கீழடிப் புதையல் இந்நூல் கீழடி அகழ்வாராய்ச்சி பற்றிய முழுமையான ஒரு புரிதலை அளிக்கும் ஆய்வு நூலாகும் . கீழடி அகழாய்வில் கண்டறியப்பட்ட முதுமக்கள் தாழிகள் , சுடுமண் சிற்பங்கள் , பகடைக்காய்கள் , செங்கல் கட்டுமானங்கள் இவைகளைக் கொண்டு கீழடி நாகரிகம் , பண்பாடு , தொழில் , வாணிகம் , பொருளாதாரம் , விளையாட்டு எனப் பல தலைப்புகளில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளை உள்ளடக்கியுள்ளது . இக்கருத்தை மையமாகக் கொண்டு கீழடிப் புதையல் என்னும் தலைப்பில் இந்நூலை எழுதியுள்ளார் ஆசிரியர் . இவர் சென்னையில் நடைபெற்ற 11- ஆம் உலக தமிழ் மாநாட்டில் அளித்த ஆய்வுக் கட்டுரை ‘ கீழடி அகழாய்வுகள் – மீளுருவாகும் சங்கத் தமிழர் பண்பாட்டு வரலாறு ’ என்ற தலைப்பில் வெளியிட்டக் கட்டுரையைக் கீழடிப் புதையல் என்னும் தலைப்பில் நூலாக உருவாக்கியுள்ளார் . இந்நூலில் அகழாய்வில் கண்டறியப்பட்ட தொல்பொருட்களின் புகைப்படங்களையும் , கீழடி அருங்காட்சியகம் குறித்தச் செய்திகளையும் இந்நூலில் முன் வைத்துள்ளார் . இந்நூலில் கீழடி புதையல் , கலைகள் , வணிகம் , வேளாண்மை , நானோ தொழில் நுட்பம் , புவியியல் , வைகை ஆற்றுச் சமவெளி ...
வைகை நதி நாகரிகம் - கீழடி குறித்த பதிவுகள் (புத்தக மதிப்புரை - புதுகைப் பண்பலை 91.2 சமுதாய வானொலி) இன்று புத்தக மதிப்புரை சிறப்பு நிகழ்ச்சியில் முனைவர் சு . வெங்கடேசன் எழுதிய வைகை நதி நாகரிகம் ( கீழடி குறித்த பதிவுகள் ) என்ற புத்தகத்தைப் பார்ப்போம் . இத்தகைய சிறந்ததொரு புத்தகம் முதல் பதிப்பாக டிசம்பர் , 2017 – ஆம் ஆண்டும் , இரண்டாம் பதிப்பாக அக்டோபர் , 2024 – ஆம் ஆண்டும் சென்னை , விகடன் பிரசுரம் வெளியிட்டுள்ளார்கள் . விலை 210 ரூபாய் , பக்கங்கள் 252. நூலாசிரியர் மதுரையைச் சேர்ந்தவர் . இவர் இரண்டு ஆய்வு நூல்களும் , ஏழு சிறு நூல்களும் எழுதியுள்ளார் . காவல் கோட்டம் என்ற இவரது முதல் நாவலுக்கு 2011 – ஆம் ஆண்டு சாகித்ய அகாடமி விருது கிடைத்தது . தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் – கலைஞர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளராகப் பொறுப்பு வகிக்கின்றார் . இந்நூல் ...