என் எண்ணச் சிதறல்கள்! (2) Linkedin எனும் தளத்தில் என்னுடைய எண்ண ங்களைக் கடந்த சில மாதங்களாக க் கவிதைக ளாக வெளியிட்டு வ ருகிறேன். அந்தக் கவிதைகளை அனைத்தையும் தொகுத்து இப்பகுதியில் வெளியிட்டுள்ளேன் . 1. சேவை! தேவை! முகம் பார்த்து செய்வது சேவை! அகம் பார்த்து செய்வது தேவை! 2. சோதனை! சாதனை! சங்கடம் இல்லாத சோதனை இல்லை! சவால் இல்லாத சாதனை இல்லை! 3. புத்தகத்தின் பலன்களாக! நம் வாழ்நாளில் படிக்கும் புத்தகங்கள் சில கிலோ எடைதான் பலன் ? பல டன்களாக இருக்கும்! 4. ஆலோசனை! பலரிடம் ஆலோசனை கேட்கலாம்-முடிவு உனதாக இருக்க வேண்டும்! 5. மெளனம்! மெளனம் - என்பது பேச்சில்லாமல் இருப்பது என்பதல்ல! நினைவுகள் -என்ற சப்தம் இல்லாமல் இருப்பது! 6. அனுபவப் பாடம்! நம் வாழ்க்கை அனுபவத்தில் கற்றுக் கொள்வதை விட அடுத்தவர்களின் வாழ்க்கை அனுபவத்தைப் பாடமாக நெறிப்படுத்திக் கொள்பவனே சா...
அமெரிக்கா (சின்சினாட்டி) சென்ற பயணஅனுபவங்கள் நீண்ட நாள் கழித்து அமெரிக்கா சென்ற அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ள ஆசைப்படுகின்றேன். நான் சிங்கப்பூர், மலேசியா போன்ற இரண்டு அயல்நாட்டுப் பயணங்கள் மேற்கொண்டுள்ளேன். விமானத்தில் பயணிக்கும் நேரம் 4 மணிநேரம் அல்லது 5 மணி நேரமாக இருக்கலாம். ஆனால் இந்த அனுபவம் எனக்கு மிகவும் மறக்க முடியாத அனுபவமாக இருந்தது. நான் Emirates என்னும் விமானத்தில் பயணம் செய்தேன். திருச்சி- சென்னை திருச்சியிலிருந்து செவ்வாய் கிழமை (23.04.2025) அன்று மாலை 5.00 மணிக்குக் கிளம்பினேன். இரவு 12.00 மணிக்கு சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்திற்கு வந்தடைந்தேன். நம் சென்னை விமானநிலையத்தில் ஒன்றும் பிரச்சனையில்லை. இரவு மணிக்கு 1.00 மணிக்கு check – in at முடிந்து 3 மணிக்கு விமானத்திற்காக காத்திருந்தோம். அங்கு அனைவரும் உதவியாக இருந்தார்கள். இந்த முறை தனியாக சென்றதால் எனக்கு புதிய அனுபவமாக இருந்தது. 3.30 மணியளவில் விமானத்தில் அமர்...