Skip to main content

Posts

Showing posts from March, 2023

மதுரை சென்ற அனுபவங்களாக...

  மதுரை சென்ற அனுபவங்களாக ...            ‘கோயில்களின் நகரம்’ மற்றும் ‘தமிழ்நாட்டின் கலாச்சாரத் தலைநகரம்’ என்று அழைக்கப்படும் மதுரைக்கு (20.12.2025) நானும் என் தோழி என்னுடன் கல்லூரியில் பணியாற்றும் பேராசிரியர் விஜயலட்சுமி அவர்களும் சென்றோம் . நாங்கள் கடந்த 2017 – ஆம் ஆண்டு முதல் வருடத்திற்கு இரண்டு அல்லது மூன்று முறை சென்று வருவோம் . இந்த ஆண்டு நாங்களும் மற்றொரு சகோதரி முசிறி அரசு கல்லூரியில் பணியாற்றும் தமிழ்த்துறை இணைப் பேராசிரியர் பாக்கியரதி அவர்களும் சேர்ந்து சென்றோம் . இந்த அனுபவம் மிகவும் மகிழ்ச்சியாகவும் , புது அனுபவமாகவும் இருந்தது . இதை உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சியடைகிறேன் .               இந்த முறை மதுரையில் ஒத்தக்கடையில் உள்ள யோகநரசிம்மர் கோவில் , ப்ரத்தியங்கரா தேவி , முருகன் கோவில் , மதுரை மீனாட்சி அம்மன் கோவில் ஆகிய கோவில்களுக்கு மட்டும் தான் சென்றோம் . மதியம் 2மணிக்கு மேல் சிவா டெக்ஸ்டைல் என்ற புதியதாக ஆரம்பித்துள்ள கடைக்குச் சென்றோம். 4.30 மணி வரை சேலைகள் வாங்கினோம். பின்பு ம...

குரவைக் கூத்து

  குரவைக் கூத்து         பண்டைய கூத்துகளில் குரவைக் கூத்து முக்கியமானது. பழம் இலக்கியங்களில் அதிகம் பேசப்படுவது. இக்கூத்து அய்த்தல், தழுவுதல், முறைதல், தூங்குதல், நிற்றல் என்னும் சொற்களின் அடைமொழிகளுடன் கூறப்படுவது. ஆரவாரம் மிக்க இக்கலையைப் பார்த்தவர்கள் பாமரர்கள் என்பதும் குறிப்பிடத்தகுந்தது.           இக்கூத்து முதலில் குறிஞ்சி நிலத்தில் பொழுதுபோக்கு வழிபாடு அம்சமாக உருவாகி பிற நிலங்களுக்கும் பரந்திருக்கிறது. குறவர் அவை என்பது குரவைக்கூத்து ஆனது என இதை விளக்குவர். குரவை என்பது குறவையிலிருந்து தோன்றிய சொல் என்ற கருத்து உண்டு. மதுரைக்காஞ்சி குன்றுதோறும் நின்ற குரவை எனக்கூறும்.           குரவைக்கூத்து ஒரு நிகழ்த்து கலை. இதில் 7 அல்லது 9 கலந்து கொள்ளுவர் என உரையாசிரியர்கள் குறிக்கின்றனர். இது இரு பாலருக்கும் உரிய கூத்து. இக்கூத்தைக் குறிக்கும் சொற்களில் தழுவுதல் என்ற சொல் குறிப்பிடத்தகுந்தது. குரவை தழீஇ, பல்பிணை தழீஇ, மேனித் தழீஇ என்ற பழம் சொற்கள் பிணைந்த...

கடு சர்க்கரைப் படிமம்

  கடு சர்க்கரைப் படிமம் வைணவக் கோவில்களில் நின்று அமர்ந்த கிடந்த கோலத்தில் உள்ள கருவறைப் படிமங்கள் சுதை அல்லது கடுசர்க்கரையால் ஆனதாக இருக்கும். இப்படிமங்கள் மிகவும் நேர்த்தியாகவும் அழகுடனும் கூடியவை. இத்தகு படிமங்களுக்கு அபிஷேகம் கிடையாது. எண்ணெய் காப்பு செய்வர். சிற்பக் கலைஞர்கள் கடுசர்க்கரையக் கண்ட சர்க்கரை   என்றும் கூறுவர். கடினமான சுக்கான் கற்களைப் பொடித்துக் கிடைக்கும் சிறு மணலையும், மண்ணையும் பலவகையான மூலிகைகளின் சாற்றையும் கலந்து தயாரிக்கப்படும் சாந்து கடுசர்க்கரை எனப்படும். கடு சர்க்கரைச் சாந்தை மரச்சட்டத்தில் பூசி உருவாக்கப்படும் படிமம் கடுசர்க்கரை படிமம் எனப்படும். இதைத் தயாரிப்பதற்கும் பல கட்டங்கள் உண்டு. படிமத்தின் அளவை தீர்மானித்த பின் மரச் சூலக் கூடி தயாரிப்பது முதல் கட்டம். இந்தக் கூட்டின் மேல் கயிறு அல்லது தாமிரக் கம்பியைக் கட்டுதல், அதன் மேல் எட்டுவிதக் கலவைக் குழம்பைப் பூசுதல் அதன் பின் கலவைச் சாந்தைப் பூசி படிமத்தை உருவாக்குதல் வர்ணம் பூசுதல் என ஆறு கட்டங்களாக கடுசர்க்கரை படிமம் தயாரிக்கப்படும். பார்வை நூல் 1.   தமிழர் கலையும் பண்பாடும் – அ.க...

பழங்கால தமிழர்களின் உண்கலன்கள்

                        பழங்கால தமிழர்களின்  உண்கலன்கள்            சங்க    காலத்தில் இயற்கையாக உள்ள பலவிதப் பொருட்களை உண்கலன்களாகப் பயன்படுத்தியதோடு ,  செயற்கையாக இரும்பு ,  தங்கம் ,  தாமிரம் ,  வெள்ளி போன்ற உலோகங்களைக் கொண்டும் ,  பீங்கான் ,  மண் இவற்றினின்றும் பல கலன்களை வடிவமைத்துக் கொண்டனர் .  சமைப்பதற்குப் பெரும்பாலும் மண்ணாலியன்ற கலன்களும் உண்பதற்கு மண் மட்டுமின்றி ,  உலோகங்களா ல் செய்தக்    கலன்களையும் பயன்படுத்தியுள்ளனர் . இலை   உண்கலன்கள்            ஆம்பலிலை ,  தாமரையிலை ,  தேக்கிலை ,  வாழையிலை ,  பனையோலையில்   செய்த   குடை ,  மூங்கில்   ஆகியவை இயற்கையினின்றும் கிடைப்பவை .  இவற்றை உண்பதற்கு ஏற்றதாக முடைந்தும் ,  பதப்படுத்தியும் கலன்களாக உருவாக்கியுள்ளனர் . ஆம்பலிலை       ...

Popular posts from this blog

பொய்யில் புலவன் பொய்யா மொழிகள்

திருக்குறளில் எனது சிறு முயற்சியாக… .  " பொய்யில் புலவன் பொய்யா மொழிகள்"  என்ற இத்தலைப்பில் அமைந்த 133 வரிகள் கொண்ட இப்படைப்பு முருகனின் ” கந்த சஷ்டி  கவசம் ” போன்று உருவாக்கப்பட்டது. இப்பகுதி அறத்துப்பால் 38  அதிகாரங்கள், பொருட்பால் 70  அதிகாரங்களிலிருந்து மட்டும் சுருங்கச் சொல்லி விளங்க வைத்தல் என்ற முறையில், திருக்குறளின் சாராக அமைத்து வழங்கியுள்ளேன். அறமும், பொருளும் ஒருவருக்கு அமைந்தால் இன்பம் தானாகக் கிட்டும் என்ற நோக்கத்தில் அமைக்கப்பட்டது. ”பொய்யில் புலவன் பொய்யா மொழிகள்” காக்க காக்க அறத்தைக் காக்க (1) காக்க காக்கக் குறளைக் காக்க உலக மொழிகளில் ஒப்பற்ற நூலாம், நோக்க நோக்க பெயா்த்து நோக்க மனிதன் கற்று மனிதம் காக்க ஐம்பொறி உணா்வை காக்க காக்க புகழுடன் வாழ ஒழுக்கம் காக்க அறநெறி வாழ்வை இறைவழி காக்க வானம் பொய்யா வளத்தைக் காக்க பசிப்பிணி யில்லா உலகைக் காக்க பற்றற்ற வாழ்வை பரிவுடன் காக்க அறத்தைக் காக்க அன்பைக் காக்க (2) குறையிலா வாழ்வை குணமுடன் காக்க இல்லற வாழ்வுடன் நல்லறம் காக்க பண்பொடு பயனும் அறத்துடன் காக்க வாழ்க வாழ்க வளமுடன் வாழ்க வாழ்க வாழ்க...

எண்ணம் போல் வாழ்வு

                                   எண்ணம் போல் வாழ்வு   நினைவுகளே பழக்கவழக்கங்களாக மாறுகின்றன. எனவே தான் எண்ணம் போல் வாழ்வு அனைவருக்கும் அமைகிறது. வெற்றி பெற்ற அனைவரும் பிறரைத் தன் நடத்தையால் மகிழ்விக்க நினைத்தவர்களே என்பதை நாம் நினைவில் நிறுத்த வேண்டும். ·         வங்கியில் பணத்தைச் சேமிப்பதைவிட இதயத்தில் இனிய எண்ணங்களைச் சேமிப்பது மகிழ்ச்சியான வாழ்விற்கு உதவும் வைப்பு நிதியாகும். ·                    மனம் - மகிழ்ச்சி அளிக்காத நிகழ்வுகளை மறந்து விடும் இயல்புடையது. ·                      வெறுப்பு - மனத்தையும், உணர்வையும் பற்றிக் கொண்டுள்ள தொற்று நோய். எனவே வெறுப்பிற்கு விடுதலை தரும்வரை மகிழ்ச்சி நம்மை அணுகாது. ·         கடமையைச் செய்யுங்கள், மகிழ்ச்சியை அறுவடை செய்யலாம். நன்மை, தீமை என்று எது நடந்...

மனிதனாக வாழ ...

  மனிதனாக வாழ ... ·                       பிறர் உன்னை தூற்றும் பொழுது தலை நிமிர்ந்து நில். ·     பொறாமை, கோபம், வீண் மயக்கம் போன்ற குணங்களை விரோதிகளாக எண்ணுதல். ·         வெற்றி -   தோல்வி,   இன்பம் – துன்பம் இரண்டையும் சமமாக பாவித்தல்.             உண்மைக்குப் புறம்பானவற்றைச்  செய்யாதிருத்தல். ·     நண்பர்கள் இல்லை என்றாலும் பரவாயில்லை. பகைவர்கள் இல்லாமல் வாழ முயற்சி செய்தல். ·                 ம னத்திடத்தோடு வாழ்தல்,  ஏற்றத் தாழ்வு இல்லா மனநிலையுடன் இருத்தல். ·             மனிதனுக்கு உரியது - கலங்காத அறிவு, அன்பு நிறைந்த மனம், ஆரோக்கியமான   உடல். ·                      எதற்கும் அஞ்சாதே -   பயம் நம்மை கோழையாக்கி விடும்.              எவரையும் வெறுக்...