வெற்றிப் பாதை ( புத்தக மதிப்புரை ) வள்ளுவர் வழியில் இன்று புத்தக மதிப்புரை சிறப்பு நிகழ்ச்சியில் அகிலன் கண்ணன் அவர்கள் எழுதிய வெற்றிப் பாதை வள்ளுவர் வழியில் என்ற புத்தகத்தைப் பார்ப்போம் . இந்தப் புத்தகத்தை டிசம்பர் 2003 - ஆம் ஆண்டு , சென்னை , தாகம் பதிப்பகம் வெளியிட்டுள்ளார்கள் . பக்கங்கள் 92, விலை 180 ரூபாய் . இந்நூலின் ஆசிரியர் திரு . அகிலன் கண்ணன் அவர்கள் பதிப்பாளர் , எழுத்தாளர் , விமர்சகர் , கவிஞர் , சமூக ஆர்வலர் , நாடக எழுத்தாளர் மற்றும் ஃப்ரீலான்ஸ் பத்திரிகையாளர் எனப் பன்முகத்தன்மை கொண்டவர். தனக்கு மட்டுமல்லாது தமிழ் மண்ணுக்கும் பெருமை சேர்த்து , தமிழ் மக்களின் மன தைக் கவர்ந்தப் புகழ்பெற்ற எழுத்தாளர் அகிலன் அவர்களின் மகனான கண்ணன் தமிழ் இலக்கிய உலகில் மிகுந்த கவனம் பெற்றவர் ஆவார். கண்ணன் தனது தமிழ்ப் புத்தகாலயம் - தாகம் பதிப்பகம் மூலமாக தமிழ் இலக்கிய உலகில் புகழ்பெற்ற படைப்புகளை உருவாக்கி தமிழை வளப்படுத்த இன்றும் தீவிரமாகச் செயல்பட்டு வருகிறார். மக்களிடையே வாசிப்புப் பழக்கத்தை மேம்படுத்துவதில் தொடர்ந்து சமூக வலைத்தளங்களில் தனது உற்...
ஓலை சுவடி – வரலாறு பழங்காலத்தில் பள்ளிகள் திண்ணைப் பள்ளிக்கூடங்களாக ( ஆசிரியரின் வீட்டுத் திண்ணை , சத்திரம் , சாவடி , ஊர் மன்றம் , கோவில் ) அல்லது தெருப்பள்ளிக் கூடங்களாக இருந்துள்ளன . இப்பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் குறைவாக தான் இருப்பர் . இம்மாணவர்களில் பெரும்பாலோர் தொடக்கநிலைக் கல்வியோடு நிறுத்திவிடுவர் . ஒருசிலர் மட்டும் தனி ஆசிரியரைத் தேடிச் சென்று இலக்கண இலக்கியங்களைக் கற்றுள்ளனர் . ஆசிரியர் இவர்களுக்குப் பாடங்களை வாய்மொழிப் பாடங்களாகவே சொல்லித் தருவர் . இக்கல்வி முறையே பழங்காலத்தில் நிலவி வந்துள்ளது . அக்காலத்தில் மனன நிலையிலேயே நூல்கள் பயிலப்பட்டும் கற்பிக்கப்பட்டும் வந்துள்ளன . காட்டாக , நக்கீரரின் ‘ இறையனார் களவியல் உரை ’ பன்னிரண்டு தலைமுறைகளாக வாய்மொழி பாடமாகவே வளர்ந்து ஏட்டு உருவம் பெற்றதை இந்நூல் வரலாறு சுட்டுகிறது . பழங்காலத்தில் மாணவர்களுக்கு எழுத்துக்களைச் சொல்லிக் கொடுக்க நெல் , அரிசி , மணல் போன்றவற்றைப் பரப்பி அவற்றில் எழுத்துக்களை எ...