சதுரங்கக் காய்கள் ( கவிதைத் தொகுப்பு ) பாவலர் வையவன் நாம் புத்தக மதிப்புரை சிறப்பு நிகழ்ச்சியில் சதுரங்கக் காய்கள் என்ற தலைப்பில் பாவலர் வையவன் அவர்கள் எழுதிய புத்தகத்தைப் பார்ப்போம் . இப்புத்தகத்தை ஜுலை 2015 - ஆம் ஆண்டு திருவண்ணாமலை - சுபம் பிரிண்டர்ஸ் வெளியிட்டுள்ளார்கள். பக்கங்கள் 160 , விலை 125 ரூபாய். பாவலர் வையவன் அவர்கள் தமிழக எழுத்தாளர்களுள் ஒருவர். மேடைகளில் அரிமா வென முழங்கும் ஆற்றல் மிக்க பேச்சாளர். அவரது படைப்புக்களில் நாடு, மொழி, மக்கள், தன்மானம், கல்வி ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு நாவல்கள், சிறுகதைகள், கவிதைத் தொகுப்புகள், ஆங்கில நூல்கள், கட்டுரை நூல்கள் என ஐம்பதுக்கும் மேற்பட்டப் படைப்புக்களைப் படைத்தவர். சென்னை அரசு மேல்நிலைப்பள்ளியில் ஆங்கில ஆசிரியராகவும், மொழிப் பெயர்ப்பாளராகவும் விளங்கியவர் . தனது மகள் பெயரில் அமைந்த ‘தாரணி பதிப்பகம் ’ மூலம் தமிழிலும் ஆங்கிலத்திலும் பல நூல்களை வெளியிட்டு வருகிறார். படைப்பிலக்கியத்திற்காகப் பல்வேறு விருதுகளைப் பெற்றுள்ளார். சதுரங்கக் காய்கள் எனும் தலைப்பில் அமைந்த இந...
இலக்கியமும் இசைக்கலையும் ஓவியமும் சிற்பமும் தனித்தனி ஊடகங்களாக இருந்து மனக் கருத்தாடல்களை நிகழ்த்துகின்றன . ஆனால் இசை , தனி ஊடகமாக இல்லாது வாய்ப்பாட்டோடு சேர்ந்தும் மெய்ப்பாடுகளுடன் கூடிய நடனத்தோடு இணைந்தும் பல்முனை ஊடகமாக ஆற்றல் பெற்றுத் திகழ்கிறது . இதனால் இசையை இலக்கியமாகவும் , இலக்கியத்தை இசையாகவும் பார்க்கும் பார்வை செல்வாக்குப் பெற்றுள்ளது . சங்க இலக்கியங்களில் இசை தலையாய இடத்தைப் பெறுகிறது . குறிஞ்சி , முல்லை , மருதம் , நெய்தல் , பாலை ஆகிய ஒவ்வொரு நிலத்திற்கும் ஒவ்வொரு பண் வகுக்கப்பட்டிருந்தது . காலையில் பாடும் பண் , மாலையில் பாடும் பண் என்று வேறுபடுத்தப்பட்டிருந்தது . மணவிழாவில் பாடும் பண் , பிற சடங்குகளில் பாடப்படும் பண் பற்றிய குறிப்புகளும் உண்டு . யாழில் சிறிய யாழ் ( சீறியாழ் ) பெரிய யாழ் ( பேரியாழ் ) என்ற பகுப்பு இருந்தது . யாழின் அடிப்படையில் சிறுபாணாற்றுப்படை , பெரும்பாணாற்றுப்படை என்று ஆற்றுப்படை இலக்கியங்கள் பகுக்கப்பட்டிருந்தன . இ...