Skip to main content

Posts

Showing posts from November, 2025

புத்தாண்டு வாழ்த்துகள்!

 அன்பில் தொடங்கி ஆனந்தத்தில் முடியட்டும்! புன்னகையில் தொடங்கி மகிழ்ச்சியில் முடியட்டும்! சிந்தனையில் தொடங்கி செயலில் முடியட்டும்! துன்பங்கள் நீங்கி இன்பங்கள் பிறக்கட்டும்!!! அனைத்து நண்பர்களுக்கும் புத்தாண்டு நல் வாழ்த்துகள்!!!

ஓலை சுவடி – வரலாறு

  ஓலை சுவடி – வரலாறு             பழங்காலத்தில் பள்ளிகள் திண்ணைப் பள்ளிக்கூடங்களாக ( ஆசிரியரின் வீட்டுத் திண்ணை , சத்திரம் , சாவடி , ஊர் மன்றம் , கோவில் ) அல்லது தெருப்பள்ளிக் கூடங்களாக இருந்துள்ளன . இப்பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் குறைவாக தான் இருப்பர் . இம்மாணவர்களில் பெரும்பாலோர் தொடக்கநிலைக் கல்வியோடு நிறுத்திவிடுவர் . ஒருசிலர் மட்டும் தனி ஆசிரியரைத் தேடிச் சென்று இலக்கண இலக்கியங்களைக் கற்றுள்ளனர் . ஆசிரியர் இவர்களுக்குப் பாடங்களை வாய்மொழிப் பாடங்களாகவே சொல்லித் தருவர் . இக்கல்வி முறையே பழங்காலத்தில் நிலவி வந்துள்ளது . அக்காலத்தில் மனன நிலையிலேயே நூல்கள் பயிலப்பட்டும் கற்பிக்கப்பட்டும் வந்துள்ளன . காட்டாக , நக்கீரரின் ‘ இறையனார் களவியல் உரை ’ பன்னிரண்டு தலைமுறைகளாக வாய்மொழி பாடமாகவே   வளர்ந்து ஏட்டு உருவம் பெற்றதை இந்நூல் வரலாறு சுட்டுகிறது .           பழங்காலத்தில் மாணவர்களுக்கு எழுத்துக்களைச் சொல்லிக் கொடுக்க நெல் , அரிசி , மணல் போன்றவற்றைப் பரப்பி அவற்றில் எழுத்துக்களை எ...

கும்பகோணம் சென்ற அனுபவங்களாக...

  கும்பகோணம் சென்ற அனுபவங்களாக...           கும்பகோணம் கும்பகோணம் "கோவில்களின் நகரம்" என்று அழைக்கப்படுகிறது.   இங்கு பல பழமையான மற்றும் சிறப்பு வாய்ந்த கோவில்கள் உள்ளன.  12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் மகாமகம் விழா மிகவும் புகழ் பெற்றது.   கும்பகோணம் வெற்றிலை உலகெங்கிலும் மிகவும் பிரபலமானது.   கும்பகோணம் சென்ற அனுபவங்கள்                                                   நானும் என் மகளின் தோழி நிருபமா அவர்களும் 24.11.2025 அன்று  கும்பகோணத்திற்குச் சென்றோம். எங்கள் புது வீட்டிற்கு ஊஞ்சலுக்குப் பித்தளைச் செயின் வாங்கச் சென்றோம். மற்ற இடங்களில் கேட்டு விட்டு கும்பகோணத்தில் குறைவான விலையில் வாங்கலாம் என்று கும்பகோணத்திற்குச் சென்றோம். மரகதலஷ்மி என்ற கடையில் 22,000 ரூபாயில் ஊஞ்சல் செயின் வாங்கினோம். பாத்திரக்கடை மிகப் பெரிய அளவில் மூன்று அடுக்கு மாளிகையில் அதிகமான பித்தளை, வெங்கலம...

வால்பாறை சென்ற அனுபவங்களாக...

  வால்பாறை சென்ற அனுபவங்களாக...             நானும் எங்கள் சம்பந்தி குடும்பமும் மற்றும் எங்கள் அப்பார்ட்மெண்ட்டில் வசிக்கும் குடும்ப நண்பர்கள் என்று 17 பேர்   வேனில் வால்பாறைக்கு இரண்டு நாள் சுற்றுலா பயணம் சென்றோம். இந்த அனுபவம் மிகவும் புதிய அனுபவமாக இருந்தது. உறவினர்களுடன் செல்வதை விட நண்பர்களுடன் செல்வது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கும். மிகவும் நிதானமாகவும், அவசரம் இல்லாமலும் இந்த சுற்றுலா அனுபவம் இருந்தது. வால்பாறை (வியாழன் – 13.11.2025)           கோவை மாவட்டத்தில் பெருமைசேர்க்கும் முக்கிய இடங்களில் வால்பாறையும் சிறந்த இடமாகும். ஏழாவது சொர்க்கம் என்று மாவட்ட நிர்வாகத்தால் பெயர் சூட்டப்பட்ட வால்பாறையில் மரங்கள், இயற்கை வளங்கள், தேயிலை மற்றும் காபி தோட்டங்கள், அணைகள் என்று சுற்றுலா தலமாக உள்ளது.           வால்பாறை என்ற இடம் இருப்பதை 1880 ஆம் ஆண்டில் காரல்மார்க்ஸ் என்ற ஆங்கிலேயரால் வெளி உலகுக்கு தெரிய வந்தது. 1920 – ஆண்டில் ஆதிவாச...

Popular posts from this blog

பொய்யில் புலவன் பொய்யா மொழிகள்

திருக்குறளில் எனது சிறு முயற்சியாக… .  " பொய்யில் புலவன் பொய்யா மொழிகள்"  என்ற இத்தலைப்பில் அமைந்த 133 வரிகள் கொண்ட இப்படைப்பு முருகனின் ” கந்த சஷ்டி  கவசம் ” போன்று உருவாக்கப்பட்டது. இப்பகுதி அறத்துப்பால் 38  அதிகாரங்கள், பொருட்பால் 70  அதிகாரங்களிலிருந்து மட்டும் சுருங்கச் சொல்லி விளங்க வைத்தல் என்ற முறையில், திருக்குறளின் சாராக அமைத்து வழங்கியுள்ளேன். அறமும், பொருளும் ஒருவருக்கு அமைந்தால் இன்பம் தானாகக் கிட்டும் என்ற நோக்கத்தில் அமைக்கப்பட்டது. ”பொய்யில் புலவன் பொய்யா மொழிகள்” காக்க காக்க அறத்தைக் காக்க (1) காக்க காக்கக் குறளைக் காக்க உலக மொழிகளில் ஒப்பற்ற நூலாம், நோக்க நோக்க பெயா்த்து நோக்க மனிதன் கற்று மனிதம் காக்க ஐம்பொறி உணா்வை காக்க காக்க புகழுடன் வாழ ஒழுக்கம் காக்க அறநெறி வாழ்வை இறைவழி காக்க வானம் பொய்யா வளத்தைக் காக்க பசிப்பிணி யில்லா உலகைக் காக்க பற்றற்ற வாழ்வை பரிவுடன் காக்க அறத்தைக் காக்க அன்பைக் காக்க (2) குறையிலா வாழ்வை குணமுடன் காக்க இல்லற வாழ்வுடன் நல்லறம் காக்க பண்பொடு பயனும் அறத்துடன் காக்க வாழ்க வாழ்க வளமுடன் வாழ்க வாழ்க வாழ்க...

எண்ணம் போல் வாழ்வு

                                   எண்ணம் போல் வாழ்வு   நினைவுகளே பழக்கவழக்கங்களாக மாறுகின்றன. எனவே தான் எண்ணம் போல் வாழ்வு அனைவருக்கும் அமைகிறது. வெற்றி பெற்ற அனைவரும் பிறரைத் தன் நடத்தையால் மகிழ்விக்க நினைத்தவர்களே என்பதை நாம் நினைவில் நிறுத்த வேண்டும். ·         வங்கியில் பணத்தைச் சேமிப்பதைவிட இதயத்தில் இனிய எண்ணங்களைச் சேமிப்பது மகிழ்ச்சியான வாழ்விற்கு உதவும் வைப்பு நிதியாகும். ·                    மனம் - மகிழ்ச்சி அளிக்காத நிகழ்வுகளை மறந்து விடும் இயல்புடையது. ·                      வெறுப்பு - மனத்தையும், உணர்வையும் பற்றிக் கொண்டுள்ள தொற்று நோய். எனவே வெறுப்பிற்கு விடுதலை தரும்வரை மகிழ்ச்சி நம்மை அணுகாது. ·         கடமையைச் செய்யுங்கள், மகிழ்ச்சியை அறுவடை செய்யலாம். நன்மை, தீமை என்று எது நடந்...

மனிதனாக வாழ ...

  மனிதனாக வாழ ... ·                       பிறர் உன்னை தூற்றும் பொழுது தலை நிமிர்ந்து நில். ·     பொறாமை, கோபம், வீண் மயக்கம் போன்ற குணங்களை விரோதிகளாக எண்ணுதல். ·         வெற்றி -   தோல்வி,   இன்பம் – துன்பம் இரண்டையும் சமமாக பாவித்தல்.             உண்மைக்குப் புறம்பானவற்றைச்  செய்யாதிருத்தல். ·     நண்பர்கள் இல்லை என்றாலும் பரவாயில்லை. பகைவர்கள் இல்லாமல் வாழ முயற்சி செய்தல். ·                 ம னத்திடத்தோடு வாழ்தல்,  ஏற்றத் தாழ்வு இல்லா மனநிலையுடன் இருத்தல். ·             மனிதனுக்கு உரியது - கலங்காத அறிவு, அன்பு நிறைந்த மனம், ஆரோக்கியமான   உடல். ·                      எதற்கும் அஞ்சாதே -   பயம் நம்மை கோழையாக்கி விடும்.              எவரையும் வெறுக்...