Skip to main content

Posts

Showing posts from August, 2025

வைகை நதி நாகரிகம் - கீழடி குறித்த பதிவுகள் (புத்தக மதிப்புரை)

வைகை நதி நாகரிகம் -  கீழடி குறித்த பதிவுகள் (புத்தக மதிப்புரை - புதுகைப் பண்பலை 91.2 சமுதாய வானொலி)           இன்று புத்தக மதிப்புரை சிறப்பு நிகழ்ச்சியில் முனைவர் சு . வெங்கடேசன் எழுதிய வைகை நதி நாகரிகம் ( கீழடி குறித்த பதிவுகள் ) என்ற புத்தகத்தைப் பார்ப்போம் .             இத்தகைய சிறந்ததொரு புத்தகம் முதல் பதிப்பாக டிசம்பர் , 2017 – ஆம் ஆண்டும் , இரண்டாம் பதிப்பாக அக்டோபர் , 2024 – ஆம் ஆண்டும் சென்னை , விகடன் பிரசுரம்   வெளியிட்டுள்ளார்கள் . விலை 210 ரூபாய் , பக்கங்கள் 252.             நூலாசிரியர் மதுரையைச் சேர்ந்தவர் . இவர் இரண்டு ஆய்வு நூல்களும் , ஏழு சிறு நூல்களும் எழுதியுள்ளார் . காவல் கோட்டம் என்ற இவரது முதல் நாவலுக்கு 2011 – ஆம் ஆண்டு சாகித்ய அகாடமி விருது கிடைத்தது . தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் – கலைஞர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளராகப் பொறுப்பு வகிக்கின்றார் .        இந்நூல் ...

பாண்டிச்சேரி சென்ற அனுபவங்களாக (மணக்குள விநாயகர்)...

  பாண்டிச்சேரி சென்ற அனுபவங்களாக... (மணக்குள விநாயகர்)           எங்கள் குடும்ப நண்பர் பாண்டிச்சேரியில் பிரெஞ்ச் கார்னர் என்ற பேக்கரி வைத்துள்ளார்கள். பிரெஞ்ச் கார்னர் பேக்கரி பல கிளைகள் கொண்டு செயல்படுகிறது. அவர்களின் இரண்டாவது மகன் மிதுன் அவர்களின் திருமணத்திற்குச் சென்றோம். அந்த அனுபவத்தைப் பகிர்ந்து கொள்கிறேன்.           இன்று (27.08.2025) விநாயகர் சதுர்த்தி விடுமுறை என்பதால் காலை 6 மணிக்குத் திருச்சியிலிருந்து காரில் பாண்டிச்சேரி  சென்றோம் . புதுசேரி – திண்டிவனம் மெயின் ரோடில் இருக்கும் சாந்தோ லான்ஸ் கன்வென்சன் சென்டர் என்ற இடத்தில் திருமண வரவேற்பு நடைபெற்றது. திருமணம் மகாகாளீஸ்வர் சுவாமி திருக்கோயிலில் விடியற்காலை 4.30- 6.00 மணியில் நடைபெற்றது. சாந்தோ லான்ஸ் கன்வென்சன் சென்டர் இடத்திற்கு நான் சென்றேன். வரவேற்பு வைப்பதற்கு ஏற்ற இடம். காலை சிற்றுண்டியைச் சாப்பிட்டோம். மணமக்களைப் பார்த்து விட்டு மணக்குள விநாயகரைப் பார்க்கச் சென்றோம். மணக்குள விநாயகர்     ...

திருவானைக்கோயில் சென்ற அனுபவங்களாக…

  திருவானைக்கோயில் சென்ற அனுபவங்களாக…               ஞாயிற்றுக் கிழமை (17.08.2025) இன்று ஆவணி மாதம் 1- ந் தேதி என்பதால் மாதப் பிறப்பு என்பதால் திருவானைக்கோவில் கோவிலுக்குச் சென்றோம். நானும், என்னுடன் பணியாற்றும் முனைவர் வா.ரா.விஜயலட்சுமியும் காலை 8.30 மணிக்குக் கிளம்பினோம். திருவானைக்கோவில் அருகில் உள்ள பார்த்தசாரதி ஓட்டலில் காலை சிற்றுண்டி சாப்பிட்டுவிட்டுச் சென்றோம்.             இன்று ஆவணி மாதப் பிறப்பு என்பதால் கோவிலில் ஓரளவு கூட்டம் இருந்தது. காலையில் கோவிலுக்குச் சென்றது மிகவும் மனமகிழ்ச்சியாக இருந்தது. அங்கு பரதம் பயிலும் மாணவிகள் வந்து அங்கு நடனம் ஆடினார்கள். இன்று நாங்கள் முதன் முதலாக மாணவிகள் பரதம் நாட்டியம் ஆடியதைப் பார்த்தோம். சாமி தரிசனம் தரிசித்து விட்டு காலை 10 மணிக்குக் கோவிலிருந்து கிளம்பிவிட்டோம். இந்த நாள் நன்றாக அமைந்தது.                                     ...