கீழடிப் புதையல் இந்நூல் கீழடி அகழ்வாராய்ச்சி பற்றிய முழுமையான ஒரு புரிதலை அளிக்கும் ஆய்வு நூலாகும் . கீழடி அகழாய்வில் கண்டறியப்பட்ட முதுமக்கள் தாழிகள் , சுடுமண் சிற்பங்கள் , பகடைக்காய்கள் , செங்கல் கட்டுமானங்கள் இவைகளைக் கொண்டு கீழடி நாகரிகம் , பண்பாடு , தொழில் , வாணிகம் , பொருளாதாரம் , விளையாட்டு எனப் பல தலைப்புகளில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளை உள்ளடக்கியுள்ளது . இக்கருத்தை மையமாகக் கொண்டு கீழடிப் புதையல் என்னும் தலைப்பில் இந்நூலை எழுதியுள்ளார் ஆசிரியர் . இவர் சென்னையில் நடைபெற்ற 11- ஆம் உலக தமிழ் மாநாட்டில் அளித்த ஆய்வுக் கட்டுரை ‘ கீழடி அகழாய்வுகள் – மீளுருவாகும் சங்கத் தமிழர் பண்பாட்டு வரலாறு ’ என்ற தலைப்பில் வெளியிட்டக் கட்டுரையைக் கீழடிப் புதையல் என்னும் தலைப்பில் நூலாக உருவாக்கியுள்ளார் . இந்நூலில் அகழாய்வில் கண்டறியப்பட்ட தொல்பொருட்களின் புகைப்படங்களையும் , கீழடி அருங்காட்சியகம் குறித்தச் செய்திகளையும் இந்நூலில் முன் வைத்துள்ளார் . இந்நூலில் கீழடி புதையல் , கலைகள் , வணிகம் , வேளாண்மை , நானோ தொழில் நுட்பம் , புவியியல் , வைகை ஆற்றுச் சமவெளி ...
இலக்கியமும் இசைக்கலையும் ஓவியமும் சிற்பமும் தனித்தனி ஊடகங்களாக இருந்து மனக் கருத்தாடல்களை நிகழ்த்துகின்றன . ஆனால் இசை , தனி ஊடகமாக இல்லாது வாய்ப்பாட்டோடு சேர்ந்தும் மெய்ப்பாடுகளுடன் கூடிய நடனத்தோடு இணைந்தும் பல்முனை ஊடகமாக ஆற்றல் பெற்றுத் திகழ்கிறது . இதனால் இசையை இலக்கியமாகவும் , இலக்கியத்தை இசையாகவும் பார்க்கும் பார்வை செல்வாக்குப் பெற்றுள்ளது . சங்க இலக்கியங்களில் இசை தலையாய இடத்தைப் பெறுகிறது . குறிஞ்சி , முல்லை , மருதம் , நெய்தல் , பாலை ஆகிய ஒவ்வொரு நிலத்திற்கும் ஒவ்வொரு பண் வகுக்கப்பட்டிருந்தது . காலையில் பாடும் பண் , மாலையில் பாடும் பண் என்று வேறுபடுத்தப்பட்டிருந்தது . மணவிழாவில் பாடும் பண் , பிற சடங்குகளில் பாடப்படும் பண் பற்றிய குறிப்புகளும் உண்டு . யாழில் சிறிய யாழ் ( சீறியாழ் ) பெரிய யாழ் ( பேரியாழ் ) என்ற பகுப்பு இருந்தது . யாழின் அடிப்படையில் சிறுபாணாற்றுப்படை , பெரும்பாணாற்றுப்படை என்று ஆற்றுப்படை இலக்கியங்கள் பகுக்கப்பட்டிருந்தன . இ...