Skip to main content

Posts

Showing posts from August, 2025

தஞ்சை சரசுவதிமகால் நூலகம் (புத்தக மதிப்புரை)

  தஞ்சை சரசுவதிமகால் நூலகம் ‘ தஞ்சை மராட்டிய மன்னர்களின் நூலகப் பணிகள் ’ புதுகைப் பண்பலை 91.2 சமுதாய வானொலி (புத்தக மதிப்புரை) நிகழ்ச்சியில் உரையாற்றிய கட்டுரை இன்று நாம் புத்தக மதிப்புரை சிறப்பு நிகழ்ச்சிக்காக , தஞ்சை சரசுவதி மகால் நூலகம் ‘ தஞ்சை மராட்டிய மன்னர்களின் நூலகப் பணிகள் ’ என்னும் தலைப்பில் முனைவர் ஆ . குணசேகரன் அவர்கள் எழுதிய புத்தகத்தைப் பார்ப்போம் . இப்புத்தகத்தைத் திருநெல்வேலி தென்னிந்திய சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம் வெளியிட்டுள்ளார்கள் . நூலாசிரியர் முனைவர் ஆ . குணசேகரன் அவர்கள் நூலகப் பணிகளில் தம்மை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டவர் . சென்னை மறைமலையடிகளார் நூலகத்தில் பல்லாண்டுகளாகப் பணியாற்றி பின்னர் , தஞ்சைத் தமிழ்ப் பல்கலைகழகத்தில் முதுமுனைவர் வ . அய் . சுப்பிரமணியம் நூலகத்தில் சிறப்புநிலை நூலகராக 21 ஆண்டுகளுக்கு மேலாக பணிபுரிந்து சிறப்பான நூலகர் என்ற பெயர் பெற்றுள்ளவர் . இத்தகைய சிறப்புடைய நூலாசிரியர் ‘ தஞ்சை மராட்டிய மன்னர்களின் நூலகப் பணிகள் ’ என்னும் தலைப்பில்   முனைவர் பட்டம் பெற்றுள்ளார் . இதற்காக இவர் பலதரப்பட்ட தரவுகளை தேடித் ...

திருவாசி (மாற்றுரைவரதீசுவரர் கோயில்) சென்ற அனுபவமாக…

  திருவாசி ( மாற்றுரைவரதீசுவரர் கோயில் ) சென்ற அனுபவமாக…             நானும் என் தோழிகளும் ஆகஸ்டு மாதம் 1 – ந் தேதி வெள்ளிக் கிழமை அன்று திருச்சி மாவட்டம் நொச்சியம் அருகில் திருவாசி என்னும் ஊரில் அமைந்துள்ள மாற்றுரைவரதீசுவரர் என்றக் கோவிலுக்கு மாலை 4.30 மணி அளவில் சென்றோம். கோவில் 5.00 மணிக்குத் திறந்தார்கள். மிகவும் பழமை வாய்ந்த கோவிலாக அமைந்துள்ளது. இந்த நாள் எங்களுக்கு மிகவும் மகிழ்ச்சியாகவும், மனநிறைவாகவும் அமைந்தது. திருவாசி ( மாற்றுரைவரதீசுவரர் கோயில் ) மாற்றுரைவரதீசுவரர் கோயில்   என்பது திருச்சிராப்பள்ளி மாவட்டம்  திருவாசி  என்ற ஊரில் அமைந்துள்ள சிவாலயமாகும். இத்தலம் தேவாரம்  பாடல் பெற்ற தலமாகவும், காவிரியின் வடகரையில்  அமைந்துள்ள 62 - வது சிவதலமாகவும் உள்ளது. இச்சிவாலயம் அமைந்த திருவாசி ஊரானது புராண காலத்தில் திருப்பாச்சிலாச்சிராமம் என்ற பெயரில் அழைக்கப்பட்டு வந்துள்ளது. இச்சிவாலயத்தின் மூலவரை ஒவ்வொரு திங்கட்கிழமையும் 7 விளக்குகளில் இலுப் பை நெய்யூற்றி த் தீபம் ஏற்றினால் பொருளாதார சுபி...