Skip to main content

Posts

Showing posts from April, 2025

அமெரிக்கா (சின்சினாட்டி) சென்ற பயணஅனுபவங்களாக...

  அமெரிக்கா (சின்சினாட்டி) சென்ற பயணஅனுபவங்களாக ...             நண்ப ர்களே! நீண்ட நாள் கழித்து   அமெரிக்கா சென்ற அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ள ஆசைப்படுகின்றேன். நான் சிங்கப்பூர், மலேசியா போன்ற இரண்டு அயல்நாட்டுப் பயணங்கள் மேற்கொண்டுள்ளேன். விமானத்தில் பயணிக்கும் நேரம் 4 மணிநேரம் அல்லது 5 மணி நேரமாக இருக்கலாம். ஆனால் இந்த அனுபவம் எனக்கு மிகவும் மறக்க முடியாத அனுபவமாக இருந்தது. நான் Emirates என்னும் விமானத்தில் பயணம் செய்தேன். திருச்சி- சென்னை              திருச்சியிலிருந்து செவ்வாய் கிழமை (23.04.2025) அன்று மாலை 5.00 மணிக்குக் கிளம்பினேன். இரவு 12.00 மணிக்கு சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்திற்கு வந்தடைந்தேன். நம் சென்னை விமானநிலையத்தில் ஒன்றும் பிரச்சனையில்லை. இரவு மணிக்கு 1.00 மணிக்கு check – in at முடிந்து 3 மணிக்கு விமானத்திற்காக காத்திருந்தோம். அங்கு அனைவரும் உதவியாக இருந்தார்கள். இந்த முறை தனியாக சென்றதால் எனக்கு புதிய அனுபவமாக இருந்தது. 3.30 மணியளவில் விமான...

மொழி வழிச் சிந்தனைகள்

  மொழி வழிச் சிந்தனைகள்                                                                   மக்களை மாக்களிலிருந்து பிரித்துக் காண்பிப்பது மொழி . அத்தகைய சிறப்புடைய மொழி என்பது அழகிய மலர் போன்றது . அம்மலர் சூடினால் அழகாக இருக்கும் . நுகர்ந்தால் மணமாக இருக்கும் . அதைப் பிழிந்தால் நல்ல மருந்து கிடைக்கும் .   பயன்படுத்தாமல் பூட்டி வைத்தால் சருகாகும் . தமிழும் அப்படிதான் பூட்டி வைத்தால் சருகாகும் . அறிவியலும் தமிழும்             காணாப் பொருளைச் சொன்ன தமிழுக்குக் காணும் பொருளை ஆராய்தல் முடியாதா ? நமது குறையை மொழியை மீதேற்றுதல் மன்னிக்க முடியாதது . தமிழில் பல நூற்றாண்டுகளுக்கு முன்னரே அறிவியல் கருத்துக்கள் அரும்பிய...

கற்பு - தந்தை பெரியார்

  கற்பு -         தந்தை     பெரியா ர் கற்பு என்ற வார்த்தையைப் பகுபதமாக்கிப் பார்ப்போமானால், கல் என்பதிலிருந்து வந்ததாகவும், அதாவது படி – படிப்பு என்பது போல் கல் – கற்பு என்கின்ற இலக்கணம் சொல்லப்பட்டு வருகிறது. ‘கற்பெனப்படுவது சொற்றியம்பாமை!’ என்கிற வாக்கியப்படி கற்பு என்பது சொல் தவறாமை அதாவது நாணயம், சத்தியம், ஒப்பந்தத்திறகு விரோதமில்லை என்கின்ற கருத்துக்கள் கொண்டதாக இருக்கிறது. நாயகன் – நாயகி என்கின்ற சமத்துவமுள்ள பதங்களும் கதைகளிலும், புராணங்களிலும் ஆண் – பெண் இச்சைகளை உணர்த்தும் நிலைகளுக்கே மிகுதியும் வழங்குப்படுகின்றன. ஆகவே காமத்தையும், அன்பையும் குறிக்கும் காலங்களில் சமத்துவ பொருள் கொண்ட நாயகர் – நாயகி, தலைவர் – தலைவி என்ற வார்த்தைகளை உபயோகித்துவிட்டு, கற்பு என்ற நிலையில் வரும்போது அதைப் பெண்களுக்கு மட்டும் சம்பந்தப்படுத்தி பதி ஆகிய எஜமானனையே கடவுளாகக் கொள்ளவேண்டுமென்று கருத்துக் கொள்ளப்படுகிறது. திருக்குறளிலும் வாழ்க்கைத் துணைநலத்தைப் பற்றி 6 – ஆம் அத்தியாயத்திலும் பெண்வழிச் சேரல் என்பதைப் பற்றி சொல்லவந்த 9 அவது அத்தியாயத்திலும் மற்ற...