சிந்தையில் சிதறியவை – இறையன்பு ( புத்தக மதிப்புரை ) இன்று புத்தக மதிப்புரையில் வெ . இறையன்பு அவர்கள் எழுதிய சிந்தையில் சிதறியவை என்ற புத்தகத்தைப் பார்ப்போம் . இந்தப் புத்தகத்தை ஜனவரி – 2025 ஆம் ஆண்டு , சென்னை , கற்பகம் புத்தகாலயம் வெளியிட்டுள்ளார்கள் . பக்கங்கள் 232, விலை 250 ரூபாய் . வெ. இறையன்பு அவர்கள் எழுத்தாளர் , சிந்தனையாளர் , தன்னம்பிக்கைச் சொற்பொழிவாளர் , சமூக ஆர்வலர் எ னப் பல்துறைகளில் செயல்பட்டு வருகிறார். இவரது நூல்கள் , பொது வாசிப்புக்கும் தீவிர இலக்கியத்திற்கும் இடைப்பட்டவை. தத்துவப் பின்னணிகளை நோக்கமாகக் கொண்டவை. தனது படைப்புகள் குறித்து இறையன்பு , " மனிதனுக்கு உள்ளிருக்கும் தெய்வீக உணர்வுகளை கிளர்ந்தெழச் செய்வதே என் படைப்புகளின் நோக்கம்" என்கிறார். இவரது கட்டுரை , நாவல் , சிறுகதைத் தொகுப்புகளை ஆய்வு செய்து பல மாணவர்கள் எம்.பில் , பிஹெச்.டி பட்டம் பெற்றுள்ளார்கள். வெ. இறையன்பு அவர்கள் வார்த்தை ஜாலங்கள் இல்லாத , நேர்த்தியாக , கதை சொல்லும் பாணியில் சிந்திக்க வைக்கும் படைப்புகளைத் தந்துள்ளார். பல்வேறு பணிப் பொறுப்புகளி...
இலக்கியமும் இசைக்கலையும் ஓவியமும் சிற்பமும் தனித்தனி ஊடகங்களாக இருந்து மனக் கருத்தாடல்களை நிகழ்த்துகின்றன . ஆனால் இசை , தனி ஊடகமாக இல்லாது வாய்ப்பாட்டோடு சேர்ந்தும் மெய்ப்பாடுகளுடன் கூடிய நடனத்தோடு இணைந்தும் பல்முனை ஊடகமாக ஆற்றல் பெற்றுத் திகழ்கிறது . இதனால் இசையை இலக்கியமாகவும் , இலக்கியத்தை இசையாகவும் பார்க்கும் பார்வை செல்வாக்குப் பெற்றுள்ளது . சங்க இலக்கியங்களில் இசை தலையாய இடத்தைப் பெறுகிறது . குறிஞ்சி , முல்லை , மருதம் , நெய்தல் , பாலை ஆகிய ஒவ்வொரு நிலத்திற்கும் ஒவ்வொரு பண் வகுக்கப்பட்டிருந்தது . காலையில் பாடும் பண் , மாலையில் பாடும் பண் என்று வேறுபடுத்தப்பட்டிருந்தது . மணவிழாவில் பாடும் பண் , பிற சடங்குகளில் பாடப்படும் பண் பற்றிய குறிப்புகளும் உண்டு . யாழில் சிறிய யாழ் ( சீறியாழ் ) பெரிய யாழ் ( பேரியாழ் ) என்ற பகுப்பு இருந்தது . யாழின் அடிப்படையில் சிறுபாணாற்றுப்படை , பெரும்பாணாற்றுப்படை என்று ஆற்றுப்படை இலக்கியங்கள் பகுக்கப்பட்டிருந்தன . இ...