மதுரை சென்ற அனுபவங்களாக ... ‘கோயில்களின் நகரம்’ மற்றும் ‘தமிழ்நாட்டின் கலாச்சாரத் தலைநகரம்’ என்று அழைக்கப்படும் மதுரைக்கு (20.12.2025) நானும் என் தோழி என்னுடன் கல்லூரியில் பணியாற்றும் பேராசிரியர் விஜயலட்சுமி அவர்களும் சென்றோம் . நாங்கள் கடந்த 2017 – ஆம் ஆண்டு முதல் வருடத்திற்கு இரண்டு அல்லது மூன்று முறை சென்று வருவோம் . இந்த ஆண்டு நாங்களும் மற்றொரு சகோதரி முசிறி அரசு கல்லூரியில் பணியாற்றும் தமிழ்த்துறை இணைப் பேராசிரியர் பாக்கியரதி அவர்களும் சேர்ந்து சென்றோம் . இந்த அனுபவம் மிகவும் மகிழ்ச்சியாகவும் , புது அனுபவமாகவும் இருந்தது . இதை உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சியடைகிறேன் . இந்த முறை மதுரையில் ஒத்தக்கடையில் உள்ள யோகநரசிம்மர் கோவில் , ப்ரத்தியங்கரா தேவி , முருகன் கோவில் , மதுரை மீனாட்சி அம்மன் கோவில் ஆகிய கோவில்களுக்கு மட்டும் தான் சென்றோம் . மதியம் 2மணிக்கு மேல் சிவா டெக்ஸ்டைல் என்ற புதியதாக ஆரம்பித்துள்ள கடைக்குச் சென்றோம். 4.30 மணி வரை சேலைகள் வாங்கினோம். பின்பு ம...
புத்தர் இமயமலை அடிவாரத்தில் ‘ கபில வஸ்து ’ என்னுமிடத்தில் கி . மு . 563- இல் சித்தார்த்தன் ( புத்தர் ) பிறந்தார் . புத்தரைப் பருவ வயது வரை அரண்மனைக்கு வெளியே விடாமல் போற்றி வளர்த்தனர் . துன்பம் என்றால் என்னவென்று தெரியாமல் வளர்க்கப்பட்டனர் . ஒரு நாள் அரண்மனைக்கு வெளியே வரும் போது மூப்பு , பிணி , சாக்காட்டைப் பார்த்தார் . அதனால் உலக வாழ்வைத் துறந்து இதற்குக் காரணம் என்னவாக இருக்கும் என்ற சிந்தனையில் ஆழ்ந்தார் . பீகார் மாநிலம் கயா என்னுமிடத்தில் ஆறு ஆண்டுகள் கடுந்தவம் இயற்றிய பின் ஆசையே அத்துணைத் துன்பத்திற்கும் காரணம் என்பதைக் கண்டறிந்தார் . போதி மரத்தடியில் ஞானம் பெற்றபின் நாற்பத்தைந்து ஆண்டுகள் தமது உபதேசங்களை மக்களுக்கு அர்ப்பணித்தார் . நல்லவர் – தீயவர் , ஏழை – பணக்காரன் களைந்து அனைவரையும் சமமாக மதித்து அருளுரை வழங்கினார் . பகுத்தறிவு சிந்தனைகள் · சாத்திரங்களை நம்பாதீர்கள் . · நடைமுறை என்பதற்காக மூடபழக்கங்...