திருப்பதி சென்ற
அனுபவங்களாக…
நான் மற்றும் என் மகளின் மாமியார் என்று 50 பேர் திருநெடுங்குளநாதர் டிராவல்ஸ், திருச்சி – 15 மூலம் இரண்டு
நாள் (14.04.2026, 15.04.2026) பயணமாக (திருப்பதி, அலமேலுமங்கபுரம், காளகஸ்தி, திருத்தணி, காஞ்சிபுரம்) சுற்றுலா சென்றோம். எங்கள் பெற்றோருடன், பள்ளி, கல்லூரி என்று
சுற்றுலா சென்றுள்ளேன். நீண்ட ஆண்டுகளுக்குப் பிறகு இரண்டு நாள் சுற்றுலா சென்றேன். இதுவும் ஒரு
புதிய அனுபவமாக இருந்தது. பஸ்ஸில் அதிக நேரம் அமர்ந்திருந்தது கால் வலி, உடல் வலி, தூக்கமின்மை
என்று இருந்தாலும் இதுவும் மகிழ்ச்சியாகவே இருந்தது. சுற்றுலா முடிந்தவுடன் அதன் களைப்பு தீர இரண்டு மூன்று நாட்கள்
ஆனது.
திருப்பதி (14.04.2026)
நாங்கள் திருச்சியிலிருந்து (திருவெறும்பூர்) 13.04.2026 அன்று இரவு 10 மணிக்குக் கிளம்பினோம். அடுத்த நாள் (14.04.2026) காலையில்
திருப்பதி (ஆந்திர மாநிலம்) சென்று விட்டோம். எனக்கு மலைப்
பகுதி ஏறுவது என்றால் வாந்தி வந்துவிடும். எனவே அதற்குரிய மாத்திரையைப் போட்டுக் கொண்டேன். திருப்பதி கீழிலிருந்து
திருமலைக்குச் செல்ல அங்குள்ள பஸ்ஸில் ஏற்றிக் கூட்டிச் சென்றார்கள். மலை ஏறியதும்
அங்கு காலை உணவாக தோசையும், கடலை சட்னி, பூண்டி சட்னியும் ரூபாய் 50 கொடுத்து வாங்கி சாப்பிட்டேன். இதுவரை கடலைச் சட்னி இந்தளவு சுவையாக சாப்பிட்டது கிடையாது. மிகவும் அருமையாக
இருந்தது.
சாப்பிட்டு முடிந்தவுடன் நாங்கள் அனைவரும் குளித்துவிட்டுச் சென்றோம். நாங்கள் சாமியைத்
தரிசனம் செய்யும் முன்னரே பதிவு செய்யாததால் காலதாமதம் ஆனது. காலை 11 மணிக்குச் சென்று
இரவு 1.30 மணிக்குத் தான்
சுவாமியைத் தரிசனம் செய்தோம். சுமார் 13 மணி நேரம் அறையில் வைத்து மதிய உணவு. மாலை பால், பிஸ்கட், இரவு ரவை உப்புமா
என்று இலவசமாக உணவு கொடுத்துக் கொண்டே இருந்தார்கள். நாங்கள் சாப்பிட்டுக் கொண்டும், உறங்கி கொண்டும், பேசி கொண்டும் பொழுதைப் போக்கினோம். இதுவும் ஒரு
புதிய அனுபவமாக இருந்தது.
இதற்கு முன் திருப்பதிக்கு எங்கள் மகளின் திருமணத்திற்கு முன் 2016 – ஆம் ஆண்டு எங்கள்
குடும்பத்துடன் சென்றோம். அப்பொழுது 7 மணிநேரம் தான் காத்திருந்து சாமியைத் தரிசனம் செய்தோம்.
15.04.2026 அன்று விடியற் காலை 5 மணிக்குத் திருப்பதி மலையிலிருந்து பஸ் பயணமாக கீழே இறங்கினோம். அப்பொழுதும்
நான் வாந்தி வராமல் இருப்பதற்கு மாத்திரை எடுத்துக் கொண்டேன். ஆனால் பஸ்ஸில்
ஏறி அமர்ந்தவுடன் உறங்கி விட்டேன். பஸ் கீழே வந்தவுடன் நான் கண் விழித்தேன். திருப்பதி மலைக்கு
ஏறும் போதும் இறங்கும் போதும் அதன் மலையின் இயற்கை அழகை இரசிக்க முடியவில்லை.
அலமேலுமங்காபுரம் (பத்மாவதி தாயார்
கோயில்)
திருப்பதிக்கு அருகில் 5 கி.மீ தொலைவில் அமைந்துள்ள (15.04.2026) அலமேலுமங்காபுரத்திற்கு
காலை 8 மணிக்குச் சென்றோம். அங்கு பத்மாவதி
தாயார் கோயிலில் தரிசனம் செய்தோம். பிரசாதமாக தயிர் சாதம் கொடுத்தார்கள்.
காளஹஸ்தி கோயில் (தென் கைலாயம்)
அலமேலுமங்காபுரத்திலிருந்து காளகஸ்தி
கோயிலுக்கு வந்தோம். அங்கு குளித்துவிட்டுக் கோயிலுக்குச் சென்றோம். கோயில் மிகவும்
பெரியதாக இருந்தது. கோயிலில் பகல் 12
மணியிலிருந்து மதியம் 2 மணி வரை அன்னதானம் நடைபெறும் என்று சொன்னார்கள். நாங்களும் வெயில் காரணமாக வெளியில் ரொம்ப நேரம் நடக்க முடியவில்லை. அதனால் அங்கே
அன்னதானத்தில் மதிய உணவை சாப்பிட்டு முடித்து விட்டோம்.
ஆந்திரப் பிரதேசத்தில் பொன்முகலி ஆற்றங்கரையில் பஞ்சபூத தலங்களில் வாயுவை பிரதிபலிக்கும் மிக முக்கியமான சிவ
தலமாகும். இக்கோயில் ராகு – கேது தோஷ நிவர்த்திக்கும், பாதாள விநாயகர்
சந்நிதிக்கும், கண்ணப்பர் மலைக்கும்
புகழ் பெற்றதாகும். 2000 ஆண்டுக்கும் மேலான பழமையான கோயிலாகும்.
திருத்தணி (சுப்பிரமணிய
சுவாமி கோயில்)
அறுபடை விடுகளில் ஐந்தாம் படை வீடாகத் திகழ்கின்றது. தமிழ்நாட்டில்
திருவள்ளுவர் மாவட்டத்தில் அமைந்துள்ளது.
365 படிகளைக் கொண்டது. இந்த மலைக்கோயில் அருணகிரிநாதரால் திருப்புகழ் பாடிய திருத்தலமாகும். நாங்கள் நடந்து
சென்றோம். மிகவும் அருமையான
அமைதியான கோயிலாக இருந்தது. குரங்குகள் அதிகமாக இருந்தது.
காஞ்சிபுரம்
அடுத்ததாகக் காஞ்சிபுரம் மாலை 6 மணிக்கு வந்துவிட்டோம். அங்கு ஒவ்வொரு ஆட்டோவிலும் 8 பேர் என்று பிரிந்து சென்றோம். காமாட்சி கோயில், ஏகாம்பரநாதர் கோயில், சித்ரகுப்த
கோயில், என்று நான்கு
கோயில் மட்டும் தான் பார்த்தோம்.
காமாட்சி கோயில்
·
காஞ்சிபுரத்தில்
உள்ள அனைத்து சிவன் கோயில்களையும் மையமாகக் கொண்ட ஒரே சக்தி ஆலயம் காமாட்சி அம்மன்
கோயில் ஆகும்.
·
கோயிலின்
உள்ளே பிரகாரங்களும், தெப்பக்குளமும், நூறுகால் மண்டபமும் அமைந்துள்ளன. இத்திருக்கோயில் 5 ஏக்கர்
பரப்பளவில் அமைந்துள்ளது.
·
இக்
கோயிலின் கருவறையில் காமாட்சியின் உருவம் அமர்ந்திருக்கும்
கோலத்தில் உள்ளது. காமாட்சி
அம்பாள் இங்கே நான்கு கரங்களோடு பத்மாசன யோக நிலையில் அமர்ந்திருக்கிறாள். முன்
இருகைகளில் கரும்பு வில்லினையும், மலர்க் கணைகளையும், மேல் இருகைகளில் பாசம் மற்றும்
அங்குசத்தை ஏந்தி இருக்கிறாள்.
ஏகாம்பரநாதர்
கோயில்
காஞ்சிபுரம் ‘கோயில் நகரம்‘ என அழைக்கப்படும் மிக முக்கியமான
இந்து சமய புனிதத் தலமாகும். ஏகாம்பரநாதர், காமாட்சி அம்மன்,
வரதராஜப் பெருமாள் ஆகிய முப்பெரும் கோயில்கள் இங்கு பிரபலம்.
பல்லவ மன்னர்களால் கட்டப்பட்ட கைலாசநாதர் கோயில், 108 திவ்ய தேசங்களில் ஒன்றான வைகுண்ட பெருமாள் கோயில் ஆகியவை வரலாற்றுச்
சிறப்புமிக்கவை.
சித்ர குப்த
கோயில்
இக்கோயில் இந்து மதக் கடவுள் சித்திரகுப்தரின் அரிய கோயிலாக விளங்குகிறது. இது ஒரு அரிதான கோயிலாகும். ஏனெனில் உலகில் காஞ்சிபுரத்தில் மட்டுமே சித்ரகுப்தனுக்கு ஆலயம் அமைந்துள்ளது. சித்திரை மாதத்தில் சித்ரகுப்தனுக்கு திருவிழா நடைபெறுகிறது.
உலகளந்த பெருமாள்
கோயில்
உலகளந்த பெருமாளின் வடிவமாக திருவுருவம் அமைந்துள்ளது. ஆழ்வார்களால் பாடல் பெற்ற
இத்தலம் விஷ்ணுவின் 108 திவ்ய தேசங்களில் ஒன்றாக உள்ளது. ஒரு அந்தணச் சிறுவனாக அவதரித்த
விஷ்ணு மகாபலி சக்கரவர்த்தியிடம் மூன்றடி மண் தானம் கேட்க, அதற்கு மன்னனும் தர இசைகிறான்.
நெடிய தோற்றம் கொண்டு விண்ணையும் மண்ணையும் இரு அடிகளால் அளந்துவிடுகிறார் மூன்றாம்
அடி வைக்க இடமில்லாததால் அதனை மன்னனின் தலையில் வைக்கிறார். உலகளந்த வடிவத்தைக் காண
இயலாமல் மன்னன் பாதாளத்தில் தள்ளப்படுகிறான். மன்ன்னின் வேண்டுதலுக்கு இணங்க விஷ்ணு
வெவ்வேறு நிலைகளில் காட்சியளிப்பதே ஊரகம், காரகம், நீரகம் பாடகம் என வழங்கப்படுகிறது.
நிறைவாக,
15.04.2026 அன்று இரவு காஞ்சிபுரத்தில் கோயில் சென்று முடித்தவுடன் புடவை கடைக்குச்
சென்றோம். நான் ஒரு ஐந்து புடவைகள் எடுத்தேன். மிகவும் நன்றாக இருந்தது. அன்று விடியற்காலை
3 மணிக்கு திருச்சி வந்தடைந்தோம். எங்களை திருச்சி ஸ்ரீரங்கம் மாம்பழச்சாலையில் இறக்கி விட்டார்கள். இரண்டு நாட்களும் மிகவும் மகிழ்ச்சியாகவும், புதிய
அனுபவமாகவும் இருந்தது. இந்தத் திருப்பதி இரண்டுநாள் சுற்றலாவை திருநெடுங்களநாதர் டிராவல்ஸ் மூலம் சென்றோம். அவர்கள் மிகவும் பாதுகாப்பாகவும், பொறுப்புணர்வோடும் அழைத்துச் சென்றார்கள். பெரியவர்கள் முதல் சின்ன குழந்தைகள் வரை 45 பேர் கொண்ட இச்சுற்றுலா மிக நன்றாக இருந்தது.

.jpeg)


Comments
Post a Comment