Skip to main content

Posts

Showing posts from August, 2025

கீழடிப் புதையல்

  கீழடிப் புதையல்  இந்நூல் கீழடி அகழ்வாராய்ச்சி பற்றிய முழுமையான ஒரு புரிதலை அளிக்கும் ஆய்வு நூலாகும் . கீழடி அகழாய்வில் கண்டறியப்பட்ட முதுமக்கள் தாழிகள் , சுடுமண் சிற்பங்கள் , பகடைக்காய்கள் , செங்கல் கட்டுமானங்கள் இவைகளைக் கொண்டு கீழடி நாகரிகம் , பண்பாடு , தொழில் , வாணிகம் , பொருளாதாரம் , விளையாட்டு எனப் பல தலைப்புகளில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளை   உள்ளடக்கியுள்ளது . இக்கருத்தை மையமாகக் கொண்டு கீழடிப் புதையல் என்னும் தலைப்பில் இந்நூலை எழுதியுள்ளார் ஆசிரியர் . இவர் சென்னையில் நடைபெற்ற 11- ஆம் உலக தமிழ் மாநாட்டில் அளித்த ஆய்வுக் கட்டுரை ‘ கீழடி அகழாய்வுகள் – மீளுருவாகும் சங்கத் தமிழர் பண்பாட்டு வரலாறு ’ என்ற தலைப்பில் வெளியிட்டக் கட்டுரையைக்   கீழடிப் புதையல் என்னும் தலைப்பில் நூலாக உருவாக்கியுள்ளார் . இந்நூலில் அகழாய்வில் கண்டறியப்பட்ட தொல்பொருட்களின் புகைப்படங்களையும் , கீழடி அருங்காட்சியகம்   குறித்தச் செய்திகளையும் இந்நூலில் முன் வைத்துள்ளார் . இந்நூலில் கீழடி புதையல் , கலைகள் , வணிகம் , வேளாண்மை , நானோ தொழில் நுட்பம் , புவியியல் , வைகை ஆற்றுச் சமவெளி ...

வைகை நதி நாகரிகம் - கீழடி குறித்த பதிவுகள் (புத்தக மதிப்புரை)

வைகை நதி நாகரிகம் -  கீழடி குறித்த பதிவுகள் (புத்தக மதிப்புரை - புதுகைப் பண்பலை 91.2 சமுதாய வானொலி)           இன்று புத்தக மதிப்புரை சிறப்பு நிகழ்ச்சியில் முனைவர் சு . வெங்கடேசன் எழுதிய வைகை நதி நாகரிகம் ( கீழடி குறித்த பதிவுகள் ) என்ற புத்தகத்தைப் பார்ப்போம் .             இத்தகைய சிறந்ததொரு புத்தகம் முதல் பதிப்பாக டிசம்பர் , 2017 – ஆம் ஆண்டும் , இரண்டாம் பதிப்பாக அக்டோபர் , 2024 – ஆம் ஆண்டும் சென்னை , விகடன் பிரசுரம்   வெளியிட்டுள்ளார்கள் . விலை 210 ரூபாய் , பக்கங்கள் 252.             நூலாசிரியர் மதுரையைச் சேர்ந்தவர் . இவர் இரண்டு ஆய்வு நூல்களும் , ஏழு சிறு நூல்களும் எழுதியுள்ளார் . காவல் கோட்டம் என்ற இவரது முதல் நாவலுக்கு 2011 – ஆம் ஆண்டு சாகித்ய அகாடமி விருது கிடைத்தது . தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் – கலைஞர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளராகப் பொறுப்பு வகிக்கின்றார் .        இந்நூல் ...

பாண்டிச்சேரி சென்ற அனுபவங்களாக (மணக்குள விநாயகர்)...

  பாண்டிச்சேரி சென்ற அனுபவங்களாக... (மணக்குள விநாயகர்)           எங்கள் குடும்ப நண்பர் பாண்டிச்சேரியில் பிரெஞ்ச் கார்னர் என்ற பேக்கரி வைத்துள்ளார்கள். பிரெஞ்ச் கார்னர் பேக்கரி பல கிளைகள் கொண்டு செயல்படுகிறது. அவர்களின் இரண்டாவது மகன் மிதுன் அவர்களின் திருமணத்திற்குச் சென்றோம். அந்த அனுபவத்தைப் பகிர்ந்து கொள்கிறேன்.           இன்று (27.08.2025) விநாயகர் சதுர்த்தி விடுமுறை என்பதால் காலை 6 மணிக்குத் திருச்சியிலிருந்து காரில் பாண்டிச்சேரி  சென்றோம் . புதுசேரி – திண்டிவனம் மெயின் ரோடில் இருக்கும் சாந்தோ லான்ஸ் கன்வென்சன் சென்டர் என்ற இடத்தில் திருமண வரவேற்பு நடைபெற்றது. திருமணம் மகாகாளீஸ்வர் சுவாமி திருக்கோயிலில் விடியற்காலை 4.30- 6.00 மணியில் நடைபெற்றது. சாந்தோ லான்ஸ் கன்வென்சன் சென்டர் இடத்திற்கு நான் சென்றேன். வரவேற்பு வைப்பதற்கு ஏற்ற இடம். காலை சிற்றுண்டியைச் சாப்பிட்டோம். மணமக்களைப் பார்த்து விட்டு மணக்குள விநாயகரைப் பார்க்கச் சென்றோம். மணக்குள விநாயகர்     ...

திருவானைக்கோயில் சென்ற அனுபவங்களாக…

  திருவானைக்கோயில் சென்ற அனுபவங்களாக…               ஞாயிற்றுக் கிழமை (17.08.2025) இன்று ஆவணி மாதம் 1- ந் தேதி என்பதால் மாதப் பிறப்பு என்பதால் திருவானைக்கோவில் கோவிலுக்குச் சென்றோம். நானும், என்னுடன் பணியாற்றும் முனைவர் வா.ரா.விஜயலட்சுமியும் காலை 8.30 மணிக்குக் கிளம்பினோம். திருவானைக்கோவில் அருகில் உள்ள பார்த்தசாரதி ஓட்டலில் காலை சிற்றுண்டி சாப்பிட்டுவிட்டுச் சென்றோம்.             இன்று ஆவணி மாதப் பிறப்பு என்பதால் கோவிலில் ஓரளவு கூட்டம் இருந்தது. காலையில் கோவிலுக்குச் சென்றது மிகவும் மனமகிழ்ச்சியாக இருந்தது. அங்கு பரதம் பயிலும் மாணவிகள் வந்து அங்கு நடனம் ஆடினார்கள். இன்று நாங்கள் முதன் முதலாக மாணவிகள் பரதம் நாட்டியம் ஆடியதைப் பார்த்தோம். சாமி தரிசனம் தரிசித்து விட்டு காலை 10 மணிக்குக் கோவிலிருந்து கிளம்பிவிட்டோம். இந்த நாள் நன்றாக அமைந்தது.                                     ...

Popular posts from this blog

பொய்யில் புலவன் பொய்யா மொழிகள்

திருக்குறளில் எனது சிறு முயற்சியாக… .  " பொய்யில் புலவன் பொய்யா மொழிகள்"  என்ற இத்தலைப்பில் அமைந்த 133 வரிகள் கொண்ட இப்படைப்பு முருகனின் ” கந்த சஷ்டி  கவசம் ” போன்று உருவாக்கப்பட்டது. இப்பகுதி அறத்துப்பால் 38  அதிகாரங்கள், பொருட்பால் 70  அதிகாரங்களிலிருந்து மட்டும் சுருங்கச் சொல்லி விளங்க வைத்தல் என்ற முறையில், திருக்குறளின் சாராக அமைத்து வழங்கியுள்ளேன். அறமும், பொருளும் ஒருவருக்கு அமைந்தால் இன்பம் தானாகக் கிட்டும் என்ற நோக்கத்தில் அமைக்கப்பட்டது. ”பொய்யில் புலவன் பொய்யா மொழிகள்” காக்க காக்க அறத்தைக் காக்க (1) காக்க காக்கக் குறளைக் காக்க உலக மொழிகளில் ஒப்பற்ற நூலாம், நோக்க நோக்க பெயா்த்து நோக்க மனிதன் கற்று மனிதம் காக்க ஐம்பொறி உணா்வை காக்க காக்க புகழுடன் வாழ ஒழுக்கம் காக்க அறநெறி வாழ்வை இறைவழி காக்க வானம் பொய்யா வளத்தைக் காக்க பசிப்பிணி யில்லா உலகைக் காக்க பற்றற்ற வாழ்வை பரிவுடன் காக்க அறத்தைக் காக்க அன்பைக் காக்க (2) குறையிலா வாழ்வை குணமுடன் காக்க இல்லற வாழ்வுடன் நல்லறம் காக்க பண்பொடு பயனும் அறத்துடன் காக்க வாழ்க வாழ்க வளமுடன் வாழ்க வாழ்க வாழ்க...

எண்ணம் போல் வாழ்வு

                                   எண்ணம் போல் வாழ்வு   நினைவுகளே பழக்கவழக்கங்களாக மாறுகின்றன. எனவே தான் எண்ணம் போல் வாழ்வு அனைவருக்கும் அமைகிறது. வெற்றி பெற்ற அனைவரும் பிறரைத் தன் நடத்தையால் மகிழ்விக்க நினைத்தவர்களே என்பதை நாம் நினைவில் நிறுத்த வேண்டும். ·         வங்கியில் பணத்தைச் சேமிப்பதைவிட இதயத்தில் இனிய எண்ணங்களைச் சேமிப்பது மகிழ்ச்சியான வாழ்விற்கு உதவும் வைப்பு நிதியாகும். ·                    மனம் - மகிழ்ச்சி அளிக்காத நிகழ்வுகளை மறந்து விடும் இயல்புடையது. ·                      வெறுப்பு - மனத்தையும், உணர்வையும் பற்றிக் கொண்டுள்ள தொற்று நோய். எனவே வெறுப்பிற்கு விடுதலை தரும்வரை மகிழ்ச்சி நம்மை அணுகாது. ·         கடமையைச் செய்யுங்கள், மகிழ்ச்சியை அறுவடை செய்யலாம். நன்மை, தீமை என்று எது நடந்...

மனிதனாக வாழ ...

  மனிதனாக வாழ ... ·                       பிறர் உன்னை தூற்றும் பொழுது தலை நிமிர்ந்து நில். ·     பொறாமை, கோபம், வீண் மயக்கம் போன்ற குணங்களை விரோதிகளாக எண்ணுதல். ·         வெற்றி -   தோல்வி,   இன்பம் – துன்பம் இரண்டையும் சமமாக பாவித்தல்.             உண்மைக்குப் புறம்பானவற்றைச்  செய்யாதிருத்தல். ·     நண்பர்கள் இல்லை என்றாலும் பரவாயில்லை. பகைவர்கள் இல்லாமல் வாழ முயற்சி செய்தல். ·                 ம னத்திடத்தோடு வாழ்தல்,  ஏற்றத் தாழ்வு இல்லா மனநிலையுடன் இருத்தல். ·             மனிதனுக்கு உரியது - கலங்காத அறிவு, அன்பு நிறைந்த மனம், ஆரோக்கியமான   உடல். ·                      எதற்கும் அஞ்சாதே -   பயம் நம்மை கோழையாக்கி விடும்.              எவரையும் வெறுக்...