாது , எளிமையான வாழ்க்கைக்கும்   தகவல் தொடர்பு என்பது அடிப்படைத் தேவைகளில் ஒன்றாகும். இதில் “ தகவல் ” – “ தொடர்பு ” என்ற இரண்டு சொற்கள் இணைந்துள்ளன. ·          தகவல் என்றால் ’ பிறர் அறியும் வகையில் வெளிப்படுத்தப்படும் செய்தி ’ என்று ம் . ·   ‘ தொடர்பு ’ என்றால் ’ இரு இடங்களை இணைப்பது ; இணைப்பு ’ என்று பொருளாகும். ·          அதாவது இரண்டு இடங்களை இணைத்து , அங்குள்ளவர்கள் அறிந்து கொள்ளும் வகையில் செய்திகளை வெளிப்படுத்தும் வழிமுறை மற்றும் அதற்கான கருவிகளுக்குத் ‘ தகவல் தொடர்பு ’ என்ற தொழில்நுட்பச் சொல்லைப் பயன்படுத்துகின்றோம். தகவல் தொடர்பு - கற்றல் - கற்பித்தல் முறைகள் ·   ஆரம்பகால கட்டங்களில் கற்றல்-கற்பித்தல் என்பது ஆசிரியர்-மாணவர்கள் இடையே   வாய்வழித் தகவல் தொடர்பை சார்ந்தே அமைந்திருந்தது. ·   பிற்காலத்தில் அச்சு இயந்திர உருவாக்கத்தின் விளைவாக தகவ...

Popular posts from this blog

பொய்யில் புலவன் பொய்யா மொழிகள்

திருக்குறளில் எனது சிறு முயற்சியாக… .  " பொய்யில் புலவன் பொய்யா மொழிகள்"  என்ற இத்தலைப்பில் அமைந்த 133 வரிகள் கொண்ட இப்படைப்பு முருகனின் ” கந்த சஷ்டி  கவசம் ” போன்று உருவாக்கப்பட்டது. இப்பகுதி அறத்துப்பால் 38  அதிகாரங்கள், பொருட்பால் 70  அதிகாரங்களிலிருந்து மட்டும் சுருங்கச் சொல்லி விளங்க வைத்தல் என்ற முறையில், திருக்குறளின் சாராக அமைத்து வழங்கியுள்ளேன். அறமும், பொருளும் ஒருவருக்கு அமைந்தால் இன்பம் தானாகக் கிட்டும் என்ற நோக்கத்தில் அமைக்கப்பட்டது. ”பொய்யில் புலவன் பொய்யா மொழிகள்” காக்க காக்க அறத்தைக் காக்க (1) காக்க காக்கக் குறளைக் காக்க உலக மொழிகளில் ஒப்பற்ற நூலாம், நோக்க நோக்க பெயா்த்து நோக்க மனிதன் கற்று மனிதம் காக்க ஐம்பொறி உணா்வை காக்க காக்க புகழுடன் வாழ ஒழுக்கம் காக்க அறநெறி வாழ்வை இறைவழி காக்க வானம் பொய்யா வளத்தைக் காக்க பசிப்பிணி யில்லா உலகைக் காக்க பற்றற்ற வாழ்வை பரிவுடன் காக்க அறத்தைக் காக்க அன்பைக் காக்க (2) குறையிலா வாழ்வை குணமுடன் காக்க இல்லற வாழ்வுடன் நல்லறம் காக்க பண்பொடு பயனும் அறத்துடன் காக்க வாழ்க வாழ்க வளமுடன் வாழ்க வாழ்க வாழ்க...

எண்ணம் போல் வாழ்வு

                                   எண்ணம் போல் வாழ்வு   நினைவுகளே பழக்கவழக்கங்களாக மாறுகின்றன. எனவே தான் எண்ணம் போல் வாழ்வு அனைவருக்கும் அமைகிறது. வெற்றி பெற்ற அனைவரும் பிறரைத் தன் நடத்தையால் மகிழ்விக்க நினைத்தவர்களே என்பதை நாம் நினைவில் நிறுத்த வேண்டும். ·         வங்கியில் பணத்தைச் சேமிப்பதைவிட இதயத்தில் இனிய எண்ணங்களைச் சேமிப்பது மகிழ்ச்சியான வாழ்விற்கு உதவும் வைப்பு நிதியாகும். ·                    மனம் - மகிழ்ச்சி அளிக்காத நிகழ்வுகளை மறந்து விடும் இயல்புடையது. ·                      வெறுப்பு - மனத்தையும், உணர்வையும் பற்றிக் கொண்டுள்ள தொற்று நோய். எனவே வெறுப்பிற்கு விடுதலை தரும்வரை மகிழ்ச்சி நம்மை அணுகாது. ·         கடமையைச் செய்யுங்கள், மகிழ்ச்சியை அறுவடை செய்யலாம். நன்மை, தீமை என்று எது நடந்...

மனிதனாக வாழ ...

  மனிதனாக வாழ ... ·                       பிறர் உன்னை தூற்றும் பொழுது தலை நிமிர்ந்து நில். ·     பொறாமை, கோபம், வீண் மயக்கம் போன்ற குணங்களை விரோதிகளாக எண்ணுதல். ·         வெற்றி -   தோல்வி,   இன்பம் – துன்பம் இரண்டையும் சமமாக பாவித்தல்.             உண்மைக்குப் புறம்பானவற்றைச்  செய்யாதிருத்தல். ·     நண்பர்கள் இல்லை என்றாலும் பரவாயில்லை. பகைவர்கள் இல்லாமல் வாழ முயற்சி செய்தல். ·                 ம னத்திடத்தோடு வாழ்தல்,  ஏற்றத் தாழ்வு இல்லா மனநிலையுடன் இருத்தல். ·             மனிதனுக்கு உரியது - கலங்காத அறிவு, அன்பு நிறைந்த மனம், ஆரோக்கியமான   உடல். ·                      எதற்கும் அஞ்சாதே -   பயம் நம்மை கோழையாக்கி விடும்.              எவரையும் வெறுக்...