Skip to main content

Posts

Showing posts from December, 2023

அறம் பழகு! (புத்தக மதிப்புரை)

  அறம் பழகு ! ( புத்தக மதிப்புரை )    புத்தக மதிப்புரையில்  குரும்பலூர் இராஜீ மோகன் அவர்கள் எழுதிய அறம் பழகு ! என்ற கவிதைப் புத்தகத்தைப் பார்ப்போம் . இந்தப் புத்தகத்தை நவம்பர் 2022 - ஆம் ஆண்டு , சென்னை , ரத்னா ஆப்செட் பிரிண்டர்ஸ் வெளியிட்டுள்ளார்கள் . பக்கங்கள் 92, விலை 180 ரூபாய் . ஐயா இராஜீமோகன் அவர்கள் பெரம்பலூர் மாவட்டம் குரும்பலூரில் பிறந்தவர் .    அரசுப்பள்ளியில் 7 வது வரை படித்தவர் .   ஸ்ரீ இராமகிருஷ்ணா மிஷன்   குருகுலத்தில் உயர்க்கல்வியும் , அண்ணா பல்கலைக் கழகத்தில் எந்திரவியலில் பொறியியல் படிப்பையும் , நிர்வாக மேலாண்மை என்ற முதுநிலை படிப்பையும் பயின்றவர் . 37 வருடங்கள் என்எல்சி இந்திய நிறுவனத்தில் வெவ்வேறு துறைகளில் பணியாற்றியவர் . ·       மாணவர்களின் ஆற்றலை நெறிப்படுத்தும்   இந்நூலுக்கு   பெருமை சேர்க்கும் வகையில் தஞ்சாவூர்   பல்கலைக்கழக துணைவேந்தர் மாண்பமை முனைவர் வி . திருவள்ளுவன் அவர்கள் வாழ்த்துரை வழங்கியுள்ளார் . ·         சென்னை , தெற்கு இயில்வேயில் பணி...

இலக்கியமும் இசைக்கலையும்

  இலக்கியமும் இசைக்கலையும்           ஓவியமும் சிற்பமும் தனித்தனி ஊடகங்களாக இருந்து மனக் கருத்தாடல்களை நிகழ்த்துகின்றன . ஆனால் இசை , தனி ஊடகமாக இல்லாது வாய்ப்பாட்டோடு சேர்ந்தும் மெய்ப்பாடுகளுடன் கூடிய நடனத்தோடு இணைந்தும் பல்முனை ஊடகமாக ஆற்றல் பெற்றுத் திகழ்கிறது . இதனால் இசையை இலக்கியமாகவும் , இலக்கியத்தை இசையாகவும் பார்க்கும் பார்வை செல்வாக்குப் பெற்றுள்ளது .               சங்க இலக்கியங்களில் இசை தலையாய இடத்தைப் பெறுகிறது . குறிஞ்சி , முல்லை , மருதம் , நெய்தல் , பாலை ஆகிய ஒவ்வொரு நிலத்திற்கும் ஒவ்வொரு பண் வகுக்கப்பட்டிருந்தது . காலையில் பாடும் பண் , மாலையில் பாடும் பண் என்று வேறுபடுத்தப்பட்டிருந்தது . மணவிழாவில் பாடும் பண் , பிற சடங்குகளில் பாடப்படும் பண் பற்றிய குறிப்புகளும் உண்டு . யாழில் சிறிய யாழ் ( சீறியாழ் ) பெரிய யாழ் ( பேரியாழ் ) என்ற பகுப்பு இருந்தது . யாழின் அடிப்படையில் சிறுபாணாற்றுப்படை , பெரும்பாணாற்றுப்படை என்று ஆற்றுப்படை இலக்கியங்கள் பகுக்கப்பட்டிருந்தன . இ...

சிலப்பதிகார கால ஆடை நாகரிகம்

  சிலப்பதிகார கால ஆடை நாகரிகம்           மனித நாகரிகத்தின் சின்னமாக விளங்குவது ஆடை. இது மனிதனின் அடிப்படைத் தேவைகளுள் ஒன்று. தட்பவெட்ப நிலைகளுக்கேற்ப உடற்பாதுகாப்பிற்கு ஆடை அணிதல் இன்றியமையாததாகும். கலை உணர்வையும், பொழுது போக்கினையும் மனித இனம் விரும்பியதால் அதற்குத் தகப் பஞ்சும், பட்டும், மயிராடையும் உருவாயின. தொழிலுக்கும், இனத்திற்கும் ஏற்றவாறு நிறமும், உடுக்கும் உடையும் மாறுபடுவதுடன் மகளிருக்கும் மைந்தருக்கும் என வேறு வேறு வகையான ஆடைகளும் தோற்றம் பெற்றன. திருமண ஆடை           திருமண ஆடை பற்றிய செய்தியினைச் சிலம்பு சுட்டவில்லை. ஆனால் திருமணக் காட்சியில், ‘கோடிக் கலிங்கம் உடுத்து’ (21:32) என்ற தொடரால் திருமணத்தில் கோடிக் கலிங்கம் அணியப் பெற்றமைத் தெளிவுபடுகிறது. இவ்வாடை கண்ணகியின் திருமணத்தில் அமையாது, கிளைக்கதையில் கற்புடைய மகள் ஒருத்தி அணிந்த செய்திக் குறிப்பால் உணர முடிகிறது. துன்பத்தில் ஆடை           கோவலனின் பிரிவுச் சூழலில் கண்ணகி ம...

இலக்கியமும் சிற்பமும்

  இலக்கியமும் சிற்பமும்             கலை என்ற சொல்லின் ஆட்சி சங்க இலக்கியத்தில் பெருகிய வழக்குப் பெறாதது போலவே , சிலை என்ற சொல்லும் பெருவழக்குப் பெறவில்லை . வில்லைக் குறிக்கப் பல இடங்களில் சிலை என்ற சொல் வழங்கப்படினும் கல்லுருச் சிலையைக் குறிக்கும் பொருளில் அச்சொல் வழங்கப்பெறவில்லை . சிற்பம் என்ற சொல் சங்க நூல்களில் யாண்டும் ஆட்சிப் பெறவில்லை . எனினும் சில் , சிலை , சிலம்பு என ஓசைப் பொருண்மை பயக்கும் சொற்கள் வழங்குதல் நோக்கத்தக்கது .             ” மலையிமைப் பதுபோல் மின்னிச்           சிலைமை ஏற்றோடு செறிந்தஇம் மழைக்கே ” (நற்றிணை,112:8-9)           சிலைமான் கடுவிசைக் கலைநிறத் தழுத்தி           குருதியொடு பறித்த செங்கோல் வாளி ” (குறுந், 272:1-2)           உருமெனச் சிலைக்கும் ஊக்கமொடு பைங்கால்    ...

Popular posts from this blog

பொய்யில் புலவன் பொய்யா மொழிகள்

திருக்குறளில் எனது சிறு முயற்சியாக… .  " பொய்யில் புலவன் பொய்யா மொழிகள்"  என்ற இத்தலைப்பில் அமைந்த 133 வரிகள் கொண்ட இப்படைப்பு முருகனின் ” கந்த சஷ்டி  கவசம் ” போன்று உருவாக்கப்பட்டது. இப்பகுதி அறத்துப்பால் 38  அதிகாரங்கள், பொருட்பால் 70  அதிகாரங்களிலிருந்து மட்டும் சுருங்கச் சொல்லி விளங்க வைத்தல் என்ற முறையில், திருக்குறளின் சாராக அமைத்து வழங்கியுள்ளேன். அறமும், பொருளும் ஒருவருக்கு அமைந்தால் இன்பம் தானாகக் கிட்டும் என்ற நோக்கத்தில் அமைக்கப்பட்டது. ”பொய்யில் புலவன் பொய்யா மொழிகள்” காக்க காக்க அறத்தைக் காக்க (1) காக்க காக்கக் குறளைக் காக்க உலக மொழிகளில் ஒப்பற்ற நூலாம், நோக்க நோக்க பெயா்த்து நோக்க மனிதன் கற்று மனிதம் காக்க ஐம்பொறி உணா்வை காக்க காக்க புகழுடன் வாழ ஒழுக்கம் காக்க அறநெறி வாழ்வை இறைவழி காக்க வானம் பொய்யா வளத்தைக் காக்க பசிப்பிணி யில்லா உலகைக் காக்க பற்றற்ற வாழ்வை பரிவுடன் காக்க அறத்தைக் காக்க அன்பைக் காக்க (2) குறையிலா வாழ்வை குணமுடன் காக்க இல்லற வாழ்வுடன் நல்லறம் காக்க பண்பொடு பயனும் அறத்துடன் காக்க வாழ்க வாழ்க வளமுடன் வாழ்க வாழ்க வாழ்க...

எண்ணம் போல் வாழ்வு

                                   எண்ணம் போல் வாழ்வு   நினைவுகளே பழக்கவழக்கங்களாக மாறுகின்றன. எனவே தான் எண்ணம் போல் வாழ்வு அனைவருக்கும் அமைகிறது. வெற்றி பெற்ற அனைவரும் பிறரைத் தன் நடத்தையால் மகிழ்விக்க நினைத்தவர்களே என்பதை நாம் நினைவில் நிறுத்த வேண்டும். ·         வங்கியில் பணத்தைச் சேமிப்பதைவிட இதயத்தில் இனிய எண்ணங்களைச் சேமிப்பது மகிழ்ச்சியான வாழ்விற்கு உதவும் வைப்பு நிதியாகும். ·                    மனம் - மகிழ்ச்சி அளிக்காத நிகழ்வுகளை மறந்து விடும் இயல்புடையது. ·                      வெறுப்பு - மனத்தையும், உணர்வையும் பற்றிக் கொண்டுள்ள தொற்று நோய். எனவே வெறுப்பிற்கு விடுதலை தரும்வரை மகிழ்ச்சி நம்மை அணுகாது. ·         கடமையைச் செய்யுங்கள், மகிழ்ச்சியை அறுவடை செய்யலாம். நன்மை, தீமை என்று எது நடந்...

மனிதனாக வாழ ...

  மனிதனாக வாழ ... ·                       பிறர் உன்னை தூற்றும் பொழுது தலை நிமிர்ந்து நில். ·     பொறாமை, கோபம், வீண் மயக்கம் போன்ற குணங்களை விரோதிகளாக எண்ணுதல். ·         வெற்றி -   தோல்வி,   இன்பம் – துன்பம் இரண்டையும் சமமாக பாவித்தல்.             உண்மைக்குப் புறம்பானவற்றைச்  செய்யாதிருத்தல். ·     நண்பர்கள் இல்லை என்றாலும் பரவாயில்லை. பகைவர்கள் இல்லாமல் வாழ முயற்சி செய்தல். ·                 ம னத்திடத்தோடு வாழ்தல்,  ஏற்றத் தாழ்வு இல்லா மனநிலையுடன் இருத்தல். ·             மனிதனுக்கு உரியது - கலங்காத அறிவு, அன்பு நிறைந்த மனம், ஆரோக்கியமான   உடல். ·                      எதற்கும் அஞ்சாதே -   பயம் நம்மை கோழையாக்கி விடும்.              எவரையும் வெறுக்...