Skip to main content

Posts

Showing posts from November, 2024

வெற்றிப் பாதை (புத்தக மதிப்புரை) வள்ளுவர் வழியில்

  வெற்றிப் பாதை ( புத்தக மதிப்புரை ) வள்ளுவர் வழியில்   இன்று புத்தக மதிப்புரை சிறப்பு நிகழ்ச்சியில் அகிலன் கண்ணன் அவர்கள் எழுதிய வெற்றிப் பாதை வள்ளுவர் வழியில் என்ற   புத்தகத்தைப் பார்ப்போம் . இந்தப் புத்தகத்தை டிசம்பர் 2003 - ஆம் ஆண்டு , சென்னை , தாகம்   பதிப்பகம் வெளியிட்டுள்ளார்கள் . பக்கங்கள் 92, விலை 180 ரூபாய் . இந்நூலின் ஆசிரியர் திரு . அகிலன் கண்ணன்   அவர்கள் பதிப்பாளர் , எழுத்தாளர் , விமர்சகர் , கவிஞர் , சமூக ஆர்வலர் , நாடக எழுத்தாளர் மற்றும் ஃப்ரீலான்ஸ் பத்திரிகையாளர் எனப் பன்முகத்தன்மை கொண்டவர். தனக்கு மட்டுமல்லாது தமிழ் மண்ணுக்கும் பெருமை சேர்த்து , தமிழ் மக்களின் மன தைக் கவர்ந்தப் புகழ்பெற்ற எழுத்தாளர் அகிலன் அவர்களின் மகனான கண்ணன் தமிழ் இலக்கிய உலகில் மிகுந்த கவனம் பெற்றவர் ஆவார். கண்ணன் தனது தமிழ்ப் புத்தகாலயம் - தாகம் பதிப்பகம் மூலமாக தமிழ் இலக்கிய உலகில் புகழ்பெற்ற படைப்புகளை உருவாக்கி தமிழை வளப்படுத்த இன்றும் தீவிரமாகச் செயல்பட்டு வருகிறார். மக்களிடையே வாசிப்புப் பழக்கத்தை மேம்படுத்துவதில் தொடர்ந்து சமூக வலைத்தளங்களில் தனது உற்...

புத்தர்

  புத்தர்             இமயமலை அடிவாரத்தில்   ‘ கபில வஸ்து ’ என்னுமிடத்தில் கி . மு . 563- இல் சித்தார்த்தன் ( புத்தர் ) பிறந்தார் . புத்தரைப் பருவ வயது வரை அரண்மனைக்கு வெளியே விடாமல் போற்றி வளர்த்தனர் . துன்பம் என்றால் என்னவென்று தெரியாமல் வளர்க்கப்பட்டனர் . ஒரு நாள் அரண்மனைக்கு வெளியே வரும் போது மூப்பு , பிணி , சாக்காட்டைப் பார்த்தார் . அதனால் உலக வாழ்வைத் துறந்து இதற்குக் காரணம் என்னவாக இருக்கும் என்ற சிந்தனையில் ஆழ்ந்தார் . பீகார் மாநிலம் கயா என்னுமிடத்தில் ஆறு ஆண்டுகள் கடுந்தவம் இயற்றிய பின் ஆசையே அத்துணைத் துன்பத்திற்கும் காரணம் என்பதைக் கண்டறிந்தார் .   போதி மரத்தடியில் ஞானம் பெற்றபின் நாற்பத்தைந்து ஆண்டுகள் தமது உபதேசங்களை மக்களுக்கு அர்ப்பணித்தார் . நல்லவர் – தீயவர் , ஏழை – பணக்காரன் களைந்து அனைவரையும் சமமாக மதித்து அருளுரை வழங்கினார் . பகுத்தறிவு சிந்தனைகள் ·         சாத்திரங்களை நம்பாதீர்கள் . ·         நடைமுறை என்பதற்காக மூடபழக்கங்...

அம்பேத்கார்

  அம்பேத்கார்           19 – ஆம் நூற்றாண்டில் மகாராஷ்டிராவில் அவதரித்த புரட்சியாளர் டாக்டர் அம்பேத்கார் மராட்டிய மாநிலத்தில் ‘மகா’ என்ற சாதிப் பிரிவில் 1891- ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 14 ஆம் நாள் பிறந்தார். அவர் பிறந்த சூழலில் இந்தியாவில் ஆங்கில ஆட்சியின் ஏகாதிபத்தியக் கொடுமையும், பார்ப்பனியத்தின் கொடுமையும் இந்திய மக்களைச் சொல்லனா துயரத்திற்கு ஆளாக்கியது. இத்துன்பங்கள் எல்லாம் தம் இளம் வயதில் வருந்தச் செய்தது. கல்வி உரிமை மறுக்கப்படுவது, கல்விக் கூடங்களில் சக மாணவர்களுடன் சேர்ந்து அமர அனுமதிக்கப்படாமை, பொது நீர் நிலைகளைப் பயன்படுத்த மறுப்பு, உணவு விடுதிகளில் தனிக் குவளை முறை, வாகனங்களில் தனி இருக்கை ஆகிய கொடுமைகளால் அம்பேத்கார் நேரிடையாகப் பாதிக்கப்பட்டார். தான் பாதிக்கப்பட்ட இக்கொடுமைகளைப் போலத் தாழ்த்தப்பட்ட மக்கள் அனைவரும் அதே கொடுமையை அனுபவிப்பது அவருக்குத் துயரத்தைக் கொடுத்தது.           இத்தகைய சாதிக் கொடுமையிலிருந்து விடுபட வேண்டுமானால் மக்கள் விழிப்புணர்வு அடைய வேண்டும் என்று கருதினா...

ஈழத்துத் தமிழ் நாடகங்களின் வளர்ச்சி நிலை

  ஈழத்துத் தமிழ் நாடகங்களின் வளர்ச்சி நிலை             தமிழைத் தாய்மொழியாகக் கொண்டுள்ள மக்கள் இன்று உலகின் பல பாகங்களிலும் வசிக்கின்றார்கள் . அவ்வாறு வசிக்கும் தமிழர்களின் தொகை , அவர்கள் வசிக்கும் பிரதேசம் , பிரதேச நிலைப்பட்ட நிலையான   வாழ்க்கை காரணமாக அவர்களிடையே காணப்படும் சமூக அமைப்பிறுக்கம் , வாழ்க்கை முறைமைகள் பண்பாட்டு அம்சங்கள் , ஆகியனவற்றைக் கொண்டு பார்க்கும்பொழுது இந்தியா , இலங்கை , மலேசியா , தென்னாப்பிரிக்கா , பீஜீ , மொரிஷியஸ் முதலான இடங்கள் மிக முக்கியமானவையாகும் . இவற்றுள் இந்தியா இம் மக்கள் கூட்டத்தினரின் பாரம்பரிய வாழிடமாகும் . இப்பிரதேசத்திலிருந்தே மற்றைய நாடுகளுக்குத் தமிழர்கள் புலம் பெயர்ந்தனர் . அவ்வாறு புலம்பெயர்ந்து வாழும் நாடுகளுள் இலங்கை மிக முக்கியமானதாகும் . ஏனெனில் , இலங்கையைப் பொறுத்தவரையில் புலப்பெயர்வு கிறிஸ்துவுக்கு முற்பட்ட காலத்திலிருந்தே நடைபெற்று வந்துள்ளது . புவியியல் அண்மையே இதற்குக் காரணமாகும் . இலங்கையில் குடியேறிய தமிழ் மக்கள் அந்நாட்டில் தமக்கென ஒரு தனி வாழிடமாகக் கொண்டு வாழ்கின்றனர்...

Popular posts from this blog

பொய்யில் புலவன் பொய்யா மொழிகள்

திருக்குறளில் எனது சிறு முயற்சியாக… .  " பொய்யில் புலவன் பொய்யா மொழிகள்"  என்ற இத்தலைப்பில் அமைந்த 133 வரிகள் கொண்ட இப்படைப்பு முருகனின் ” கந்த சஷ்டி  கவசம் ” போன்று உருவாக்கப்பட்டது. இப்பகுதி அறத்துப்பால் 38  அதிகாரங்கள், பொருட்பால் 70  அதிகாரங்களிலிருந்து மட்டும் சுருங்கச் சொல்லி விளங்க வைத்தல் என்ற முறையில், திருக்குறளின் சாராக அமைத்து வழங்கியுள்ளேன். அறமும், பொருளும் ஒருவருக்கு அமைந்தால் இன்பம் தானாகக் கிட்டும் என்ற நோக்கத்தில் அமைக்கப்பட்டது. ”பொய்யில் புலவன் பொய்யா மொழிகள்” காக்க காக்க அறத்தைக் காக்க (1) காக்க காக்கக் குறளைக் காக்க உலக மொழிகளில் ஒப்பற்ற நூலாம், நோக்க நோக்க பெயா்த்து நோக்க மனிதன் கற்று மனிதம் காக்க ஐம்பொறி உணா்வை காக்க காக்க புகழுடன் வாழ ஒழுக்கம் காக்க அறநெறி வாழ்வை இறைவழி காக்க வானம் பொய்யா வளத்தைக் காக்க பசிப்பிணி யில்லா உலகைக் காக்க பற்றற்ற வாழ்வை பரிவுடன் காக்க அறத்தைக் காக்க அன்பைக் காக்க (2) குறையிலா வாழ்வை குணமுடன் காக்க இல்லற வாழ்வுடன் நல்லறம் காக்க பண்பொடு பயனும் அறத்துடன் காக்க வாழ்க வாழ்க வளமுடன் வாழ்க வாழ்க வாழ்க...

எண்ணம் போல் வாழ்வு

                                   எண்ணம் போல் வாழ்வு   நினைவுகளே பழக்கவழக்கங்களாக மாறுகின்றன. எனவே தான் எண்ணம் போல் வாழ்வு அனைவருக்கும் அமைகிறது. வெற்றி பெற்ற அனைவரும் பிறரைத் தன் நடத்தையால் மகிழ்விக்க நினைத்தவர்களே என்பதை நாம் நினைவில் நிறுத்த வேண்டும். ·         வங்கியில் பணத்தைச் சேமிப்பதைவிட இதயத்தில் இனிய எண்ணங்களைச் சேமிப்பது மகிழ்ச்சியான வாழ்விற்கு உதவும் வைப்பு நிதியாகும். ·                    மனம் - மகிழ்ச்சி அளிக்காத நிகழ்வுகளை மறந்து விடும் இயல்புடையது. ·                      வெறுப்பு - மனத்தையும், உணர்வையும் பற்றிக் கொண்டுள்ள தொற்று நோய். எனவே வெறுப்பிற்கு விடுதலை தரும்வரை மகிழ்ச்சி நம்மை அணுகாது. ·         கடமையைச் செய்யுங்கள், மகிழ்ச்சியை அறுவடை செய்யலாம். நன்மை, தீமை என்று எது நடந்...

மனிதனாக வாழ ...

  மனிதனாக வாழ ... ·                       பிறர் உன்னை தூற்றும் பொழுது தலை நிமிர்ந்து நில். ·     பொறாமை, கோபம், வீண் மயக்கம் போன்ற குணங்களை விரோதிகளாக எண்ணுதல். ·         வெற்றி -   தோல்வி,   இன்பம் – துன்பம் இரண்டையும் சமமாக பாவித்தல்.             உண்மைக்குப் புறம்பானவற்றைச்  செய்யாதிருத்தல். ·     நண்பர்கள் இல்லை என்றாலும் பரவாயில்லை. பகைவர்கள் இல்லாமல் வாழ முயற்சி செய்தல். ·                 ம னத்திடத்தோடு வாழ்தல்,  ஏற்றத் தாழ்வு இல்லா மனநிலையுடன் இருத்தல். ·             மனிதனுக்கு உரியது - கலங்காத அறிவு, அன்பு நிறைந்த மனம், ஆரோக்கியமான   உடல். ·                      எதற்கும் அஞ்சாதே -   பயம் நம்மை கோழையாக்கி விடும்.              எவரையும் வெறுக்...